வெளிச்சத்திற்கு வாங்க (9) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-9-visu-iyer

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்...

இல்லை இல்லை.. .

ஆளுக்கு ஒரு மரம் வைக்க வேண்டும் என்றுதான் ஆசை. சிலருக்கு வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தோட்டம் வைக்கும் கனவிருக்கும். சிலருக்கு சின்னதாக இடம் வாங்கினால் கௌரவக் குறைச்சல் என்று வாங்காமலிருந்து விடுவார்கள். வசதி நிறைந்தவர்கள் பெரிதாக இடம் வாங்கினால் அதை வைத்துப் பராமரிப்பது சிரமமென்று பேசாமல் இருந்துவிடுவார்கள்.

"நாங்கள் எல்லாம் நகரத்தில் வாழ்கிறோம்.

எங்களுக்கு எங்கே நேரம் இருக்கு? யார் தண்ணீர் ஊற்றுவது? வயதானபிறகு ஊருக்கு வெளியே சின்னதாக இடம் வாங்கி...' என்று கற்பனைக் கோட்டைகட்டி, அது நனவாகும்முன் வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிடுவார்கள்.

மொத்தத்தில் மரம் வைக்கவேண்டும் என்னும் ஆசை மண்ணோடு புதைந்து விடும். மண்ணுக்குள் போட்ட விதை விருட்ச மாவதுபோல, ஒரு சிலர்தான் விரும்பிய மரங்கள், மலர்ச்செடிகள் என பட்டிய லிட்டு இருப்பார்கள்.

உங்களுக்குதான் இந்த செய்தி. நீங்கள் விரும்பும் மரத்தை வைக்கப்போகிறீர்களா அல்லது மண்ணுக்கேற்ற மரத்தை வைக்கப் போகிறீர்களா என்

வீட்டிற்கு ஒரு மரம் வளர்ப்போம்...

இல்லை இல்லை.. .

ஆளுக்கு ஒரு மரம் வைக்க வேண்டும் என்றுதான் ஆசை. சிலருக்கு வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு தோட்டம் வைக்கும் கனவிருக்கும். சிலருக்கு சின்னதாக இடம் வாங்கினால் கௌரவக் குறைச்சல் என்று வாங்காமலிருந்து விடுவார்கள். வசதி நிறைந்தவர்கள் பெரிதாக இடம் வாங்கினால் அதை வைத்துப் பராமரிப்பது சிரமமென்று பேசாமல் இருந்துவிடுவார்கள்.

"நாங்கள் எல்லாம் நகரத்தில் வாழ்கிறோம்.

எங்களுக்கு எங்கே நேரம் இருக்கு? யார் தண்ணீர் ஊற்றுவது? வயதானபிறகு ஊருக்கு வெளியே சின்னதாக இடம் வாங்கி...' என்று கற்பனைக் கோட்டைகட்டி, அது நனவாகும்முன் வெளிநாட்டில் போய் செட்டில் ஆகிவிடுவார்கள்.

மொத்தத்தில் மரம் வைக்கவேண்டும் என்னும் ஆசை மண்ணோடு புதைந்து விடும். மண்ணுக்குள் போட்ட விதை விருட்ச மாவதுபோல, ஒரு சிலர்தான் விரும்பிய மரங்கள், மலர்ச்செடிகள் என பட்டிய லிட்டு இருப்பார்கள்.

உங்களுக்குதான் இந்த செய்தி. நீங்கள் விரும்பும் மரத்தை வைக்கப்போகிறீர்களா அல்லது மண்ணுக்கேற்ற மரத்தை வைக்கப் போகிறீர்களா என்று முடிவுசெய்யுங்கள்.

ww

மண் வகைகள் மொத்தம் ஒன்பது.

அவை செம்மண், மணற்பாங்கான மண், மணற்குறு மண், குறுமண், களிமண், கரிசல்மண், செம்புறை மண், வண்டல் மண் அல்லது அடைமண் மற்றும் பாலை மண். ஒவ்வொன்றுக்கும் ஒரு கிரக கார கத்தை வைத்துப் பார்த்தால், விவசாயத் தில் சோதிட சிந்தனைகளைப் பொருத்திப் பார்த்து அதில் தடம்பதிக்கலாம். இப்போ தெல்லாம் "ஈர்ம்ம்ன்ய்ண்ற்ஹ் எஹழ்ம்ண்ய்ஞ்' என்னும் முறை வந்துவிட்டது. அதில் காய்கறி, கீரைவகை கள், பழ மரங்கள், வணிக மரங்கள், பூ வகைகள், மூலிகைச் செடிகள் என தேவைக் கேற்ப, இடவசதிக்கேற்ப மாடியில்கூட அமைத்துக்கொள்ளலாம். ஒரு தொட்டி, கொஞ்சம் மண், கொஞ்சம் தண்ணீர் போதும்.

சோதிடம் ஒரு கடல் என்பதுபோல விவசாயமும் ஒரு கடல். முன்பெல்லாம் குடும்பத்தில் மாமா ஊஞ்சலில் உட்கார்ந்தி ருப்பார். மாமி அருகில் வந்து, "ஏன்னா, இன்னிக்கு என்ன சமைக்கட்டும்?'' என்று ஆலோசனை கேட்பார். மாமாவும் அன்றைய திதி, நட்சத்திரம் பார்த்து, "இந்தக் காய் சமைத்து விடு'' என்று சொல்வார். சமையலும் சுவையாக இருக்கும். சாப்பாடும் ஆரோக்கியமாக இருக்கும். எந்த வைரஸ் பற்றிய செய்திகளும் அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் இன்றையநாளில்... மார்க்கெட் டில் எந்த காய் விலை குறைவாகக் கிடைக்கி றதோலி அது மருந்தடித்த காய்களாக இருந்தா லும், அதை விரும்பியோ- விரும்பாமலோ சமைத்து, பசிக்கு எதையோ சாப்பிடுவது என்று பழக்கமாகிவிட்டது.

