காதலர் தினம் பிப்ரவரி 14 என்று இன்றையநாளில் எந்த பிள்ளைகளும் சொல்லிவிடும். காதல் என்றால் என்ன? காதலர் என்பவர்கள் யாரென்று தெரியாதவர்கள்கூட இதைத் தெரிந்தோ தெரியாமலோ சொல்லிவிடுவார்கள். காதலர் தின பார்டி, கடைகளில் தள்ளுபடி, பரிசு மழை தொலைக்காட்சி சிறப்பு நிகழ்ச்சி என ஒரு கொண்டாட்டமே நடக்கும்.
காதலர் தினத்திற்கு மட்டுமல்ல; மார்ச் மாதம் 8-ஆம் தேதி வரும் மகளிர் தினம், யோகா தினம், எழுத்தறிவு தினம், வனவிலங்கு தினம், நீர் தினம், அன்னையர் தினம், அப்பா தினம், நண்பர்கள் தினம், முதியோர் தினம் என ஆண்டுக்கு ஒரு நாள் அவர்களின் சிறப் பைச் சொல்லி கொண்டாடும்விதமாக அமைந்திருப்பது நமக்குத் தெரிந்திருக்கும்.
"அதெல்லாம் சரிங்க ஐயா, இதுபோல சோதிடர் தினம் என ஒன்றுள்ளதா?' என்று உங்களுக்கு யோசிக்கத் தோன்றும். அதை சொல்வதற்குதான் இந்த வார சிந்தனை.
பாரம்பரிய சோதிடம், பிருகு சோதிடம், நந்தி சோதிடம், சார சோதிடம், கைரேகை சோதிடம், எண் கணித சோதிடம், லால் கிதாப் என கிளி, முயல், மைனா என எத்தனையோ சோதிட முறைகளைச் சொல்கிறார் களே- இவையெல்லாம் உண்மையா? பிழைப்பு கருதி இப்படி செய்கிறார்களா என்று சிலருக்கு ஐயம் வருவது இயல்புதான்.
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள், பாரம்பரியமாக இருந்து தேயாமல் வளர்ந்துவரும் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம், மாற்று மருத்துவமான அலோபதி மருத்துவம், யுனானி மருத்துவம், அக்குபிரஷர் மருத்துவம், நேச்சரோபதி, யோக மருத்துவம், ப்ரானிக் ஹீலிங் என இன்னும் பிற மருத்துவ முறைகள் இருக்கின்றனவே. இவையெல்லாம் மக்கள் நலம்வாழ சொல்லப்படுகிறதா அல்லது பிழைப்பு கருதி இருக்கிறதா என்று உங்களுக்குள் கேட்டுப் பார்த்தால் சோதிடம் பற்றிய ஐயம் நீங்கும்.
எந்தத் துறையைச் சேர்ந்தவர்களும் சோதிடர்களைக் கண்டால் ஒரு கணம் மனதில் வணங்கி விட்டு தான் செல்வார்கள். வெளிப்படையாக இதனைச் செய்யாவிடி னும், மனதிற்குள் செய்வார் கள். இதுதான் உண்மை.
"சரி; இந்த சோதிடர் தினம் பற்றி சொல்லுங்க' என்று கேட்க வருகிறீர்கள்; புரிகிறது. சோதிடத்தின் தொடக்கம் பல நூற்றாண்டு களின் ஆழத்திற்குச் செல்கிறது, எனினும் காலச்சூழலுக்கேற்ப அவை மாற்றமும் பெற்றுவருகிறது என்பதை மறுக்கமுடியாது.
வாழ்க்கையில் ஒவ்வொரு அம்சத்தி லும் சோதிடம் இருக்கிறதென வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் எடுத்து சொல்கிறது "பாலஜோதிட' வார இதழ். இன்று சோதிடம் இல்லாமல் எந்தவொரு நபரும் தங்கள் வாழ்க்கையை கற்பனைகூட செய்து பார்க்கமுடியாது. யாரோ ஒருவர் ஜாதகத்தை நம்புகிறார்; யாரோ தொழில்ரீதியாக ராசி அறிகுறிகளுக்கு சோதிடக் கணிப்புகளைச் செய்கிறார்கள் என ஒவ்வொருவரும் ஒருவகையில் சோதிடத்தை பின்தொடர்ந்திருக் கிறார்கள்.
எங்கோ இருக்கும் ஒரு கிரகம் நம்மை எப்படி பாதிக்குமென்று சிலர் கேட்கிறார்கள்.
காலில் வலியென்றால் வாயில் மாத்திரை போடுகிறோம். காலுக்கும் வாய்க்கும் நான்கடி தூரமிருக்கிறதே என்று யோசித் துப் பார்ப்பதில்லை. அறிவியலார் சொன்னால் நம்புகிறார்கள். சோதிடர்கள் சொன்னால் கேள்வி கேட்கிறார்கள்.
புயல், வெள்ளம் வருமென வானிலை அறிக்கை சொல்வதை நம்புகிறார் கள். இதை சோதிடர்கள் முன்கூட்டியே கணித்து பஞ்சாங்கப் பலனாக சொன்னால் அதை ஏற்கத் தயங்குகிறார்கள். இந்த நிலை மாற ஒவ்வொருவரும் சோதிடர் தினத்தைக் கொண்டாடவேண்டும்.
உலக சோதிடர் தினம் மார்ச் மாதத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு மார்ச் மாதம் 20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சொல்லவேண்டுமென்றால், வசந்த உத்தராயனத்தில் கொண்டாடப்படுகிறது. புரட்டாசி மாதம் வரும் நவராத்திரிபோல, வசந்த நவராத்திரி என கோடையில் கொண்டாடும் பழக்கம் இந்து சமுதாயத்தில் உண்டு என்பதை பலரும் அறிந்திருப்பார்கள். அதுபற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் சிந்திப்போம். இந்த நாட்களில் பகல் மற்றும் இரவுப் பொழுது ஒரு கால அளவைக் கொண்டிருக்கும்.
