"நான் ஒண்ணும் பெரிசா சொல்ல வில்லை சார். Casual#ஆக இப்படி சொன்னதற்கு அவர் இப்படி வழக்கு போட்டு...' அல்லது "இப்படி அவமானப் படுத்திவிட்டார் பாருங்க சார்' என்று அலுவலகத்திலோ, குடும்பத்திலோ, அல்லது வெளிவட்டார பழக்கத்திலோ சொல்லி புலம்புபவர்களைப் பார்த்தி ருக்கிறீர்களா?

"என்னதான் இருந்தாலும் உங்களுக்கு இந்த வாய்க்கொழுப்பு ஆகாதுங்க.. வாயை வைச்சுககிட்டு சும்மா இருந்தாதானே... அதான் இப்போ வாங்கி கட்டிக்கறீங்க' என்று, நாம் பட்ட அவமானத்திற்கு சர்டிபிகேட் கொடுத்து நம்மை இன்னமும் அவமானப்படுத்தும் குடும்ப உறுப்பினர் கள் அல்லது நட்பு வட்டங்களும் இருக்கதான் செய்யும்.

அது சரி, அவமானம் என்றால் என்ன? தன் நிலையை மற்றவர்கள்முன் குறைத்துப் பேசுவது அதுவும் மற்றவர்கள் அறியும்படி பொதுவெளியில் பேசுவது- இதனை க்ங்ச்ஹம்ங் செய்தல் என சொல்வார்கள்.

Advertisment

ff

என்னதான் அவமானத்தை எல்லாம் துடைத்துப் போட்டுவிட்டுப் போகும் நபராக இருந்தாலும் உணர்ச்சிவசபடாமல் இருக்கமுடியுமா என்ன? அதுவும் கொஞ்சம் sensitive ஆசாமியாக இருந்தால் உடனே கோபம் கொப்பளிக்க, "சமூக வலையில் நான் அவன் இல்லை' என்று காட்டிவிடுவார்கள். இல்லை என்றால் நான் அப்படி சொல்லவில்லை என்று எதிர்வாதம் செய்வார்கள். இன்னும் சிலர், "நீ மட்டும் என்னவாம்?' என்று பதிலுக்கு எதிராளிகளை அவமானபடுத்திவிட்டுதான் சந்தோஷம் அடைவார்கள்.

இதனால்தான் திருவள்ளுவரும்-

யாகாவார் ஆயினும் "நா' காக்க காவாக்கால்

"சோகாப்பர் சொல்லிழுக்குப்பட்டு'

என சொல்லியிருக்கிறார். எத்தனைப் பேர் சொன்னாலும், எத்தனை முறை சொன்னாலும், பாருங்க, "இந்த வார்த்தையை மட்டும் சொல்லிட்டால் எனக்கு கொப்பளித்துக் கொண்டுவரும் பாருங்க...' என்று உணர்ச்சி கொப்பளிக்க நம்ம கிட்ட வருவாங்க.

Advertisment

நம்ம இப்படி உணர்ச்சி கொப்பளிக்கும் ஆசாமியென்று தெரிந்தே சிலர் நம்மை இப்படி வேண்டுமென்று இதுபோல உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அவமானப் படுத்தியதாக சந்தோஷப்படுவார்கள். இவர்கள் இப்படிதான் என அமைதியாக எந்த reaction கூட கொடுக்காமல் இருந்தால், இத்தனை சொல்லியும் இவர்களுக்கு இது இல்லை; ஒரு reaction கூட தரவில்லை என்று சொல்லி, நம்ம வாயைக் கிளறிவிட்டு, நம்ம கையாலேயே நம்ம கன்னத்தில் அறைந்துவிட்டு, நான் நல்லவன் என்று பொதுவெளியில் காட்டிவிட்டு அமைதியாக சென்றுவிடுவார்கள்.

அட ஆமாங்க ஐயா. என்று உங்களுக்கு யாரையாவது பார்த்தால் அப்படித் தோன்றுகிறதா? அது சரி, அதுக்கும் சோதிடத்திற்கும் சேர்த்து என்ன சொல்லப் போறீங்க என்று யோசிக்கிறீங்க; புரிகிறது.

முதலில் சில விஷயங்களைச் சொல்கிறேன் குறித்துக்கொண்டு அது சரியாக உள்ளதா சொல்லுங்கள்.

எந்தவொரு பாவகத்திற்கும் அதன் 7-ஆம் பாவகம் நிவர்த்தி பாவகம். எந்தவொரு பாவகத்திற்கும் அதன் 3-ஆம் பாவகம் செயல்பாட்டைக் குறிக்கும். நம்மை காயப்படுத்தி அல்லது அவமானபடுத்தும் நபர் யாராக இருந்தாலும், அவர்கள் எதிரி ஸ்தானமாக சொல்லும் 6-ஆமிடம் ஆகியவற்றைக் குறித்துக்கொண்டு, இனி சொல்லவரும் சிந்தனையை கொஞ்சம் கோர்த்துப் பாருங்கள்.