இதில் நாமே காய்களைப் பயிரிட்டு (அது மாடி அல்லது பால்கனி தோட்டமாகவும் இருக்கலாம்) நஞ்சில்லா காய்களைப் பறித்து சாப்பிடுவதென்றால் கேட்பதற்கு நன்றாக தான் உள்ளது. மனமிருந்தால்- கூடவே கொஞ்சம் உழைப்பும் இருந்தால் இது சாத்தியமானதே.

இந்த வாரம் உருளைக்கிழங்கை வைத்து ஒரு செய்தி சொல்லப்போகிறேன்.

ஜாதகத்தில் சுக்கிரன் சுபத்துவம் பெற்றிருந் தால் அவர்கள் உருளைக்கிழங்குப் பிரியர் களாக இருப்பார்கள் என்று கண்ணை மூடிக் கொண்டு சொல்லிவிடலாம். மார்க்கெட்டில் கூட பாருங்கள். சுக்கிரன் மற்றும் சந்திரன் சம்பந்தப்பட்ட காய்கள் அதிகமாக விற்பனையாகும். உதாரணம் உருளைக்கிழங்கு, தக்காளி போன்றவை.

வட மாநிலத்தவர்களுக்கு உருளைக்கிழங்கு இல்லையென்றால் சாப்பாடே இல்லை. நான்கு ரொட்டி, கொஞ்சம் உருளைக்கிழங்கு சாகு போதும்.

சோதிட சாஸ்திரத்தில் அசுர குருவாக இருக்கும் சுக்கிரன், உயிர் காரகங்களைத் தூண்டி வாழ்க்கையில் பிடிப்பை ஏற்படுத்து வதுபோல, உருளைக்கிழங்குக்கு சில அடிப் படை குணங்கள் உண்டு. இது நுண்ணியிர் பெருக்கத்திற்கு இயற்கை விவசாயத்தில் பயன்படும் என்றால் ஆச்சரியமாக உள்ளதா? ஜடம் என்ற கொரியன் முறையில் நுண்ணியிர்ப் பெருக்கத்திற்கு இதைதான் செய்கிறார்கள். இது மண் வளத்தைக் காத்து விளைச்சலையும் அமோகமாகத் தந்துவிடும். சுக்கிரன் என்றால் அப்படிதானே. அடுக்கு மாடி வீடுகள், பல சக்கர வாகனங்கள் என்று சொல்லித்தானா சுக்கிரனின் பெருமைகள் தெரியவேண்டும்.

பல் முளைக்காத சின்னக் குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கை அப்படியே வேகவைத்துக் கொடுப்பார்கள். குழந்தைகளுக்குப் பல் வேகமாக முளைத்துவிடும். பெட்ரோலுக்கு மாற்றாக எத்தனால்கூட எடுப்பதாகச் சொல்கிறார்கள்.

எங்கேயெல்லாம் சுக்கிரனின் காரகத்துவம் இருக்கிறதோ, அங்கேயெல்லாம் அழகும் ஆனந்தமும் விளையாடும்.

இந்த உருளைக்கிழங்கு முக அழகுக்கும் பயன்படுத்துவார்கள். கருப்பு வளையம், முழங்கையிலுள்ள கருப்பு என இவற்றுக்கு உருளைக்கிழங்கைத் தேய்த்தால் எந்த வேதியியல் க்ரீமும் இல்லாமல் கருப்பு நிறம் காணாமல் போய்விடும். தோலில் இயல்பான தன்மை வந்துவிடும். குளிப்பதற்குமுன் முகத்தில் பூசுவதால், முகம் ப்ளீச் செய்ததுபோல பளபள என்றாகிவிடும்.

இப்படி சுக்கிரன் காரகத்துவம்கொண்ட உருளைக்கிழங்கை ஏதாவது ஒரு வடிவத்தில், வாரத்திற்கு இரண்டு முறையாவது எடுத்துக்கொள்ளாத குடும்பங்கள் குறைவென்றே சொல்லிவிடலாம்.

ஆப்பிள் கன்னம், உப்பிய கன்னம் போன்றவை எல்லாம் சோதிடக் குறிப்பில் சுக்கிரனை வைத்து சொல்லிவிடலாம். அதற்கு சுக்கிரனின் காரகத்துவம்கொண்ட உருளைக்கிழங்குதான் துணை செய்யுமென் றால் வியப்பாக உள்ளதல்லவா?

அன்றாட வாழ்வில் சோதிட முறைகளைப் பொருத்திப் பார்த்தால், சோதிடம் என்ற கடலில் நீச்சல் பழகுவது எளிதாக மட்டுமல்ல; சுவையாகவும் இருக்கும்.

அடுத்த வாரம் இன்னொரு சிந்தனையுடன் இணைகிறேன். நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும்!

(தொடரும்)

செல்: 94443 27172

bala130522
இதையும் படியுங்கள்
Subscribe