உலகிலுள்ள அனைத்து மனிதருக்கும் அதிர்ஷ்டம் என்றாலே, ஆஹா என்று மகிழ் வர். சரி. இந்த அதிர்ஷ்டம் என்பதற்கு என்ன பொருள். எதிர்பாராத லாபம், மகிழ்ச்சி, பொருள் வரும் காலம், பார்க்கப்படாத, உணரப் படாத என்று, That which is unperceivedy and unexpected gain என இவை அதிர்ஷ்டம் என்ற வார்த்தையின் பொரு ளாகும். மேலும் மக்களைப் பொறுத்தவரை, அவர்களின், தகுதி, திறமை, உழைப்பு, இருப்பு என இதனை அடிப் படையாகக் கொண்டு, என்ன கிடைக்குமோ, அதைவிட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு அதிகம் கிடைத்தால், அதனை அதிர்ஷ்டம் எனக் கூறுகின்றனர். அளவாக பலன் கிடைப்பதைவிட, அண்டா, அண்டாவாக பலன் கிடைத்தால் அதனை அதிர்ஷ்டம் என இறுதியிட்டு ஆணையிடுவர்.
சரி, ஜோதிடம் அதிர்ஷ்டத்தை எந்த வீட்டை வைத்துக் கூறுகிறது. உத்தர காலம்ருதம், அதிர்ஷடத்தை 9-ஆம் வீட்டைக்கொண்டு உரைக்க வேண்டும் என உறுதிபடக் கூறுகிறது. ஒவ்வொரு மனிதரும், அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உள்ள விதிகள்.
லக்னாதிபதியும் 9-ஆம் அதிபதியும் சம்பந்தம் கொள்ளவேண்டும். அது பார்வை, இணைவு, சார சம்பந்த மாக அல்லது பரிவர்த்தனை சம்பந்தமாக இருக்கலாம்.
9-ஆம் அதிபதி லக்னாதிபதி சுப பலத்தோடு இருக்க வேண்டும். இவை இருப்பின் நீங்கள் உங்கள் அதிர்ஷடத்தை முழுமையாக அனுபவிக்கலாம்.
இதுவே, மாறாக, 9-ஆம் அதிபதி கெட்டு, அசுபர் சேர்க்கை, 6, 8, 12-ல் மறைந்து நீசமாகி இருப்பின், அதிர்ஷ் டமா, அது கிலோ என்ன விலை எனக் கேட்கும் துர்பாக்கி நிலைக்கு தள்ளப்படுவர்.
இனி 12 லக்னத்தாரின் அதிர்ஷ்ட நிலைகள்
மேஷம்
உங்களின் லக்னாதிபதி செவ்வாய் 9-ஆம் அதிபதி குரு. உங்களின் 9-ஆம் அதிபதி குரு, உங்களின் 4-ஆமிடத்தில் உச்சமடைவார். உங்களின் லக்னாதிபதியும் கெடாமல் இருந்தால் உங்களுக்கு, வீடு, வயல், தோட்ட வாகன வகையறா நல்ல யோகம் தரும். இதே 9-ஆம் அதிபதி நீசமடைந்தால், நீங்கள் கண்டிப்பாக சொந்தத் தொழில் தொடங்கக்கூடாது. சுத்தமாக சொத்து துடைத்து, நஷ்டம் ஏற்பட்டுவிடும். இந்த குருவுக்கும். செவ்வாய்க்கும் ஏதோ ஒருவித தொடர்பு இருந்தால், சுமார் நிலை அதிர்ஷடத்தை நீங்கள் அனுபவிக்க இயலும். அதுவன்றி, உங்களி குரு ஓரளவு சுபத்தன்மையுடன் இருக்கிறார். ஆனால் செவ்வாய் ரொம்பவும் பலமற்று, குரு சம்பந்தம் இல்லாமல் இருக்கிறார் என்றால், உங்களால், உங்களின் அதிர்ஷடத்தை முழுமையாக அனுபவிக்க இயலாது. எனின் யார், உங்களுக்கு ஏற்படும் யோகத்தை அனு பவிப்பர்? 9-ஆம் அதிபதி, குரு, சுக்கிர சம்பந்தம் இருப்பின், உங்கள் குடும்பத்தினரும், குரு, புதன் இணைவு, உங்கள் இளைய சகோதரர் மற்றும் தாய்மாமனும், சூரியனுடன் இணைந்த குரு, உங்களின் வாரிசுகளையும், சனி, குரு இணைவு, உங்களின் தொழிலாளர் கள் மற்றும் மூத்த சகோதரனையும், உங்களின் அதிர்ஷடத்தை அனுபவிக்கச் செய்வர். எனவே, மேஷ லக்னத்தார் பிறப்பு ஜாதகத்தில், உங்களின் லக்னாதிபதி செவ்வாயும், 9-ஆம் அதிபதி குருவும் சுபமாக இணைந்திருப்பது நல்யோகம் தரும். இந்த யோகத்தை முழுமையாக அனுபவிக்க திருச்செந்தூர் முருகனை வணங்குவது அவசியம்.
