துலாம்
உங்களின் லக்னா திபதி சுக்கிரன் உங்க ளின் அதிர்ஷ்ட அதிபதி மிதுன புதன் ஆவார்.
உங்களின் அதிர்ஷ்டாதி பதி புதன் உச்சமாக இருப்பின், அவர் உங்களின், விரய ஸ்தானம் எனும் 12-ஆமிடத்தில் உச்சமடைவார். இது இருவித பலன் தரும். ஒன்று உங்களின் அதிர்ஷ்டம் கை கெட்டாமல், மறைந்து விடும். அல்லது ஒருவேளை வெளிநாடு சென்றால் யோகம் அனுபவிக்கலாம்.
இதே புதன், உங்களின் 6-ஆமிடத்தில் நீசமடைவார். ஒரு அதிர்ஷ்ட அதிபதி, வேலை செய்யும் இடத்தில் நீசமாகும்போது, இவர் ஒரு மாதத்திற்கு ஒரு வேலை செய்வார். வேலையில் நிரந்தரம் இருக்காது. அல்லது எவ்வளவு உழைத்தாலும், அதற்குரிய அங்கீ காரம் கிடைக்காது. நிறைய இல்லத்தரசிகள் இவ்விதமாக, எத்தணை உழைத்தாலும், நல்ல பெயர் கிடையாது என மனப்பொருமலோடு இருப்பது உண்டுதானே!
துலா லக்னத்துக்கும், லக்னாதிபதி, அதிர்ஷ் டாதிபதியின், நீச, உச்ச பங்க நிலைக்கும் சம்பந்தம் உண்டு.
ஆனால், துலா லக்ன, அதிர்ஷ்ட அதிபதி நீசமாகி, அங்கு லக்னாதிபதி சுக்கிரன் உச்ச மானாலும், அது 6-ஆமிடம் என்பதால், அந்த யோகம் முழுமையாக கிடைக்குமா? அனு பவிக்க முடியுமா என்பது சந்தேகமே! அதுபோல், லக்னாதிபதி சுக்கிரன் நீசமாகி, அங்கு அதிர்ஷ்டாதிபதி புதன் உச்சமாகி, நீசபங்க நிலை ஏற்பட்டாலும், அதனையும் துலா லக்னத்தார் அனுபவிக்க முடியாமல், விரயம் என்ற நிலைக்கு வீணாகி விடும் என்றாகிறது.
ஆக, ஒன்று மட்டும் நிச்சயம், துலா லக்னத்தாரின் அதிர்ஷ் டத்தை, அவர்களைத் தவிர, மற்ற எல்லாரும் நன்கு அனுபவிப்பார் கள் என்று தெளிவு படத் தெரிகிறது. துலா லக்ன அதிர்ஷ்டாதிபதி புதன், பரணி, பூரம், பூராடம் நட்சத் திரத்தில் நின்றாலும், லக்னாதி பதி சுக்கிரன் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரத்தில் நின்றாலும் நல்ல அதிர்ஷ்ட நிலை ஏற்படும். எனினும் அதிர்ஷ் டம் அருகிலேயே வருமேயொழிய, உங்கள் பக்கம் மூஞ்சியை காண்பிக்காமல், மற்றவரை பார்த்து சிரித்துக்கொண்டே வரும். நீங்களோ, அதிர்ஷ்டத்தின் முகவிலாசம் எப்படியிருக் கும் எனத் தெரியாமலேயே காலத்தை ஓட்ட வேண்டியதான். என்னத்தைச் சொல்ல.
உங்கள் அதிர்ஷ்டத்தை, எப்படியும் பிறர் தான் அனுபவிக்கப் போகிறார்கள். அதனால் அவர்களையே, அவர்களின் இஷ்ட தெய்வத்தை வணங்கச் சொல்லுங்கள்.
விருச்சிகம்
உங்களின் லக்னநாதர் செவ்வாய் உங்கள் அதிர்ஷ்ட அதிபதி சந்திரன்.
இந்த விருச்சிகம், ஒரு வில்லங்கமான அதிர்ஷ்ட அமைப்பு கொண்டது. விருச் சிகத்தில் 9-ஆம் அதிபதி சந்திரன் நீசமடைவார்.
9-ஆமிடமான அதிர்ஷ்ட ஸ்தானத்தில், லக்னாதிபதி செவ்வாய் நீசமடைவார். வௌங்கினாப்புலாதான்.
