சூரியன் காலையில் உதிப்பது கிழக்கு திசை யில் என பள்ளியில் பாடம் படித்திருப்போம். வளர்ந்த பிறகு இதனை நேரில் பார்த்து அனுபவித்திருப் போம்.
"அட ஆமாங்க.. அதுக் கும் சோதிடத்திற்கும் என்ன?'' என கேட்கப் போகிறீர்கள். அதை சொல்வதற்குதான் இந்த வாரப் பதிவு.
கிழக்கே தொடங்கி, வலமாக வலம் வந்தால் தெற்கு, அப்புறம் மேற்கு, அதைத் தொடர்ந்து வடக்கு என கிழக்கில் முடித் தால் ஒரு பிரதட்சணம் அல்லது வலம் வருதல் என வரும். இதைத்தான் கோவிலில் சுற்றுவதும் சிலர் நவகிரகங்களை சுற்றுவது மாக இருக்கும்.
சில சமூகத்தில், நித்தய அனுஷ்டானம் செய்யும்போது, இதனை வழக்கத்தில் வைத்திருப்பார்கள்.
"யானி கானி ச பாபானி, ஜன்மாந்தரலிக்ருதானிச, தானி தானி விநச்யந்தி, பிரதக்ஷிண பதே பதே'' என மந்திரம் சொல்லி வலம்வருதல் இன்னும் சில சமூகத்தில் பழக்கத்தில் இருக்கிறது.
கிழக்கில் தொடங்கி தெற்கு வழியாக கிழக்கில் முடிப்பது ஒரு சுற்று என வைத்துக் கொண்டால், இந்த ஜாதகக் கட்டத்தில் மேஷத்தில் தொடங்கி மீனத்தில் முடியும் ராசிக்குரிய திசைகளைத் தெரிந்துகொள் வோமா?
மேஷத்தை கிழக்கிலிருந்து கணக் கிட்டால், மீண்டும் சிம்மம் கிழக்கில் வரும். பிறகு தனுசும் கிழக்கில் வரும். இதைத்தான் 1, 5, 9 என, திரிகோணமென சொல்வார்கள். ஆக, ஒரே திசையில் அமையும் ராசிகளைக் கோணமாக சொல்வார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இதை வேறுவிதமாக சிந்திக்க எடுத்துக் கொண்டால், நான்கு கோணம் சேர்ந்தது ஒரு சதுரம். இங்கே 1, 5, 9; 2, 6, 10; 3, 7, 11; 4, 8, 12 எனநான்கு கோணத்தை முறையே அறம், பொருள், இன்பம், வீடு என வகைப் படுத்திக்கொள்ளலாம்.
காலபுருஷ தத்துவப்படி மேஷம், சிம்மம், துலாம் கிழக்கு திசையிலும், ரிஷபம், கன்னி, மகரம் தெற்கு திசையிலும், மிதுனம், துலாம், கும்பம் மேற்கு திசையிலும், கடகம், விருச்சிகம், மீனம் வடக்கு திசையிலும் அமையும்.
பூமி உருண்டையா? தட்டையானதா என்ற வாதத்திற்குப் போகாமல், பூமி உருண்டையாக இருந்தால் நாம் ஏன் வீடுகளை சதுரமாக/ செவ்வகமாகக் கட்டுகிறோம் என்று என வாதம் செய்யாமல், இதை அப்படியே வீட்டிற்குப் பொருத்தி பார்த்தால் கோணமும் கேந்திரமும் கிடைக்கும்.
இந்த அமைப்பில் ஒரு திசையிலிருந்து இன்னொரு திசைக்குப் போகும்போது, இரண்டிற்கும் இடைப்பட்ட திசை வருமே. உதாரணமாக தென்கிழக்கு, வடமேற்கு என அதைவைத்து சிந்தித்துப் பார்த்தால் நமக்கு புதிய சிந்தனை கிடைக்கும்.
கிழக்கு திசைக்குரிய ராசி மேஷத்திலிருந்து, தெற்கு திசையைத் தொடும் ராசி கடகம் தெற்கில்.
அதிலிருந்து மேற்கு திசையைத் தொடும் ராசி துலாம். அங்கிருந்து வடக்கு திசையைத் தொடும் ராசி மகரம். (1, 4, 7, 10). இதைதான் கேந்திர ஸ்தானங்கள் என்று சோதிடத்தில் சொல்கிறோம்.