ரிஷபம்
உங்களின் லக்னநாதன் சுக்கிரன் உங்களின் 9-ஆம் அதிபதி சனி. இந்த சனி, உங்களின் இன்னொரு சுக்கிர வீடான துலாத்தில் உச்சமடைவர். இது தன்னிச்சை யாக, உங்களுக்கும், அதிர்ஷ்டத்துக்கும் இடையே ஒரு இணைப்பை, பிணைப்பை ஏற்படுத்திவிடும். இந்த யோகம், உங்களின் வேலையில் வெளிப்படும். இதே அதிர்ஷ்ட அதிபதி, சனி, நீசம்பெற்றுவிட்டால், உங்களின் விரய இடத்தில் நிற்பார். எனவே அந்த கிரக அமைப்பில், நீங்கள் எதைத் தொட்டாலும், அது உருப்படாமல் போய் விடும். உங்கள் லக்னாதிபதி சுக்கிரனும், அதிர்ஷ்ட அதிபதி சனியும் ஓரளவு நல்ல நிலையில் இருந்தும், சம்பந்தமின்றி இருப்பின் யோகம் கைக்கு எட்டியும், வாய்க்கு எட்டாமல் போய்விடும். சனி, சுக்கிரன் சம்பந்தமின்றி, புதன் சம்பந்தம் பெற்றால், உங்கள் அதிர்ஷடத்தை வாரிசுகளும், செவ்வாய் சம்பந்தம் பெற்றால் வாழ்க்கைத்துணை மற்றும் பங்குதாரர்களும், குரு சம்பந்தம் பெற்றால், உங்களின் மறைவான இணைகளும், சந்திரன் சம்பந்தம் உங்களை இளைய சகோதரியும், அனுபவிப்பதைக் குறிக்கும். ரிஷப ராசியாரின் அதிர்ஷ்ட கிரகமான சனி, பூரம், பூராடம் நட்சத்திரத்திரத்தில் நின்றாலும், உங்களின் லக்னாதிபதி சுக்கிரன்- பூசம், அனுஷம், உத்திரட்டாதி நட்சத்திரத்தில், தன்னிச்சையாகவே, அதிர்ஷட பிணைப்பு வந்துவிடும். இதிலும் உங்கள் லக்னாதிபதி சுக்கிரன், உத்திரட்டாதி சாரம் பெறுவது சாலச் சிறந்தது. உங்களின் அதிர்ஷடம் அதிகமாக, உங்கள் வீட்டருகிலுள்ள, வைணவத்தல, பெருமாளையும், தாயாரையும், துளசிமாலை மற்றும் வெள்ளைநிற மல்லி, ஜாதி, பிச்சிப்பூ கொண்டு பிரார்த்தனை செய்யுங்கள்.
