னிதனின் வளர்ச்சியில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும், அடையாளப் படுத்திக் கொள்ளவும், பேருதவியாக இருப்பது அவரவர் மேற்கொள்ளும் தொழிலே ஆகும்.

இந்த தொழில்தான் ஒருவரின் ஆணிவேராக கருதப்படுகின்றது. அதனைக்கொண்டும், அதன் வருவாய் கொண்டுமே, ஒருவரின் வாழ்க்கைத் தரம் நிர்ணயிக்கப்படுகின்றது. எனவேதான் தொழில் கர்மாவோடு இணைத்து பேசப்படுகின்றது.

நம் முன்னோர்கள் உத்தியோகம் புருஷ லட்சணம் என்பார்கள். இதிலிருந்து இதன் முக்கியத்துவம் நம்மால் அறியமுடிகின்றது.

ஒருவர் வேலைக்கு செல்வாரா அல்லது சுயதொழில் செய்வாரா? அல்லது பூர்வீக சொத்தின்மூலம் லாபம் ஈட்டுவாரா, இல்லை அரசுமூலம் ஆதாயம் பெறுவாரா என்று ஆயிரம் கேள்விகளும், சந்தேகங்களும், நம்மிடையே இருக்கும்.

Advertisment

அதேபோல எந்த தொழில் நமக்கு முன்னேற்றத்தை தருமென்ற யோசனையும் ஆவலும் இருந்துகொண்டே இருக்கும்.

இதற்கெல்லாம் நம் ஜாதகத்தில் ஒருசில ஆய்வுகளின்மூலம் பதில் அறிய முடியும்.

அதாவது ஒருவரின் ஜாதகத்தில் எந்த கிரகம் பலம் வாய்ந்து உள்ளதோ அது சார்ந்த தொழிலின்மீது ஜாதகருக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும்.

Advertisment

அதேபோல் எந்த லக்னத்திற்கு எந்த தொழில் என்ற பொதுவான விதியும் உள்ளது. இதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

தொழில் என்று வரும்பொழுது பத்தாமிடம் வலிமை பெற்றதாக அமைய வேண்டும். அதேபோல் எந்த ராசி 10-ஆம் இடமாக அமைகின்றதோ அந்த ராசி சம்பந்தப்பட்ட தொழிலும் அமையப்பெறும். அதோடு உடல் உழைப்பை கூறக்கூடிய ஆறாம் பாவகமும், முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றது.

பொதுவாக மீனம், மிதுனம், கன்னி, தனுசு ஆகிய ராசிகளில் பிறந்தவர்கள் கூட்டு தொழில் செய்வது சிறப்பினை தராது. ஏனென்றால் இவர்களுக்கு ஏழாம் பாவகமே, பாதகமாக அமைவதனால் கூட்டுத் தொழிலை தவிர்ப்பது சிறந்தது.

மேஷ ராசியினை பொறுத்தவரை காலபுருஷனுக்கு பத்தாம் அதிபதி தன் வீட்டிலேயே நீசம். அதனால் இவர்கள் தொழிலைவிட பணிசெய்வது சிறப்பு. இவர்களுக்கு ஆளுமையான, அரசுசார்ந்த தொழில் அமைய வாய்ப்புகள் உண்டு. மேலும் செவ்வாயின் வீடு என்பதனால் செவ்வாய் பத்தில் உச்சம் பெறுவதாலும், இவர்களுக்கு பூமி சம்பந்தப்பட்ட, கட்டடம் சம்பந்தப்பட்ட, தொழில் பெரும் அளவில் கைகொடுத்து வாழ்வில் முன்னேற்றத்தை அளிக்கும்.

ரிஷப ராசி இவர்களுக்கு பத்தாம் அதிபதி சனி 12-ல் நீசம் ஆவார். எனவே இவர்களின் தொழிலின்மூலம் வரும் வருவாயில் ஒரு பங்கு விரையம் ஆகிகொண்டே இருக்கும். அதோடு இவர்களுக்கு அழகியல் சம்பந்தப்பட்ட தொழிலும், ஆடை, ஆபரணம் சம்பந்தப்பட்ட தொழிலும் பெரும் சிறப்பினை தரும்.

