பகுத்தறிவுப் பால்வாடியில் சேர்ந்த சிலர், இரவல் அறிவைத் திரட்டிகொண்டு, ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியைக் கேட்டு விட்டதுபோல நினைத்துக்கொண்டு நம்மிடம் சிறுபிள்ளைத் தனமாகக் கேட்பார்கள். ஒருபுறம் அவர்களைப் பார்த்தால் சிரிப்பு வரும். இன்னொரு புறம் அவர்கள் அறியாமையை நினைத்து பாவமாக இருக்கும். இதனை "புல்லறிவாண்மை' என வள்ளுவம் சொல்லும்.
சரி; அப்படி என்ன வருத்தப்படும்படி கேட்பாங்க என நினைக்கிறீர்கள். அதை சொல்லாமல் போனால் எப்படி? அதை சொல்வதற்குதானே இந்த வாரப் பதிவு.
"என்னது? பாற்கடலைக் கடைய அமுதம் வருமா?'' என்ன சார் புரூடா விடறீங்க... அந்த கடலைக் கடைய மேரு மலைதான் மத்தாக இருந்ததாம். பாம்புதான் கயிறாம். இம்மாம் பெரிய கடலில், அந்த மலையை ஒரு தம்மாத் துண்டு ஆமை முதுகிலே தாங்கிச்சாம். இதுவரைக்கும் அப்படி ஒரு ஆமையை டிஸ்கவரி சானலில்கூட பார்க்கவில்லை யடா சாமி...'' என்று நம்மை சும்மாவிட மாட்டார்கள். முழு கதையையும் சொல்லி விட்டு, மேலும் நம்மை கிண்டல் செய்து விட்டதுபோல சந்தோஷம் அடைவார்கள்.
"அப்படி தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைய விஷம் வந்துச்சாம். அதை சிவன் வாங்கி குடிச்சாராம். தன் புருஷன் சாகக்கூடாதுன்னு தொண்டையிலே கையை வைச்சு நிற்க வைத்து வ
பகுத்தறிவுப் பால்வாடியில் சேர்ந்த சிலர், இரவல் அறிவைத் திரட்டிகொண்டு, ரொம்ப பெரிய கஷ்டமான கேள்வியைக் கேட்டு விட்டதுபோல நினைத்துக்கொண்டு நம்மிடம் சிறுபிள்ளைத் தனமாகக் கேட்பார்கள். ஒருபுறம் அவர்களைப் பார்த்தால் சிரிப்பு வரும். இன்னொரு புறம் அவர்கள் அறியாமையை நினைத்து பாவமாக இருக்கும். இதனை "புல்லறிவாண்மை' என வள்ளுவம் சொல்லும்.
சரி; அப்படி என்ன வருத்தப்படும்படி கேட்பாங்க என நினைக்கிறீர்கள். அதை சொல்லாமல் போனால் எப்படி? அதை சொல்வதற்குதானே இந்த வாரப் பதிவு.
"என்னது? பாற்கடலைக் கடைய அமுதம் வருமா?'' என்ன சார் புரூடா விடறீங்க... அந்த கடலைக் கடைய மேரு மலைதான் மத்தாக இருந்ததாம். பாம்புதான் கயிறாம். இம்மாம் பெரிய கடலில், அந்த மலையை ஒரு தம்மாத் துண்டு ஆமை முதுகிலே தாங்கிச்சாம். இதுவரைக்கும் அப்படி ஒரு ஆமையை டிஸ்கவரி சானலில்கூட பார்க்கவில்லை யடா சாமி...'' என்று நம்மை சும்மாவிட மாட்டார்கள். முழு கதையையும் சொல்லி விட்டு, மேலும் நம்மை கிண்டல் செய்து விட்டதுபோல சந்தோஷம் அடைவார்கள்.
