வெளிச்சத்திற்கு வாங்க (62) -விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-62-visu-iyer

த்தியத்திற்குக் கட்டுப்படும் நாகப்பாம்பு, உருவத்தில் தடித்த கட்டுவீரியன், கண்ணைக் கவரும் தோற்றத்தில் இருக்கும் கண்ணாடி வீரியன், அளவில் சிறிய சுருட்டை வீரியன் என்ற நான்குவகைப் பாம்புகள்தான் விஷத் தன்மை கொண்டவை என்பதை வனவிய லாளர்கள் சொல்வார்கள். பாம்புகள் அடித்தா ரைக் கடிக்காது, விதித்தாரைதான் கடிக்கு மென்று சொல்வார்கள். என்னதான் இருந்தா லும் பாம்பு என்றால் பயம் இருக்கதானே செய்யும்.

ஒரு ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பவர் களுக்கு, அற்ப ஆயுள், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், நோய்த் தொல்லைகள் என ஏற்பட வாய்ப்புண்டு என்பதை சென்ற வாரம் பார்த்தோம்.

மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமான திருமண விஷயத்திலும், குழந்தை பாக்கியம் அருள்வதிலும் தோஷத்தை ஏற்படுத்துவது இந்த ராக- கேதுதான். நாக தோஷம், சர்ப்ப சாபம் என பல வகைகளில் தோஷங்களை ஏற்படுத்துவதில் ராகு- கேதுவுக்கு நிகர் யாரு மில்லை எனலாம். குழந்தை பிறக்கும்போது கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது,

f

கொடி சுற்றிக்கொண்டு பிறப்பதெல்லாம் ராகு- கேதுவின் செயல்பாடுகள் என்றால் வியப்பாகதான் இருக்கும்.

சர்ப்ப ஷாந்திக்கான வழிபாட்டு முறைகள் திருத்தலங்கள் மாவட்டம்தோறும் இருக்கின்றன. காளஹஸ்தியும் திருநாகேச் வரமும் மட்டுமல்ல என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். எந்தவகையான தோஷம் இருக்கிறதென்பதை உங்கள் நம்பிக்கைக்குரி

த்தியத்திற்குக் கட்டுப்படும் நாகப்பாம்பு, உருவத்தில் தடித்த கட்டுவீரியன், கண்ணைக் கவரும் தோற்றத்தில் இருக்கும் கண்ணாடி வீரியன், அளவில் சிறிய சுருட்டை வீரியன் என்ற நான்குவகைப் பாம்புகள்தான் விஷத் தன்மை கொண்டவை என்பதை வனவிய லாளர்கள் சொல்வார்கள். பாம்புகள் அடித்தா ரைக் கடிக்காது, விதித்தாரைதான் கடிக்கு மென்று சொல்வார்கள். என்னதான் இருந்தா லும் பாம்பு என்றால் பயம் இருக்கதானே செய்யும்.

ஒரு ஜாதகத்தில் நாக தோஷம் இருப்பவர் களுக்கு, அற்ப ஆயுள், வம்ச நாசம், தீராத வியாதி, தரித்திரம், நோய்த் தொல்லைகள் என ஏற்பட வாய்ப்புண்டு என்பதை சென்ற வாரம் பார்த்தோம்.

மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமான திருமண விஷயத்திலும், குழந்தை பாக்கியம் அருள்வதிலும் தோஷத்தை ஏற்படுத்துவது இந்த ராக- கேதுதான். நாக தோஷம், சர்ப்ப சாபம் என பல வகைகளில் தோஷங்களை ஏற்படுத்துவதில் ராகு- கேதுவுக்கு நிகர் யாரு மில்லை எனலாம். குழந்தை பிறக்கும்போது கழுத்தில் மாலை போட்டுக்கொண்டு பிறப்பது,

f

கொடி சுற்றிக்கொண்டு பிறப்பதெல்லாம் ராகு- கேதுவின் செயல்பாடுகள் என்றால் வியப்பாகதான் இருக்கும்.

சர்ப்ப ஷாந்திக்கான வழிபாட்டு முறைகள் திருத்தலங்கள் மாவட்டம்தோறும் இருக்கின்றன. காளஹஸ்தியும் திருநாகேச் வரமும் மட்டுமல்ல என்பதை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். எந்தவகையான தோஷம் இருக்கிறதென்பதை உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடரிடம் கேட்டுத் தெரிந்துகொண்டு, அதற்குரிய திருத்தல வழிபாட்டு முறைகளை மேற்கொண்டால் பலன் உறுதியாகக் கிடைக்கும்.

