இன்றையநாளில் பெண்களும் சரி; ஆண்களும் சரி- முந்தைய நாட்கள்போல இருப்பதில்லையே என்று, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்கள் வருத்தமாகவோ, விவரம் தெரிந்து கொள்வதற்கோ சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாகரீகம் என்ற பெயரில் மாற்றங்கள் உடையிலும், உணவிலும், உணர்விலும், மக்கள் நம்பிக்கையிலும், வாழ்க்கை முறையிலும் வந்துகொண்டுதான் இருக்கிறது.
வெட்கப்படத் தெரியாத பெண்கள், வெட்கம்கெட்ட ஆண்கள் என பட்டியலிட்டுச் சொல்ல பல இருந்தாலும், எதற்காகத் திருமணம் செய்கிறோம் என்று தெரியாமலே, இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டத்தில், பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள் பலர். இயந்திரத்தனமாக எதையோ செய்துவிட்டு, குழந்தை வந்து விட்டதே என நினைத்தபடி, வாழ்க்கை அமையாதபோது மற்றும் பிரச்சினை என வரும்போது, சோதிடரைத் தேடி ஓடுவதும், தெரிந்தோ தெரியாமலோ குழந்தை பிறந்தபிறகு ஜாதகம், ராசியான பெயர் என்று தேடுவதும் இயல்பாகிவிட்டது.
பிறப்புக்கும் இறப்பும் இடைப் பட்ட கால அளவுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சொல்வதுதான் ஜாதகக் கட்டம்.
அப்படியானால் "இறப்புக்குப் பின்?' என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். (கண்ச்ங் ஹச்ற்ங்ழ் உங்ஹற்ட்). அது ஒரு தனி உளவியல் ஆராய்ச்சி. பேரா சைகாலஜி (டஹழ்ஹ டள்ஹ்ஸ்ரீட்ர்ப்ர்ஞ்ஹ்) எ
இன்றையநாளில் பெண்களும் சரி; ஆண்களும் சரி- முந்தைய நாட்கள்போல இருப்பதில்லையே என்று, சுமார் இருபது ஆண்டுகளுக்கு முன்பு பிறந்தவர்கள் வருத்தமாகவோ, விவரம் தெரிந்து கொள்வதற்கோ சொல்லிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
நாகரீகம் என்ற பெயரில் மாற்றங்கள் உடையிலும், உணவிலும், உணர்விலும், மக்கள் நம்பிக்கையிலும், வாழ்க்கை முறையிலும் வந்துகொண்டுதான் இருக்கிறது.
வெட்கப்படத் தெரியாத பெண்கள், வெட்கம்கெட்ட ஆண்கள் என பட்டியலிட்டுச் சொல்ல பல இருந்தாலும், எதற்காகத் திருமணம் செய்கிறோம் என்று தெரியாமலே, இயந்திரத்தனமான வாழ்க்கை ஓட்டத்தில், பணம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக்கொண்டு ஓடிக் கொண்டிருக்கிறார்கள் பலர். இயந்திரத்தனமாக எதையோ செய்துவிட்டு, குழந்தை வந்து விட்டதே என நினைத்தபடி, வாழ்க்கை அமையாதபோது மற்றும் பிரச்சினை என வரும்போது, சோதிடரைத் தேடி ஓடுவதும், தெரிந்தோ தெரியாமலோ குழந்தை பிறந்தபிறகு ஜாதகம், ராசியான பெயர் என்று தேடுவதும் இயல்பாகிவிட்டது.
பிறப்புக்கும் இறப்பும் இடைப் பட்ட கால அளவுதான் வாழ்க்கை. அந்த வாழ்க்கையின் நிகழ்வுகளைச் சொல்வதுதான் ஜாதகக் கட்டம்.
அப்படியானால் "இறப்புக்குப் பின்?' என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். (கண்ச்ங் ஹச்ற்ங்ழ் உங்ஹற்ட்). அது ஒரு தனி உளவியல் ஆராய்ச்சி. பேரா சைகாலஜி (டஹழ்ஹ டள்ஹ்ஸ்ரீட்ர்ப்ர்ஞ்ஹ்) என்று சொல்வார்கள். பூர்வ ஜென்ம புண்ணியம் பிறப்புக்கு மட்டுமா- இறப்புக்கும் தானே என்று இயல்பான அறிவுத் தேடலில் கேட்டுப் பாருங்கள்.