"அப்படி தேவர்களும் அசுரர்களும் கடலைக் கடைய விஷம் வந்துச்சாம். அதை சிவன் வாங்கி குடிச்சாராம். தன் புருஷன் சாகக்கூடாதுன்னு தொண்டையிலே கையை வைச்சு நிற்க வைத்து விட்டாராம். விஷத்த குடித்தால் சாமி சாகுமா? என்னங்கப்பா ரீல் சுத்தறீங்க, அப்படி செத்தால் அது சாமியா? இப்படி ஒரு கதையை ஹாலிவுட் படத்துலகூட இதுவரை யாரும் சொன்ன தில்லை.. இதெல்லாம் நம்பிக்கிட்டு நீங்களும் சாமி கும்பிட்டுகிட்டு, சோதிடம் அது இதுன்னு சொல்லிக்கிட்டு...'' என்று நம்மை வீண் வம்புக்கு இழுப்பார்கள்.
சில விஷயங்களை அடிப்படையில் புரிந்துகொள்ளுங்கள். பழைய காலத்தில், நமக்கு விஷயங்களைப் புரியவைப்பதற்காக கதைபோல செய்திகளை சொல்லி நம் மனதில் பதியவைப்பார்கள். முன்பெல்லாம் பாட்டிமார்கள் குழந்தைகளுக்கு கதை சொல்லி தூங்கவைப்பார்கள். இப்போ அந்த பாட்டிமார்கள் எல்லாம் முதியோர் இல்லத்தில் இருப்பதால், குழந்தைகளுக்கு நல்ல விஷயத்தை சொல்லித்தர யாருமில்லை. இருக்கிற பாட்டிமார்களும் கையில் ரிமோட்வுடன் 50 சென்டிமீட்டர் பெட்டிக்கு முன்னாடி உட்கார்ந்துவிடுவதால் அவர் களும் சிந்தனையை வளர்த்துக் கொள் வதில்லை., நம்மை யாரும் கவனிக்கமாட்டேன் என்கிறார்களே என குழந்தைகளும் ஆறு இன்ச்பெட்டியை கையில் பிடித்துக்கொண்டு உலகத்தை சுற்றிவருகிறது. அதனால் குழந்தை களையும் சிந்தனையை வளர்த்துக்கொள்ள விடுவதில்லை.
நமது கலாச்சாரத்தில் சொல்லப்படுற எல்லாம் மிகப்பெரிய தத்துவங்களை உள்ளடக்கி சொல்லவந்த உருவகங்கள். குழந்தைகள்கூட visualise செய்து பார்க்கும் படி சொல்லித் தருவார்கள். இதுபோல கூகுளால்கூட சொல்லித்தர முடியாது. இவற்றை அப்படியே எடுத்துக்கொண்டு வாதிடுவது அறிவுடைமை ஆகாது என்பது அறிவுள்ளவர்களுக்குத் தெரியும். இந்த நடைமுறை நண்பர்கள் மத்தியிலும்கூட குழூக்குறிபோல இருக்கும் என்பதைப் புரிந்துகொண்டால் இது புரியும். Encoding செய்யப்பட்ட இந்த உருவகங்களை Decoding செய்தால் மட்டுமே அதன் பொருள் விளங்கும்.
உங்களுக்காக இப்போது இந்த கதையை Decode செய்து பார்க்கலாம் வாங்க.
பாற்கடல்- குண்டலினி சக்தி.
மேரு மலை- முதுகுத்தண்டு.
வாசுகி பாம்பு- மூச்சுக்காற்று.
தேவர்- அசுரர்- இடகலை நாடி, பிங்கலை நாடி.
ஆமை- ஐம்புலன்களையும் அடக்கி யாளும் தன்மை.
தொண்டைக்குழி- விசுக்தி சக்கரம்.
விஷ்ணு- வாழ்வு.
ஆலகாலவிஷம்- கபம்.
அமுதம்- மரணமில்லா பெருவாழ்வு.
திருமகள்- செல்வம், நிறைவு.
சந்திரன்- சித்தத் தெளிவு.
காமதேனு, கற்பக விருட்சம்- நினைத்தது கைகூடும் ஆற்றல்.
ஐராவதம்- தேக பலம்.
தன்வந்திரி- ஆரோக்கியம்.
