மானுட வாழ்வியல் பயணத்தில் ஜோதிடம் மிகப்பெரிய பங்கை வகிக் கின்றது . ஜாதகத்தில் கேந்திரம் என்பது வலிமை மிக்க தூண்கள் என்று அறியப் படுகின்றது. இதில் லக்ன கேந்திரம் என்றும், சந்திர கேந்திரம் என்றும் இரண்டாகப் பகுத்தாயப் படுகின்றது.
சந்திர கேந்திரத்தைவிட லக்ன கேந்திரத்திற்கான முக்கியத்துவம் ஜோதிடத் தில் அதிகமாக வழங்கப் படுகின்றது.
ஜாதகத்தில் லக்னம் என்பது முதல் கேந்திரம் ஆகும். அதாவது லக்ன கேந்திரம். சதுர் கேந்திரம் எனப்படும் நான்காம் வீடு இரண்டாவது கேந்திரமாக வும், சப்தம கேந்திரம் என்னும் ஏழாம் வீடு மூன்றா வது கேந்திரமாகவும், தசம கேந்திரம் என்னும் பத்தாம் வீடு நான்காவது கேந்திரமாகவும் அறியப் படுகின்றது.
ஒரு ஜாதகத்தில் கிரகங் கள் எங்கு நின்றால் யோகம் தருமென்று கேட்டால், அது நிச்சயமாக கேந்திரம் ஏறி இருப்பது யோகத்தை அளிக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. மற்ற நிலைகளான திரிகோணம், பணபரம், உபஜெய ஸ்தானம், அபோகிலிமம், மறைவு ஸ்தானம் ஆகியவற்றில் நின்றால் யோகத்தை அளிக்காதா என்று கேட்டால், இவற்றைவிட கேந்திரம் முதல் நிலை வகிக்கும் என்பது உறுதி.
பன்னிரண்டு வீடுகளில் ஆறு நிலைகளாகப் பிரிக்கப்பட்டு அதில் முதன்மை ஸ்தானம் பெறுவது கேந்திரமாகும்.
ஜோதிடத்தில் திரிகோணத்தை உயர்வாக எடுத்துக்கொள்கின்றோம். எதனால் என்றால் ஒரு பாவ கிரகம் தனது அசுபச் சூழலை இங்கு செயல்படுத்தாது என்பதற்காகவே.
ஆனால் என் அனுபவத்தில் அப்படி ஒரு நிலையை மிகக்குறைவாகவே காண்கின்றேன். கிரகங்கள் கேந்திரத்தில் அமையும்பொழுது தான் அது பாவத்தன்மையைக் குறைத்து சுபத் தன்மையை வழங்குகின்றது.
ஜாதகரின் தன்னிலை, புகழ் ஆகியவற்றைக் குறிக்கும் லக்னபாவகமும், தன் சுகம், வீடு, தாயார், உயர்கல்வி ஆகியவற்றைக் குறிக்கும் நான்காம் பாவகமும், வாழ்க்கைத்துணை, பங்குதாரர், சமூகம் ஆகியவற்றைக் குறிக்கும் ஏழாம் பாவகமும், மிகச் சிறப்பு வாய்ந்த ஜீவன ஸ்தானமான பத்தாம் பாவகமும் ஜாதகத்தில் உயிரைப் போன்ற ஒரு தன்மை யினை எடுத்துரைக்கும்.
இவற்றின் துணைக்கொண்டு மற்ற பாவகங்கள் இயங்குவதை நாம் கண்கூடாகக் காணமுடியும்.
இந்த நான்கு பாவகங்களில் ஆட்சியோ அல்லது உச்சமோ பெற்று ஒரு கிரகம் அமர்ந் திருந்தால் இதனை பஞ்சமகாக புருஷ யோகம் என்கின்றது ஜோதிடம்.
அதாவது மேஷ லக்னம் என்று எடுத்துக்கொண்டோமானால் லக்னத்தில் செவ்வாய் அல்லது சூரியன் இருப்பது, கடகத்தில் குரு அல்லது சந்திரன் இருப்பது, துலா ராசியில் சனி அல்லது சுக்கிரன் இருப்பது, மகரத்தில் செவ்வாய் அல்லது சனி இருப்பது, பஞ்ச மகா புருஷ யோகமாக எடுத்துக்கொள்ளப்படுகின்றது.
இந்த யோகம் ஒரு ஜாதகருக்கு பல மாற்றங்களையும், ஏற்றங்களையும் தந்து அவர்களின் வாழ்வியல் பயணத்தை சீர்மிகு பயணமாக திருத்தி அமைக்கும்.
இந்த ஸ்தானங்களில் குரு, சுக்கிரன், புதன், சந்திரன் போன்ற கிரகங்கள் அவரவர் களின் தசாபுக்திக் காலங்களில் கேந்திர ஆதி பத்திய தோஷத்தையும் அளிக்கின்றார்கள் என்பதையும் கணக்கில் கொள்ளவேண்டும்.
