நெடுங்காலம் வாழும் முதியோர்களை வணங்கினால் தீர்க்காயுளுடன் வாழ வாழ்த்து வார்கள். பொதுவாக மானிடர் களின் பூரண ஆயுள் என்பது நூறு ஆண்டுகள் என்று வரை யறுத்துள்ளனர். ஆனால் இன்றைய செய்திகள், 120 வயதுவரை சீராக வாழ்ந்து, தம் கண்ணையே பிறருக்கு தானம் செய்துள்ளனர். மருத்துவர் களின் அரிய கண்டுபிடிப்புகள் வாழ்நாளைப் பெருக்கும் விதமாக அமைகிறது.
"ஸாராவளி' போன்ற சாஸ்திரங் கள் கூறுவதென்னவென்றால், ஜாதகத்தில் மேஷம் 8-ஆமிடமாக இருக்கும் ஜாதகருக்கு வேறு தேசம், வேறு மாநிலம்- அதாவது பிறந்த இடம் அல்லாத வேறிடத்தில்தான் உயிர்பிரியும்; மரணம் ஏற்படும். இதனை கைரேகை சாஸ்திரம், சந்திர மேட்டில் நீண்ட படுக்கை ரேகையும் அதில் கரும்புள்ளியும் தென்படும் என்று கூறுகிறது.
வாகன விபத்து
சனி, சந்திரனுடன் செவ்வாய் 2, 4, 10-ல் இருந்தாலும், 4-ல் செவ்வாயும் 10-ல் சூரியனும் இருந்தாலும் வாகன விபத்து ஏற்படும் எனலாம். இதனை உறுதிசெய்வது, உள்ளங்கை ஆயுள் ரேகையில் எந்த கால அளவில் ரேகை மறைகிறதோ அந்த கால அளவில் தீவுக்குறி காணப்படும். அப்போது விபத்து நடந்துவிடும்.
ஜென்ம லக்னம், சந்திர லக்னம் சர ராசிகளாகி, ஜென்ம லக்னாதிபதி, சந்திர லக்னாதிபதி ஆகியோர் சர ராசியில் இருந்தால் தீர்க்காயுள்.
ஜென்ம லக்னம், சந்திர லக்னம் சர ராசிகளாகி, ஜென்ம, சந்திர லக்னாதிபதிகள் ஸ்திர ராசியில் இருந்தால் மத்திமாயுள்.
ஜென்ம லக்னம், சந்திர லக்னம் சர ராசியாகி, ஜென்ம, சந்திர லக்னாதிபதிகள் உபய ராசியிலிருந்தால் அற்பாயுள்.
8-க்குடையவன் 2, 5, 9-ஆமிடங்களில் இருந்து, பாவரான லக்னாதிபதி 8-ல் இருந்து சுபர் பார்வை பெற்றால், இருபத்து நான்கு வயதில் விபத்தை சந்திக்க நேரிடும். ஆயுள்ரேகையை உற்றுப் பாருங்கள். வலது, இடது இரு கைகளிலும் காணப்படும். ஆயுள்ரேகை குட்டையாகக் காணப்பட்டால் விபத்து பதம்பார்த்துவிடும். திருக்கடையூர் சென்று மார்க்கண்டேயரை வணங்கலாம்.
இனி, மேஷம்முதல் மீன லக்னம்வரையிலான ஜாதருக்கான விபத்து, விழிப்புணர்வு பற்றி ஆய்வு செய்வோம்.
மேஷம்
மேஷ லக்னத்திற்கு 4, 8-க்குரியவர்கள் சந்திரனும் செவ்வாயும் ஆவார்கள். செவ்வாயும் சந்திரனும் இணைந்து கன்னி, விருச்சிகம், மீனம் ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் போதெல்லாம், வாகனங்களில் குடும்பசகிதம் பயணம் செய்வது கூடாது. மிருகங்களை சீண்டுவதும் கூடாது. உள்ளங்கையில் கீழ்செவ்வாய் மேட்டில் கரும்புள்ளி காணப்பட்டால் விபத்து உறுதியென மனதை உறுதிப்படுத்த வேண்டும்.
ரிஷபம்
ரிஷப லக்னத்திற்கு 4, 8-க்குரிய வர்கள் சூரியனும் வியாழனும் ஆவார்கள். அவர்கள் இருவரும் இணைந்து துலாம், தனுசு, மேஷம் ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களில் துன்பங்கள் நேரும். தோஷம் நெருக்கடியைத் தரும். நீங்கள் சார்ந்துள்ள துறையில் கவனமுடன் செயல்படவேண்டும். அதாவது ஐப்பசி மாதம் குரு அங்கு இருக்கும்விதமாக சஞ்சாரம் செய்யும்போது கவனம் தேவை. அந்த கால அளவில் உங்கள் நடுவிரலில் முதல் அங்குலாஸ்தியில் திடீரென கரும்புள்ளி தோன்றினால், வீட்டுக்கு வந்த விருந்தினர் விபத்தில் சிக்கப்போவதன் அறிகுறி. எனவே திடீர் விருந்தினர் நடத்தையில் உன்னிப்பான கவனம் தேவை.