இதில் சந்திரன், செவ்வாய் பரிவர்த்தனை எனில், ரைட்டு, நீசபங்க ராஜ யோகம் ஏற்பட்டு, ஒருவிதமாக அதிர்ஷ்ட நிலை வந்துவிடும்.
விருச்சிகத்தாரின், அதிர்ஷ்ட அதிபதி சந்திரன் உச்சமானால், உங்களுக்கு திருமணம், பொதுமக்கள் தொடர்பு, வெளிநாடு என இவை யோகம் தரும். சிலர் திருமணமானவுடன் ஓஹோ எனும் உயர்நிலைக்கு செல்வதெல்லாம் இதுவே காரணமாக அமையும்.
9-ஆம் அதிபதி நீசமாகி, பங்கமாக இருப் பின், தாயார் சரியில்லாமலும், மனப்பிறழ்வு நோயாலும், நோய்த் தாக்கத்தாலும் சிரமப் படுவீர்கள்.
செவ்வாய், சந்திரன் சுபத்தன்மை பெற்று, சேர்க்கை, இணைவு இருப்பின் நல் அதிர்ஷ் டத்தை அனுபவிக்கமுடியும்.
செவ்வாய், சந்திரன் ஓரளவு சுபத்துடன் இருந்தும், இணைவின்றி இருப்பின் யோகம் சற்று சந்தேகம்தான். இந்த அதிர்ஷ்ட கிரக சந்திரன், செவ்வாயோடு சேரா மல், சுக்கிரனோடு சேர்ந் தால், உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் பங்குதாரர் உங்கள் யோகத்தை அனு பவிப்பார். சந்திரன், புதனோடு சேர்ந்தால், உங்களின் மூத்த சகோத ரன், மறைவான இணைவு அனுபவிப்பர். சந்திரன், சூரியனோடு சேர்ந் தால், உங்கள் மாமியாரும், உங்கள் தந்தையும் யோகத்தை பயன்படுத்திக் கொள்வர். சந்திரன், குருவோடு சேர்ந்தால், உங்கள் குடும்ப வாரிசுகள் அனுபவிப்பர். சந்திரன் சனியோடு சேர்ந்தால் உங்கள் தாயாரும், உங்கள் இளைய சகோதரரும். உங்கள் மாமனாரும் உங் கள் அதிர்ஷ்டத்தை அள்ளி, அள்ளி அனுபவிப்பர்.
உங்கள் 9-ஆம் அதிபதி சந்திரன், மிருகசீரிடம் 1, 2-ஆம் பாதத்திலோ, சித்திரை 1, 2-ஆம் பாதம், அவிட்டம் நட்சத்திரத்தில் நின்றாலும் உங்களின் லக்னாதிபதி செவ்வாய், ரோகிணி, அஸ்தம், திருவோண நட்சத்திரத்தில் நின்றாலும் அதிர்ஷ்டம் உங்கள்கூடவே இணைந்து வரும்.
உங்களின் யோகம் பெருகி வளர, திருச்செந்தூர் முருகனை வணங்கவும்.
தனுசு
உங்கள் தனுசு லக்னாதிபதி குரு. உங்களின் அதிர்ஷ்டாதிபதி சூரியன் ஆவார். இந்த சூரியன் உச்சம்பெற்றால், உங்களின் பூர்வபுண்ணிய ஸ்தானத்தில் உச்சம்பெறுவார். ஆக, உங்களின் வெகுவான அதிர்ஷ்டம் என்பது, உங்களின் பூர்வ ஜென்ம புண்ணிய பலத்தால் உண்டானது என்பது தெளிவு. இந்த உச்ச சூரியன், உங்கள் பரம்பரையை மிக மேன்மை ஆக்கும். பரம்பரையாக மந்திரி பதவி வகிப்பவர்கள், இம்மாதிரி கிரக அமைப்பு பெற்றவர்களாக இருப்பர்.
இதே சூரியன் நீசமானால், அரசியல் மற்றும் எதை எண்ணினாலும், நிறைவேறாமல் போய்விடும். மறைமுக இணைவு பீடை தரும்.
தனுசு லக்னத்தாருக்கு, எவ்விதத்திலாவது குரு, சூரியன் சேர்க்கை இருப்பின் அவர் களின் நிறைய தோஷங்கள் அடிபட்டு, நல் யோகம் காண்பர். தனுசு லக்னத்தாரின், குருவும், சூரியனும் ஓரளவு சுபத்தன்மையுடன் இருந்து, இணையாமல் இருப்பின் அதிர்ஷ்டம் விலகிவிடும்.
