டக லக்னத்தினர் சந்திரனின் ஆதிக்கம் பெற்றவர்கள். உங்கள் லக்னாதிபதி சந்திரன் பதினைந்து நாட்கள் வளர்பிறையாகவும், பதினைந்து நாட்கள் தேய்பிறையாகவும் சஞ்சாரம் செய்பவர் . அதுபோன்றே உங்களின் மனநிலையும் மாற்றம் உடையது. சொல்லாலும் செயலாலும் ஒன்றமுடியாத தன்மையுடையவர்கள். மிகவும் இரக்ககுணம் உண்டு. தன தான்ய விருத்தி உடையவர். தந்தையுடன் கருத்து வேறுபாடு உடையவர். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர். கூட்டுத் தொழிலில் தோல்வியை சந்திப்பவர். அநேக சொந்த பந்தங்களை உடையவர். பந்தத் திற்குக் கட்டுப்பட்ட வர்கள்.

சந்திர தசை

சந்திரன் கடகத் திற்கு லக்னாதிபதி. என்பதால், சுபவலுப் பெற்று தசை நடத்தி ன ôல் பண்பு, பாசம், நல்ல மனநிலை, கவிதை, கற்பனைத் திறன், கௌரவம், புகழ், நிம்மதியான உறக்கம், அரசு வழியில் ஆதரவுகள் உண்டாகும். மனோ காரகன் வலிமை இழந்தால் மனக் குழப்பம், மன நோய், மற்றவர்களிடம் ஒத்துப் போகமுடியாத நிலை, எதிலும் தோல்வி, அனுகூலமற்ற நிலை ஏற்படும்.

சந்திரன் உடல் மற்றும் மனோகாரகன். சந்திரன் தினக் கோள் என்பதால் அதன் இயக்கம் விரைவாக இருக்கும். கடக லக்னத்தின் அதிபதி சந்திரன் என்பதால் சந்திரனின் இயக்கத்தைப்போல் இவர்களின் மனம், எண்ண அலைகள் ஒவ்வொரு நிமிடமும் மாறிக்கொண்டே இருக்கும். சந்திரன் 6, 8, 12-ல் மறைந்து தசை நடத்தினால் சுய தொழிலில் மிகுதியான கடன், வம்பு, வழக்கு பண இழப்புகள் ஏற்படும். சந்திரன் மறைந்தவர்கள் சொந்தத் தொழிலைத் தவிர்ப்பது நல்லது. இவர்களுக்கு வெளியூர், வெளிநாட்டு வாழ்க்கை நன்மை தரும்.

Advertisment

பரிகாரம்: திங்கட்கிழமை சந்திர ஓரையில் புவனேஸ்வரியை வழிபட வேண்டும்.

ff

சூரிய தசை

Advertisment

சூரியன் கடக லக்னத்திற்கு தனம், வாக்கு, குடும்ப ஸ்தானாதிபதி. தனாதிபதியாக சூரியன் பலம்பெற்று தசை நடத்தினால் இனிமையான இல்வாழ்க்கை அமையும். வாக்கு சாதுர்யத்தால் குடும்ப உறுப்பினர் களின் அன்பைப் பெறுவார்கள். இவர்கள் பேச்சில் கௌரவம், அதிகாரத் தோரணை இருக்கும். சமுதாயத்தில் தலைசிறந்த மனித னாக உயர்வார்கள்.

வார்த்தைகளில் உண்மை, நிதானம், நினைத்ததை எல்லாம் சாதித்துக்கொள்ளும் சூட்சமம் உண்டாகும். சொல்வாக்கால் செல்வாக்கை உயர்த்திக்கொள்வார்கள். வெற்றிமேல் வெற்றிகள் கிடைக்கும். தனக்கு மட்டுமல்ல; தன்னை சார்ந்தவர்களுக்கும், நன்மைமைகளை உண்டாக்குவார்கள்.

