வெளிச்சத்திற்கு வாங்க (8) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-8-visu-iyer

தங்கம்... தங்கமே தங்கம்...

"அட ஆமாங்க! தங்கம் பாருங்க... விலை கூடிக்கிட்டே போகுது. தங்கத்துக்கு காரகம் வகிக்கும் குருவும் மீனத்திற்கு பெயர்ச்சியாகியாச்சு. அப்போ இன்னும் தங்கம் விலை கூடுமா?' என்று யோசிக் கிறீர்கள். புரிகிறது.

தங்க நகைகள் வாங்குவது முதலீடா இல்லையா என்று சொல்லப் போவதில்லை. இப்போது அநேகமாக காதல் கல்யாணம் என்றாகிவிட்டது என்பதால், கல்யாணத்திற்கு தங்கம்வாங்கி சேமிப்பதென்பது மக்களிடையே குறைந்து வருகிறது.

"அப்படியென்றால் கமாடிட்டி மார்க்கெட்டில் கோல்ட் அல்லது மினி கோல்ட் வாங்க ஆலோசனை சொல்லப் போறீங்களா' என்று யோசிக்கிறீர்கள்.

கழிவுகள் எல்லாம் போய் கடைசியில் தங்குவதுதானே தங்கம். அப்போது அது செல்வ வளம்தரும் பொருள்தானே. தங்கத்திற்குக் காரகம் குரு அல்லவா. அதனால்தான் தங்கத்தை இடுப்புக்குக்கீழே போடக் கூடாதென்று சொல்வார்கள்.

குருவை மதிக்காத சிலர் அல்லது அறியாமையின் காரணமாக கா-ல் கொலுசு, மெட்டி என தங்கத்தில் போட்டு, தங்கள் பெருமையைக் பறைசாற்றிக்கொள்வதாக நினைத்துக்கொண்டு வறுமையை விலைக்கு வாங்குகின்றனர்.

"கால் பொன்னானாலும் மா பொன்' என்பது கிராமத்துப் பக்கம் சொல்லும் சொல்லடைதான். இத்தனை செல்வ வளம்மிக்க ஒரு வஸ்துவை இடுப்புக்குக்கீழே கா-ல் போட்ட

தங்கம்... தங்கமே தங்கம்...

"அட ஆமாங்க! தங்கம் பாருங்க... விலை கூடிக்கிட்டே போகுது. தங்கத்துக்கு காரகம் வகிக்கும் குருவும் மீனத்திற்கு பெயர்ச்சியாகியாச்சு. அப்போ இன்னும் தங்கம் விலை கூடுமா?' என்று யோசிக் கிறீர்கள். புரிகிறது.

தங்க நகைகள் வாங்குவது முதலீடா இல்லையா என்று சொல்லப் போவதில்லை. இப்போது அநேகமாக காதல் கல்யாணம் என்றாகிவிட்டது என்பதால், கல்யாணத்திற்கு தங்கம்வாங்கி சேமிப்பதென்பது மக்களிடையே குறைந்து வருகிறது.

"அப்படியென்றால் கமாடிட்டி மார்க்கெட்டில் கோல்ட் அல்லது மினி கோல்ட் வாங்க ஆலோசனை சொல்லப் போறீங்களா' என்று யோசிக்கிறீர்கள்.

கழிவுகள் எல்லாம் போய் கடைசியில் தங்குவதுதானே தங்கம். அப்போது அது செல்வ வளம்தரும் பொருள்தானே. தங்கத்திற்குக் காரகம் குரு அல்லவா. அதனால்தான் தங்கத்தை இடுப்புக்குக்கீழே போடக் கூடாதென்று சொல்வார்கள்.

குருவை மதிக்காத சிலர் அல்லது அறியாமையின் காரணமாக கா-ல் கொலுசு, மெட்டி என தங்கத்தில் போட்டு, தங்கள் பெருமையைக் பறைசாற்றிக்கொள்வதாக நினைத்துக்கொண்டு வறுமையை விலைக்கு வாங்குகின்றனர்.

