"ஹாப்பி பொங்கல்.!' என்று தொலைபேசியில் சொல்லிவிட்டு ஒருவர் பேசத் தொடங்கினார்.
"பொங்கல் என்றாலே ஹாப்பி தானே...' என்றபடியே அவரிடம் பேசிக் கொண்டிருந்தபோது, "ஐயா, எனக்கொரு சந்தேகம்' என்று ஆரம்பித்தார்.
"பொங்கல் என்பது அரிசியையும் வெல்லத்தையும் சேர்த்துப்போட்டு, நெய் விட்டு இறக்கி வைத்தால் பொங்கல். சுவைக் காக கொஞ்சம் ஏலக்காய், பச்சைக் கற்பூரம், முந்திரி, பாதம் என தட்டிப் போடுவார்கள். அவ்வளவுதானே... எப்போது வைத்தாலும் பொங்கல் இவ்வளவுதானே! இதற்கு ஏன் இவ்வளவு கொண்டாட்டம்? சமைப்பதற் கும் சாப்பிடுவதற்கும் என இதற்கெல்லாம் ஒரு பண்டிகையா என்று யாராவாது கேட்டால், பதில் சொல்லத் தெரிய வேண்டாமா? இதற்கும் சோதிடத்திற்கும் தொடர்புண்டா? சோதிடரீதியாக விளக்கம் தரமுடியுமா?' என கேட்டார்.
இந்த பண்டிகையை தமிழகத்தில் அழைக்கும் பெயர் "பொங்கல்'தான். பிற மாநிலங்களில் "மகர சங்கராந்தி' என்றும், "உத்தராயணம்' என்றும், "பிகு' என்றும், "லோஹரி' என்றும், "சட்' என்றும் அவரவர் வழக்கப்படி அழைத்துக் கொண்டாடு வார்கள்.
இயற்கைக்கு நன்றி சொல்லும் பண்டிகை யென்று கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் சொல்வார்கள். "என்னவோ தட்டில் பொங்கல் என ஒரு இனிப்பை வைத்து தருகிறீர்களா... சரி; சாப்பிட்டுவிட்டுப் போங்க சார். இதுக்குப் போய் இம்புட்டா' என்று கிண்டல் செய்தபடி சொல்பவர்களும் இருக்கதான் செய்கிறார்கள்.
இவர்கள் சொல்வதுபோல இயற்கைக்கு நன்றி சொல்வதென்றால் ஏன் தை மாதம் சொல்லவேண்டுமென்று கேட்டால் அவர் களிடம் பதில் இருக்காது.
"என்னிக்கு குக்கரில் வைத்தாலும் அரை மணி நேரத்தில் பொங்கல் ரெடி, இதுக்கு ஏன் இப்படி ஒரு கொண்டாட்டம்' என வாழ்க்கையின் விரக்தியில் இருப்பவர்களும் சொல்லத்தான் செய்வார்கள்.
"சரி; பொங்கல் திருவிழாவை நாம மட்டும் கொண்டாடாமல், போகியில் தொடங்கி, மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என நான்கு நாட்கள் லீவு விட்டால், நம்மகிட்ட வேலை செய்கிறவர்கள், ஊருக்குப் போன வர்கள் இன்னும் மூன்று நாட்கள் சேர்த்து லீவு எடுத்துக்கிட்டு, ஒரு வாரம் மட்டம் போட்டுவிடுவார்கள்' என்று, மாற்று மதத் தைச் சேர்ந்த முதலாளிகள் புலம்புவதையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
இந்த பொங்கல் திருநாளை சோதிடப் பார்வையில் கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கலாமா?
எல்லா கிரங்களுமே குறிப்பிட்ட நாட்களில் பெயர்ச்சியடையும் என்பது சோதிட ஆர்வலர்களுக்குத் தெரிந்திருக்கும். இதில் பலருக்கும் தெரிந்தது குருப்பெயர்ச்சியும், சனிப்பெயர்ச்சியும். அண்மைக்காலமாக சர்ப்ப கிரகப் பெயர்ச்சியும் மக்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது.
