"வீடு வாங்கலையோ வீடு...' என கூவி விற்குமளவுக்கு வீடுகள் மலிந்துகிடக்கின்றன. அதை வாங்க பல வங்கிகள் போட்டி போட்டுக் கொண்டு கடன்தர முன்வந்து நிற்கின்றன.

ஏரிகள் எல்லாம் "ஏரியா'வாகப் போய் விட்டன. நீர்நிலைப் பகுதிகளெல்லாம் மக்கள் குடியிருப்புப் பகுதிகளாகிவிட்டன.

ஆறு, தாங்கல், கேணி என முடியும் பல பகுதி கள் இப்போது குடியிருப்புப் ப்குதிகாளாகி விட்டன. இதுபோன்ற இடங்களை அடை"யாறு', ஐயப்பன் "தாங்கல்' ஈக்காட்டுத் "தாங்கல்', திருவல்லிக்"கேணி' என சென்னையைச் சுற்றியே நிறைய காட்டமுடியும். இவையெல்லாம் ஒரு காலத்தில் நீர்நிலைப் பகுதிகளாக இருந்தவைதான்.

"தவணையில் வாங்கிக்கோங்க.. எலி வளையானாலும் தனி மனை. என்ன சம்பாதிச்சு என்ன சார்... ஒதுங்க ஒரு கூரை வேண்டாமா?' என ஆளுக்கு ஆள் நம்மை வீடு வாங்கத் தூண்டுவார்கள். "உங்கள் கனவு இல்லம்' என முக்கியமான நிகழ்ச்சி யில் விளம்பரம் கொடுத்து ஆசை யைத் தூண்டுவார்கள்.

Advertisment

இன்னமும் திருமணமாகாத இளைஞர்களிடையே, "ஒரு குடை இருந்தால்தான் கல்யாணமே ஆகும்' என்ற போலியான ஒரு மாயையில் வீடு வாங்க... ம்ஹூம்... கடன் வாங்க வைத்துவிடுவார்கள்.

"இருபது முதல் முப்பது வருடம் நிரந்தரக் கடன்காரனாக இருக்க யாராவது விரும்பு வார்களா' என்று ஒரு நிமிடம் உங்களைக் கேட்டுப்பாருங்கள்; உங்களுக்கே புரியும்.

இன்னும் மனை விற்பவர்கள், "இங்கே வாங்குங்க சார். பெரிய பஸ் ஸ்டாண்டு வரப்போகுது; மெட்ரோ ரயில் வருது; விமான நிலையம் வரப்போகுது. அந்தப் பக்கம் காலேஜ், இந்தப் பக்கம் ஏடிஎம்' என்று எதையெல்லாமோ சொல்லி, ஐந்து வருடத்தில் இரண்டு மடங்காகும் என்று நம்மை நம்பவைத்து தலையில் கட்டிவிடுவார்கள்.

Advertisment

ss

ஐந்து வருடத்தில் இரண்டு மடங்காகும் என்றால் அதை அவர்களே வைத்துக்கொண்டு ஐந்து வருடத்திற்குப்பிறகு விற்று அதிக லாபம் சம்பாதிக்கலாம்தானே என்று கேட்டுப் பாருங்கள்... அவர்கள் அருகே வரமாட்டார்கள்.

வீட்டுக்கடன் வாங்கினால் வருமானவரிச் சலுகை கிடைக்கும்; அரசுதரும் வட்டி மானியம் கிடைக்குமென்று தம்மாத்துண்டு மானியம் அல்லது வரி கட்டுவதற்காக இம்மாம் பெரிய கடனை நம் தலையில் கட்டிவிடுவார்கள்.

வீட்டுக்குப் போடுகிற முதலீட்டை- அது மாதாந்திர தவணையாக இருந்தாலும் சரி- அதைவைத்துக் கணக்கிட்டுப் பார்த்தால், லாபம் இருக்காது அல்லது வங்கியில் கிடைக்கும் வட்டியைவிட குறைவாக அல்லது மிக சொற்பமான லாபமே கிடைக்கும்.

அந்தப் பணத்தை வேறு நல்ல இடத்தில் முதலீடு செய்தால், பணப் புழக்கமும் இருக்கும்; பண வளர்ச்சியும் இருக்கும்.

"அதெல்லாம் சரிதாங்க.. ஆனாலும் சொந்தமா வீடு இருந்தாதான் குடும்பத்தில மதிப்பாங்க' என்று சிலர் தெரிந்தோ தெரியாமலோ, இதுபோன்ற கடனில் மாட்டிக்கொண்டு, சிலந்தி வலையில் விழுந்த ஈபோல வெளியே பறந்துவர முடியாமல் தன் உழைப்பு, நேரம், சம்பாத்தியம் அனைத் தையும் தியாகம் செய்வார்கள். மாடிவீட்டு ஏழைபோல வாழ்வார்கள்.