12

மிதுன ராசியை பொருத்தவரை பத்தாம் அதிபதி எட்டில் நீசமாகி இரண்டில் உச்சம். எனவே பேச்சுசம்பந்தமான தொழில், பத்திரம், பாண்டு, ஆகியவற்றை கையாளக்கூடிய தொழில் சிறப்ப அளிக்கும். இவர்கள் எந்த தொழிலாக இருந்தாலும் இவர்களின் பேச்சை இவர்களின் மூலதனமாக அமையும். நேர்மைக்கு புறம்பான எந்த தொழிலும் இவர்களுக்கு சிறப்பினை அளிக்காது.

கடக ராசி இவர்களின் பத்தாம் அதிபதி செவ்வாய் தன் வீட்டிலேயே நீசம் அடைவதனாலும், ஏழில் உச்சம் அடைவதனா லும், தன்னை முன்னிறுத்தி எந்த தொழிலும் செய்வது சிறப்பினை தராது. மனைவியின் பெயரில் மனைவியின்மூலம் செய்யப்படும் தொழில் சிறப்பினை அளிக்கும். பூமி, பூமி சம்பந்தப்பட்ட தொழில், சிறப்பினை தராது. ஆனால் விவசாயம் இவர்களுக்கு சிறப்பு அளிக்கும். உணவு சம்பந்தப்பட்ட தொழிலின் மூலம் பெரும் பொருளாதார வளர்ச்சியை காணமுடியும்.

சிம்ம ராசியினரை பொறுத்தவரை இவர்களின் பத்தாம் இடமான ரிஷபத்தின் அதிபதி இரண்டில் நீசம், எட்டில் உச்சம் என்ற நிலையில் இவர்களின் பேச்சால் பெரும் பொருளாதார இழப்பினை இவர்கள் சந்திக்க நேரிடும். இவர்கள் இன்சூரன்ஸ், மறைமுகத்தொழில்கள் போன்றவைமூலம் பெரும் பொருள் இட்டுவார்கள். அதோடு அரசு அரசாங்கம் சம்பந்தப்பட்ட அதிகார மிக்க தொழிலில் இவர்கள் இருப்பதனை கண்கூடாக காண முடிகிறது.

கன்னி ராசி பத்தாம் அதிபதி தன் வீட்டி லேயே உச்சம், ஏழில் நீசம் என்ற நிலையில் இவர்கள் செய்யும் தொழிலின்மூலம் பெரும் பொருளாதார உயர்வினை அடையமுடியும். ஆனால் இவர்கள் மனைவியின்மூலம் செய்யும் தொழில் சிறப்பு அளிக்காது. இவர்கள் கணக்காளர்கள், கணக்கு, சம்பந்தப்பட்ட தொழிலும், பத்திரிகை, பத்திரம் சம்பந்தப் பட்ட தொழிலின்மூலமும் வருவாயீட்ட முடியும்.

துலாம் ராசி இவர்களின் பத்தாம் அதிபதி சந்திரன் இரண்டில் நீசமாகி எட்டில் உச்சம் அடைவார். இவர்களுக்கும் பேச்சின்மூலம் இடர்பாடுகள் ஏற்படும் ஆனால் இவர்கள் வழக்கறிஞராக வரும்பொழுது அதில் சிறப் பினை எட்டமுடியும். மேலும் எட்டாமிடம் தொழிலோடு சம்பந்தப் படுவதால் இவர்களுமே மறைமுகமான தொழி லின்மூலம் வருவாய் ஈட்டுவார்கள்.

விருச்சக ராசி என்று பார்க்கும்பொழுது பத்தாம் அதிபதி சூரியன் ஆறில் உச்சமும், பன்னிரண்டில் நீசமும், அடையும் வாய்ப்பு அமைகின்றது. பத்தாம் அதிபதி ஆறில் உச்சமாகும் பொழுது உடல் உழைப்பினை போட்டு வருவாயீட்டும் சூழ்நிலையும் பன்னிரண்டில் நீசமாகும் பொழுது அப்படி உழைத்த பணமும் சற்று விரயத்தையும் எதிர்நோக்கும் என்பதும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதேபோன்று நோயாளிகளின்மூலம் வருவாயும் எதிரிகளின் மூலம் வருவாயும் அனுபவிக்கும் வாய்ப்பு இவர் களுக்கு அமையும். மருத்துவம் மற்றும் மருத்து வம் சார்ந்த தொழில்களும் இவர்களுக்கு யோகத்தை கொடுக்கும். மேலும் அரசு அரசாங் கம் சம்பந்தப்பட்ட தொழில்களின்மூலம் வருவாய் ஈட்டும் யோகிதை உண்டு.

