"புத்தாண்டுப் பலன்கள், சனிப் பெயர்ச்சிப் பலன்கள் என திரும்பிய பக்கமெல்லாம் செய்திகளாக இருக்கி றதே... இதுபோன்ற பலன்களை உங்கள் பார்வையில் சொல்லவேண்டும்' என சில அன்புள்ளங்கள் குறுஞ்செய்தி அனுப்பிக் கேட்டுக்கொண்டனர்.
எல்லாரும் சொல்லும்போது, நாமும் இதுபோல சொல்லவேண்டுமா என யோசித்துக் கொண்டிருந்தபோது, "பங்குச்சந்தை பற்றி அவ்வப்போது Impressive பதிவுகள் போடுகிறீர்கள். கிறிஸ்துமஸுக்கு பங்குச்சந்தை குறையும் என்று Crystal Clear ஆகச் சொன்னீர்கள். யாரும் எதிர்பாராதவகையில் 1,000 புள்ளி கள் சரிந்து சந்தை வீழ்ச்சிகண்டது. அதனால் இந்தப் புத்தாண்டில், இந்த ராசிக்கு இந்தப் பலன் என சொல்லாமல், பங்குச்சந்தை எப்படியிருக்குமென்று சொல்லுங்களேன்' என மும்பையிலிருந்து ஒரு அன்பர் கேட்டுக்கொண்டார்.
பஞ்சாங்கத்தைப் பார்த்து, தமிழ்ப் புத்தாண்டின்போது கந்தாயப் பலன் சொல்வதுபோல இந்த 2023-ஆம் ஆண்டு பங்குச்சந்தை எப்படியிருக்கும் என, மும்பை அன்பரின் அன்புக் கட்டளையை ஏற்று, அவருக்கு சொல்வதுபோல "பாலஜோதிடம்' வாசகர்களுக்கும் சொல்லலாமென்று தோன்றியதுதான் இந்த வாரப் பதிவு.
அடுத்த மாதம் பட்ஜெட், அதைத் தொடர்ந்து தேர்தல் என வரிசைகட்டி நிகழ்வுகள் இருந்தாலும், ஒரு முதலீட்டாளர் என்றவகையில் பங்குச்சந்தையைக் கணிப்பதில் எல்லாருக்கும் உரிமையுண்டு. அதில் தவறில்லை என்றாலும், பங்குச் சந்தை பற்றிய இந்தக் குறிப்புகள் சோதிடப் பார்வையிலான சிந்தனையே தவிர, இந்த பங்குகளை வாங்குங்கள் அல்லது விற்று விடுங்கள் என்று ஆலோசனை சொல்லும் தகவல் அல்ல.
அதுபோல ஆலோசனை சொல்லும் "செபி' பதிவுபெற்ற ஆலோசகரும் அய்யர் இல்லை என்பதை மனதில் குறித்துக்கொண்டு, தொடர்ந்து படியுங்கள்.
பங்குச்சந்தையில் பயன்படுத்தும் (Technical jargon) சொற்களை முடிந்த அளவு எளிதில் புரியும்படி தர முயற்சி செய்துள்ளேன். சந்தை யில் உள்ளவர்களுக்கு இது புரியும். மற்றவர்கள் இதைத் தெரிந்துகொள்வதும் தவறில்லை. அறிவுக்குத் திரைபோடலாமா என்ன?
இந்த பங்குச்சந்தை குறிப்புகளுக்கு நாம் வரிசைப்படுத்தி வைத்துக்கொள்ளும் கிரகங்கள் ராகு, புதன் மற்றும் சந்திரன்தான் என பலமுறை முன்பே சொல்லியிருக்கிறேன்.
இந்த அடிப்படையில் ஜனவரி 1-ஆம் தேதி மும்பையை இடமாக வைத்து கோட்சாரத்தை வைத்துக்கொண்டு, சில பொதுவான குறிப்புகளைச் சொல்லவரும் பதிவுகள்தான் இவை.
இதில் சொன்னபடி சந்தை நிலவரம் அமைந்துவிட்டால், உங்கள் முதுகில் தட்டிக்கொள்ளுங்கள். அப்படி இல்லையென் றால், இது முயற்சிதான்; நாம் இன்னும் பயிற்சிபெறவேண்டுமென்று, பாசிடிவ் கோணத்தில் எடுத்துக்கொள்ளுங்கள். ஏனென்றால் பங்குச்சந்தையை யாராலும் கணிக்கமுடியாதென்பது பொதுவிதி.