ஒரு சிறிய அளவிலான வீட்டில், தன் கடன் அடையும்வரை முப்பது வருடம் வாழவேண்டுமென்று சொன்னால் எப்படி என்று யோசித்துப் பார்த்தால், நமக்கு வீடு வேண்டுமா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துவிடும்.

பிதுரார்ஜித சொத்து- அதாங்க மூதாதையர் சொத்து என்றால் வேண்டாமென்றா சொல்வார்கள். அதுசரி; "அப்படின்னா ஜாதகப்படி வீடுவாங்கும் யோகமிருந்தால் வேண்டாமென்றா சொல்வது?' என்று நீங்கள் கேட்கவருவது புரிகிறது.

ஜாதகப்படி நான்காம் வீடு அல்லது அந்த வீட்டின் அதிபதி செவ்வாய் மற்றும் சனி இப்படி இருந்தால் வீடு யோகம் அமையுமென்பது பொதுவான விதிதான். இதில் சுக்கிரன் வந்துவிட்டால் அடுக்குமாடி வீடு, சந்திரனுடன் பலமாக சேர்ந்துவிட்டால் உயர் அடுக்குமாடி என சொல்லிக்கொண்டு போகலாம்.

ஜாதகத்தில் நான்காம் மற்றும் பதினொன் றாம் வீடுகளுக்கிடையே தொடர்பிருந்தால் ஒன்றுக்கும் மேற்பட்ட வீடுகள் இருக்க வாய்ப்புள்ளது. இதுபோன்ற அமைப்புள்ள நபர்கள் ரியல் எஸ்டேட் தரகர்களாகக்கூட இருக்கலாம்.

சிலர் வீட்டுக்குள் நுழைந்ததும் சந்துபோல நீளமாக போனபிறகு வீடு அமையும். இவர்களுக்கு கேது குடும்ப ஸ்தானத்தில் இருக்கும்.

வீடு வாங்கும் யோகம் மட்டும் இருந்தால் போதுமா? சௌபாக்கியம் வேண்டாமா? யோகமிருந்தாலும் நட்புகிரக சேர்க்கை பெற்றிருந்தால், சாதகமான சூழலில் சோதிடப்படி அமைந்தால் அது ஏறுமுகமாக இருக்கும்.

சிலருக்கு அரசுவீடுகள் அமையும்.

அவர்களுக்கு சூரியன் நான்காம் வீட்டில் அல்லது நான்காம் வீட்டின் அதிபதியின்மீது தனிச் செல்வாக்கு பெற்றிருக்கும்.

இதேபோல பங்களா வீடு, பக்கத்தில் யாருமில்லாத- எந்த குடியிருப்புமில்லாத தனிமையான இடத்தில் வீடு என கூரைவீடுமுதல் அடுக்குமாடி வீடுவரை சொல்லிவிடலாம்.

"செவ்வாய், சனி எல்லாம் சரி; இந்த நான்காம் வீட்டில் ராகு வந்து அமர்ந்துவிட்டால்?' என்று கேட்க யோசிக்கிறீர்கள்; புரிகிறது.

நான்காம் வீட்டில் மட்டுமல்ல; நான்காம் வீட்டின் அதிபதியுடன் தொடர்புபெற்றால் கூட எதிர்பாராதவிதமாக அவர்களுக்கு வீடு அமைந்துவிடும். அதுபோன்ற அமைப் புள்ளவர்கள் அடிக்கடி வீட்டைப் புதுப்பித்தல் அல்லது பழுதுபார்த்தல் என செலவு செய்துகொண்டே இருப்பார்கள்.

சொந்த வீடோ வாடகை வீடோ- ஒருவரின் வசிப்பிடம் எப்படியிருக்கிறது என்று ஜாதகத்தைப் பார்த்து சொல்லிவிடலாம்.

"எல்லாத்தையும் சொல்லிட்டீங்க ஐயா. ஆனா பாருங்க... இப்போ வீடு வாங்கணுமா- வேணாமா என ஒரே குழப்பமா இருக்கு...' என்று கேட்கிறீர்களா?

ஜாதகரீதியில் பதில் சொல்லவேண்டு மென்றால் கிருஹ யோகம் அமையும் போது வீடு அமைந்துவிடுமென்று சொல்லி விடலாம். பொருளாதாரரீதியில் சொல்ல வேண்டுமென்றால் அதற்கு ஒரு பட்ன்ம்க்ஷ தன்ப்ங் எர்ழ்ம்ன்ப்ஹ இருக்கிறது. அதைப் போட்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கேள்விக்கான விடைகிடைக்கும்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172