மூலம் என்பது ஜோதிடத்தில் ஆதி மூலமான நட்சத்திரம். கிரகங்களுக்குப் பாதையமைத் துக் கொடுக்கும் 27 நட்சத் திரங்களில் 19-ஆவது நட்சத்திரமாக அமையப்பெற்றுள்ளது. இது கேது வின் நட்சத்திர வரிசையில் மூன்றாவது நட்சத்திர மாக விளங்குகிறது.

மாபெரும் சுப கிரகங்களில் ஒன்றாக போற்றப் படக்கூடிய குருபகவானின் தனுசு வீட்டில் தனது நான்கு பாதங்களையும் பதித்து முழு நட்சத்திரமாக பிரதிபலிக் கிறது.

நமது இந்திய பஞ்சாங்க முறையிலும், ஜோதிட வியலின்படியும் சந்திரன் புவியை சுற்றி வரும் பொழுது மூல நட்சத்திர வரையறைக்குள் பயணிக் கும் காலம் மூல நட்சத்திரத்திற்குரிய காலமாகும் இந்த நேரத்தில் ஜனித்தவர்கள் தங்களை தனுசு ராசி, மூல நட்சத்திரம் என்று அறிமுகப்படுத்திக் கொள்கின்றார்கள்.

இது சகோதர காரகன் என்று போற்றப் படும் செவ்வாயின் கர்மப் பதிவினைக் கொண்ட நட்சத்திரமாகும்.

Advertisment

இந்த நட்சத்திரம் எதற்கும் அஞ்சாத அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் என்று அழைக்கப்படும் அனுமன் அவதரித்த நட்சத்திரமாகும்.

இது ஒன்பது உடுக்கைகளை ஒன்றிணைத் தாற்போல் காட்சியளிக்கும் என்றும், சில நூல்களில் மூன்று அல்லது 11 உடுக்கைகளின் கூட்டு என்றும் பலவித தகவல்கள் உண்டு.

மூலம் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மூலம் என்றே அறியப்படுகின்றது. தமிழ் நிகண்டு களில் ஆண்டு வில், ஆனி, கொக்கு, சிலை, அசுர நாள் என்றும் அழைக்கப்படுகிறது.

Advertisment

இதன் ராசிநாதன் குருவாக வும், நட்சத்திரநாதன் கேது வாகவும், நவாம்ச நாதர் களாக மூலம் ஒன்றாம் பாத மென்றால் செவ்வாயாகவும், இரண்டென்றால் சுக்கிர னாகவும், மூன்றென்றால் புதனாகவும், மூலம் நான்காம் பாதமென்றால் சந்திரனாக வும் அமையப்பெறுகிறார் கள்.

ஜோதிடத்தை சார்ந்து பயணிக்கும்பொழுது பல நட்சத்திரங்கள் சம்பந்தப்பட்ட பழமொழி களைக் கடந்து செல்லமுடி கிறது. அப்படி மூல நட்சத் திரத்திற்கு என்ன சொலவடை நம் பெரியோர்களால் கூறப்பட் டுள்ளது என்று பார்த்தோமேயானால், "ஆண் மூலம் அரசாளும் பெண் மூலம் நிர்மூலம்' என்று ஒரு பெரிய சுமையினை மூல நட்சத்திரப் பெண்கள்மீது இறக்கிவைத்துள்ளனர். இது எந்த அளவுக்கு நிதர்சன வாழ்வில் பொருந்தி வருகிறது என்று கணிக்கும்பொழுது இதன் உண்மைத் தன்மை இல்லாத சூழ்நிலையே பல ஜோதிடர்களால் ஒப்புக்கொள்ளப்படுகிறது.