சூரியன், புதனுடன் சேர்ந்தால், தொழிலில் உடன் இருப்போர், பங்குதாரர், வாழ்க்கைத்துணை இவர்களும், சூரியன்+ சுக்கிரன், மறைமுக இணைகளும், தாய் மாமனும், சூரியன்+செவ்வாய்- வாரிசுகளும், சூரியன்+சனி இளைய சகோதரரும் உங்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிப்பர்.
உங்கள் அதிர்ஷ்ட அதிபதி சூரியன், புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதம், பூரட்டாதி நட்சத்திரம் வாங்கி இருப்பினும், உங்கள் லக்னாதிபதி குரு கார்த்திகை 1-ஆம் பாதம், உத்திரம், உத்திராடம்- 1-ஆம் பாதம் வாங்கி இருந்தாலும் அதிர்ஷ்ட அரவணைப்பு உண்டு.
அதிர்ஷ்டம் மேலும், மேலும் பெருக சூரிய பகவானையும், ஆதித்ய ஹ்ருதயம் பாராயணமும், கும்பகோணம் கும்பேஸ்வரர் ஆலய தர்சனமும் நன்று.
மகரம்
உங்கள் லக்னநாதர் சனி. உங்களின் அதிர்ஷ்ட அதிபதி புதன். இந்த புதன், அதே அதிர்ஷ்ட வீட்டில் ஆட்சியும் உச்சமும் அடைவர் என்பது சிறப்பு.
இந்த புதன் உச்சமடைந்தால், இவர்கள் வேலை, சேவை, உழைப்பு என இந்த இனங் களில் வெகு யோகம் பெறுவர்.
இதே புதன் நீசமானால், இளைய சகோதர தொந்தரவு, புகழ் இல்லாமை, புத்தி மந்தம், ஞாபக சக்தி குறைவு, ரொம்ப பயந்த சுபாவம், படிப்பில் மக்குத் தனம் என இவற்றால் அல்லாடுவர்.
மகர லக்னத்தாருக்கு, எவ்விதத்திலாவது, சனி, புதன் சுப சேர்க்கைப்பெற்றால், மகர லக்னத்தார், அதிர்ஷ்டத்தை, மிக அருமை யாக அனுபவிப்பார்கள். அவ்வாறு இன்றி, அதிர்ஷ்ட புதன், குருவோடு சேர்க்கை பெறின், உங்கள் இளைய சகோதரரும், புதன்+செவ்வாய் சேர்க்கை உங்கள் தாயாரும், மூத்த சகோதரரும், புதன்+ சுக்கிரன் சேர்க்கை, உங்களின் வாரிசு களும், உங்களின் மாமியாரும், புதன்+சந்திரன் சேர்க்கை பெறின் உங்களின் வாழ்க்கைத் துணையும், பங்குதாரர்களும், அனுபவிப்பர்.
புதன்+சூரியன் சேர்க்கை, ஒன்று அதிர்ஷ் டத்தை மறைமுகமாக அனுபவிக்கலாம் அல்லது அதிர்ஷ்டம் மறைந்தே போகலாம்.
உங்களின் மகர அதிர்ஷ்ட அதிபதி புதன் பூசம், அனுஷம் நட்சத்திரத்தில் நின்றாலும், அல்லது உங்கள் மகர லக்னாதிபதி சனி, ஆயில்யம், கேட்டை ரேவதி நட்சத்திரத்தில் நின்றாலும், உங்களுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் கெமிஸ்ட்ரி நன்கு ஒத்துவரும்.
உங்களின் அதிர்ஷ்டம் தழைத்தோங்க திருப்பதி அல்லது மதுரை மீனாட்சியம்மனை வணங்கலாம்.
கும்பம்
உங்கள் லக்னாதிபதி சனி. உங்களின் அதிர்ஷ்ட அதிபதி துலா சுக்கிரன் ஆவார். இந்த கும்ப லக்னாத்தாருக்கு பெரிய சிறப்பு என்னவெனில், உங்கள் லக்னாதிபதி, உங்களின் அதிர்ஷ்ட வீட்டில் உச்சமாவார் என்பதுதான். இது எத்தனை பெரும் யோக நிலை. பிறந்ததே, முழு அதிர்ஷடத்தோடுதான் என்றாகிறது. இதே இவர்களின் அதிர்ஷ்டாதிபதி. சுக்கிரன் உச்சமானால், அவர் இவர்களின் தனஸ்தானத்தில் உச்சமடைவார். எனவே பணப்புழக்கம், குடும்பம், வாக்கு என இவை மிக, மிக செழிப்பாகவே இருக்கும்.