சரி; சிந்தனைக்கு வருவோம்.
குறிப்பிட்டபடி கோட்சாரத்தில், அன்றைய நட்சத்திரம் கேதுவின் நட்சத்திரமான அஸ்வினி. கேதுவின் இயல்பான காரகத்துவமே ஒன்றையழித்து, ஒன்றைத் தருவதென்பது. சோதிட அன்பர்களுக்குத் தெரிந்திருக்கும். வளர்ச்சிக்கு ஏதுவாக இருக்கக்கூடிய கிரகமென்பதால் இது கேது என பெயர் பெற்றதோ என்று நாம் அடிக்கடி சொல்வதுண்டு.
பங்குச்சந்தைக்கு ராகு என்றுதானே சொல்வீர்கள்? இப்போது கேதுவைப் பற்றிச் சொல்கிறீர்களே என்று நீங்கள் கேட்கவருவது புரிகிறது.
சாதத்திற்கு தொட்டுக்கொள்ள ஊறுகாய் வேண்டும். அதற்காக ஊறுகாயையே சாப்பிடமுடியாது என்பதுபோல இதைப் புரிந்துகொண்டால், சொல்லவரும் செய்தி சொல்லாமலே புரியும்.
இந்த கோட்சாரப்படி, மீன குருவைத் தொடர்ந்து ரிஷபச் செவ்வாய்வரை நமக்குத் தேவையான கிரகங்கள் வரிசைகட்டி நிற்கின்றன. இதில் சர்ப்ப கோணத்தில் புதனும், புதன் கோணத்தில் சந்திரனும் இருக்கிறது என்னும் இயல்பான நிலையினைப் புரிந்துகொண்டு, இந்த ஆண்டு பங்குச்சந்தை எப்படியிருக்குமென்ற குறிப்புக்குள் போகலாம்.
இந்த ஆண்டு சோதிடப் பார்வையில், இரண்டு முக்கிய நிகழ்வுகள் இருக்கின்றன. ஒன்று, எல்லாரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்- அடுத்த சிலநாட்களில் வரக்கூடிய சனிப்பெயர்ச்சி. மற்றொன்று, இந்த ஆண்டின் பிற்பகுதியில் வரவிருக்கிற சர்ப்பகிரகப் பெயர்ச்சி. இதையும் மனதில் நிறுத்திக்கொண்டு, சந்தை நிலவரத்தை சிந்தித்தால், சொல்லவரும் விஷயங்கள் உங்களுக்கு எளிதில் மனதில் பதியும்.
கும்பத்திற்கு வரும் சனியின் மூன்றாம் பார்வை மேஷத்திலுள்ள ராகுவில் பதிகிறது. கோட்சாரத்தின்படி சந்திரன் சர்ப்பத்துடன் இருப்பதாலும், இந்த ஆண்டின் முற்பகுதியில், பங்குச்சந்தை மிகுந்த யர்ப்ஹற்ண்ப்ங் என்று சொல்லும் நிலையற்ற தன்மையையும், மிகுந்த ஏற்ற- இறங் கங்களையும் கொண்டிருக்கும்.
குறிப்பாக, வருவாயைவிட கடன் அதிகமாகவுள்ள குறிப்பிட்ட "அந்த' நிறுவங்களின் பங்குகள் எதிர்பாராத சரிவைநோக்கிச் செல்லும். அந்த பங்குகள், இப்போது வேகமாகவும் குறைந்த நாட்களில் உச்சத்திற்கும் சென்றிருக்கும் பங்குகள்தான் அவை.
அந்த பங்குகளில் முதலீடு செய்திருப்ப வர்கள் அல்லது தங்கள் Portfolio-வில் Hold-ல் வைத்திருப்பவர்கள் தலையில் கையை வைத்துக்கொள்வதைத் தவிர வேறுவழி இல்லையென்ற நிலையிலிருக்கும். அப்படியா.. சரி; எல்லாவற்றையும் விற்றுவிடலாமா என்று கேட்காதீர்கள்.
அது எந்த பங்குகள் என சொல்லுங்கள் என கேட்கவரும் உங்கள் ஆர்வம் புரிகிறது. அதை வெளிப்படையாக சொல்லக்கூடாது என்பது ஒருபுறமிருக்க, நீங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங் களின் தணிக்கை அறிக்கை, ஐந்தொகைக் கணக்குகள் ஆகியவற்றை வாங்கிப் படியுங்கள். ஆய்ஹப்ஹ்ள்ங் செய்துபாருங்கள்.