சூரியன் அசுப பலம்பெற்று தசை நடத்தினால் நிதானமற்ற கோபத்தால் திடீரென கோபப்பட்டுப் பேசிவிட்டு பிறகு அதை பற்றியே சிந்தித்து, தவறுதலாகப் பேசிவிட்டோமோ என்று நினைப் பார்கள். தன்னை அறியாது வெளியான வார்த்தைகள் குடும்ப உறுப்பினர்களிடம் கருத்து பேதத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் கலகலப்பு குறைந்து சலசலப்பு மிகுதியாகும். பெயர் புகழுக்கு கலங்கம் ஏற்படும். வறட்டு கௌரவம், நியாயமற்ற கோபம், தரமற்ற வார்த்தைகளால் குடும்பத்தில் விரிசல், கௌரவக் குறைவு மிகுதியாகவே இருக்கும். கஷ்ட ஜீவனத்தில் அடிப்படைத் தேவை யைக்கூட நிறைவுசெய்ய முடியாது.

பரிகாரம்: திங்கட்கிழமையும் பௌர்ணமி யும் இணைந்த நாளில் கிரிவலம் செய்து சிவனை வழிபடவேண்டும்.

புதன் தசை

கடக லக்னத்திற்கு புதன் 3, 12-ஆம் அதிபதி. புதன் சுப வலுப்பெற்று தசை நடத்தினால் வாழ்வியல் மாற்றம் தரும் இடப்பெயர்ச்சி கிடைக்கும். உள்ளத்தில் தைரியம், தெம்பு இருக்கும். அண்டை, அயலார் உதவியாக இருப்பார்கள்.

உடன்பிறந்தவர்களால் சகாயம் உண்டு. பாகப்பிரிவினை சுமுகமாகும். நிம்மதியான தூக்கம், நல்ல வெளிநாட்டு வாழ்க்கை அமையும்.

புதன் அசுப பலம்பெற்று தசை நடத்தினால் செவித்திறன் குறையும்.

அண்டை, அயலாருடன் எல்லைத் தகராறு இருக்கும். முக்கிய ஆவணங்கள் தொலைந்து போகும். ஞாபகமறதி அதிக மாகும். சொத்து தொடர்பான பாகப் பிரிவினையில் குழப்பம் உருவாகும். உடன்பிறந்தவர்களால் மிகுதியான விரயம் இருக்கும். தனிமையாகவோ, யாருக்கேனும் அடிமையாகவோ இருப் பார்கள். சிலர் சிறை தண்டனை அனுபவிப் பார்கள். சிலர் படுக்கை யில் காலம் கழிப்பார்கள். கடக லக்னத்திற்கு புதன் தசை சிறப்பித்துச் சொல்லக்கூடிய பலனல்ல. எனவே புதன் ஆட்சி, உச்சம் பெறக்கூடாது.

பரிகாரம்: புதன்கிழமை நவகிரக புதன் பகவானை பச்சைப் பயிறு படைத்து வழிபடவும்.

சுக்கிர தசை

கடக லக்னத்திற்கு சுக்கிரன் 4, 11-ஆம் அதிபதி மற்றும் பாதகாதிபதி. சுக்கிரன் சூட்சம வலுப்பெற்று தசை நடத்தினால் சொத்துகளால் அதிக வருமானம் உண்டு. விவசாயம், கால்நடை வளர்ப்பு, வாடகை வருமானம் என வாழ்க்கை வளமாக இருக்கும். தாய்வழி உறவுகள் மற்றும் மூத்த சகோதரத்தால் ஆதாயம் உண்டு. சிலருக்கு சுக்கிர தசைக் காலங்களில் மறுமணம் நடக்கும். சிலருக்கு இந்த காலங் களில் யாருக்கும் தெரியாத ரகசிய குடும்பம் அமையும். இரண்டாம் திருமணத்திற்குப்பிறகு ஸ்திர சொத்துகளின் சேர்க்கை அதிகரிக்கும். தசையின் ஆரம்பத்தில் லாபத்தைக் கொடுத் தாலும் தசையின் முடிவில் கொடுத்ததைவிட பலமடங்கு அழிவு, ஏமாற்றம் மற்றும் வம்பு, வழக்குண்டு. கடகம் சர லக்னம் என்பதால் பிரச்சினையிவிருந்து மீள்வது எளிது.