மிதுனம்
உங்களின் லக்னநாதர் புதன். உங்களின் அதிர்ஷ்டத்துக்குரியவர், கும்ப சனி. இந்த சனியும், புதனும் எவ்விதத்திலாவது சுப சம்பந்தம் பெற்றால். அதிர்ஷ்டம் ஓடி வந்துவிடும். எனினும் மிதுன லக்னத் தாருக்கு, அதிர்ஷ்டக் கிரகமான சனியே, இவர்களின் 8-ஆம் அதிபதியும் ஆவார். எனவே உங்களுக்கு வரும் அல்லது ஒரு எதிர் மறைத்தன்மை அல்லது சின்ன மனத் தாங்கலுடன் அதிர்ஷடம் அமையும். வேறு, சிலர் மறைமுக வருமான அதிர்ஷ்டம் பெறுவர். லக்னாதிபதி புதனும், அதிர்ஷ்ட அதிபதி சனியும் ஓரளவு நல்லநிலையில் இருந்தும், சேர்க்கை இல்லாவிடில், அதிர்ஷடத்தை இவர்களால் முழுமையாக அனுபவிக்க முடியாது. அதிர்ஷ்டம் அருகில்வந்து, வேறுபக்கம் திரும்பிக் கொள்ளும். அதிர்ஷ்ட கிரகம் சனி, சந்திரன் இணைவு இருப்பின், உங்கள் குடும்பத்தாரும், சூரியன், சனி இணைவு, உங்களின் இளைய சகோதர ரும், சுக்கிரன்+சனி பந்தம் உங்கள் வாரிசு களையும், சனி+செவ்வாய் சம்பந்தம் உங்கள் தாய்மாமன், மற்றும் மூத்த சகோதரரும், குரு+சனி சம்பந்தம் உங்கள் வாழ்க்கைத் துணை மற்றும் உங்கள் மாமியாரும் நன்றாக அதிர்ஷட நிகழ்வுகளை அனுபவிப்பர். உங்கள் ஜாதகத்தில் அதிர்ஷடக் கிரகம் சனி உச்சம்பெற்றால், உங்களின் புத்திசாலித் தனம், வாரிசுகள், பூர்வீகம், வெளிநாட்டு சம்பந்தம் இவைமூலம் பெரும் யோகம் கிடைக்கும். இதே சனி நீசம்பெற்றால், நீங்கள் அரசியல் பக்கம் தலை வைத்துகூட படுக்கக்கூடாது. அதுபோல் சமையல் சம்பந்தமான வேலை கள், மூத்த சகோதரனுடன் இணைந்து செய்யும் தொழில்கள், உங்களை கீழே தள்ளி விடும்; கவனம் தேவை. உங்களின் அதிர்ஷ்ட சனி, ஆயில்யம், ரேவதி நட்சத்திரங்களில் நின்றால், அதிர்ஷ் டம் அழைக்காமல் வரும். அதுபோல் உங்கள் லக்னாதிபதி புதன், பூசம், அனுஷம் நட்சத்திரத்தில் நின்றாலும் நல்லதுதான். உங்களின் அதிர்ஷ்டம் அளவில்லாமல் பெருகி வளர, சங்கர நாரயணரை வணங்கவும்.
கடகம்
உங்கள் லக்னாதிபர் சந்திரன் உங்களின் அதிர்ஷ்டத்தை நிர்ணயிப்பவர் 9-ஆமிட அதிபதியான குரு. இந்த கடக லக்ன, ராசியின் பெரும் பாக்கியம், உங்களின் அதிர்ஷ்ட அதிபதி, உங்களின் வீட்டிலேயே உச்சமடைவதுதான். குரு உச்சமடையும் போது, தன்னிச்சையாக உங்கள் லக்னத் துக்கும், அதிர்ஷ்ட அதிபதிக்கும் நல்ல தொடர்பும், சம்பந்தமும் உண்டாகிவிடுகிறது. இந்த குரு உச்சமடைந்தால், உங்களின் அறிவுசார்ந்த தொழில் மிக அதிர்ஷ்டமும், நல்யோகமும், மிக பிரபலமும் கொண்டுவரும். நீங்கள் வேலை செய்வது மட்டுமின்றி, நிறைய சேவைகளும் செய்வீர்கள். இதே குரு நீசமானால், திருமண வாழ்வு அவ்வளவாக சிறக்காது. வெளி வட்டார பழக்கங்கள், சிறுமை தரும். குரு, சந்திரன் ஓரளவு சுபத்தன்மை பெற்றும் இணைவு, சம்பந்தம் இல்லாவிடில் அதிர்ஷ்டத்தை உங்களால் முழுமையாக அனுபவிக்க இயலாது. குரு+சூரியன் சம்பந்தம் உங்கள் குடும்பத்தினரும், குரு+புதன் சம்பந்தம் உங்களின் இளைய சகோதரரும் மாமனாரும், குரு+சுக்கிரன் சம்பந்தம் உங்கள் தாயார் மற்றும் மூத்த சகோதரியும், குரு+செவ்வாய் சம்பந்தம் உங்களின் வாரிசும், உங்கள் மாமியாரும் நன்றாக உட்கார்ந்து அனுபவிப்பார்கள். குரு+சனி சம்பந்தம், திருமண வாழ்வின் யோகத்தையும், மறைமுக செயல்களில் வளத்தையும் உணர்த்தும். சிலருக்கு இந்த குரு+சனி இணைவு, உங்களின் யோக பலன்களை, உங்களின் தொழில் பங்குதாரர் உங்களுக்கு தெரியாமலேயே அனுபவிக்கக்கூடும். அதிர்ஷ்டக் கிரக குரு, ரோகிணி, அஸ்தம் என்ற நட்சத்திரத்தில் நின்றாலும், உங்கள் லக்னாதிபதி சந்திரன் புனர்பூசம், 4-ஆம் பாதம், விசாகம் 1, 2, 3-ஆம் பாதம் பூரட்டாதி 4-ஆம் பாதத்தில் நின்றாலும் அதிர்ஷ்டம் ஓடோடி வந்து அனைத்துக்கொள்ளும். உங்களின் அதிர்ஷ்டம் வளரவும், பெருகவும் இராமேஸ்வரம் பர்வதவர்த்தினி அம்மன் அல்லது அருகிலுள்ள சிவனையும், அம்மனையும் வணங்கவும்.