இதே அதிர்ஷ்ட அதிபதி நீசமானால் அவர் உங்களின் 8-ஆம் வீட்டில் நீசமடை வார். எனவே அதிர்ஷ்டம் என்றால் என்ன விலை எனக் கேட்குமளவுக்கு வாழ்வியல் அமையும். இதே சுக்கிரன் நீசபங்கம் ஆனா லும், ஓரளவு ஒப்பேற்றலாம் என்றிருக்கும்.
சனியும், சுக்கிரனும் எவ்விதத்திலாவது சுப சேர்க்கை பெறின். கும்ப லக்னத்தார் அதிர்ஷ் டம் அனுபவிக்க தடை இராது. அவ்வாறின்றி, அதிர்ஷ்ட சுக்கிரன்+புதன் சம்பந்தம் பெறின் வாரிசுகளும், வாழ்க்கைத் துணையின் குடும் பத்தாரும், செவ்வாய்+சுக்கிரன் சம்பந்தம், உங்கள் இளைய சகோதரன், மற்றும் உங்கள் மாமியாரும், சுக்கிரன்+குரு சம்பந்தம் உங்க ளின் மூத்த சகோதரம் மற்றும் வெளியில் தெரி யாத துணையும் அனுபவித்து தீர்ப்பார்கள்.
உங்களின் அதிர்ஷ்ட கிரகம் சுக்கிரன் அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திர காலில் நின்றாலும், உங்கள் லக்னாதிபதி சனி, பூரம், பூராடம் நட்சத்திரக் காலில் நின்றாலும் அதிர்ஷ்டம் அழையாமலேயே வந்துசேரும். உங்கள் அதிர்ஷ்டம் பெருக, ஸ்ரீரங்கம் ரங்கநாதரை யும், மகாலட்சுமியையும் வணங்கவேண்டும்.
மீனம்
உங்களின் லக்னநாதன் குரு. உங்களின் அதிர்ஷ்ட கிரகம் விருச்சிக செவ்வாய். இந்த லக்னமும் சற்றே முரண்டு பிடித்த அதிர்ஷ்ட அமைப்பு கொண்டதுதான்.
உங்களின் அதிர்ஷ்ட அதிபதி செவ்வாய் உச்சமாகும் மகரத்தில், உங்களின் லக்னநாதர் நீசமடைவார்.
உங்களின் லக்னாதிபதி உச்சமடையும் கடகத்தில், அதிர்ஷ்ட அதிபதி செவ்வாய் நீசமடைவார்.
ஆக, ஒன்னு நீ நல்லாயிருக்கணும் அல்லது நான் நல்லாயிருக்கணும் என்கிற கதையில் உங்கள் லக்னாதிபதியும் அதிர்ஷ்ட அதிபதியும் மல்லு கட்டுவார்கள்.
இதில் இன்னொன்றும் உள்ளது. உச்ச குருவும், உச்ச செவ்வாயுமான அமைப்பு இருந் தாலும் அப்போதும் பயனில்லை. ஏனெனில் உச்ச கிரகங்கள் ஒன்றையொன்று பார்த்தால், அது பிச்சையெடுக்கும் யோகம் தந்து விடும்.
எனவே மீன லக்னத்திற்கு, 9-ஆம் அதிபதி யும், லக்னாதிபதியும், உச்ச நீசமின்றி, தள்ளி நின்று பார்த்துக்கொள்வது, பரிவர்த்தனையாகி இருப்பது நல் அதிர்ஷ்டம் தரும்.
உங்களின் அதிர்ஷ்ட அதிபதி, பழுதன்றி நல்ல நிலைமையில் இருப்பின், நீங்கள், அரசியல், சமையல், சீருடைத்துறை, சட்டம், ஒழுங்கு போன்ற இனங்களில் பெரும் வெற்றிபெறுவீர்கள்.
உங்களின் அதிர்ஷ்ட அதிபதி நீசமானால், ஆரோக்கியம் கெட்டு, பூர்வீகம் ரிப்பேராகி, வாரிசுகள் இம்சை கொடுத்து அறிவும் அளவு குறைந்து என பலன் ரொம்ப மட்டமாக அமையும்.
