"பரிகாரங்கள் என்றால் என்ன?' என தொடங்கியதுமே, "சார், பரிகாரமா? கொஞ்சம் இருங்க. இதோ வந்துடறேன்' என்று சொல்லிட் டுப் போகிறவர்கள்தான் அதிகமாக இருப் பார்கள். ஏனென்று கேட்டால், "இதுவரை நான் செய்யாத பரிகாரம் இல்லை. ஆனால் பாருங்க பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கல்லை' என்பர். இன்னும் சிலர், "பிரச்சினை தீரதான் பரிகாரம் செய்கிறோம். ஆனால் பாருங்க... இப்போ பிரச்சினை பூதாகாரமா வந்து நிற்கிறது. எனக்கு நம்பிக்கையே போச்சு சார்' என்று குறைபட்டுக் கொள்வார்கள்.
உண்மையில் பரிகாரங்களைச் சொல்லும் போதும், அதைச் செய்யும்போதும் கவனிக்க வேண்டியவை சில உள்ளன.
சமூக வலைப்பதிவு, இலவசமாகக் கிடைக் கும் சானல் என ஏகப்பட்டது இப்போது கையடக்கப் பெட்டியில் கிடைக்கிறது.
அவரவர் படித்ததையோ, மற்றவர்கள் படைத்த தையோ பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள்.
அதை சரியென்றோ தவறென்றோ சொல்ல வில்லை. மாறாக பரிகாரம் என்பதும் அதன் நிலை குறித்தும் மட்டுமே சிந்திக்க எடுத்துக் கொள்வோம்.
மணி, மந்திரம், ஔஷதம் என்று சொல்வதை நீங்களும் கேட்டிருக்கலாம். மணி என்பது சில வழிபாட்டு சாதனங்களை யும், மந்திரம் என்பது சில சொற்கள், வாக்கியங் கள் எனவும், பீஜ ஒலி சேர்த்து அல்லது சேர்க்காமல் என சிலவற்றைச் சொல்வதும், ஔஷதம் என்பது மருந்து என்றும் பொதுவாகச் சொல்வார்கள்.
இந்த மந்திரத்தை இத்தனை முறை சொல்லவேண்டும்; இந்த வேர்களைத் திரியாக்கி விளக்கேற்றவேண்டும் என்பர். சில கனிகளில் தீபமேற்றுதல், பூசணிக்காய், தேங்காய் என விளக்கேற்றுவது, எள்ளுப் பொட்டல விளக்கு, வெண் கடுகு விளக்கு, அடுத்தவர் ஏற்றிய விளக்கில் இவர்கள் ஏற்று வது என சொல்ல நிறைய இருக்கின்றன. இன்னும் சில இடங்களில் இத்தனை விளக் கேற்றினால் இன்ன பலன் என எழுதிப்போட்டு வியாபாரம் செய்துகொண்டிருப்பார்கள். இத்தனையும் திருக்கோவில்களில் ஆங்காங்கே நடைபெறுவதை நாமும் பார்த்துக் கொண்டிருப்போம்.
ஆனால் இவற்றை செய்யலாமா கூடாதா என்று எப்போதாவது நம்மில் எத்தனை பேர் சிந்தித்திருப்போம்?
எல்லாரும் நன்றாக வளமைபெற்று வாழவேண்டும் என்னும் ஆவல் இயல்பானதுதான். அது அவர்கள் உரிமையும்கூட. அந்த உரிமையைக் கேட்டுப்பெற நினைக் கும் நம்மில் எத்தனை பேர் கடமை செய்திருப்போம் என்று மனசாட்சியைத் தட்டிக் கேட்டுப்பாருங்கள்.
ஆனால், பிரச்சினைகள் வரும்போது, அதை எதிர்கொள்ள பயந்து தப்பித்துக் கொள்ள அல்லது வேறு முறைகளைத் தேடி ஓடி ஒளியதான் பலரும் நினைக்கிறார்கள். நாம் செய்த கர்மவினைதானே என்று எத்த னைப் பேர் முதிர்ச்சியுடன் இருக்கிறார்கள்?
"நன்றாம்கால் நல்லவாக் காண்பவர்
அன்றாம்கால் அல்லல் படுவது எவன்.'
என திருவள்ளுவர் நமக்கு இடித்துக் காட்டியபிறகும் இதை சிந்திப்பவர்கள் உண்டோ?