சரி... இந்த சொலவடைக்கான அர்த்தம்தான் என்ன என்றால், ஆனி மூலம் அரசாளும் என்றும், கன்னி ராசியாகிய பெண் மூலம் நிர்மூலம் என்றும் கூறுகின்றனர். அதாவது புரட்டாசி மாதத்தில் வருகின்ற துக்காஷ்டமி அன்று பெரும்பாலும் மூல நட்சத்திரம் வரும் இதனால் கூறப்பட்டிருக்கலாம் அல்லது மூலம் நான்காம் பாதத்தில் சுக்கிரன் பயணிக்கும் பொழுது நவாம்சத்தில் அட்டமாதிபதியான சந்திரனின் வீடான கடகத்தில் அமையப் பெற்றுவிடும். இது ஒரு நல்ல முடிவினை எடுக்கமுடியாத மனோநிலையையும், முரண்பாடான முடிவினை எடுக்கும் சூழ்நிலையையும் தூண்டும். இதனால்கூட பின் மூலம்- அதாவது நான்காம் பாதம் நிர்மூலம் என்று கூறியிருக்க வாய்ப்புகளுண்டு. மேலும் மாமனாருக்கு ஆகாது என்ற பயமும் உண்டு. இந்த மூலம் ஆளுமை மற்றும் நிர்வாகத் திறனில் முதிர்ந்த தன்மையுடையது. எனவே வீட்டின் நிர்வாகம் செய்யும் மாமனாரின் நிர்வாகத்தில் தலையிடும் குணம் மூல நட்சத்திரப் பெண்களுக்கு இயல்பாகவே இருக்கும். இதனால் உறவுகளுக்குள் பிரிவினை தோன்றலாமென்று சித்தரிக்கப்பட்டு இருக்கலாம்.

இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்த வட்டத்திற்குள்ளும் அடங்க மாட்டார்கள். மன ஆழம் மிக்கவர்கள். எவருடைய வழியிலும் பயணிக்க விரும்பாமல் தானே சுயமாக வளர்ந்து தனக்கான பாதையை அமைத்துக் கொள்ளும் துணிவினையும் தைரியத்தையும் உடையவர்கள் இந்த மூல நட்சத்திரக்காரர்கள். உணவுப் பிரியர்கள். ருசியுடன் எதையும் புசிக்கும் எண்ணமுடையவர்கள்.

இந்த நட்சத்திரத்தின் அதி தேவதையாக நிருடி- அதாவது கரிய நிறம்கொண்ட கொடூரமான பெண் தெய்வம் வருகிறது. இது அரக்கர்கள் ஜனித்த நட்சத்திரமாகவும் கூறப் படுகிறது.

நமது புராணக் கதைகளில் மூல நட்சத்திர நாளில் தோன்றிய வால் நட்சத்திரத்தினால் அரக்கர்களுக்கு அழிவுண்டு என்று லட்சுமணன் இராமனுக்குக் கூறியதாக ஒரு வரலாறும் உண்டு.

dd

மூல நட்சத்திரம் நெருப்பு ராசியாகி, தர்ம வீடாகி, காலபுருஷனுக்கு ஒன்பதாம் வீடாகி ஆன்மிகம், கௌரவம் போன்ற தலைசிறந்த குணங்களைப் பிரதிபலிக்கும் வீட்டில் அமையப்பெற்றுள்ளது. செவ்வாயின் கர்மப் பதிவைக் கொண்ட நட்சத்திரம் என்பதால் இந்த வம்சாவளிகளில் ஒரு இயற்கைக்கு மாறான, அபரிவிதமான, ஏற்றுக்கொள்ள முடியாத மரணமொன்று நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உண்டு.

மேலும் மண் சார்ந்த, இளைய சகோதரன் சார்ந்த, ரத்தம் சார்ந்த பிரச்சினைகள் ஏதேனும் இவர்களின் வம்சாவளியில் இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம்.

இவர்கள் பெரும்பாலும் அதிகாரம்மிக்க சீருடைப் பணிகளில் பயணிப்பவர்களாகவே இருக்கின்றனர்.

இராணுவம், காவல்துறை, காவல்துறையின் உட்பிரிவுகள், சீருடை அணிந்த அரசாங்கம் சம்பந்தப்பட்ட அனைத்து தொழில்களிலும் இவர்களின் ஆளுமை இருக்கிறது. மருத்துவம், மருத்துவம் சார்ந்த பணிகளிலும் இவர்கள் கோலோச்சுகிறார்கள். சர்ஜிகல், சர்ஜன்ஸ், செக்யூரிட்டி, எலக்ட்ரிகல்ஸ், லேத் டிசைனிங், லேத் ஆபரேட்டர், எலக்ட்ரிக்கல் உதிரி பாகங்கள் விற்பனை போன்ற துறைகளில் இவர்கள் சிறப்புறக் காணமுடிகிறது.