மீன லக்னாதிபதி அதிர்ஷ்ட அதிபதி ஜாயின்டாகி நல்ல பலன் தருவதே உம்பாடு, எம்பாடு என ஆகிவிடும். இவர் எங்கே மற்றவர்களுக்கு பலன் கொடுப்பது, ஏதோ ஓடும். மீன லக்ன அதிர்ஷ்ட அதிபதி செவ்வாய், புனர்பூச 1, 2, 3-ல் நின்றாலும் விசாகம் 4-ல் பூரட்டாதி 4-ல் நின்றாலும், லக்னாதிபதி குரு, மிருகசீரிடம், சித்திரை 1, 2-ல் நின்றாலும் அதிர்ஷ்டம் தன்னைப்போல வந்துசேரும்.
உங்களின் மீன லக்னத்தார், முழு அதிர்ஷ்டத்தையும் அனுபவிக்க, திருச்செந்தூர் முருகனை வணங்கவேண்டும். ஜாதகர்கள், ஜாகத்தை அலசி ஆராயா மலேயே, அதிர்ஷ்டத்தின் அளவு, நிலை என்ன என அறிந்து கொள்ளலாம்.
1. உங்களுக்கு லக்னாதிபதியும், அதிர்ஷ்ட அதிபதியும் உச்சமாகி, சுபத்தனமையோடு, மறைவு ஸ்தானங்களில் இல்லாமல் நல்ல நிலையில் இருந்தால், "க்ஷர்ழ்ய் ஜ்ண்ற்ட் ள்ண்ப்ஸ்ங்ழ் ள்ல்ர்ர்ய்' என்பார்களே, அதுபோல் கோடீஸ்வரர் மற்றும் உலக பணக்காரர் வரிசையில் இடம்பிடித்த வீட்டில் உங்களின் பிறப்பு ஏற்படும்.
2. உங்களின் லக்னாதிபதியும், அதிர்ஷ்ட அதிபதியும் உச்சமாகாமல், ஆட்சி நிலையில் சுபத்தன்மையோடு இருப்பின், நீங்கள் லட்சாதிபதி வீட்டில், அந்த மாநில பணக்காரர் வீட்டில் பிறந்திருப்பீர்கள்.
3. உங்கள் லக்னாதிபதி, அதிர்ஷ்ட அதிபதி இருவரும் கெடாமல் ஆனால் ரொம்ப சுமார் நிலையில் இருந்தால், ஆயிரக்கணக்கில் பணம் இருக்கும் வீட்டில் பிறப்பீர்கள். ஆயினும் லட்சக்கணக்கு பணத்தேவைக்கு சற்று வாழ்வியல் சிரமம் இருக்கும் குடும்பமாக அமையும்.
4. லக்னாதிபதியும் கெட்டு, அதிர்ஷ்ட அதிபதியும் கெட்டிருந்தால், அந்த ஜாதகர் பணம் மற்றும் வாழ்வு செழிப்புக்கு ஏங்கும், அல்லாடும் குடும்பத்தில் பிறந்திருப்பர்.
இப்போது இன்னொரு சந்தேகம் வரும். அது எப்படி அதிர்ஷ்டம் இருந்தும், சம்பந்தப்பட்ட ஜாதகர் அனுபவிக்காமல் போகமுடியும்? எனும் வினா எழும்.
சாப்பிடும் தட்டு வெள்ளித் தட்டாக இருப்பினும் அதில் கஞ்சியை ஊற்றி குடிப்பதுபோல இருக்கும்.
கலையுலகில், உச்ச நடிக, நடிகையர், கோடி கோடியாக சம்பாதித்தாலும், டயட் என்ற பெயரில், நாலு பச்சை காய்கறியை தின்றுகொண்டு இருப்பர். அவர்களை சுற்றி உள்ளவர்கள் நன்றாக அனுபவித்துக்கொண்டு இருப்பர்.
எடுத்து வைத்தாலும் கொடுத்து வைக்கவேண்டும் என்பர். அதுபோல் நல்ல அதிர்ஷ்டம் ஜாதகத்தில் இருந்தாலும், அது உங்களின் லக்னாதிபதியுடன் சேரும் போதுதான், உண்டாகும் யோகத்தை, ஒழுங்காக அனுபவிக்கமுடியும்.
செல்: 94449 61845