நமக்குப் புரியும்படி சொல்லவேண்டும் என்றால், "முதுத்தண்டின் இரு பக்கமும் செல்லும் இடகலை- பிங்கலை நாடி வழியே மூச்சுக்காற்று எப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது ஆமைபோல் ஐம்புலன்களையும் அடக்கி அதை ஆதாரமாகக்கொண்டு யோகப் பயிற்சியினால் நாடிசுத்தி செய்து இடகலை, பிங்கலை வழியே மூச்சுக்காற்றை இழுத்துவிடும்போது, நித்திய பெருவாழ்விற்கான பத்தாம் வாசல் திறக்கும். அங்கே அமுதம் சுரக்கும். அதை உண்டவர்கள் மரணமில்லா பெருவாழ்வு அடைவர் என்ற இந்த ஆழமான கருத்து அடங்கிய சிந்தனையை ஒரு உருவகக் கதையில் ஸ்ண்ள்ன்ஹப் ஸ்ரீர்ம்ம்ன்ய்ண்ஸ்ரீஹற்ண்ர்ய் எதுவும் படிக்காமல் விளக்கித் தந்திருக்கிறார்கள் என்றால், முன்னோர்களின் அறிவை வியந்து பாராட்டவேண்டுமே தவிர கண்டதைச் சொல்லக்கூடாது.
பாற்கடலைக் கடையும்போது லட்சுமி, தன்வந்திரி, சந்திரன், கற்பக விருட்சம், காமதேனு, ஐராவதம் முதலியன வந்தது என்பது, யோகசித்தி பெற்ற ஒருவருக்கு முறையே செல்வம் (நிறைவு), ஆரோக்கியம், சித்தத் தெளிவு, நினைத்தது கைகூடும் ஆற்றல், தேகபலம் கிடைக்கும் என்பதற்காக சொல்ல வந்த உருவகங்கள்.
இப்படி யோகப் பயிற்சியின்போது அதிகமான கபமே முதலில் வெளிப்படும். அதனால்தான் யோகப் பயிற்ச்சியில் கரிசாலை நெய் தடவச் செய்வார்கள் என்பது யோகம் பயில்பவர்களுக்குத் தெரியும். "கரிசாலை நெய்யா? அப்படின்னா...?'' என கேட்காதீர்கள். அதை இன்னொரு வாய்ப்பில் சிந்திக்க வைத்துக்கொள்வோம். இந்த கபமே விஷம் என யோக சாஸ்திரத்தில் சொல்லி வைத்திருப்பதை சுலபமாகப் புரிந்தகொள்ள இப்படி கதைபோல சொல்லித் தந்திருப்பார்கள்.
இதேபோலதான் சோதிடத்திலும், சந்திரனுக்கு 27 (நட்சத்திரங்களும் மனைவிமார்கள். வளர்ந்து தேயவேண்டும் என தான்பெற்ற சாபத்தால், சந்திரன் நேரடியாக பலனைத் தரமாட்டார். குரு பத்தினி தாரை வழியாக பலனைத் தருவார் என சொல்லித் தந்திருப்பார்கள். அதனால்தான் சந்திராஷ்டமம் பார்க்கத் தேவையில்லை- தாரா பலனே முக்கியம் என்பதுபோல சில வாரத்துக்குமுன்பு சொல்லியிருந்தோம்.
சனிக்கு கால் ஊனம், வைத்தீஸ்வரன் கோவிலில் செவ்வாய் சாப விமோச்சனம் பெற்றது, அசுர குருவான சுக்கிரன் கண் பார்வை இழந்தது என நிறைய கதைகளை சொல்லி கிரக இயல்புகளைப் புரியவைத்திருப்பார்கள்.
கதைகளை அப்படியே எடுத்துக் கொள்ளாமல் கருத்துகளை எடுத்துக்கொண்டு சிந்தித்தால், இவை கட்டுக் கதையோ புரூடாவோ இல்லை. கருத்தைச் சொல்லவந்த பொக்கிஷம் என்பது புரியும். சொல்லித் தந்த கதைகளை சிந்தித்துப் புரிந்துகொண்டால், சித்தம் தெளிவாகும். இருளில் இருந்து வெளிச்சத்திற்;கு வரமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172