தனுசு ராசியினை ஆராயும்பொழுது பத்தாம் அதிபதியான புதன் பத்திலையே ஆட்சி மற்றும் உச்சமாகி நான்கில் நீசமடை யும் சூழ்நிலை உருவாகும். இந்நிலையானது தொழிலில் அதீத வெற்றியும் தொழிலின் மூலம் மிகுந்த லாபத்தையும் அடையும் சூழ்நிலையை உருவாக்கும். மேலும் இவர் களுக்கு வீட்டின்மூலம் வருவாய் அமைவது சற்று கடினமான சூழ்நிலையை உருவாக்கும். தொழிலில் உயர்நிலையும் கற்ற கல்வியினை பிறருக்கு கற்பிக்கும் சூழ்நிலையும் இவர்களை சாரும்.

மகர ராசியினை காணும்பொழுது பத்தாம் அதிபதி சுக்கிரன் ஒன்பதில் நீசமாகி மூன்றில் உச்சமடையும் சூழ்நிலை உருவாகும். ஒன்பதில் நீசமான பத்தாம் அதிபதி தந்தைவழி தொழில்களை எடுப்பதன்மூலம் சிறப்பினை பெறமுடியாது என்பதனை உணர்த்துகின்றது. மேலும் சகோதரனுடமான கூட்டுத் தொழிலில்பெரும் லாபத்தை இவர்களால் அடையமுடியும். அதேபோன்று சிறு தூரப்பயணத்தின்மூலமும் இவர்களால் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்ளமுடியும். இரும்பு, இரும்பு சார்ந்த துறைகள், தொழிற் கல்வி சார்ந்த துறைகள் இவர்களை உயர்வின் பாதையில் இட்டுச் செல்லும்.

கும்ப ராசியினை பொறுத்தவரை பத்தாம் அதிபதி செவ்வாய் 12-ல் உச்சம் ஆறில் நீசம் என்ற சூழ்நிலை உருவாகின்றது. இவர்களுக்கு பணியினை விட சுய தொழில் உயர்வினை தரும். இவர்களுக்கும் இரும்பு, பூமி, கட்டடம், ஆராய்ச்சி போன்ற துறைகளில்மூலம் தொழில் வளர்ச்சி ஏற்பட்டு பொருளாதாரநிலை உயரும்.

மீன ராசியினை கையாளும்பொழுது இவர்களின் பத்தாம் அதிபதி 11-ல் நீசமாகி, ஐந்தில் உச்சம் அடைவார். ஐந்தாம் இடம் மற்றும் பத்தாமிடம் தொழில் ஸ்தானத் தோடு சம்பந்தப்படுவதனால் தங்களுக்கு பிடித்தமான தொழிலை கையாளும் சூழ்நிலையும், அறிவை பிறருக்கு கற்பிக்கும் சூழ்நிலையும், இவர்களுக்கு தொழிலாக அமையும். மேலும் பத்தாம் அதிபதி 11-ல் நீசம் என்கின்ற நிலை வரும்பொழுது, லாபத்தில் ஒரு பெரிய விரயத்தை இவர்கள் சந்திக்க நேரிடும். தொழிலில்மூலம் வரும் வருமானத்தை சொத்தாக மாற்றாமல் இருப்பது சிறப்பினை தரும். இவர்களுக்கு தொழில் கற்பிக்கும் தொழில் மற்றும் ஆராய்ச்சி போன்ற தொழில்களில் சிறப் பினைத் தரும் தொழில்ரீதியான தடைகள் இருக்க பெறுபவர்கள் சனிக்கிழமையில் சனி ஹோரையில் மூட்டை தூக்கும் ஊக்கு மற்றும் வேர்வை இழுக்கும்படியான துண்டு ஆகியவற்றை எட்டு மூட்டை தூக்கும் தொழிலாளிகளுக்கு தானமாக வழங்கி, உணவும் வழங்கிவர தொழிலில் ஏற்பட்ட தடைகள் அகன்று பொருளாதாரநிலை சிறப்படையும்.

செல்: 80563 79988