இதுவல்லாமல் ஏதாவதொரு நாக வழிபாடு செய்தால், வழிபாட்டுக்குப் பலன் கிடைக்கும், தோஷநிவர்த்தி என்பது அதற்குரிய கால இடைவெளியில்தான் நடக்கும். அதன்பிறகு வழிபாட்டு முறைகளை குறைசொல்வது பயனற்றது என்பதை அறிவார்ந்தவர்கள் ஏற்றுக்கொள்வார்கள்.

பாம்புகளின் இயல்பான குணங்களை வைத்து இதை சிந்தித்தால் இது தெளிவாகப் புரியும். எப்போதும், பாம்புகள் முன்னெச்ச ரிக்கை உள்ளவை. தலையை நீட்டிக்கொண்டு வாலை உள்ளே இழுக்கும் திறன் படைத்தவை. பசித்தால் மட்டும் சாப்பிடும் பாம்பு, பாம்பையே சாப்பிடும் பாம்பு, கர்ப்பம் தரித்து பிள்ளை பெறும் பாம்பு முட்டையிட்டு சந்த தியை விருத்தி செய்யும் பாம்பு என பட்டிய லிட்டு சொன்னால் ஒருசில வாரம் போதாது.

இதே சிந்தனையில் நாக தோஷம், சர்ப்ப சாபம் என சொல்லத் தொடங்கினால் தனியாக தொடரே எழுதலாம் என்றாலும், எனக்கு நாக தோஷம் இருக்கிறதா என்பதை எப்படி தெரிந்துகொள்வது என கேட்க நினைப்ப வர்களுக்கு இந்த செய்தி.

தோல் சம்பந்தப்பட்ட வியாதி இருப்பவர் களுக்கு சர்ப்ப தோஷமோ சர்ப்ப சாபமோ இருக்கும் என்பதை ஜாதகத்தைப் பார்க்காமலே சொல்லிவிடலாம். தோல் மருத்துவர் dermatologist என்று சொல்லும் தோல் மருத்துவ நிபுணர்களுக்கும் இந்த சர்ப்ப தோஷம் இருக்குமென்று சொல்லிவிடலாம்.

தமிழ்வழி வழிபாட்டு முறையில், சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் புகழேந்திப் புலவர் எழுதிய நளவெண்பாவைப் படிக்கவேண்டும். ‘கார்க்கோடகன்’ முதலான நாகதோஷம் நீங்கும்.

பாம்பன் சுவாமிகள் அருளிய துவித நாகபந்தம் படிக்க தோஷங்களும் பாவங்களும் விலகும். இதேபோல நாகதோஷ அமைப்பிற் கேற்ப முன்னாக பந்தம், நான்னாக பந்தம், அஷ்ட நாக பந்தம் முதலியனவும். தோஷ பாதிப்பு ஏற்படாமலிருக்க, தாந்திரிக முறை பரிகாரங் களும் உண்டு.

இதேபோல, அஷ்டபுஷ்பங்களில் முதன்மையாக சொல்லும், எருக்கு வழிபாடு சர்ப்ப சாபத்தைப் போக்கும் என்பது நம்மில் பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

உணவுப் பழக்கத்தில், பால் பொருட்கள் (dairyfoods) நீங்கிய உணவு எடுத்துக்கொள்வது சர்ப்ப தோஷத்திற்கு எளிமையான பரிகாரமாக இருக்கும். இதுபோல ஒவ்வொரு அசைவிலும் சில குறிப்புகள் உண்டு. அதை உங்கள் நம்பிக் கைக்குரிய சோதிடர் உங்களுக்கு அடையாளம் காட்டிதருவார்.

இன்னும் குறிப்பாக சொல்லவேண்டுமென் றால், நாகதோஷம் உள்ளவர்களுக்கு சனியினால் பாதிப்பு ஏற்பட்டால், அது அஷ்டமச் சனி யாகவோ, ஜென்மச் சனியாகவோ, ஏழரைச் சனி யாகவோ அல்லது சனிப்பெயர்ச்சியால் வரும் பாதிப்போ அல்லது சனி தசாபுக்தி- இப்படி இருந்தாலோ, அது பலமாக மற்றவர்களைவிட தாங்கமுடியாத நிலையில் இருக்கும்.