சிம்மம்
உங்களின் லக்னநாதன் சூரியன் உங்களின் அதிர்ஷ்ட அதிபதி செவ்வாய் ஆவார். உங்களின் சூரியனும், அதிர்ஷ்ட அதிபதி செவ்வாயும் இணையும்போது மிக அதிர்ஷ்டம் அது வேலை மற்றும் நிலபுலன், வீடு, வாகன வழியில் கிடைக்கும். ஆயினும் இந்த இணைவு சிம்ம லக்னம், சிம்ம ராசி பெண்களின் ஜாதகத்தில் அமையும்போது, சற்று நெருடலாகிவிடும். அதிர்ஷ்டம் தரும் செவ்வாய், உங்களின் 6-ஆமிடத்தில் உச்சமாவார். இதனால் வீர, தீர பராக்கிரமத்தோடு, எதிரிகளின் அச்சமாக வும் அமைவீர்கள். இதே செவ்வாய், உங்களின் 12-ஆமிடத்தில் நீசம் அடைவார். இதனால், நீங்கள் எத்தணை முயன்றாலும், வெளிநாட்டு யோகம், முதலீடு செய்யும் ஆசை, நல்ல படுக்கை சுகம் இவையெல்லாம் கானல் நீராகவே ஆகிவிடும். இந்த செவ்வாயும், லக்னாபதி சூரியனும் ஓரளவு சுபத்தன்மை பெற்றும், இணைவு இல்லாமல் இருப்பின், யோகம் அனுபவிப் பது சற்று இடர்தான். இதே செவ்வாய், லக்னாதிபதி சம்பந்த மின்றி, புதன் சம்பந்தம் பெறின், உங்கள் குடும் பத்தினரும், மூத்த சகோதரனும் என்ஜாய் பண்ணுவர். செவ்வாய்+சுக்கிரன் இணைவு, உங்கள் செவ்வாய்+ இளைய சகோதரி, உங்கள் மாமியாரும், செவ்வாய்+ குரு சம்பந்தம் வாரிசுகளின் வேண்டாத அனுபவிப்பும், செவ்வாய்+ சனி சம்பந்தம், தாய்மாமன் மற்றும் வாழ்க்கைத்துணையின் அனுவிப்பதையும் எடுத்துரைக்கும். உங்களின் அதிர்ஷ்ட செவ்வாய், கிருத்திகை, உத்திரம், உத்திராட நட்சத்திரங் களில் நிற்பதும், உங்களின் லக்னாதிபதி சூரியன் மிருகசீரிடம் சித்திரை, 1, 2-ஆம் பாதம், அவிட்டம் 3, 4-ஆம் பாதம் நட்சத்திரம் வாங்கி நிற்பது, அதிர்ஷ்டத்தை அழையாமேலேயே வரவழைக்கும் அமைப்பாகும். உங்களின் அதிர்ஷ்டம் அதிகரிக்க, மாதந்தோறும், பௌர்ணமி தினத்தன்று திருவண்ணாமலையை வலம்வந்து, அண்ணாமலையாரின் அடி பணியுங்கள்.