உண்மைதான். பிறப்பென ஒன்றிருந்தால் நிச்சயம் இறப் பென ஒன்று இருந்தே ஆகவேண்டும். கிறித்துவர்கள் வணங்கும் ஏசுவுக்கும் இதுதான்; வைணவர்கள் வணங்கும் வாசுவுக்கும் இதுதான் என்ற இயல்பான அறிவு சிந்தனை யில் பிறக்கும்போது, "ஜெனனி ஜென்ம சௌக்யானாம்...' என ஜாதகம் எழுதிப் பலனறிந்து கொள்ளும் பலரும், "உயிர் பிரிந்தபிறகு...' என்று சிந்திக்க முன்வருவதில்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது.
பிறப்பைப்போல இறப்பும் ஒரு நிகழ்வுதான் என்றாலும், அதுபற்றிய சில சிந்தனைகளை இந்த வாரம் சிந்திக்க எடுத்துக்கொள்வோம்.
பிறப்புக்குக் காட்டும் கவனத்தை பலரும் இறப்புக்குக் காட்டுவதில்லை. "இருந்தார்; இப்போ இறந்தார். அவ்வளவு தான். சரி விடுங்க; அடுத்த வேலையை கவனிப்போம்' என சென்றுவிடுகிறார்கள். இதனைப் பத்தாம் திருமுறையில் திருமூலர்-
"ஊரெலாங் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டுச்
சூரையங் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே'
என பாடியிருப்பார். ஒருவருக்கு மரண மென்பது ஏழு நிலைகளில் ஏற்படும்.
1. இயற்கையாக சம்பவிக்கும் மரணம்.
2. கொலையால் சம்பவிக்கும் துர்மரணம்.
3. தற்கொலையால் நிகழும் மரணம்.
4. விபத்தில் ஏற்படும் மரணம்.
5. கூட்டு மரணம் (ஙஹள்ள் உங்ஹற்ட்).
6. அரசு தண்டனையால் மரணம்.
7. மருத்துவ சிகிச்சையில் மரணம்.
மேற்கண்ட வகையில் ஒருவருக்கு மரணம் சம்பவிக்கும். சில குடும்பங்களில் சிலர் மறைவுக்குப்பிறகு ஏற்றம் வருவதும், சில குடும்பங் களில் சீற்றம் வருவதும் அவரவர் அனுபவத்தில் அறிந்துகொள்ளலாம்.
இப்போது சொல்லவருவது இதுதான். இந்த இறப்பு சடங்குகளை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது அல்லது கூடாது. சில சிந்தனைகளைச் சொல்கிறேன். அதை அவரவர் வாழ்க்கையில் இணைத்து சரி பார்த்துக் கொள்ளலாம்.
பிறப்புக்கு ஜாதகம் பார்ப்பதுபோல இறப்புக்கும் புண்ணிய சக்கரம் போட்டுப் பார்ப்பதுதான் வழக்க முறை. ஆனால் இன்றையநாளில் எத்தனைப் பேர் இதனைச் செய்கிறார்கள் என்று நினைக்கிறீர்கள்?
இன்னமும் சொல்வதென்றால், ஒருசில குறிப்பிட்ட நட்சத்திரத்தில் இறப்பது ஆகாது என்றும், அதை தனிஷ்டை என்றும் சொல்வார்கள். அதற்கு, குறிப்பிட்ட இத்தனை நாட்கள் அடைப்பு செய்யவேண்டுமென சொல்வார்கள்.
அதுசரி; இது எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்? அல்லது பரிகார முறைகளைச் செய்திருப்பார்கள் என்று நினைக் கிறீர்கள்?
சில சிந்தனைகளைச் சொல்கிறேன்; குறித்துக்கொள்ளுங்கள். தனிஷ்டை என்பது, அவிட்ட நட்சத்திரத்தில் தொடங்கி அடுத்த ஐந்து நட்சத்திரங்களில் மரணம் சம்பவித்தால், இந்த அடைப்பு அல்லது தனிஷ்டை முறையைக் கைக்கொள்ளவேண்டும்.