"கால் பொன்னானாலும் மா பொன்' என்பது கிராமத்துப் பக்கம் சொல்லும் சொல்லடைதான். இத்தனை செல்வ வளம்மிக்க ஒரு வஸ்துவை இடுப்புக்குக்கீழே கா-ல் போட்டு அவமரியாதை செய்யலாமா? கூடாது.

ff

அதனால் இன்றைய இளைய செல்லங்களுக்கு இதன்மூலமாக சொல்- அவர்களை நல்வழிப் படுத்துவோம். தங்கத்தை எப்போதும், இடுப்புக்குக் கீழே போடக்கூடாது.

சரி; அப்படிப் போட்டால் என்னா கும் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் சிந்திக்கலாம். இப்போது தங்கத்தின் உயர்வு நிலையைப்பற்றி மட்டும் சிந்திப்போம்.

"அது சரி; இப்போ எதுக்கு தங்கத்தைப் பத்தி சொல்றீங்க?' என்று யோசிக்கிறீர்கள்; புரிகிறது.

தங்கம் வாங்கும் நாளென்றால் இன்றைய நாளில் மக்களுக்கு நினைவில் வருவது அட்சய திரிதியைதானே. அது இந்த வருடம் மே மாதம் 3-ஆம் தேதி வருகிறதே.

அட.. ஆமாம்... என்று பஞ்சாங்கத்தைப் பார்த்துவிட்டு, உங்கள் மனதில் அலைபாயும் எண்ணங்களை அறிகிறோம்.

ஒ- கிரகங்களான சூரியனும் சந்திரனும் உச்சத்தில் இருக்கும் நாள்தான் அட்சய திரிதியை. குறிப்பாக அட்சய திரிதியை ரோகிணி நட்சத்திரத்தில் வந்தால் அதன் சிறப்பையும், அது தரும் செல்வ வளத்தையும் சொல்ல ஒரு குட்டி பட்டியலே போடலாம்.

இந்த ஆண்டு வரும் அட்சய திரிதியை அமிர்த யோகத்தில், ரோகிணி நட்சத்திரத்தில் வருகிறது. அதனால் வழிபாடு செய்யக்கூடிய இந்த புனித நாளில்... "நாம் தங்கம் வாங்கித்தான் ஆகவேண்டுமா' என்று கேட்கப்போகிறீர்கள்!

ஆடி மாதம், செவ்வாய்க்கிழமை என சில குறிப்பிட்ட நாட்களில் தங்கம் வாங்கமாட்டார்கள். ஆடித்தள்ளுபடி, செவ்வாய்க்கிழமை சிறப்புத் தள்ளுபடி என்றால் மக்கள் முதல் வரிசையில் நிற்காமல் இருப்பதில்லை. அதனால் வரும் சிக்கலும் சிரமும் வந்தபிறகுதானே தெரியும்.

"சுண்டைக்காய் கால் பணம்; சுமைகூ- முக்கால் பணம்' என்பதுபோல, சில நூறு அல்லது ஆயிரங்களை சேமிக்க பல லட்சங்களை இழக்கலாமா?

சம்பத்துகள் சேர அட்சய திரிதியை அன்று தானம் செய்யவேண்டும். சிலருக்குப் பாருங்கள்... செல்வ வளம் இருக்கும். ஆனால் அனுபவிக்கக்கூடிய சௌபாக்கியம் இருக் காது. "ஆயிரம் இருந்தும்... வசதிகள் இருந் தும்... சர் டங்ஹஸ்ரீங் ர்ச் ஙண்ய்க்' என்பதுபோல இருப் பார்கள். ஜனன ஜாதகத்தில் 11-ஆமிடத்தை வைத்து இதைத் தெரிந்துகொள்ளலாம்.

சம்பத்துகள் சேரவும், சௌபாக்கியம் கூடவும் அட்சய திரிதியை அன்று தானம் செய்யவேண்டும். தானம் செய்வதற்குதான் தங்கமும் வெள்ளியும் அட்ய திரிதியை அன்று வாங்கவேண்டுமே தவிர, வாங்கி பீரோவில் வைத்துப் பூட்டிவைக்க அல்லது பின்னாளில் விற்றுக்கொள்ள முதலீடாக என தங்கம் வாங்குவதற்கானது அல்ல இந்த புனிதமான அட்சய திரிதியை என்பதை முத-ல் புரிந்துகொள்ளவேண்டும்.

