வெளிச்சத்திற்கு வாங்க (58) -விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-58-visu-iyer

ந்த டிஜிட்டல் உலகில், முதுகில் சோலார் பேனல், காதில் ஹெட் போன், அந்த கையில் ஆன்ட்ராய்ட் போன், இந்த கையில் டேப்லேட், வாயில் ஆம்லெட், காலில் கொஞ்சம் இடம் இருக்கிறது அங்கே சின்னதா ஒரு சோலார் பேனல் வைத்த செருப்பு. என நடக்க மக்கள் ரெடியாகி விட்டார்கள்.

என்ன அப்படி பார்க்கிறீர்கள்? இது என்ன கற்பனை என யோசிக்காதீர்கள். இந்த நாட்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில்தான் இருக்கிறது.

ஃபோன் செய்தால் போதும், வாயில் ஊட்டிவிடும் டோமோட்டோ, வீடுதேடி வரும் தடுப்பூசி. இப்படி நிறையா மாற்றங் கள் வந்தாலும் இன்னமும் மனிதன் வாயாலேதானே சாப்பிடுகிறார்கள். அது சரி. உண்மையிலேயே சாப்பிடுகிறார் களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

காலையில் எங்கே சாப்பிட நேரமிருக்கு என்று பிள்ளையை ஒரு பள்ளிக்கூடத்தில் தள்ளிவிட்டு, கணவனும் மனைவியும் ஆபிசுக்கு போற அவசரத்தில் அதை-

light

அதாங்க சாப்பாட்டை மறந்து மதிய உணவை வெந்தவரை போதும்; மீதத்தை ஆபிசில் ஓவனில் சூடுபடுத்திக்கொள்ளலாம் என எடுத்துக்கொண்டு போயிடறாங்க...

காலையில் உணவு, மிட் மார்னிங் உணவு, மதிய உணவு பின்

ந்த டிஜிட்டல் உலகில், முதுகில் சோலார் பேனல், காதில் ஹெட் போன், அந்த கையில் ஆன்ட்ராய்ட் போன், இந்த கையில் டேப்லேட், வாயில் ஆம்லெட், காலில் கொஞ்சம் இடம் இருக்கிறது அங்கே சின்னதா ஒரு சோலார் பேனல் வைத்த செருப்பு. என நடக்க மக்கள் ரெடியாகி விட்டார்கள்.

என்ன அப்படி பார்க்கிறீர்கள்? இது என்ன கற்பனை என யோசிக்காதீர்கள். இந்த நாட்கள் கண்ணுக்கெட்டிய தூரத்தில்தான் இருக்கிறது.

ஃபோன் செய்தால் போதும், வாயில் ஊட்டிவிடும் டோமோட்டோ, வீடுதேடி வரும் தடுப்பூசி. இப்படி நிறையா மாற்றங் கள் வந்தாலும் இன்னமும் மனிதன் வாயாலேதானே சாப்பிடுகிறார்கள். அது சரி. உண்மையிலேயே சாப்பிடுகிறார் களா என்றால் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

காலையில் எங்கே சாப்பிட நேரமிருக்கு என்று பிள்ளையை ஒரு பள்ளிக்கூடத்தில் தள்ளிவிட்டு, கணவனும் மனைவியும் ஆபிசுக்கு போற அவசரத்தில் அதை-

light

அதாங்க சாப்பாட்டை மறந்து மதிய உணவை வெந்தவரை போதும்; மீதத்தை ஆபிசில் ஓவனில் சூடுபடுத்திக்கொள்ளலாம் என எடுத்துக்கொண்டு போயிடறாங்க...

காலையில் உணவு, மிட் மார்னிங் உணவு, மதிய உணவு பின் மாலை உணவு என தொடர்ந்து இரவில் முடியவேண்டும். ஒரு நாளைக்கு ஐந்து முறை உணவு உண்பதால் ஆரோக்கியமான உடல்நலம் கிடைக்கும். உடல் ஆரோக்கியமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி தானே உடலில் அமைந்து விடும். இதுதான் தமிழர்கள் முறை. இதை மறந்தால், மீண்டும் கொரோனா வருமா என்ற பயமும் வரும்.

இதையே இன்றைய மருத்துவர்கள், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு, உணவை ஐந்து முறையாகப் பிரித்து உண்ண வேண்டுமென்று சொல்றாங்க.

அதுவும் பாருங்க. இந்த வகையில்தான் இந்த பயிரை சாகுபடி செய்யவேண்டும் என்றும், எதை தவிர்க்கவேண்டும் என்றும் சொல்லிப் பழக்கியது தமிழர் மரபு. அதை இயற்கை நமக்காக அப்படி அமைத்துத் தந்திருக்கிறது.

உதாரணமாக, ஆச்சாரமான குடும்பங் களில், (ஆடி முதல் தொடங்கும்) சாதுர் மாதத்தில் கத்திரிக்காய் சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். இதையே இந்த கத்திரிக்காய் ஆடி பட்டத்திற்கு ஏற்றதல்ல என்பதை விவசாய நண்பர்கள் சொல்லித் தருவார்கள்.

அதிலும் அந்த கத்திரியில் பச்சை, நீலம், வரி, வெள்ளை என எத்தனை வகை. எதை எப்போது சாப்பிடவேண்டும் என்ற வழிமுறையை சொல்லத் தொடங்கினால், சொல்லவந்த செய்தியை சொல்லமுடியாமல் போய்விடும்.

