சந்திராஷ்டமம் 6 மணி நேரம் தான்! -திருக்கோவிலூர் பரணிதரன்

/idhalgal/balajothidam/chandrashtamam-only-6-hours-thirukovilur-paranidharan

ம் ஒவ்வொருவரையும் கிரகங்களே வழிநடத்து கிறது என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது.

ஒரு குழந்தை அதன் தாயின் கருவரையிலிருந்து பூமியை தரிசிக்கின்ற நேரத்தில் கிரகங்கள் எந்த நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வைத்தே அந்தக் குழந்தையின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது.

அந்தக் குழந்தை பிறந்த நேரத்தில் நட்சத்திரம் என்னவாக இருந்ததோ அந்த நட்சத்திரமே அந்தக் குழந்தையின் நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரம் எந்த ராசிக்குள் உள்ளதோ அந்த ராசியே அந்தக் குழந்தை யின் ராசியாகும். அன்றைய நாளில் சூரியனின் நகர்விற்கு ஏற்ப அந்தக் குழந்தை பிறந்த நேரம் எந்த லக்னத்தில் வருகிறதோ அதுவே அந்தக் குழந்தையின் லக்னமாகும்.

அந்த லக்னத்தை முதலிடமாக, அதாவது ஜென்மமாக வைத்து, அந்த இடத்திற்கு அடுத்தடுத்த இடங்களை பாவகங்களாகக்கொண்டும், அந்த பாவகங்களில் காரகர் கள் என்று கூறப்படும் கிரகங்கள் எந்த வீட்டில், எந்த நிலையில், எப்படி சஞ்சரிக்கின்றார்கள் என்பதை வைத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

லக்னத்தை வைத்து எதிர்காலத்தைக் கணக்கிடும் போது, மற்றொரு விஷயமும் அந்தக் குழந்தையின் எதிர் கால வாழ்க்கைக்குரிய வழிகாட்டியாக அமைகிறது.

cc

அது என்னவென்றால், அதுதான் தசாபுக்தி. அந்த தசா புக்தியை எப்படி தெரிந்துகொள்வது?

மீண்டும் அந்தக் குழந்தை பிறந்த நேரத்திற்கு வருவோம்.

அந்த நேரத்தில் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திர நாதனின் தசையே அந்தக் குழந்தையின் தசையாகிறது.

உதாரணத்திற்கு சந்திர பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால் நாட்கள் சஞ்சரிப்பார். ஒவ்வொரு ராசியிலுமுள்ள மூன்று நட்சத்திரங்களின் ஒன்பது பாதங்களில், ஒரு பாதத்திற்கு ஆறு மணி நேரம் என்று அவருடைய சஞ்சாரம் நகர்ந்துகொண்டே இருக்கும். ஒரு குழந்தை மேஷ ராசியில் அசுவினி நட்சத்த

ம் ஒவ்வொருவரையும் கிரகங்களே வழிநடத்து கிறது என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது.

ஒரு குழந்தை அதன் தாயின் கருவரையிலிருந்து பூமியை தரிசிக்கின்ற நேரத்தில் கிரகங்கள் எந்த நிலையில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை வைத்தே அந்தக் குழந்தையின் வாழ்க்கை தீர்மானிக்கப்படுகிறது.

அந்தக் குழந்தை பிறந்த நேரத்தில் நட்சத்திரம் என்னவாக இருந்ததோ அந்த நட்சத்திரமே அந்தக் குழந்தையின் நட்சத்திரமாகும். அந்த நட்சத்திரம் எந்த ராசிக்குள் உள்ளதோ அந்த ராசியே அந்தக் குழந்தை யின் ராசியாகும். அன்றைய நாளில் சூரியனின் நகர்விற்கு ஏற்ப அந்தக் குழந்தை பிறந்த நேரம் எந்த லக்னத்தில் வருகிறதோ அதுவே அந்தக் குழந்தையின் லக்னமாகும்.

அந்த லக்னத்தை முதலிடமாக, அதாவது ஜென்மமாக வைத்து, அந்த இடத்திற்கு அடுத்தடுத்த இடங்களை பாவகங்களாகக்கொண்டும், அந்த பாவகங்களில் காரகர் கள் என்று கூறப்படும் கிரகங்கள் எந்த வீட்டில், எந்த நிலையில், எப்படி சஞ்சரிக்கின்றார்கள் என்பதை வைத்தே அந்தக் குழந்தையின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது.