புத்தகத்தை பார்த்து பரிகாரம் செய்வது, இலவச சானல்களில் சொல்வதைக் கேட்டு செய்வது என்பதெல்லாம், உடல்நலம் சரியில்லையென்றால் மருத்துவரை சந்திக்காமல், மருந்துக் கடையில் மாத்திரை வாங்கி சாப்பிடுவது போன்றது. சிலருக்குக் கேட்கலாம்; சிலருக்கு அது வேறுமாதிரி அமையலாம்.
உடற்கூறு முறை ஒன்றாக இருந்தாலும், அதன் செயல்பாடு நமது வாழ்க்கை முறைக் கேற்ப நிச்சயமாக மாறுபடும் என்பதை மறுப்பவர் இருக்கமுடியாது அதுபோலதான் பரிகார முறைகளும். இந்த பரிகாரம் இந்த குலத்திற்கு- இந்த ஜாதகருக்குப் பொருந்துமா என்று ஆய்வுசெய்த பிறகே அனுபவமிக்க சோதிடர் சொல்வார்.
பொதுவாக சொல்லக்கூடிய இறைவழிபாட்டு முறையை யாரும் சொல்லலாம். அதை யாரும் செய்யலாம் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது.
ரிஷிகள் சொன்ன வழிமுறைகளைப் பின்பற்றி செய்வது ஹோமம் செய்தல், யாகம் செய்தல், நெருப்பிலிடுதல் அல்லது நீரில் கரைத்தல் என்பதுபோல இருக்கும். சித்தர்கள் சொல்வதைப் பார்த்தால் மூலிகைச் செடிகள் வழியாக பூசைகள் இருப்பதுபோல இருக்கும். இதில் இதுதான் சரி அல்லது அதுதான் சரி என்று வாதம் செய்யக்கூடாது. நமது ஜாதகக் கட்டத்தில் ஏற்புடைய கிரக நிலைக்கேற்ப உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் சொல்வதைப் புரிந்துகொள்வதுபோல இருக்கவேண்டும்.
எப்படி ஒருவர் 100 சதவிகிதம் நல்லவரும் இல்லை; 100 சதவிகிதம் கெட்டவரும் இல்லை என்பதை நடைமுறையில் தெரிந்து கொள்கிறோமோ, அதுபோலதான் வினைப் பலன்களும், அவற்றை சரியான விகிதத்தில் கலந்துதான் இறைவன் ஆணையிட்டிருப் பார். அந்த ஆணையை நவகிரகங்கள் செயல் படுத்தும். அதனால் ஒரு கிரகம் நல்லது மட்டுமே செய்யுமென்றோ தீயதை மட்டுமே செய்யுமென்றோ சொல்லிவிடக்கூடாது. சுப கிரகம் குருவால் வரும் தீமையுமுண்டு; பாவ கிரகம் சனியால் வரும் நன்மையையுமுண்டு.
தமிழால் முடியாதது எதுவுமில்லை. மூவர் முதலிகள் தமிழில் ஒரு பாட்டுப்பாடி மூடிய கோவில் கதவுகளைத் திறந்திருக்கிறார் கள்; இறந்துபோனவர்களை உயிருடன் மீட்டுப் பெற்றிருக்கிறார்கள். தமிழ்க்கிழவி ஔவையார் பட்டுப்போன பலாமரத்தை ஒரு செந்தமிழ்ப் பாட்டுப் பாடி மீட்டுத் தந்திருக்கிறார்.
இராப்பத்து உற்சவத்தில் பெருமாள் பாசுரம் செவிமடுக்கும் சடங்கு இன்றும் நடைபெறுவதை நாமறிவோம். சைவக் கோவில்களில் வடமொழி பூசனைகள் இருந்தாலும், பஞ்ச புராணம் பாடாமல் பூசைகள் அங்கே முழுமையடைவதில்லை என்பதை நாமறிவோம்.
நமது பரிகார முறைகள் தமிழ்வழிப் பாடலாக இருக்கும். சில வழிபாட்டு முறைகளாக இருக்கும், உணவுப் பழக்கமாக இருக்கும். உணர்வுமுறை மற்றும் ஒழுக்க நிலைகளாக இருக்கும். இதுபோல அவரவர் ஒருசில முறையைக் கைக்கொண்டிருப்பார்கள் என்பதைப் புரிந்துகொண்டு, அவர்கள் அப்படி சொல்கிறார் களே- இவர்கள் இப்படி சொல்கிறார்களே என்று உங்கள் இயலாமைக்கு காரணம் சொல்லிக் கொண்டிராமல், உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் சொல்வதைக்கேட்டு செயல்படுங்கள்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172