பருவ வயதில் சுக்கிர தசை வந்தால் கல்வியில் நாட்டம் குறையும். லௌகீக நாட்டம் அதிகரிக்கும். மத்திம வயது சுக்கிர தசை மன நிறைவான மண வாழ்க்கையைத் தராது. சுக்கிரன் ஆட்சி, உச்சம் பெறக் கூடாது. சுக்கிரன் நின்ற இடத்திற்கேற்ப பலன் மாறுபடும்.

பரிகாரம்: வெள்ளிக்கிழமை திருமணத் திற்கு சொர்ண தானம் வழங்கவும்.

செவ்வாய் தசை

செவ்வாய் கடகத்திற்கு 5, 10-ஆம் அதிபதி. செவ்வாய் கடகத்திற்கு ஏக யோகாதிபதி. செவ்வாய் சுப வலுப்பெற்று தசை நடத்தி னால் பூர்வீகத்தில் பிறந்து பூர்வீகத்திலேயே பெயரோடும் புகழோடும் வாழ்வார்கள். தலைமைப் பதவி தேடிவரும். நினைத் ததை சாதிக்கும் எண்ணம் உண்டாகும்.

பதவி, புகழ் அந்தஸ்து எளிதாகத் தேடிவரும். நிர்வாகத் திறமை யுண்டு. அரசியல், அரசு சார்ந்த செயல் களில் தனித் திறமை யுடன் பிரகாசிப்பார் கள். நன்மக்கட்பேறு உண்டாகும். புத்திரர் களால் இவர்களுக்கும் இவர்களால் புத்திரர் களுக்கும் பயனுண்டு. அதிர்ஷ்ட தேவதை இவர்களுக்கு வசப் படுவாள். தொட்டது துலங்கும். இவர்களின் ஆலோசனைக்கு, ஏவலுக்கு கட்டுப் பட்டு நடக்கக் பலர் விரும்புவார்கள். தனது புத்தி சாதுர்யத்தால் பிறரை நல்வழிப்படுத்துவதில் வல்லவர்கள். உற்றார்- உறவினர் என பந்துக்களோடு வாழ்பவர்கள். குலதெய்வ கடாட்சம் உண்டு. குலதெய்வக் கோவில் நிர்வாகிகள். வம்சாவளியாக பூர்வீகச் சொத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்றவர்கள்.

இதற்கு அசுப கிரக சம்பந்தம் இருந்தால் பூர்வீகத்தில் வாழமுடியாது. பூர்வீகச் சொத்தில் சர்ச்சை உண்டு. பிள்ளைகளால் மன வேதனை மிகும். குலதெய்வ அருள் கிடைக்காது.

பரிகாரம்: குலதெய்வ வழிபாடு சிறப்பு..

குரு தசை

குரு கடகத்திற்கு 6, 9-ஆம் அதிபதி. 6-ஆமிடம் என்பது ருண, ரோக, சத்ரு ஸ்தானம். 9-ஆமிடம் பாக்கிய ஸ்தானம்.

ருணம் என்றால் கடன். பொருள் கடன் மட்டுமல்ல; ஒருவரிடமிருந்து பெற்ற அன்பும் உதவியும்கூட கடன்தான். ஒருவரிடம் பெற்ற உதவி மற்றும் அன்பிற்கு பிரதி உபகாரம் செய்யாமல் இருந்தால் ருண பந்தம் கர்மவினையாக மாறி பிறவி தொடர்ந்துகொண்டே இருக்கும். மிகச் சுருக்கமாக, பெற்றோர் கள், உடன்பிறந்தவர்கள், மனைவி, மக்களுக்கு செய்யவேண்டிய கடமையிலிருந்து தவறும்போது பிறவிக்கடன் தீராது. ஒரு மனிதன் உடன்பிறந்தவர்கள், மனைவி, மக்களுக்குக்கூட பிறவிக் கடனை திரும்பச் செலுத்தும் சந்தர்ப்பம் கிடைக்கப்பெறலாம். ஆனால் நம்மைப் பெற்ற, நமக்கு உடலும், உயிரும் கொடுத்த தாய்- தந்தைக்கு செலுத்தவேண்டிய பெற்ற கடனை யாராலும் எளிதில் தீர்க்கமுடியாது. லக்னம், ஐந்தாமிடம் எனும் பூர்வபுண்ணிய ஸ்தானம், ஒன்பதாமிடம் எனும் பாக்கிய ஸ்தானம் வலிமை பெற்றவர்களுக்கு மட்டுமே இது சாத்தியம். பிறவிக் கடன் முற்றிலும் சரிசெய்யப்பட்டு விட்டால் மறுபிறவி எடுக்கமுடியாது. மனிதர்களாய் இந்த பிறவியில் வாழ்ந்துகொண்டிருக்கும் அனைவரும் தீர்க்கமுடியாத பிறவிக் கடனில் நீந்துபவர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