லக்னத்தை வைத்து எதிர்காலத்தைக் கணக்கிடும் போது, மற்றொரு விஷயமும் அந்தக் குழந்தையின் எதிர் கால வாழ்க்கைக்குரிய வழிகாட்டியாக அமைகிறது.

cc

அது என்னவென்றால், அதுதான் தசாபுக்தி. அந்த தசா புக்தியை எப்படி தெரிந்துகொள்வது?

மீண்டும் அந்தக் குழந்தை பிறந்த நேரத்திற்கு வருவோம்.

அந்த நேரத்தில் என்ன நட்சத்திரமோ அந்த நட்சத்திர நாதனின் தசையே அந்தக் குழந்தையின் தசையாகிறது.

உதாரணத்திற்கு சந்திர பகவான் ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால் நாட்கள் சஞ்சரிப்பார். ஒவ்வொரு ராசியிலுமுள்ள மூன்று நட்சத்திரங்களின் ஒன்பது பாதங்களில், ஒரு பாதத்திற்கு ஆறு மணி நேரம் என்று அவருடைய சஞ்சாரம் நகர்ந்துகொண்டே இருக்கும். ஒரு குழந்தை மேஷ ராசியில் அசுவினி நட்சத்திரத்தில் பிறக்கிறதென்றால் அந்தக் குழந்தையின் ஜனனகால தசை அந்த நட்சத்திர நாதனின் கேது தசையாகும், பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது என்றால் அந்தக் குழந்தையின் ஜனனகால தசை அந்த நட்சத்திர நாதனின் சுக்கிர தசையாகும். கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் பிறக்கிறது என்றால் அந்தக் குழந்தையின் ஜனனகால தசை அந்த நட்சத்திர நாதனின் சூரிய தசையாகும்.

இந்த இடத்தில் அந்தக் குழந்தையின் ராசி என்பது மேஷ ராசிதான் என்றாலும், அந்தக் குழந்தை பிறந்த நேரத்தில் சந்திரன் சென்றுகொண்டிருந்த நட்சத்தி ரத்தை வைத்து அதன் தசை அமையும்.

அதேபோல், ஒவ்வொரு நட்சத்திரத் திற்குரிய நான்கு பாதங்களிலும் ஒவ்வொரு பாதமாக அவருடைய சஞ்சாரம் மாறும்.

பொதுவாக ஒரு நட்சத்திரத்தின் கால அளவு ஒரு நாளாகும். இருபத்து நான்கு மணி நேரம் ஒரு நட்சத்திரத்தில் சஞ்சரித்து அதன்பிறகு அடுத்த நட்சத்திரத்திற்குச் செல்வார் சந்திர பகவான். அந்த இருபத்து நான்கு மணி நேரத்தையும் நான்காக வகுக்கும்போது ஒரு பாதத்திற்கு ஆறு மணி நேரம் வரும்.

உதாரணத்திற்கு அந்தக் குழந்தை பரணி நட்சத்திரத்தில் பிறந்ததாக வைத்துக்கொள்வோம். பரணி நட்சத்திரத்தின் அதிபதி சுக்கிரன் ஆவார். அவருடைய தசா காலம் இருபது ஆண்டுகளாகும். இந்த இடத்தில், அந்தக் குழந்தை முதல் பாதத்தில் பிறக்கும்போது குழந்தைக்கு சுக்கிர மகா தசை இருப்பு 15 ஆண்டுகளுக்கு மேலாக 20 ஆண்டுகளுக்குள் இருக்கும். இரண்டாவது பாதத்தில் பிறக்கும் போது குழந்தைக்கு சுக்கிர மகா தசை இருப்பு 10 ஆண்டுகளுக்கு மேலாக 15 ஆண்டுகளுக்குள் இருக்கும். மூன்றாவது பாதத்தில் பிறக்கும் போது குழந்தைக்கு சுக்கிர மகா தசை இருப்பு 5 ஆண்டுகளுக்கு மேலாக 10 ஆண்டுகளுக்குள் இருக்கும். நான்காவது பாதத்தில் பிறக்கும் போது குழந்தைக்கு சுக்கிர மகா தசை இருப்பு 1 மாதத்திற்கு மேலாக 5 ஆண்டுகளுக்குள் இருக்கும்.

இப்படி, ஒரு குழந்தை எந்த நட்சத்திரத்தில், எந்த பாதத்தில் பிறக்கிறது என்பதை வைத்து அதன் தசா புக்தி கணக்கிடப்படுகிறது.