மிதுனம்
மிதுன லக்னத்திற்கு 4, 8-க்குரியவர்கள் புதனும் சனியும் ஆவார்கள். புதனும் சனியும் இணைந்து விருச்சிகம், மகரம், ரிஷபம் ஆகிய இடங்களில் சஞ்சாரிக்கும்போதெல் லாம் கெடுதல்கள் நிகழ வாய்ப்புண்டு. சிறு பரிகாரங்கள் செய்தல் நன்று. பயணத்தின் போது குளிர்கண்ணாடி அணியலாம். கருப்புநிற நான்குகால் பிராணிகளுக்கு உணவு தரலாம். மேலும் அக்காலங்களில் மகளோ, சகோதரிகளின் மகள்களோ திருமணம் ஈடேறி வடக்குநோக்கிப் பயணம் செய்வது கூடாது. தவிர்க்கமுடியாத சூழ்நிலையில், ஒரு சிறு மண்குடுவையில் பாலை நிரப்பி, திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடவேண்டும். ஒரு கங்கை நீர் செம்புப் பாத்திரத்தை விவசாய நிலத்தில் வடமேற்கு மூலையில் பள்ளம் தோண்டி மூடிவைப்பதால் பயிர் நாசமாவதைத் தவிர்க்கலாம்.
கடகம்
கடக லக்னத்திற்கு 4, 8-க்குரியவர்கள் சுக்கிரனும் சனியும். இவர்கள் இணைந்து தனுசு, கும்பம், மிதுனம் ஆகிய இடங்களில் சஞ்சாரிக்கும்போது விபத்துகள் பயணத் தடைகள் வரலாம். உல்லாசப் பயணத்தின் போது பொருட்காட்சிகளில் ராட்டினத்தில் ஏறக்கூடாது. மிருகக் காட்சி சாலையில் கொடிய மிருகங்களை நெருங்குதல் கூடாது. கூட்டமாக குடும்பத்துடன் படகு சவாரி வேண்டாம். பறவைகளுக்கு தானியம் ஊட்டல் சிறந்த பரிகாரம். புரோகிதர்களுக்கு புத்தாடை தானம் சிறந்தது. இந்த காலத்தில் குழந்தைகள் புத்திமதி, அபிப்பிராயம் சொன்னாலும் ஏற்கலாம்.
சிம்மம்
லக்னத்திற்கு 4, 8-க்குடையவர்கள் செவ்வாய் மற்றும் வியாழன் ஆவார்கள். இவையிரண்டும் இணைந்து மகரம், மீனம், கடகம் ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும்போது, ஜாதகருக்கு வாகனத்தால் அவதி ஏற்படும். அக்காலங்களில் வயோதிகர்கள் நீண்ட பயணங்களைத் தவிர்க்கலாம். பயணம் செல்லும் போது ஒற்றைக் கண்ணுடையோர், உதடு பாதிக்கப்பட்டவர்கள் எதிரே வருவது நல்ல சகுனமல்ல. தான தர்மம் செய்யலாம். தங்க நகைகள் அணிதல் நன்று; நற்பலன்தரும்.
கன்னி
கன்னி லக்னத்திற்கு 4, 8-க்குரியவர்கள் வியாழனும் செவ்வாயும் ஆவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து கும்பம், மேஷம், சிம்மம் ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் காலங்களை பஞ்சாங்கத்தின் உதவியுடன் நிர்ணயம் செய்யலாம். அப்போது, தீயவையைதான் பரிசாக காலம் தரும். அன்றாட வாழ்விலும் நல்லவை நடக்காது. மோதிர விரலையடுத்த சூரிய மேடு, சனி மேடு, கீழ்செவ்வாய் மேடு இவற்றில் கரும்புள்ளி தோன்றினால். குடும்பத் தார் நலன்கருதி தான தர்மம் செய்யலாம். "கேட்ஸ்- ஐ' மோதிரம் அணிவதும் நல்ல பரிகாரம். கிராமப்புறத்தில் வசிப்போர் மூன்று கிணற்று நீரை ஒன்றாகக் கலந்து புதனன்று நீராடுவது நல்ல பரிகாரம்.
துலாம்
துலா லக்னத்திற்கு 4, 8-க்குரியவர் சனியும், சுக்கிரனும் ஆவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து மீனம், ரிஷபம், கன்னி ஆகிய இடங்களில் சஞ்சாரிக்கும்போது துலா லக்னத்தாருக்கு ஏதோவொரு சூழ்நிலையில் விபத்தை எதிர்கொள்ளவேண்டிய கட்டாயம் ஏற்படும். எச்சரிக்கை நிலையில் நடந்துகொள்ள வேண்டும். மணமானோர், மனைவிக்கு சுபநாளில் இன்னுமொரு தாலி கட்டலாம். முத்து மோதிரம் அணிதல் நல்லது. சனிக்காக ஒரு சமச்சதுர வெள்ளித்துண்டை பர்சில் வைத்துக்கொள்ளலாம். மூன்று சனிக்கிழமை புலால் (அசைவம்) மறுப்பது நன்று.