பெற்றோர்கள் உயிருடன் இருக்கும்போது, போதிய வசதி வாய்பிருந்தும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை செய்யத் தவறியவர்கள் மறுபிறவியில் அடிப்படைத் தேவைகளான உணவு, உடை இன்றி வறுமையில் வாழ்வார்கள். பெற்றோர்களை தன் சுயநலத்திற்காக, தனக்கு அடிமையாக நடத்துபவர்கள் மறுபிறவியில் அடிமைத் தொழில் செய்து கஷ்ட ஜீவனம் நடத்த நேரும். பெற்றோர்களை சுமையாகக் கருதி முதியோர் இல்லத்தில் சேர்ப்பவர்கள் மறுபிறவியில் வீடு, வாசலை இழந்து தவிப்பார்கள். பெற்றோர்களை மதிக்காமல், குல மரபைக் கடைப்பிடிக்கத் தவறியவர்கள் மறுபிறவியில் பிறந்த குலம், குலதெய்வம் தெரியாமல் அவதிப்படுவார்கள். கடக லக்னத்தார் குரு தசைக் காலங்களில் தீராத, தீர்க்கமுடியாத பிறவிக் கடனை அதிகம் சுமக்கிறார்கள்.

மனிதர்கள் இந்தப் பிறவியில் வாழும் காலத்தில் திருமணம் செய்ய, வீடுகட்ட, கல்வி செலவிற்காக கடன் வாங்கிவிட்டு, திரும்ப கட்டமுடியாமல் கஷ்டப்படுவது, தொழில், வியாபாரம் செய்ய கடன் வாங்கி தொழில் செய்து, கடன்பட்டு நஷ்டம் அடைந்தவர்கள், வேலை இழப்பு, வேலை இல்லாமை, மருந்துசெலவு போன்றவற்றால் கடன் வாங்கி, திரும்ப செலுத்த முடியாமல் கஷ்டப்படுத்தும். பொருள் கடன். பிறவிக்கடனை தீர்க்காதவர்களுக்கு பொருள் கடன் தீராது.

பரிகாரம்: உயிருடன் வாழும் பெற்றோர்களின் நியாயமான உணர்வு களுக்கு மதிப்பு கொடுத்து வாழவேண்டும். இறந்தபிறகு எத்தனை முறை ஊரைக்கூட்டி திதி கொடுத்து விருந்துபோட்டு தங்கள் பாசத்தை வெளிக்காட்டினாலும் பயனில்லை.

சனி தசை

சனி கடக லக்னத்திற்கு 7, 8-ஆமதிபதி. களத்திர ஸ்தானாதிபதி. அஷ்டமாதிபதி. மாரகாதிபதி. 12 வயதிற்குள் சனி தசை மிகுதியான பாலாரிஷ்ட தோஷம்.

மத்திம வயதில் சனி தசை திருமணத்தடை அல்லது திருமணத்தில் தோல்வி, கூட்டுத் தொழில்மூலம் வம்பு, வழக்கு. அல்லது விபத்து, கண்டம், சர்ஜரி போன்ற பலன் நடக்கும். வயோதிகத்தில் சனி மரணத்திற்கு இணையான கண்டம் தரும்.

பரிகாரம்: திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஸ்ரீ வாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்சென்று வரவும்.

ராகு தசை நடப்பவர்கள் வேற்று மதத்தினரின் தேவையறிந்து உதவவும். கேது தசை நடப்பவர்கள் சங்கட ஹர சதுர்த்தி நாளில் விநாயகரை புனித நீரால் அபிஷேகம் செய்து வழிபடவேண்டும்.

தொடரும்....

செல்: 98652 20406