எப்படியோ ஒரு வழியாக சனியார் பெயர்ச்சி வந்தேவிட்டது. எந்த தொலைக்காட்சி சானலைத் திருப்பினா லும் சனிப்பெயர்ச்சிப் பலன்கள் என்று சொல்லாமல் விடுவதில்லை. அதிலும் இந்த ராசிக்கு நல்லது என்று ஒருவர் சொன்னால், இன்னொரு கண்ணோட்டத் தில் இப்படி இருக்கவேண்டிய அவசிய மில்லையென்று இன்னொரு சேன-ல் சொல்கிறார்கள்.
இன்னும் சிலர், "இந்த ராசிபலன் ஒரு குறிப்பிட்ட அளவில்தான். மற்றபடி உங்கள் பிறப்பு ஜாதகத்தை வைத்துதான் பலன்சொல்ல வேண்டும்' என்று சொல்கிறார்கள்.
முட்கிரீடம் சுமந்து சிலுவையில் மரித்த ஏசுநாதரானாலும் சரி; ஈரேழு ஆண்டுகள் வனவாசம் சென்ற இராமனா னாலும் சரி என்று நிறைய கதைகளைச் சொல்லலாம். "நடப்பதுதானே நடக்கும்' என்பதைக் கொஞ்சம் இடைவெளிவிட்டு சொல்-ப் பாருங்கள். "நடப்பது, தானே நடக்கும்.' மற்றது உங்களுக்கே புரியும்.
இந்த சனியார் பெயர்ச்சியும் மற்ற கிரகப் பெயர்ச்சிகளும் இந்துக்களுக்கு மட்டும்தானா? மற்ற மதத்தினார்களுக்கு இல்லையா என்ற சந்தேகமும், இந்து மதத்தில் மட்டும்தான் அது இது என பரிகாரம் சொல்றாங்களே- மற்ற மதத்தினர்களுக்கு இதுபோல எதுவுமே இல்லையா? இந்த கிரகங்கள் எல்லாம் இந்துக்களை மட்டும்தான் பாதிக்குமா என்று சிலருக்கு சந்தேகம் வரலாம்.
காலையில் உதிக்கும் சூரியன் மாலையில் மறைவதென்பது எல்லா மதத்தினருக்கும் ஒன்றுதான். அவரவர் இருப்பிடத்தையொட்டி உதிக்கும் அல்லது மறையும் நேரம் மாறலாமே தவிர, உதிப்பதும் பின் மறைவதும் இயல்பானதே. அதில் மாற்றமில்லை. மத வேறுபாடுமில்லை.
எந்த மதத்தினராக இருந்தாலும் அன்பு ஒன்றுதான் பிரதானம். அன்பு வேண்டாமென்று சொல்லக்கூடிய மதம் ஒன்றைச் சொல்லுங்கள் என்று கேட்டுப்பாருங்கள்- ஒருவரும் பதில்சொல்ல முன்வர மாட்டார்கள். அந்த நிலையில் அல்லது செயல் முறையில்தான் மாற்றம் வருமே தவிர அன்பொன்றே பிரதான மென்பதை விலங்குகளிட மிருந்துகூட கற்றுக்கொள்ள முடியும்.
அதுபோலதான் கிரகங் களும். அவரவர்களுக்கிட்ட வேலைகளை அவர்கள் சரியாகச் செய்வார்கள். மாற்று மதத்தினர் சோதிடம் பார்க்க வரும்போது, அவர்கள் மனதைப் புண்படுத்தாத வகையில், அவர்கள் சமய வழிபாட்டு முறைகளைச் சொல்- நல்வழிப்படுத்த வேண்டு மென்பதுதான் சோதிடர்களின் அடிப்படைக் கடமை.
சனியார் பெயர்ச்சி பற்றிய சிந்தனைக்கு வரலாம். சனியார் பெயர்ச்சியினுடைய தாக்கமும் பாதிப்பும் எல்லா மதத்தினருக்கு மட்டுமல்ல; இது பற்றிய நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் உண்டு. இதில் துளியும் மாற்றுக் கருத்தில்லை. அவர்கள் பிரச்சினை வரக்கூடிய சூழலாக இருந்தால் அதை சந்திக்கத் தயாராக இருப்பார்கள். அல்லது ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பார்கள் என்றுதான் சொல்லவேண்டும்.
அப்படியென்றால் பரிகாரங்கள் செய்வதால் இந்தத் தாக்கம் குறையுமா என்று கேட்கவருகிறீர்கள்; புரிகிறது. பரிகாரங்கள் செய்வதும், செய்யமாட்டார்கள் என்று சொல்வதும் ஜாதகத்தில் சொல்-விட முடியுமென்றால் இந்த கேள்விக்கான பதில் உங்களுக்கே கிடைத்திருக்கும்.