கன்னி
உங்கள் லக்னாதிபதி புதன் ஆவார். உங்களின் அதிர்ஷ்டாதிபதி சுக்கிரன் ஆவார். இந்த ஒரு லக்ன, ராசிக்கு மட்டும், 9-ஆம் அதிபதி, உங்கள் லக்னத்தில் நீசமாவதும், உங்கள் லக்னாதிபதி கன்னியிலேயே உச்சமானால், அவர் நீச பங்கமடைவதும் நடக்கும். இதுபோலவே, உங்கள் அதிர்ஷ்ட அதிபதி மீனத்தில் உச்சமாகும்போது, அங்கு, உங்கள் லக்னாதிபதி புதன் நீசமடைதலும், உச்ச சுக்கிரன் சேர்க்கையால், நீசபங்கமடைதலும் நடக்கும். இதிலிருந்து ஒன்று மட்டும் உறுதியாகத் தெரிகிறது. உங்களின் அதிர்ஷடம் குறைவுபட்டால், நீங்கள்தான் அதனை பழுதுப்பார்த்து, அதிர்ஷ்டத்தை நேர் சீராக்கி, உங்களுடன் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒருவேளை நீங்கள், அம்பேல் ஆனாலும், உங்களின் அதிர்ஷ்டம், உங்களை பட்டி பார்த்து, தன்னுடன் சேர்த்துக்கொண்டு அலையவேண்டும். இதில் கவனிக்கத்தக்கது, உங்கள் லக்னாதி பதி அல்லது அதிர்ஷ்ட அதிபதி, இதில் யாராவது ஒருத்தர் உச்சமானால்தான், அதிர்ஷ்டமும் நீங்களும் கை குலுக்க முடியும். இதில் முக்கியமான விஷயம், சுக்கிரன், புதன் ஏறக்குறைய சேர்ந்தோ அல்லது ஒருவர்பின் ஒருவரோதான் வருவர். ரொம்பக் கட்டம் பிரிந்திருக்க இயலாது. சுக்கிரன், புதன் ரொம்பக் கட்டம் விலகி யிருந்தால், அது உண்மையான ஜாதகமாக இராது அல்லது அம்சக் கட்டமாக இருக்கும் என்று அர்த்தம். உங்கள் 9-ஆம் அதிபதி, உச்சமானால், உங்களின் அதிர்ஷ்டம், பிற மனிதர்களின் தொடர்பால் ஏற்படும். அது வியாபாரம், வணிகம், தொழில், ரியல் எஸ்டேட், கலை உலகம், பிற நாட்டு தொடர்பு என இவை சார்ந்து அமையும். இதே 9-ஆம் அதிபதி சுக்கிரன் நீசமானால், உங்களுக்கு எதுவுமே வாய்க்காமல், கைகூடாமல் போய்விடும். ஒருவேளை உங்கள் லக்னாதிபதி உச்சம் அல்லது பரிவர்த்தனையானால் மட்டுமே, உங்களின் அதிர்ஷ்டத்தை, நீங்களே கயிறு கட்டி இழுத்து வருவதுபோல், மிகப் பிராயாசையுடன், வெகு பிரயத்தனத் துடன் யோக நிலையை அனுபவிக்க இயலும். சிலர் கூறுவார்களே, பெரிய இடத்தை அடைய, ரொம்ப சிரமப்பட்டு, யார் உதவியுமின்றி, சுய முயற்சியில் முன்னேறினேன் என்பார்களே, அதெல்லாம் இந்தக் கணக்கில் தான் வரும். கன்னி லக்னத்துக்கு மட்டும், அதிர்ஷ் டத்தையோ, கஷ்டத்தையோ அவர்களே அனுபவித்துக்கொள்வார்கள். வேறு யாருக்கும் பங்கு போகாது. உங்களின் அதிர்ஷ்ட சுக்கிரன் ஆயில்யம், கேட்டை, ரேவதி நட்சத்திரம் பெற்றாலும், உங்களின் லக்னாதிபதி புதன். பூராட நட்சத்திரத்தில் நின்றாலும் யோகம் தானே தேடிவரும். உங்களின் அதிர்ஷ்டம் அளப்பரியதாக ஆவதற்கு, திருப்பதி பெருமாளையும், பத்மாவதி தாயாரையும் வணங்கவும்.
(தொடர்ச்சி அடுத்த இதழில்)
செல்: 94449 61845