ஒரு குழந்தையின் எதிர்காலத்தை அதன் லக்னத்தை வைத்துத் தீர்மானிக்கும்போது, அந்தக் குழந்தையின் ராசி நாதனான சந்திரன் அமர்ந்துள்ள இடம், அந்த இடத்தின் நிலை யுடன், தசாநாதன் எந்த இடத்தில் எந்த நிலையில் சஞ்சரிக்கிறார் என்பதையும் கவனிக்கும் போதுதான் அந்தக் குழந்தையின் வாழ்க்கை நிலையைப் பற்றியும், எப்போது எத்தகைய மாற்றம் உண்டாகும் என்பதையும் தெரிந்துகொள்ளமுடியும்.

இந்த இடத்தில், ஒவ்வொரு மாதமும் ஒரு ஜாதகரின் ராசிக்கு எட்டாம் ராசியில் சந்திர பகவான் சஞ்சரிக்கின்ற இரண்டேகால் நாட்களையும் சந்திராஷ்டம நாட்கள் என்று நாம் குறிப்பிடுகிறோம்.

சந்திராஷ்டமம் என்பது என்ன? இந்த நாட்களில் ஒவ்வொரு ஜாதகருக்கும் என்ன நடந்துவிடும் என்ற கேள்விகள் எழுகின்றபோது, முதலில் ஒரு தகவலை நாம் தெரிந்து கொள்ளவேண்டும். இன்றைய சமூகத்தில் ஜாதகம் பற்றிய விவரம் தெரியாதவர்கள்கூட சந்திராஷ்டமம் பற்றி தெரிந்துவைத்துள்ளனர்.

அவர்களுடைய ராசி எதுவோ அதற்கு எட்டாவது ராசியில் சந்திர பகவான் சஞ்சரிக் கின்ற இரண்டேகால் நாட்களும் சந்திராஷ்ட மம் என்ற நம்பிக்கை ஒவ்வொருவரிடமும் உள்ளது.

பொதுவாக, அறிவியல் சார்ந்து ஆயிர மாயிரம் தகவல்கள் கூறப்பட்டாலும், நம் மனதிற்குள் அழுத்தமாக பதிந்துவிடும் ஒரு தகவல் நம்மை அதன் பாதையிலேயே வழி நடத்திக் கொண்டிருக்கும். அந்த ரீதியில்தான் சந்திராஷ்டமம் என்பது இரண்டேகால் நாட் களாக ஒவ்வொருவரிடமும் பதிவாகியுள்ளது.

குறிப்பிட்ட அந்த நாட்களில் மிகுந்த எச்சரிக்கையுடன் இருப்பதற்கு பலரும் முயற்சிக்கின்றனர். சரி; சந்திராஷ்டமம் என்றால் என்ன? நம்முடைய ராசிநாதனான சந்திரன் ஒவ்வொரு ராசியிலும் இரண்டேகால் நாட்கள் சஞ்சரித்திடக் கூடியவர். அதன்படி, ஒருவருடைய ராசிக்கு எட்டாவது ராசியில் அவர் சஞ்சரிக்கும் நாட்களை, சந்திரன்+ அஷ்ட மம் = சந்திராஷ்டம நாட்கள் என்கிறோம்.

சந்திர பகவான்தான் நமக்கு மனக் காரகனும் பயணக்காரகனும் ஆவார். எட்டாம் இடமென்னும் மறைவு ஸ்தானத்தில் அவர் சஞ்சரிக்கும்போது அந்த ஜாதகரின் மனநிலையின் ஆற்றல் மறைந்து போகிறது. அதனால் குழப்பம் அதிகரிக்கிறது. அந்த நாட்களில் செயல்களில் தடைகள், மனதில் சங்கடம், மனச்சோர்வு, கோபம், பொறுமை யின்மை, எரிச்சல், மன உளைச்சல், இடையூறு கள் போன்ற உணர்ச்சி சார்ந்தவை களுக்கு ஒவ்வொருவரும் ஆளாகின்றனர்.

இதற்கெல்லாம் காரணம், மனக்காரகனான சந்திரன் எட்டாமிடத்தில் மறைவு பெறுவதால் ஜாதகரின் சிந்தனையாற்றலும், செயல்களும் குழப்ப நிலையை அடைவதுதான்.

எந்த ஒருவருக்கும் சந்திராஷ்டமம் என்பது இரண்டேகால் நாட்கள் அல்ல. வெறும் ஆறு மணி நேரம் மட்டும்தான். அந்த ஆறு மணி நேரம் மட்டும் கவனமாக இருந்தால் போதும்.