இந்த அமைப்பிலேதான் வாழும் வீடானது வாஸ்துவுக்குள் வைத்து சிந்திக்கத் தந்திருக்கிறார் கள். உண்ஹஞ்ய்ஹப் என்று சொல்லக்கூடிய இரண்டு மூலைகளைக் குறித்துக்கொண்டு ஒரு வீட்டையே வலம்வந்துவிடலாம்.
மனையின் அமைப்பு, வாசல் வைக்கும் திசை, சன்னல் அமைக்கும் முறை, வாசல்கால் மற்றும் சன்னலின் அளவுகள், அதன் டிசைன் கள், இதன் உட்புற சுவரின் பெயின்ட் நிறம், வெளிப்புறச் சுவரின் பெயின்ட் நிறம், சன்னலின் நிறம், கதவின் நிறம், தரையின் நிறம், சீலிங் நிறம், வாஷ்பேஸின் நிறம், குழாயின் அமைப்பென ஒரு பெரிய பட்டியலே போகும்.
வீட்டைக் கட்டிப் பார்; கல்யாணம் பண்ணிப் பார் என்று சொல்வார்கள். அந்த வரிசையில் வாஸ்து சாஸ்திரத்தைத் தொட்டுப் பார் என்று சொல்லவேண்டும். அதனால்தான் வாஸ்து விற்பனர்கள் கட்டணங்களை சில லட்சங்களாக வாங்குகிறார்கள் என்பதை மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இதே சிந்தனையை திருக்குறளில் வைத்து சிந்தித்தால், ஆச்சரியமாக இருக்கும். திருக்குறள் இந்த வாஸ்து கட்டமைப்பில்தான் அமைந்திருக் கிறது. முதலில் வரும் பாயிரவியலில் நான்கு அதிகாரங்கள் உண்டு. இதில் முதல் அதிகாரம் கடவுள் வாழ்த்து கிழக்கு திசையையும், அடுத்து வரும் வான் சிறப்பு மேற்கு திசைக்குரிய அதி தெய்வமான மழை தரக்கூடிய வருணனையும், அதையடுத்து வரும் நீத்தார் பெருமை தென்திசையைக் குறிக்கும் கடவுளையும், அறன் வலியுறுத்தல் வடக்கு திசைக்குரிய அதி தெய்வமான குபேரக் கடவுளையும் குறித்து அமைந்துள்ளதென்றால் வியப்பாக உள்ளதல்லவா! சரி; இந்த வாஸ்து சாஸ்திரத்தை இந்த வாரம் சிந்திக்க எடுத்துக்கொள்வோம்.
தென்கிழக்கு திசையில்தான் சமையலறை இருக்கவேண்டும் என வாஸ்து சாஸ்திரம் சொல்லும். ஏனென்றால், கிழக்குப் பகுதி சூடாக இருப்பதையும், தென்பகுதியில் இருந்து வீசும் காற்று, இதமாக இருக்கும் என்பதாலும் இந்தப் பகுதியில் அடுப்பு அமைந்தால் மிதமான வெப்பத்தில் ஆரோக்கியமான உணவு கிடைக்குமென்பதால் என்றால் பகுத்தறிவாதிகள்கூட வாஸ்து சாஸ்திரத்தை மறுப்பு சொல்லாமல் ஏற்றுக்கொள்வார்கள்.
"இப்போ எங்கே சார் விறகு அடுப்பு வைத்து சமையல் செய்யறாங்க... எல்லாம் கேஸ்தான். அதுவும் இப்போ கேஸ் சிலிண்டர் விற்கிற விலையில் எல்லாரும் இண்டக்சன், ஓவன்...
இன்னும் சிலர் சோலார் அடுப்பு என மாறிக் கிட்டே இருக்காங்க' என்று சொல்கிறீர்கள்; புரிகிறது. அதற்கான சோதிட சிந்தனைகளை இன்னொரு வாய்ப்பில் சிந்திக்க வைத்துக் கொள்வோம்.
இந்த அக்னி மூலைக்கு, நேர் எதிர்புறம் வடமேற்கில்தான் கழிவறை வரவேண்டுமென சொல்வார்கள். இதனை வாயு மூலை என சொல்வார்கள். இப்படி உண்ஹஞ்ய்ஹப் ஆக இருந்தால் டப்ன்ம்க்ஷண்ய்ஞ் செலவு எங்கோ போயிடுமே என்று யோசிக்காதீர்கள். அதன் வழிமுறைகளை குடும்பத் தலைவரின் ஜாதகப்படி ஆய்ந்து சொல்வதுதான் அனுபவம் வாய்ந்த விற்பனர் களின் ஆசிகள்.