அது தொடர்பான விவரங்கள் பல இணைய தளங்களின் கிடைக்கிறது. அதை எடுகோளாக வைத்துக்கொண்டு சரிபார்த்துக் கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களுக்கும் பயிற்சி கிடைக்கும்.
நீங்கள் இன்று சம்பாதிக்க வேண்டுமென்பது நமது நோக்கமல்ல. தொடர்ந்து சம்பாதிக்க வேண்டுமென்பதுதான் விருப்பம்.
ஒன்றிரண்டு மாங்காயை மரத்திலிருந்து பறித்துக் கொடுப்பதைவிட, உங்களுக்கு மரமேறக் கற்றுக் கொடுத்துவிட்டால் வருமானமும் ஏறுமல்லவா என்ற சிந்தனையை கவனத்தில் கொண்டால் சொல்லவரும் விஷயம் புரிந்துவிடும்.
Mid Cap மற்றும் Small Cap நிறுவங்களின் பங்குகள் எதிர்பாராத அபரிமிதமான வளர்ச்சியைத் தொட்டுச்செல்லும் என்றாலும், எதிர்பாராத நிலையில் சரிவையும் காணும். ஸ்டீல் மெட்டல், கேளிக்கை மற்றும் கல்விதரும் நிறுவங்களின் பங்குகள் ஆரோக்கியமான வளர்ச்சியைப் பெறும். தனியார்துறை வங்கிப் பங்குகள் கைகொடுக்கும்.
கொரோனா அலை எங்குமிருக்கிறதே-
மருத்துவ நிறுவனங்களின் பங்குகள் எப்படியிருக்கும் என நீங்கள் யோசிப்பது புரிகிறது. இப்போதைக்கு அந்தப் பக்கம் எதிர்பார்க்கும் பலனைத் தரப்போவதில்லை என்பதுதான் குறிப்பு.
"நாங்கள் இந்த ரிஸ்க் எல்லாம் எடுப்பதில்லை. "நிப்டி' மட்டும்தான்... அது எப்படியிருக்கும்?' என்று கேட்கவரும் உங்களுக்கான குறிப்பு இதுதான். இப்போது 18,000-த்தின் விளிம்பில் இருக்கும் நிப்டி இன்னும் குறைந்து 16,000-த்தைக்கூட தொட்டுவிடும்.
"அச்சச்சோ... அவ்வளவுதானா இந்த ஆண்டு பங்குச்சந்தை?' என பயப்படவேண்டாம். ஜூலைமாத பிற்பகுதியிலிருந்து, எவ்வளவு வேகமாக பந்து கீழே எறியப்படுகிறதோ அவ்வளவு வேகமாக மேலே உயரும் என்பதுபோல, சந்தை இந்த ஆண்டிலேயே பிற்பகுதியில், படுவேகமாக உயரும். இது சர்ப்ப கிரகப் பெயர்ச்சியை ஒட்டி நிகழும்.
மொத்தத்தில் மிகுந்த ஏற்ற- இறக்கம் கொண்டு விளங்கும் இந்த ஆண்டு சந்தை, முதல் எட்டு மாதங்கள் நிலையற்ற தன்மையிலும், அடுத்த நான்கு மாதங்களில் கணிசமான லாபத்தையும் பெற்றுத்தரும். புத்திசாலித் தனமாக விளையாடுபவர்கள் கணிசமான லாபத்தைப் பெறலாம்.
"ஆகா, அய்யர் சொல்லிவிட்டார்' என்றிருக்காமல், நீங்கள் பங்குச்சந்தையில் குளித்து முத்தெடுப்பது உங்களின் முழுமை யான பொறுப்பென்பதை எப்போதும் மனதில் நிறுத்திவையுங்கள்.
இவை கோட்சார அடிப்படையில் சொல்லப்பட்ட குறிப்புகள்தான். இவற்றுடன் உங்களின் பிறப்பு ஜாதகத்தை வைத்து, உங்கள் நிலையை நீங்கள் கணித்துக்கொள்ள தரப்பட்டதுதான் இந்த சிந்தனை.
என்னிடமுள்ள பற்றாக்குறை பணமல்ல; நேரம்தான். அதைப் புரிந்துகொண்டு, நீங்கள் கேட்கவரும் விஷயங்களை "பாலஜோதிட'த் திற்கு எழுதிக் கேளுங்கள். மின்னஞ்சல் அனுப்புங் கள். தொலைபேசி தொடர்பைத் தவிருங்கள் என அன்பு வேண்டுகோளைப் பதிவு செய்கிறேன்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172