மனக்காயத்தை ஏற்படுத்துபவர் 6-ஆமிடம் இல்லையா. அந்த 6-ஆம் பாவகம், செயல்பாட்டிற்கு வரவேண்டும் என்றால், 6-ல் இருந்து 3-ஆமிடத்தைப் பார்க்கவேண்டும் இல்லையா. 6-ஆம் பாவகத்திற்கு 3-ஆமிடம் 8-ஆம் பாவகம் சரிதானே. இந்த 8-ஆமிடம் அவமானத்தை ஏற்படுத்துவதைக் குறித்துக் காட்டும்.

அட ஆமாங்க ஐயா. இது தெரிந்துமா நம்மால் இதைத் தவிர்க்க முடியவில்லை. இதுபோன்ற சிக்கலான சூழலிலிருந்து தப்பிக்க வழி எதுவும் உள்ளதா என்று கேட்கவருகிறீர்கள்; புரிகிறது.

எப்போதெல்லாம் பூட்டு தயாரிக்கபடுகி றதோ, கூடவே சாவியும் தயாரிக்கப்படும் என்ற அடிப்படை சிந்தனையை மனதில் பதிய வைத்துக்கொள்ளுங்கள். எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வுண்டு. என்ன தீர்வு. எப்போது, எப்படி நடக்குமென்பதை சொல்வதுதான் உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் சொல்லும் நல்வாக்கு என்ற சிந்தனையை எடுத்துக்கொண்டு தொடர்ந்து சிந்திக்க வாருங்கள்.

8-ஆம் பாவகம் அவமானத்தைக் குறிக்குமென்றால் அதற்கு நிவர்த்தி 7-ஆமிடம் இல்லையா. அந்த நிவர்த்தி பாவகம் (எட்டிலிருந்து 7 இடங்களை எண்ணிப் பாருங்கள்) 2-ஆமிடத்தைக் காட்டும்; சரிதானே. இந்த 2-ஆமிடம்தான் வாக்கு ஸ்தானமென்பது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்கும்.

ஆக, அவமானத்தைக் குறிக்கும் 8-ஆம் பாவகத்திற்கு நிவர்த்தி பாவகமான 2-ஆமிடத்தைக் குறிக்கும் வாக்கு அல்லது பேச்சை கவனமாக அல்லது பொறுமையாக கையாண்டால் 8-ஆம் பாவகத்தால் ஏற்படும் அவமானம் அல்லது பழியுணர்ச்சி குறையுமென்பது சோதிடரீதியாக சொல்லும் விளக்கம்.

இதைதான் நம் முன்னோர்கள் எப்போதும், அன்பாக, அமைதியாகப் பேசுங்கள். அடுத்தவர்களை மதித்து பேசும் அன்பான பேச்சு ஒன்றே, நம்மை அவமானத் திலிருந்து காப்பாற்றும் நிவர்த்தியாக அமையுமென, இந்த இரண்டாவது பாவகத்தை அவமானத்திலிருந்து காப்பாற்றிக்கொள்ள குறிப்பாக சொல்லியிருப்பார்கள்.

"நா' காக்க என வள்ளுவமும் இந்த சிந்தனையைச் சொல்கிறதென்று சொல்வதை நாம் அறியும்போது, இந்த இயல்பான் செயல்பாட்டில் சோதிட பின்புலம் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா.

சாலையில் சிக்னலில் நிற்கும்போது யாராவது வண்டியில் தெரியாமல் மோதிவிட்டால், "என்ன அண்ணே... என்மேல கோபமா? அவசரமா போகனுமா.. சரி போங்க' என்பதுபோல அன்பான வார்த்தைகளை சொல்லி விட்டுக்கொடுத்து, அவரை ஆசுவாசபடுத்தி அனுப்பிவையுங்கள். கனமான வார்த்தைகளை சொல்லிவிட்டால், அவர் தரும் கடுமையான வார்த்தைகள் நம்மை அவமானப்படுத்திவிடும்; மன அமைதியைக் கெடுத்துவிடும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

இது சாலையில் மட்டுமல்ல, குடும்பத்தில், அலுவலகத்தில், நண்பர்கள் வட்டத்தில் என ஒவ்வொரு இடத்திலும் இந்த அன்பான அணுகுமுறையைக் கையாள்வது இரு தரப்புக்கும் நல்லது என்பதைப் புரிந்துகொண்டு அன்பை விதைப்போம்.

நல்லதே நினைப்போம். நல்லதே நடக்கும்.

செல்: 94443 27172