இது என்ன புதுக்கதையாக இருக்கிறது! வழக்கமாக சந்திர பகவான் எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் இரண்டேகால் நாட்களும் சந்திராஷ்டமம்தானே என்று நீங்கள் கேட்கலாம்! இந்த இடத்தில் ஒரு அடிப்படை யான தகவலை உங்களுக்கு வழங்குகிறேன்.

உதாரணத்திற்கு மேஷ ராசியை எடுத்துக் கொள்வோம். மேஷ ராசிக்கு எட்டாவது ராசி விருச்சிக ராசி. அந்த விருச்சிக ராசிக்குள் சந்திர பகவான் செல்கின்ற நிமிடம் முதல் மேஷ ராசியினருக்கு சந்திராஷ்டமம் ஆரம்பமாகிறது என்பது நமக்கெல்லாம் தெரிந்த ஒரு தகவல்தான்.

இந்த இடத்தில் ஒரு விதிவிலக்கு இருக்கி றது. மேஷ ராசிக்குள் அசுவினி நான்கு பாதங்கள், பரணி நான்கு பாதங்கள், கிருத்திகை முதல் பாதம் என்று ஒன்பது பாதங்கள் இருக்கிறது. அதேபோல் விருச்சிக ராசிக்குள் விசாகம் நான்காவது பாதம், அனுஷம் நான்கு பாதங்கள், கேட்டை நான்கு பாதங்கள் என்று ஒன்பது பாதங்கள் இருக்கிறது.

விருச்சிக ராசிக்குள் செல்லும் சந்திர பகவான், முதலில் விசாகம் நட்சத்திரத்தின் நான்காவது பாதத்தில் ஆறு மணி நேரம் சஞ்சரிப்பார். அதன் பிறகு அனுஷம் நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் ஆறு மணி நேரம், இரண்டாவது பாதத்தில் ஆறு மணி நேரம், மூன்றாவது பாதத்தில் ஆறு மணி நேரம், நான்காவது பாதத்தில் ஆறு மணி நேரம் சஞ்சரித்து அதன்பிறகு கேட்டை நட்சத்திரத்தின் முதல் பாதத்தில் ஆறு மணி நேரமும், இரண்டாவது பாதத்தில் ஆறு மணி நேரமும், மூன்றாவது பாதத்தில் ஆறு மணி நேரமும், நான்காவது பாதத்தில் ஆறு மணி நேரமும் சஞ்சரித்த பிறகு தனுசு ராசிக்குள் செல்வார்.

இந்த கணக்கின்படி இரண்டேகால் நாட்கள் விருச்சிக ராசிக்குள் அவர் சஞ்சரித் தாலும் அவர் சஞ்சரிக்கும் நட்சத்திரங்களின் பாதங்கள் ஆறு மணி நேரத்திற்கு ஒருமுறை வேறுபடுகிறது. அதை வைத்தே சந்திராஷ்டமத்தின் தீவிரம் ஒவ்வொருவருக்கும் எந்த நேரத்தில் ஏற்படும் என்பதை நம்மால் தெரிந்துகொள்ளவும் முடியும்.

மேஷ ராசிக்கு சந்திராஷ்டமம் என்று வருகின்றபோது அதற்குள் உள்ள இரண்டே கால் நட்சத்திரங்களின் ஒன்பது பாதங்களுக்கும் ஒவ்வொரு பாதமாக சந்திராஷ்டமம் ஏற்படுகிறது.

இதேபோல் ஒவ்வொரு ராசியினருக்கும் சந்திராஷ்டமம் என்பது அவர்கள் பிறந்த நட்சத்திரத்தின் பாத அடிப்படையில் ஆறு மணி நேரமாக மட்டுமே இருக்கும். இதுதான் ஜோதிட சாஸ்திரம் நமக்கு தெரிவிக்கும் தகவலாகும். இதை நாம் தெரிந்துகொள்ளாமல் ராசிக்கு எட்டாவது ராசியில் சந்திரன் சஞ்சரிக்கும் இரண்டேகால் நாட்களும் சந்திராஷ்டமம் என்று தவறாக புரிந்து கொண்டு நம்முடைய செயல்களை தள்ளிவைத்தும், முடக்கிக்கொண்டும் வாழ்ந்து வருகிறோம்.

அத்தகைய தவறுகளை இந்த நிமிடம் முதல் விட்டொழிப்போம். வெற்றி பெறுவோம்.

செல்: 94443 93717

bala280423
இதையும் படியுங்கள்
Subscribe