அறுசுவை உணவுக்கும் கிரகங்களின் ஆளுமையுண்டு. அதுவும் நமக்குப் பிரியமான சாப்பாடு என்றால் கேட்கவா வேண்டும். இந்த பிரியமான சாப்பாட்டை நமக்கு அடையாளம் காட்டுவது ஜாதகத்திலுள்ள ஆறாமிடம்தான்.

அட.. ஆறில் இத்தனை இருக்கா என்று கேட்காதீர்கள். பாசனத்திற்குப் பயன்படும் நீரை "ஆறு' என்றுதான் சொல்வார்கள் என்பதை சொல்லித்தானா தெரிய வேண்டுமென சிந்தித்தால் சொல்லவருவது புரியும்.

இப்போது பாருங்கள், ஆறாம் வீட்டில் சுக்கிரன் இருந்தால் பலவகையான உணவுகளை உட்கொள்வார். வெரைட்டி இருந்தால்தான் இவருக்கு சாப்பாடு இறங் கும்.

சனி இருந்தால், அவருக்கு போதுமான அளவு சாப்பாடு கிடைக்காது அல்லது கிடைத்த சாப்பாட்டில் சத்தும் இருக்காது.

இந்த ஆறாமிடம் நீர் ராசிகளாக இருந்துவிட்டால் அவர் மதுப்பிரியராக இருப்பார் என்றால் ஆச்சரியமாக இருக்குதா, ராகு கூட இருந்தால் போதும்; அவ்வளவுதான். தினமும் அவரை அந்த கடையில் பார்க்கலாம்.

செவ்வாய் இருந்தால், தேவைக்கு அதிகமாக உணவை சாப்பிட்டுவிட்டு, மலைப் பாம்பாக நெளிவார். இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம்.

உடல் ஆரோக்கியத்திற்கு சாப்பாடு இந்த ஆறாமிடம்தான். மன ஆரோக்கியத்திற்கு கடனில்லாத வாழ்க்கை, அந்த கடன்பற்றி சொல்வதும் இந்த ஆறாமிடம், அமைதியான வாழ்க்கைக்கு எதிரிகள் இல்லாத சூழல்தான். அதையும் இந்த ஆறாமிடம்தான் குறிக்கிறதென்பது சோதிடக் குறிப்பு.

அதனால் அன்றாட வாழ்வில் சோதிடம் என்ற அடிப்படை சிந்தனையைப் புரிந்து நடந்துகொண்டால் நிம்மதி யான வாழ்க்கையை எல்லாராலும் வாழமுடியுமென்பதை ஒவ்வொருவரும் புரிந்துகொள்வது அவசியம்.

முன்பெல்லாம் அய்யர் ஊஞ்சலில் உட்கார்ந்துகொண்டிருப்பார். அவர் மனைவி "ஏன்னா.. இன்னிக்கு என்ன சமைக்கட்டும்?' என்று கேட்பார். அய்யர், பஞ்சாங்கத்தைப் பார்த்து திதி, நட்சத்திரங்களைப் பார்த்து நீர்த் தன்மையுடைய அல்லது வெப்பத் தன்மையுடைய என அறுசுவையில் எந்த சுவை அன்றைய நாளுக்கு ஆரோக்கியத்திற்கு ஏற்றதோ, அதை சமைக்கச் சொல்வார்.

அவர்கள் எந்த தொற்று நோயுமில்லாமல், ஆரோக்கியமாகதான் இருந்தார்கள்.

ஆனால் இன்று, எந்த காய் மார்க்கெட்டில் விலை குறைவாக இருக்கிறதோ அவற்றை நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம் என்ற எந்த தன்மையுள்ள காயாக இருந்தாலும், அது எதிர்மறை விளைவுகளைத் தருவதாக இருந்தாலும்கூட, அதை சமைத்துப் போடு கிறார்கள். இது ஆரோக்கியமற்றது மட்டு மல்ல, அன்றைய நாளுக்கு எர்புடையதாகவும் இல்லை என்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நோய் தொற்றுக் கூட எளிதாக பரவுகிறது என்று சொன்னால் வியப்பாக இருக்கிறதல்லவா.

உடல் சக்திபெற உதவும் உணவுதான் உடலில் சேரும் சாப்பாடு, அது கூழ். ரத்தம், தசை, கொழுப்பு, எலும்பு, மஜ்ஜை, விந்து மற்றும் கழிவு என ஏழு இடங்களில் வடிகட்டி உயிர்வாழ உதவுகிறது, என்பதைப் புரிந்துகொண்டு, அவரவரின் அன்றைய நாள் இருக்கவேண்டும்.

பசிக்காகவோ, ருசிக்காகவோ, எதையாவது சாப்பிட்டு எப்படியோ வாழவேண்டுமா? நோயில்லாத வாழ்வே செல்வம் என்ற மன நிலையில், திருப்தியாக வாழவேண்டுமா என்பதை நாம் தானே முடிவுசெய்ய வேண்டும்.

அடிப்படை ஜோதிடம் தெரிந்துகொண்டுவிட்டால் இன்றைய உணவு தயாரிப்புக்கு நாமே மெனு போட்டுவிடலாம்.

அப்புறம் என்ன. நோய்த் தொற்றுக்கு சொல்லுங்கள் குட்பை! நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala210423
இதையும் படியுங்கள்
Subscribe