இதில் குரு ஆண்டுக்கொரு முறையும், சனி இரண்டரை ஆண்டுக்கு ஒருமுறையும், ராகு- கேது பெயர்ச்சி ஒன்றரை வருடத்திற்கு ஒருமுறையும் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்கு இடம்பெயர்வதைதான் கிரகப் பெயர்ச்சியென்று சொல்வார்கள். இதில் ராகு- கேது மட்டும் இடமாக (ஆய்ற்ண்ஸ்ரீப்ர்ஸ்ரீந் ஜ்ண்ள்ங்) பெயர்ச்சியடையும் என்ற கால அளவினை சோதிட சாத்திரம் சொல்கிறது.
இதேபோல நவகிரங்களின் தலைமை கிரகமான சூரியன் ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாகும் கால அளவு ஒரு மாதம். மேஷத்தில் (சித்திரையில்) தொடங்கி, ஒவ்வொரு ராசியாக பெயர்ச்சி யாவதை ஒவ்வொரு மாதமாக வைத்துச் சொல்வதுண்டு.
அதில் சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சியாகும் காலம் தை மாதமாகும். அதனால்தான் மகர சங்கராந்தி என்று தை மாதத்தில் இந்த பொங்கல் திருவிழா. "அதுக்கு பொங்கல் வேற வைக்கவேண்டுமா?' என்று கேட்கவருகிறீர்கள்; புரிகிறது.
இன்றையகால இளைய தலைமுறையைச் சேர்ந்த குடும்பத் தலைவிகள், மேலைநாட்டு நாகரீகத்தில், விரித்த கூந்தலும், ஜீன்ஸ் பேன்ட் என்றும் தன்னை வேறுவிதமாக அடையாளம் காட்டுபவர்கள், பொங்கல்கூட செய்யத் தெரியாமல், கடையில் வாங்கிக் கொண்டாடும் சூழலையும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.
நமது வாழ்க்கை முறைப்படி, ஒவ்வொரு மாதப் பிறப்பின்போதும், பொங்கல், பாயசம் இப்படி வைப்பதுதான் பழக்கம். அவுங்க அவுங்களுக்கு சர்க்கரை என்பதால், காபியில்கூட ஒரு கல்லு கட்டியை- அதாங்க நஜ்ங்ங்ற்ய்ங்ழ் போட்டுக் குடிக்கும் இன்றையநாளில், மாதம் ஒரு ஸ்வீட் என்றால் அவ்வளவுதான்.
செய்வது யார்? சாப்பிடுவது யார்? அப்புறம் டாக்டரிடம் ஓடுவது யார் என்று அந்த பழக்கத்தை மறந்தேவிட்டார்கள். பொங்கலை மட்டுமாவது செய்து சாப்பிடுகிறார்களே என்று சந்தோஷபடுங்கள்; அவ்வளவுதான்.
சரி; ஒவ்வொரு மாதப் பிறப்புக்கும் எதற்கு பொங்கல், பாயசம் என இனிப்பு செய்யவேண்டு மென்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும். உண்மைதான்.
பிறந்தநாள் என்றால் ஒரு டப்பாவில் சாக்லேட் போட்டு குழந்தைகளை எல்லாருக்கும் கொடுக்கச் சொல்கிறோமே.. ஏனென்று எப்போதாவது யோசித்துப் பார்த்ததுண்டா? இனிப்பைக் கொடுத்து வரவேற்பதென்ற மரபு தொன்றுதொட்டு இருந்துவரும் வழக்கம்.
உளவியல்ரீதியாக சொல்லவேண்டுமென் றால், இனிப்பு மனநிலையை மாற்றியமைக்கும் தன்மையது. இதில் சோகத்திலிருந்து சுகத்துக்கு அழைத்துச் செல்லும் ஒரு மனவியல்ரீதியான உத்தி; அவ்வளவுதான்.
ஒரு ராசிக்கு சூரியன் வரும்போது, கிரங்களின் தலைமை கிரகமான சூரியனுக்கு இனிப்பைத் தந்து வரவேற்பது நம்முடைய கலாச்சார மரபாக இருந்துவந்தது. வந்துகொண்டு இருக்கிறது; இன்னமும் வரும்.