இந்த நாட்கள் ஜாதகத்தின் புதிய சுழற்சியின் தொடக்கத்தைக் குறித்துக் காட்டுகிறது. அதாவது ராசி வட்டம் மார்ச் மாதத்தில் முதல் அடையாளம். மேஷம் சூரியன் அஸ்வினி நட்சத்திரத்தில் நுழையும் காலத்தை உலக சோதிடர் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பதை அறிவார்ந்த சமூகம் ஏற்றுக் கொள்ளும்.
இது ஒருசில நாட்கள் முன் அல்லது பின் வரலாம் என்பதால், பொதுவாக ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 20-ஆம் தேதி உலக சோதிடர் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
மனம் வருந்தி நிற்கும் ஒருவரை ஆற்றுப்படுத்தி, நல் ஆலோசனை சொல்லும் இந்த சோதிடக்கலை, தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் மட்டுமல்ல; ஒவ்வொரு சாதாரண குடிமகனுக்கும் ஒரு ஊன்றுகோல் என்றால் மிகையில்லை.
சரி; இந்த சோதிடர் தினத்தை எப்படிக் கொண்டாடுவதென்று உங்களுக்கு யோசனை வரலாம். சில கருத்துக்களைச் சொல்கிறோம். உங்களுக்கு ஏற்புடையதாக இருந்தால் அதை செயல்படுத்துங்கள்.
சிலர் தொழில்முறை சோதிடராக இருக்க லாம், சிலர் ஆர்வத்தின் அடிப்படையில் சோதிடம் பயின்று சொல்பவராக இருக்க லாம். யாராக இருந்தாலும், உங்களுக்கு இந்த கலையைக கற்றுக்கொடுத்த ஆசானை சந்தித்து வாழ்த்து பெறுங்கள். அவர் நினைவில் வாழ்ந்துகொண்டிருந்தால், அவர் நினைவாக சில மணித்துளிகள் தியானம் செய்யுங்கள்.
நீங்களே சொந்தமாக புத்தகத்தைப் பார்த்து சோதிடம் படித்தவர்கள் என்றால், நீங்கள் விரும்பிப்படித்த சோதிட நூல்களை வைத்து வணங்கி வழிபடுங்கள்.
டிசபெரேல்லோ, சீரோ என்ற எந்த நாட்டு சோதிட அறிஞராக இருந்தாலும், அவர்தம் புத்தகங்களை வைத்து வழிபடலாம்.
இந்த ஒரு நாள் மட்டுமாவது ஒருசில மணி நேரத்திற்கு கட்டணமில்லாமல் சோதிட ஆலோசனை சொல்லுங்கள். (முன்பதிவு பெறுதல், நேர மேலாண்மை குறைந்தபட்ச கேள்விகள் என உங்களை சுய மேலாண்மை செய்துகொள்வது உங்கள் பொறுப்பு.) சோதிட ஆசிரியராக இருந்தால் மாணவர் களுக்கு ஒரு தேர்வு நடத்துங்கள். ஒரு நிகழ்ச்சிபோல நடத்துங்கள். மாணவர் களுக்கு ஆளுமைத்திறனை வளப்படுத்த ஊக்குவியுங்கள்.
நாங்கள் சோதிடர்கள் இல்லை; ஆர்வலர்கள்தான் என்றால், உங்களுக்கு நம்பிக்கைக்குரிய சோதிடரை சந்தித்து வாழ்த்து பெறுங்கள். குறிப்பாக இந்த ஆண்டு பெண் சோதிடர்களுக்கு வண்ணத்துப் பூச்சி படம் அல்லது பொருள் என பரிசு கொடுங்கள். அடுத்த சில ஆண்டுகளில் வரக்கூடிய உணவுப் பிரச்சினைகளுக்கு இது பரிகாரமாக இருக்கும். அப்படியாரும் இதுவரை இல்லையென்றால் "பாலஜோதிடம்' இதழுக்கு வாழ்த்து சொல்லி ஒரு மின்னஞ்சல் அல்லது மெசேஜ் அனுப்புங்கள்.
ஒவ்வொரு சோதிடரும் தமது அனுபவம், பயிற்சி மற்றும் உள்ளுணர்வுகளின் வெளிப்பாடு ஆகியவற்றைச் சேர்த்து ஆலோசனை சொல்லும் உளவியலாளர். முடிவெடுக்கத் துணை நிற்கும் வழிகாட்டி. நன்மையும் தீமையும் கலந்ததுதான் வாழ்க்கை என்பதை எடுத்துச்சொல்லி பக்குவபடுத்தும் நல் மேய்ப்பர். சோதிட விதிகளை எடுத்துச் சொல்லி, அவரவர் தம் விதிப்பயன், கர்மவினைகளை சுட்டிக்காட்டி பிரச்சினைகளை எதிர்கொள்ள ஊக்குவிக்கும் ஙர்ற்ண்ஸ்ஹற்ர்ழ். எந்தவித நிபந்தனையுமின்றி உங்களுக்கு உதவும் ஆலோசகர். பணத்தை வாங்கிக்கொண்டு தானே பலன் சொல்கிறார் என்று வாதம் செய்யாமல், பணம் அவர் வாழ்க்கைத் தேவைக்கு; பலன் உங்கள் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு என்பதைப் புரிந்துகொண்டு, வாழ்த்துங்கள். நலமாக வாழ அவர்கள் வாழ்த்துவார்கள்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.