"நமக்கே இல்லையே ஐயா! நாம் எங்கே தானம் செய்வது? தானம் செய்வது நல்லதுதான் என்றாலும், சத் புருஷர்களைப் பார்ப்பது அரிதாகவுள்ள இந்த க-யில் எங்கே தானம்செய்வது என்ற சிந்தனையும் நம் மனதில் வராம-ல்லை.

சத் புருஷர்கள் இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்கள் நம் பார்வைக்குத் தென்படவில்லையென்றால், நமது தவ வ-மை குறைவு என்பதுதான் பொருளேயன்றி, சத் புருஷர்களே இல்லை என்பதல்ல என்னும் பாசிடிவ் கருத்தை மனதில் வைத்துக்கொள்ளுங்கள்.

சரி; தங்கம், வெள்ளி வாங்க வசதியில்லை. அல்லது தானமாகத் தருவதற்கு மனமின்றியோ, வீட்டில் திட்டுவார்களே என்ற பயமோ இருந்தால் என்ன செய்வது?

முடிந்தவரை நீர்ப்பொருளை தானம் செய்யுங்கள். பானகம், நீர் மோர் அல்லது வெறும் தண்ணீர்- இப்படி எதையும் தானமாகத் தரலாம். இதை சத் புருஷர்களுக்குதான் தரவேண்டும் என்றில்லை. யாருக்கும் தரலாம். அதில் பேதம்காட்ட வேண்டிய அவசியமில்லை.

நீர்மைப் பொருளுக்குக் காரகன் சந்திரன். அட்சய திரிதியை நாளில் சந்திரன் உச்சம் எனும்போது, அதற்கான கழுவாய் இதுவாகதானே இருக்கும்.

சூரியன் உச்சமாக இருப்பதால், அவர்களை உபசரித்து அன்னம் பா-த்து பசியாறச் செய்யவேண்டும். வசதி இல்லாதவர்கள் பானகம், நீர் மோர் கரைத்துத் தரவேண்டும். அதுவும் இல்லாதவர்கள் தண்ணீராவது (பண்டைய நாளில் தண்ணீர்ப் பந்தல் வைப்பார்கள்) தரவேண்டும். உங்கள் அலுவலகத்தில், வீட்டு வாச-ல் அதிக செலவில்லாமல் ஒரு பானையில் தண்ணீர் வைத்து தரமுடியும்தானே.

அட்சய திரிதியை கோடைகாலத்தில் வருவதால், இதுபோல சொல்-யிருக்கலாம் என்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் நினைத்துக்கொள்ளட்டும்; பரவாயில்லை. ஆனால் இதை செய்யட்டும் என்பதுதான் நமது எண்ணமும் விருப்பமும்.

எந்தவொரு செயலைச் செய்வதற்கும் நமக்குத் தேவை தண்ணீர்தான். அதனால்தான் மதச் சடங்குகளில் நீருக்கு முக்கியத்துவம் தருகின்றனர். "புண்ணியம் செய்வார்க்கு பூவுண்டு நீருண்டு' என திருமந்திரம் சொல்கிறது. தண்ணீரைக் கையில் வைத்துக்கொண்டு மனதை ஒருமுகப்படுத்தினால் (Crystalise) நமது உணர்வுகள் அதில் வெளிப்படுமென்பது ஆய்வாளர்கள் கருத்து.

அதனால் இந்த ஆண்டு மே மாதம் 3-ஆம் தேதி வரும் அட்சய திரிதியை அன்று தங்கம், வெள்ளி வாங்க விரும்பினால், அதை தானம் செய்வதாக இருந்தால் அதற்கு மட்டும் வாங்கிக்கொள்ளுங்கள். உங்கள் உபயோகத்திற்குதான் என்றால் உங்களுக்கு விருப்பமான மற்ற நாட்களில் வாங்கிக் கொள்ளுங்கள். யாராக இருந்தாலும் பானகம், நீர்மோர் அல்லது தண்ணீர்ப் பந்தல் என எது உங்கள் வசதிக்கு முடியுமோ அதைச் செய்யுங்கள்.

நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும்!

(தொடரும்)

செல்: 94443 27172

bala060522
இதையும் படியுங்கள்
Subscribe