நம் வாழ்வியல் பயணத்தில் இந்த நான்கு சுவர்களின்மீதுதான் அனைத்துவிதமான ஆசைகளும் உறவுகளும் விருப்பங்களும் கட்டப்பட்டுள்ளது. எனவேதான் கேந்திரங் களுக்கு மிக முக்கியத்துவம் அளிக்கப் படுகின்றது ஜோதிட முறையில் இவற்றை அர்த்த திரிகோணம் என்றும் (பணம்), காமத்ரிகோணம் என்றும் (பாலியல்), தர்ம திரிகோணம் என்றும் (நியாயம்) மற்றும் மோட்ச திரிகோணம் என்றும் (ஆன்மாவினை விடுவித்தல்) பெரும் சிறப் பைத் தன்னுள் பொதித்து வைத்துள்ளது இந்த கேந்திர பாவங்கள்.
கேந்திர வீடுகளில் கிரகங்கள் இல்லாமல் இருந்தால் என்ன என்ற கேள்வி எழலாம் அல்லவா? இவர்களுக்கு என்னதான் திறமை இருந்தாலும் கேந்திரத்தில் கிரகங்கள் இல்லாமல் இருக்கும் ஜாதகர்களுக்கு நல்ல வாய்ப்புகள் அமைவதே கிடையாது.
வாய்ப்புகள் அமைந்தால்தான் ஒருவர் தனது திறமையை வெளிப்படுத்துவதற்கான மைதானம் அமையும். இந்த மைதானம் கேந்திர பாவங்களில் கிரகம் இல்லாத ஜாதகர் களுக்கு அமைவது கிடையாது என்பது மிக வருந்தக்கூடிய ஒரு உண்மையாகும் இன்றைய காலகட்டத்தில் தங்களின் உழைப்பால் முன்னுக்கு வந்த பல பிரபலங் களின் ஜாதகத்தை ஆராயும்பொழுது, அவர்களின் கேந்திர பாவங்களில் நின்றுள்ள கிரகங்களின் தசாபுக்திகளில் அவர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளதை காணமுடிகின்றது.
இந்த அதி முக்கியத்துவம் வாய்ந்த 1, 4, 7, 10 ஆகிய இடங்களில் ஏதாவது ஒரு கிரகமாவது இருப்பது மிகவும் சிறப்பு.
மேஷ லக்னத்திற்கு சந்திரன், சுக்கிரன், சனி, மகா தசை பெரும் வாய்ப்புகளை அளிக்கின்றது.
ரிஷப லக்னத்திற்கு சுக்கிரன், சூரியன், செவ்வாய், சனி மகா தசைகள் சுபிட்சத்தை யும் நல்ல வாய்ப்புகளையும் கொண்டு சேர்க்கின்றது.
மிதுனத்திற்கு புதன் மற்றும் குரு தசை வாய்ப்புகளை வழங்குகின்றது.
கடக லக்னத்திற்கு சந்திரன், சுக்கிரன், சனி, செவ்வாய் மகா தசைகள் வாய்ப்புகளை வழங்கும்.
சிம்ம லக்னத்திற்கு சூரியன், செவ்வாய், சனி, சுக்கிர மகா தசைகள் கேந்திர வாய்ப்புகளை வழங்கும்.
கன்னி லக்னத்திற்கு புதன் மற்றும் குரு தசைகள் உயர்வதற்கான வழியை அளிக்கின்றது.
துலா லக்னத்திற்கு சுக்கிரன், சனி, செவ்வாய், சந்திரன், மகா தசைகள் வாய்ப்புகளை வழங்கும்.
விருச்சிக லக்னத்திற்கு செவ்வாய், சனி, சுக்கிரன், சூரிய தசைகள் பெரும் சிறப்பை அளித்து வாய்ப்பையும் வழங்குகின்றது.
தனுசு லக்னத்திற்கு குரு, புதன் தசைகள் வாய்ப்பளிக்கும்.
மகர லக்கினத்திற்கு சனி, செவ்வாய், சந்திரன், சுக்கிர தசைகள் உயர்வை வழங்கி வாய்ப்புகளை வரவழைக்கும்.
கும்ப லக்னத்திற்கு சனி தசை, சுக்கிரன் சூரியன், செவ்வாய் தசைகள் உறுதுணையாக இருக்கும்.
மீன லக்னத்திற்கு குரு மற்றும் புதன் தசைகள் சிறப்பை அளித்து வாய்ப்பையும் வழங்கும்.
இதில் உபய லக்னங்களான மிதுனம், கன்னி, தனுசு, மீனம் ஆகிய லக்னங் களுக்கு இரண்டு தசைகள் மட்டுமே வாய்ப்பளிப்பதைக் காணமுடிகின்றது.
ஒவ்வொரு ராசியினரும் இந்த காலகட்டத்தில் வழங்கப்படும் வாய்ப்பினைத் தங்களுக்கான வாய்ப்பாக எண்ணிப் பயன்படுத்தி வாழ்வில் வெற்றிபெறலாம். மேலும் ஒரு ஜாதகத்தில் கேந்திரத்தில் கிரகங்கள் இல்லாதபொழுது அவர்களுக்கு உதவுவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதும் உண்மை.
கேந்திர கிரகங்கள் சுட்டிக்காட்டும் வழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் நல்ல வாய்ப்புகளைப் பெற்று வாழ்வில் சிறப் படைய முடியும்.
செல்: 80563 79988