மூலம் ஒன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்சத்தில் மேஷ வீடான செவ்வாயின் வீட்டில் அமையப்பெறும். இந்த சூழ்நிலையானது அதிகாரம்மிக்க தொழில்களில் தங்களை ஈடுபடுத்தி அதன்மூலம் மரியாதையும் செல்வத்தையும் அடையும் தகுதி பெற்றவர்களாக இருக்கிறார்கள். முகத்திற்கு நேராகப் பேசிவிடும் தன்மையும், பிடிவாதமும், சொல்வதே சரி என்ற மனோ நிலையும் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இங்கு செவ்வாய், சந்திரன், குரு, கேது ஆகியோரின் இணைவானது மருத்துவத்திலும் இவர்கள் தலைசிறந்து விளங்குவதற்கு வழிவகுக்கிறது.

மூலம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் ரிஷப ராசியில் உச்ச நிலையில் அமையப்பெறும். இவர்கள் உணவுப் பிரியர்கள். மேலும் ராசிக்கு அட்டமாதிபதி ஆறாமிடத்தில் உச்சமாகும் நிலையானது விபரீத ராஜயோகம் என்கிற நிலையினை அடையவைக்கும். இது ஆன்மிகத்துறையில் ஈடுபாடு, பயணம், ஆசிரியர், கல்வித்துறை கல்வி சாலை போன்றவற்றில் உயர்நிலை, விளையாட்டுத்துறையில் சாதிப்பது போன்ற சூழ்நிலைகளை உருவாக்கி தரும்.

மூலம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் புதனின் வீடான மிதுனத்தில் அமையப்பெறும். இந்நிலை கல்வியால் உயர்நிலை, உயர்கல்வி யினால் பெரும் செல்வ நிலையை அடையும் வாய்ப்பு, உயர்கல்விக்கேற்ற தொழில் அமைவது போன்ற சூழ்நிலைகளில் பயணிக்கச் செய்யும். மேலும் புத்தகம், அச்சகம், மற்றவர்களை வழிநடத்தும் துறை அதாவது மேனேஜ் மென்ட் என்ற சூழ்நிலையில் இவர்கள் சிறப்புற வாய்ப்புகள் அதிகம். கலைத்துறையில் இயக்குனர்கள் இந்த நட்சத்திரத்தில் உச்சத்தை எட்டுகின்றனர்.

மூலம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்

இவர்களது சந்திரன் நவாம்ச வீட்டில் தனது ஆட்சிவீடான கடகத்தில் அமையப் பெறும். இங்கு அட்டமாதிபதி ஆட்சி என்கின்ற சூழ்நிலையால் முடிவெடுப்பதில் சற்று குழப்பமான சூழ்நிலையை அளிக்கும். இவர்கள் கடல் கடந்து செல்வது, அந்நிய தேசம், அந்நிய நாடு போன்ற சூழ்நிலையில் சிறப்படைவார்கள். மேலும் விவசாயம், டிரான்ஸ்போர்ட் போன்றவற்றின்மூலமும் இவர்களின் செல்வநிலை உயர்வதைக் காணமுடிகிறது.

இந்த மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தனது மூலமான பூர்வீகத்தைவிட்டு வெளியில் வரும்பொழுது மட்டுமே வளர்ச்சியின் பாதையில் பயணிக்க முடிகிறது.

இந் நட்சத்திரத்தின் சின்னமான வீணை சின்னத்தை பணியிடம் மற்றும் தொழிலகங்களில் லோகோவாக அமைத்துக் கொள்ளும்பொழுது இவர்களின் தொழில் மற்றும் செல்வநிலையில் வளர்ச்சி அபரிமித மாக அமையப்பெறுகிறது.

வணங்கவேண்டிய தலம்: பிள்ளையார் பட்டி.

அணியவேண்டிய ரத்தினம்: கேட்ஸ் ஐ என்னும் பூனையின் கண் என்ற கல் வணங்கவேண்டிய விருட்சம்: மாமரம்.

(அடுத்த பூராடம் இதழில்)

செல்: 80563 79988