அட என்னங்க அய்யா தமிழில் பாட்டு பாடினால் பாம்பு தோஷம் போயிடுமா என்று கிண்டல் அடிப்பவர்கள் குறித்துக் கொள்ளுங்கள். கொஞ்சம் நீரும் தமிழ் பாட்டும்போதும் மற்ற சடங்குகள் எல்லாம் பிறகுதான். இதற்கான குறிப்புகளை இந்த சிந்தனையை இன்னொரு வாய்ப்பில் சிந்திக்க வைத்துக்கொள்வோம்.

இராமேஸ்வரம், திருச்சி, ஈரோடு, கொடுமுடி, செம்மங்குடி, காரைக்குடி, பரமக்குடி, தூத்துக்குடி, மன்னார்குடி என மாவட்டம் தோறும் சர்ப்ப சாந்திக்கு தனியாக புத்தகம் போடும் அளவுக்கு திருத்தலங்கள் உள்ளன. வழி பாட்டு முறைகள் உள்ளது. அதனால், உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் ஜாதகத்திலுள்ள தோஷங்கள் அல்லது சாபங்களுக்கேற்ப, அவர் தேர்வுசெய்து சொல்லும் தலங்களையும், வழிபாட்டு முறைகளையும் அறிந்து அதன்படி செய்து நிவர்த்தி பெறுங்கள்.

பொதுவாக ஜாதாகத்திலுள்ள எந்த பாவங்களையும், தோஷங்களையும், சாபங் களையும் பொறுத்துக்கொள்ளலாம். ஆனால் சர்ப்ப கிரகத்தினால் வரும் தோஷங்களையும் சாபங்களையும் பொறுத்துக்கொள்ளமுடியாது என்பதுதான் அவரவர் அனுபவமாக கடந்த காலநிகழ்வுகள் நமக்கு கற்று தந்த பாடமாக இருக்கும்.

சரிங்க ஐயா, ஒரு சர்ப்ப கிரகத்திற்கே இத்தனையா.? இதுபோல எல்லா கிரகத்திற்கும் தெரிந்துகொள்ளவேண்டுமென்று ஆர்வமாக இருக்கிறதென்று சொல்பவர்களுக்கு ஒரு செய்தி.

சர்ப்ப கிரகத்தைப் பற்றிய செய்திகள் இத்துடன் முடியவில்லை.. இவையெல்லாம் ஒரு சிறு குறிப்பு அவ்வளவுதான். சர்ப்ப கிரகத்தின் நிலைப் பாட்டைக்கொண்டு நிறைய செய்திகள் சொல்ல முடியும்.

நீங்களே தெரிந்துகொள்ள சில குறிப்பு தருகிறேன். சரியாக உள்ளதா சொல்லுங்கள். சர்ப்ப கிரகங்கள் இருக்கும் இடத்திலிருந்து, மூன்றாவது ஸ்தானத்தில் சூரியன் இருந்தால் ஆணாக இருந்தால் வழுக்கை (சொட்டை) தலையாக இருக்கும். பெண்ணாக இருந்தால் தலை சீவினாலே முடிகொட்டும். சாதாரண மாகவே முடி உடைந்து விழும் தன்மையதாக இருக்கும்.

சர்ப்ப கிரகங்கள் தனியாக இருந்தால், வாழ்க் கையில் ஆயிரம் இருந்தும் வசதிகள் இருந்தும், ஒரு இனம்புரியாத வெறுமை இருக்கும்.

சர்ப்ப கிரக அச்சில் குரு தனித்திருந்தால் குடும்பத்தைவிட்டு விலகியிருப்பார். இதில் சனி தனித்திருந்தால், தொழில் முறையாக குடும் பத்தைவிட்டு விலகியிருப்பார். இந்த ஜாதகர் தோஷ பரிகாரங்கள் செய்வாரா- மாட்டாரா என்பதையே சர்ப்ப கிரக நிலைகள் காட்டிக் கொடுத்துவிடும். இப்படி நிறைய சொல்லிக் கொண்டே போகலாம்.

எந்த காரணத்தைக் கொண்டும் சர்ப்ப சாபம், நாக தோஷம், இவற்றை அப்புறம் பார்த்துக்கொள்ளலாம் என கவனக் குறைவாகச் கொள்ளாமல், முறையான வழிபாட்டு முறைகளை, பரிகார முறைகளை உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் வழிகாட்டுதலின் படி செய்யவும். அப்படி செய்ய வாய்ப்பில்லாத வர்கள் தமிழ் பாடல்களை படித்து, பிரச்சினை களை சந்திக்கும் முன்பாக தற்காப்பு செய்து கொள்வது நல்லது.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala190523
இதையும் படியுங்கள்
Subscribe