அதற்குப் பொங்கலைதான் செய்ய வேண்டுமா? வேறுசில இனிப்புகளை செய்யக் கூடாதா என்று உங்களுக்குக் கேட்கத் தோன்றும்.
சரிதான்.
மற்ற இடங்களிலுள்ள கோவில்களில் நவகிரங்கள் ஆளுக்கொரு திசையில் இருக்கும். ஆனால், ஆலயங்களின் அணிவகுப்பாகத் திகழும் திருச்சி மாவட்டம், வயலூர் முருகன் கோவிலில் நவகிரங்கள் அனைத்தும் சூரியனைப் பார்த்தபடி இருக்கும்.
திருச்சி மாவட்டத்தின் ஒரு பகுதியான உறையூர் பற்றிய குறிப்புகள் குறுந்தொகை, நற்றிணை, அகநாநூறு போன்ற சங்க இலக்கியங் களில் காணப்படுகின்றது.
முருகப்பெருமானின் பெருமை சொல்லும் ஆலயமாக இது இருந்தாலும், தொடக்கநாளில், இது சிவாலயமாகவே இருந்தது என்கிறது தலவரலாறு.
காலமறியா காலத்தில் காட்டு விலங்குகளை வேட்டையாடச்சென்ற ஒரு சோழமன்னன், இங்கிருந்த கரும்பு ஒன்றை ஒடிக்க வாளால் வெட்டினான். அப்போது ஒடிந்த கரும்பிலிருந்து ரத்தம் வடிந்தது. இதனால் பதறிய சோழன் வயலைத் தோண்டிப் பார்க்க, அங்கே ஈசன் லிங்கமேனியாகக் காட்சியளித்தான். அங்கேயே அவருக்கு ஓர் ஆலயம் எழுப்பி, ஆதிநாதர் என்ற திருநாமமிட்டு வணங்கினான் என்று சொல்லப்படுகிறது.
இங்குள்ள ஆதிநாதர் தம்மை நாடிவரும் பக்தர்கள் கேட்பதை மறக்காமல் கொடுப்ப தால் மறப்பி- நாதர் என்ற திருநாமமும் உண்டு.
இங்கு அம்பிகையின் திருநாமம் ஆதிநாயகி.
"ராஜ கெம்பிர நாடாளு நாயக வயலூரா'
என்னும் அருணகிரிநாதர் திருப்புகழ் இத்தலத்தின் சிறப்பைப் பறைசாற்றும்.
நவகிரங்களில், தலைமை கிரகமான சூரியனை எல்லா கிரகங்களும் வழிபடும் இதுபோன்ற அமைப்புள்ள திருத்தலங்கள் திருச்சி மாவட்டத்திலேயே வேறு சில இடங்களிலும் இருக்கிறதென்றாலும், இந்த தலத்தை உங்களுக்கு சொல்வதற்காகதான் இத்தனையும் சொல்லும்படியானது.
பொங்கலில் அரிசி, வெல்லம் என்பது குரு- சந்திர யோகத்தைப் பெறுவதற்காக. இந்த யோகம் அமைந்தால் செல்வம், செல்வாக்கு, புகழ் தேடிவரும் என்பதை சோதிட ஆரவலர் கள் அறிவார்கள். கஜகேசரி, சகட யோகம் எல்லாம் சோதிட அன்பர்களுக்கு சொல்லா மலே விளங்கும்.
ஏலக்காய், கிராம்பு நெய் போன்ற வாசனை திரவியங்கள், சுக்கிர அம்சம் கொண்டவை. இது சேரும்போது, பொங்கல் சுவையாக இருப் பதுபோல, வாழ்க்கை சுவையாக அமைந்து விடும்- அமைந்துவிட வேண்டும் என்ற நம்பிக்கை.
அதனால்தான் ஒவ்வொரு சங்கராந்தியின் போதும், பொங்கல் வைத்து கொண்டாடுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். ஒவ்வொரு வழிபாட்டு முறையிலும், இந்து வாழ்க்கை முறையிலும் ஒரு சோதிடக் குறிப்பு உள்ளது என்பதைப் புரிந்துகொண்டால் வாழ்க்கையிலுள்ள சுமை குறைந்து சுவை கூடும்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172