விருச்சிகம்
இந்த லக்னத்தாருக்கு 4, 8-க்குரியவர்கள் சனியும் புதனும் ஆவார்கள். இவர்கள் இணைந்து மேஷம், மிதுனம், துலாம் ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும்போது ஆபத்துகள் ஏற்பட லாம். உடல்சார்ந்த விபத்து வரும். ஜாதகத்தை கால நிர்ணயம் செய்து விதியைக் கட்டுப்படுத்த லாம். உடலுழைப்பை நம்பி வாழ்வோருக்கு வேண்டிய தான தருமம் செய்யவும். ஊரில் வடகிழக்கு பாகத்தில் இருக்கும் கிணற்றில் காய்ச்சாத பாலை ஊற்றலாம். (பாக்கெட் பால் கூடாது). எருமை, காகம், செம்பருந்து போன்றவற்றுக்கு உணவளிக்கலாம். ஆஸ்துமா நோயாளிக்கு மருந்து வாங்க உதவுவது நன்று.
தனுசு
லக்னத்திற்கு 4, 8-க்குரியவர்கள் வியாழனும் சந்திரனும் ஆவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து சஞ்சாரம் செய்யும் காலங்களில் விபத்துகள் நேரிடும். வயதில் மூத்தவருக்கு உதவிபுரியலாம். உள்ளாடைகள் சிவப்பு நிறங் களில் உபயோகிப்பது நன்று. சந்திர மேட்டில் சல்லடைக் குறி தோன்றினால் கெடுதலின் பலம் குறையும். குடும்ப புரோகிதர்களுக்கு ஆடைதானம் நல்லது. சந்திரனுக்காக, குடும் பத்தில் முன்னாட்களில் வாழ்ந்து மறைந்த பெரியவர் களுக்கு மகாளய அமாவாசையில் ஒன்பது புரோகிதருக்கு இயன்ற தானமளிப்பது வருமுன் காக்கும்.
மகரம்
மகர லக்னத்திற்கு 4, 8-க்குரியவர்கள், செவ்வாயும் சூரியனும் ஆவார்கள். இவர்கள் இணைந்து மிதுனம், சிம்மம், தனுசு ஆகிய இடங்களில் சஞ்சாரம் செய்யும்போது விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். அத்தகைய தீயகிரக சங்கமக் காலங்களில் வாகனப் பயணங்களைத் தவிர்ப்பது நன்று. உங்களுடைய வீடு தென்திசை நோக்கியிருந்தால் மிகக் கவனம் தேவை. வீட்டில் தொலைபேசி கோபுரம் அமைத்து வாடகை, குத்தகைக்கு விடுவதைத் தவிர்க்கவேண்டும். வெள்ளைப் பசு வளர்க்கலாம். மாமனார்- மாமியாருடன் நீண்டபயணம் செல்வதைத் தவிர்க்கவும்.
கும்பம்
கும்ப லக்னத்திற்கு 4, 8-க்குரியவர்கள் சுக்கிரனும் புதனும் ஆவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து கடகம், கன்னி, மகரம் போன்ற இடங்களில் சஞ்சாரம் செய்யும்போது கெடுதல்கள் தொடர்நிகழ்வாகும். வசதி படைத்தோர் வாகனங்களில் வீட்டு செல்லப் பிராணிகளை ஏற்றிச் செல்லுதல் கூடாது. வெள்ளியில் இணைப்பு தெரியா மோதிரம் அணிதல் நன்று. இப்படிப்பட்ட காலங் களில் பூஜையறையை மாற்றம் செய்வது கூடாது. இக்காலங்கள் கருப்புநிற உள்ளாடைகள் அணிதல் நன்று.
மீனம்
மீன லக்னத்திற்கு 4, 8-க்குரியவர்கள் சுக்கிரன், புதன் ஆவார்கள். இவர்கள் இருவரும் இணைந்து சிம்மம், துலாம், கும்பம் ஆகிய இடங் களில் சஞ்சாரம் செய்யும்போது தேவையில்லா சங்கடங்களை அனு பவிக்க நேரிடும். பஞ்ச வர்ணக்கிளி, ஆடு வளர்ப்பது கூடாது. வீட்டில் அதிக பச்சை வண்ணம் பூசுவதைத் தவிர்க்கவும். வெள்ளிக்கிழமை மூன்று செம்பு வளையத்தை, தலையை திருஷ்டி சுற்றி ஓடும் நீரில் போடவும்.கண்டங்களை அறிந்து நடந்து கொண்டால் விடுபடலாம்.
செல்: 94456 14843