பிற மதங்களில் தீர்ப்பு நாள் என்று ஒன்று வரும். அதுவரை இறந்த உயிர்கள் கல்லறை யிலேயே இருக்கும். அந்த தீர்ப்புநாளில் நல்லதொரு தீர்ப்பை இறைவன் வழங்குவான் என்று சொல்லியிருப்பார்கள். அது சரியா தவறா என்று சொல்வது நமது நோக்கமல்ல.
ஆனால் இந்து மதத்தில் அப்படியில்லை. இறந்த உயிருக்கு உடல் கிடைத்த அடுத்த வினாடியே பிறந்துவிடுமென்று சொல்லியிருப்பார்கள். அதில்தான் இந்த தனிஷ்டா பஞ்சமி முக்கியத்துவம் பெறுகிறது. அவிட்ட நட்சத்திரத்தை முதலாகக்கொண்டு, சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்தும்தான் பஞ்சாங்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள தனிஷ்டா பஞ்சமிக்கான நட்சத்திரங்களாகும். அந்த சோதிடப் பாடலை உங்களுக்குத் தருகிறேன். இது எளிய பாடல்தான். விளக்கம் தனியாகத் தரத் தேவையில்லையென விட்டுவிடுகிறேன்.
"இறந்துவிட்டால் வீட்டை அடைக்க நாளைக் கேளாய்
இயல்பான அவிட்டமோடு சதயம் பின்னும்
சிறந்த உத்திரட்டாதி பூரட்டாதி
செப்பிடும் ரேவதியோடு ஐந்து நாளது
திறந்து சொல்வேன் தனிஷ்டா பஞ்சமியே யாகும்
சீரில்லாத இன்னாளில் இறப்பாராகில்
பிறந்த வோரைந்து நட்சத்திரத்திற்கும்
பெலமாக வீட்டை அடைக்க நாளைக் கேளே!'
இதில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் அடைக்கவேண்டிய நாட்களும் வழிமுறைகளும் உண்டு. இதேபோல வேறு எட்டு நட்சத்திரமும் உண்டென்றாலும், இந்த ஐந்து நட்சத்திரத்தில் ஏற்படும் மரணத்திற்கு முறையான செயல்பாடுகளைச் செய்யவில்லை யென்றால் அந்த குடும்பத்தில் வரக்கூடிய சிக்கல்களைத் தனியாக இன்னொரு கட்டுரை யில் சிந்திப்போம்.
இதேபோல இறந்த உயிர்கள் அடையும் கதியையறிய புண்ணிய சக்கரம் போட்டுப் பார்த்து பலனறிதலும், குறைந்தபட்சம் பிரசன்னம் போட்டுப்பார்த்துப் பலனறிவதும் அவசியம். ஆனால் நம்மவர்கள், "இருந்தவர்தான் போய்விட்டாரே, அவர் எப்படிப் போனால் என்ன?' என, அவருடைய சொத்துகளை எப்படி மாற்றிக்கொள்வது அல்லது அதை என்ன செய்வதென யோசிக்கிறார்களே தவிர, இருப்பவர்களுக்கு காட்டும் அக்கறை இறந்த பிறகு அந்த உயிர்களுக்குக் காட்டுவதில்லை என்பதுதான் வருத்தமான விஷயம். இதனால் வரும் நிம்மதியிழப்பு, தொடர் அல்லது திடீர் மரணம், அபிசார தோஷங்கள், ஆவி பிடித்தல் என சொல்லொணா துயரங்கள் அல்லது தொழில், பொருள் சார்ந்த கஷ்டங்கள் வரும்போது சோதிடர்களை சந்தித்து பரிகாரம், பிராயச்சித்தம் என தேடுகிறார்கள். அதுபற்றிய சிந்தனைகளை இன்னொரு வாய்ப்பில் வைத்துக்கொள்வோம்.
இறப்புக்குப்பின் என்ற இந்த அடிப்படைச் செய்திகளை மனதில் வாங்கிக்கொண்டு, நாம் நலமாக வாழ, வாழ்ந்தவர்களையும் நன்றியுடன் வாழவைப்போம் என சிந்தித்தால் வளமான வாழ்க்கை நிம்மதியாக அமையும்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172