இதேபோல அலுவலகத்திற்கும் வாஸ்து முறை கொள்கைகள் உண்டு. விவசாயப் பண்ணை நிலத்திற்கும் சில முறைகள் உண்டு.
இது ஒரு பெரிய கடல், அதனை தனியாகச் சொல்ல ஒரு தனி தொடரே தொடங்கவேண்டும்.
அதை சோதிடத்துடன் சேர்த்துச் சொல்லும் போது இன்னும் சுவையாக இருக்கும்.
வடகிழக்குப் பகுதியினை ஈசான மூலை என்று சொல்வார்கள். இது அதிக பாரமில்லா மலும் இறையருள் பெறுவதற்கும் வைத்துக் கொள்ள வேண்டுமென சொல்வார்கள். இதன் எதிர்திசை தென்மேற்கு. இது அதிக பாரமுடையதாகவும், தண்ணீர்த் தொட்டி அமைக்கவேண்டும் என்றும் சொல்வார்கள். இப்படி நான்கு மூலைகளையும் எட்டு திசை களையும் வடிவமைத்துத் தருவதில், ஒரு ஆழ்ஸ்ரீட்ண்ற்ங்ஸ்ரீற் செய்யும் வரைபடத்தைபோல சோதிட சிந்தனைகளை வைத்து வாஸ்து வடிவமைப்பு செய்வதும் மிகவும் அவசியமானதென்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
"ஐயா நங்கள் வாடகை வீட்டில் இருக்கி றோமே... நாங்களும் வாஸ்து பார்க்க வேண்டுமா?' என்று உங்களுக்கு கேட்கத் தோன்றுகிறதா? நூறு சதவிகிதம் பார்க்கத் தேவையில்லை என்றாலும், சில குறிப்பிட்ட விஷயங்களை அவசியம் பார்த்துதான் ஆக வேண்டும். அதனால்தான் வாடகைக்கு வீடு பார்க்கும்போது, சில அடிப்படை வாஸ்து முறை கள் உள்ளதா என்று பார்த்து வர வேண்டும்.
அப்படிப் பார்கவில்லையென்றால், அதற்குரிய பலன்களை ஏற்றுக்கொள்ள தயாராக வேண்டும். அல்லது தெரியாமல் இந்த வீட்டுக்கு வந்துவிட்டோமென்று வேறு வீட் டுக்கு காலி செய்துகொண்டு போகவேண்டும்.
உதாரணமாக, சொல்லவேண்டுமென்றால், லக்னத்திற்கு இரண்டாம் வீட்டில் சர்ப்ப கிரகங்கள் இருந்தால் ஒரு சந்துபோல நீளமாகப் போனபிறகு அவர்கள் வீட்டு நுழைவாயில் இருக் கும். இது அடுக்கு மாடி வாடகை அல்லது சொந்த வீடு என எப்படியிருந்தாலும் இப்படி தான் இருக்கும். உங்கள் அனுபவத்தில் அல்லது உங்கள் ஜாத்தகத்தில் வைத்து சிந்தித்துப் பாருங்கள்.
இதுபோல ஜாதக அமைப்பை வைத்துக் கொண்டு வாஸ்துக் குறிப்புகளை சேர்த்துக் கொண்டு, பலம் பொருந்திய கிரகம், நலம்தரும் கிரகமென நேர்செய்து ஆலோசனை சொல்கி றார்கள்.
தெரியாமல் வீட்டைக் கட்டி அல்லது வாங்கி விட்டோம். வீட்டை இடிக்கனுமா அல்லது விற்கணுமா என்று கேட்காதீர்கள். அதற்கான வழிமுறைகள் உங்கள் ஜாதகத்தில் இருக்கும். அதை வைத்துக்கொண்டு சரிசெய்ய வாய்ப்பு களும் உண்டு.
எங்கே பிரச்சினைகள் இருக்கிறதோ அங்கே தீர்வும் இருக்கிறதென்பதைப் புரிந்து கொள்ளுங்கள். பூட்டு தயாரிக்கும்போதே சாவியும் சேர்த்தேதான் தயார் செய்வார்கள். அனுபவமில்லாத சிலர்தான், பூட்டுக்குரிய சாவியை விட்டுவிட்டு வேறு சாவியை வைத்துக்கொண்டு பூட்டு திறக்கவில்லையென அழுதுகொண்டு இருப்பார்கள்.
"தட்டுங்கள் திறக்கப்படும்' என்றால் பூட்டிய கதவைத் தட்டினால் அது திறக்கப்படுமா என சிந்தித்துப் பார்த்தால் சொல்லவருவது உங்களுக்குப் புரியும்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172