லாபச் சனி, கர்மச் சனி, அஷ்டமச் சனி, கண்டகச் சனி, ரோகச் சனி, அர்த்தாஷ்டமச் சனி, ஜென்மச் சனி, விரயச் சனி என்று எந்த நிலையிலிருந்தாலும், உரியவர்களுக்குரிய அந்தப் பலன்கள் கிடைத்தே தீரும்.
இந்துக்கள் மட்டுமல்ல; மற்ற மாற்று மதத்தினர்களுக்கும் சொல்லக்கூடிய எளிமையான பரிகாரங்களை, பலமுறை சொல்-யிருக்கிறோம்.
சரி; எல்லாரும் பயன் படுத்தி சனியார் பெயர்ச்சி தாக்கத்தி-ருந்து சிரமங்களை எதிர்கொண்டு வெற்றிபெறக் கூடிய எளிய பரிகாரம் ஒன்று சொல்லவா? இதை எந்த மதத்தினரும் செய்யலாம். மதம், கடவுள், சோதிடம் என நம்பிக்கை இல்லாதவர்களும் செய்யலாம். இது சுலபமானதுதான்.
உங்களுக்கு வசதியான ஒரு சனிக்கிழமையில், சனி ஓரையில், முள்செடி ஒன்றை நட்டுவிடுங்கள். அடுத்த சனியார் பெயர்ச்சியில் வெட்டிவிடலாம்; தவறில்லை.
நகரத்தில் வாழ்பவர்கள், அடுக்குமாடிக் கட்டடத்தில் வசிப்பவர்கள் இதுபோல செய்யமுடியாதென்று வருத்தப்படத் தேவை யில்லை. இவர்கள் ஈஹஸ்ரீற்ன்ள் என்று சொல்லகூடிய ஒருவகை கள்ளிச் செடியை வீட்டின் ஓரத்தில் வைத்து வளர்த்தால் போதும்.
முந்நூறுவிதமான கள்ளிச்செடிகள் இருக்கின்றன. உங்கள் ஜாதகத்தில் சனியார் அமைந்திருக்கும் இடத்தைப் பொருத்து, எந்த கள்ளியை வாங்கவேண்டுமென உங்கள் அருகிலுள்ள- உங்களுக்கு நம்பிக்கைக் குரிய ஜோதிடரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.
எங்கள் வீட்டில் ஏற்கெனவே அழகுக்காக இதுபோன்ற செடிகளை வளர்க்கிறோமே என்று சொல்பவர்கள், இன்னொன்றைத் தனியாக வைத்து வளர்க்கலாம்; தவறில்லை. ஒவ்வொருவருக்கும் கிரக பாதிப்பில்லாமல் இருக்க, ஒவ்வொருவரும் தனித்தனியாக எங்கே வேண்டுமானாலும் வைத்து வளர்க்கலாம். படுக்கையறையில் மட்டும் வைத்துக்கொள்ளாதீர்கள்.
இந்த Cactus வகையைப் பராமரிக்கத் தேவையில்லை. தானே வளரும். தண்ணீர்கூட தினமும் தரத் தேவையில்லை. நவகிரகங்களிலேயே ஒரு ராசியிலிருந்து இன்னொரு ராசிக்குப் பெயர்ச்சியாக அதிக நாட்கள் எடுத்துக் கொள்ளும் கிரகம் சனியார்தான் என்பது சோதிட அன்பர்களுக்குத் தெரியும்.
அதுபோல சுமார் ஒரு இன்ச் வளர்வதற்கு இந்த Cactus-க்கு சுமார் ஒன்றரை வருடங்களாகும் என்றால், இதை ஏன் சனிப்பெயர்ச்சிக்குப் பரிகார மாகச் சொல்லப்பட்டது என்று உங்களுக்குத் தெரிந்திருக்கும்.
இந்த முள்ளிச் செடிக்கு முக்தி கொடுத்த வரலாறு சைவ அன்பர்களுக்குத் தெரிந்திருக்குமென்பதால் அதை விளக்கிச் சொல்ல வில்லை.
உங்கள் ஜாதகத்தில் சனியார் இருக்கும் நிலை, இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களுக்குக் கிடைக்கக் கூடிய பலனை வைத்து Cactus வகைகளை, திறமை யும் அனுபவமுமுள்ள சோதிடர்கள் உங்களுக்குத் தேர்வுசெய்து தருவார்கள்.
நல்ல பலன் கிடைத் தாலும், கெடுபலன் அமையும் சூழலிருந் தாலும் எல்லாருமே வாங்கி வைக்கக்கூடியது பென்சில் Cactus தான். இதில் முள்கூட ஷார்ப்பாக இருக்காது. இது பூக்காது; காய்க்காது; இலைகூட கொடுக்காது என்பதைப் புரிந்துகொண்டு, விமானப் பயணத்தில் Turbulance என சொல்லும்போது, பெல்ட் மாட்டிக்கொள்வதுபோல, இந்த சனிப்பெயர்ச்சியை வெற்றிகொள்ளுங்கள்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172