"எங்கேயோ என்னவோ நடப்பது நம்மை எப்படிங்க ஐயா பாதிக்கும்?'' என்று சிலர் பொதுவாகக் கேட்பது வழக்கம்தான். ஆனால் பாருங்கள்... எங்கேயோ இடி இடிக்கிறது. அதன் சத்தம் நமக்கு காதில் கேட்கிறது. சிலசமயம் பயமாகக்கூட இருக்கிறது.
பக்கத்து வீட்டில் தீப்பிடித்தால் நமக்கும் பயமாகத்தானே இருக்கும்? கொரோனா காலத்தில் பக்கத்து வீட்டில் தட்டி கட்டி நோட்டீஸ் ஒட்டியதும் நமக்கு பயமில்லாமலா இருந்தது... யோசித்துப் பாருங்கள்.
"அப்படின்னா இந்த கிரகப் பெயர்ச்சி கூட அப்படியா?' என்று கேட்க வருகிறீர்கள்... புரிகிறது. இதில் கூடுதலாக சில செய்திகள் உள்ளன.
அவற்றை சரியாகப் புரிந்துகொள் ளுங்கள். அதாவது அதிசாரப் பெயர்ச்சி-
ஒரு ராசிக்கு குறிப்பிட்ட கால அளவுக்கு முன்பாகவே செல்வது. இயல்புப் பெயர்ச்சி- இது சரியான கால அளவில் இடம்பெயர்வது. வக்ரப் பெயர்ச்சி- இது ஒரு ராசிக்குப் பின்னோக்கிச் செல்வது. இப்படிதான் இந்த ஆண்டு சனி அடுத்த சில மாதங்களில், அதிசாரப் பெயர்சியாக பயணிக்கவிருக்கிறது.
ஒன்பது கோள்களில் தலைமைக் கோளாகச் சொல்லப்படும் சூரியன், மாதத்திற்கு ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குப் பயணப்
"எங்கேயோ என்னவோ நடப்பது நம்மை எப்படிங்க ஐயா பாதிக்கும்?'' என்று சிலர் பொதுவாகக் கேட்பது வழக்கம்தான். ஆனால் பாருங்கள்... எங்கேயோ இடி இடிக்கிறது. அதன் சத்தம் நமக்கு காதில் கேட்கிறது. சிலசமயம் பயமாகக்கூட இருக்கிறது.
பக்கத்து வீட்டில் தீப்பிடித்தால் நமக்கும் பயமாகத்தானே இருக்கும்? கொரோனா காலத்தில் பக்கத்து வீட்டில் தட்டி கட்டி நோட்டீஸ் ஒட்டியதும் நமக்கு பயமில்லாமலா இருந்தது... யோசித்துப் பாருங்கள்.
"அப்படின்னா இந்த கிரகப் பெயர்ச்சி கூட அப்படியா?' என்று கேட்க வருகிறீர்கள்... புரிகிறது. இதில் கூடுதலாக சில செய்திகள் உள்ளன.
அவற்றை சரியாகப் புரிந்துகொள் ளுங்கள். அதாவது அதிசாரப் பெயர்ச்சி-
ஒரு ராசிக்கு குறிப்பிட்ட கால அளவுக்கு முன்பாகவே செல்வது. இயல்புப் பெயர்ச்சி- இது சரியான கால அளவில் இடம்பெயர்வது. வக்ரப் பெயர்ச்சி- இது ஒரு ராசிக்குப் பின்னோக்கிச் செல்வது. இப்படிதான் இந்த ஆண்டு சனி அடுத்த சில மாதங்களில், அதிசாரப் பெயர்சியாக பயணிக்கவிருக்கிறது.
ஒன்பது கோள்களில் தலைமைக் கோளாகச் சொல்லப்படும் சூரியன், மாதத்திற்கு ஒரு ராசியிலிருந்து அடுத்த ராசிக்குப் பயணப்படுவதைதான் மாதப் பிறப்பென்று சொல்கிறோம். மகர ராசியில் சூரியன் பிரவேசிக்கும் நாளைதான் மகர சங்கராந்தி அல்லது தைப் பொங்கல் என்று சொல்வார்கள். மேஷ ராசியில் சூரியன் பிரவேசிப்பதை சித்திரை என்றும் தமிழ் வருடப் பிறப்பு என்றும் கொண்டாடுகிறோம்.
இந்த கிரகப் பெயர்ச்சிபற்றி இந்த வாரம் முக்கியமாக சொல்லவருவது என்னவென்றால், ஆனியும் பங்குனியும் தான். அதிலென்ன விசேஷமென்று கேட்கிறீர்களா?
நாம் வாழ ஒரு இடம் தேவை. அது வாடகைவீடாக இருந்தால் என்ன? கல்லைக் கொண்டு கட்டிய சொந்தவீடாக இருந்தால் என்ன?
"இப்போ எங்கே சார் கல்லைக்கொண்டு கட்டடம்? எல்லாம் ரெடிமேட் வீட்டிற்கு (டழ்ங்ச்ஹக்ஷழ்ண்ஸ்ரீஹற்ங்க் ஐர்ன்ள்ங்) மாறியாச்சு' என்று சொல்ல வருகிறீர்கள். சரிதான். காலச் சூழலுக்கேற்ப நாமும் மாறிக்கொள்ள வேண்டியது தான்.
வாழும் இந்த வீடு மாறுவதை இந்த வாரம் சிந்திக்கலாம்.
"ஆனி அடியிடேல்', "குனி குடிபுகேல்' என்பது சோதிடப் பழமொழி. இதில் சொல்லவருவது, ஆனி மாதம் கடைக்கால் தோண்டக்கூடாது; கட்டட வேலை தொடங்கக்கூடாது. பங்குனி மாதம், கிரகப் பிரவேசம் போன்ற புதுமனைப் புகுதல் அல்லது வாடகை வீடாக இருந்தால் இடம் மாறுதல் கூடாது என்பதுதான். "இதெல்லாம் பழமொழி; அதைத் தூக்கி ஓரமாக வையுங்கள்' என்று யாராவது சொன்னால், அவர்களுக்குதான் இந்த வார சிந்தனை.
அடிப்படையில் இரண்டு சோதிட விஷயத்தைத் தெரிந்துகொள்வோம். ஒன்று கோணம். இது 1, 5, 9-ஆம் வீடுகள் என்பது நமக்குத் தெரிந்திருக்கும். இதில் அறம், பொருள், இன்பம், வீடு என்று நான்கு கோணங்களைக் கருத்தில் கொண்டு சிந்திக்கவேண்டும்.
மற்றது கேந்திரம். இது 1, 4, 7, 10-ஆம் வீடுகள் என்பதை நாமறிவோம். கேந்திரம் என்றால் இடம். இதில் ஆக்கல் (1, 4, 7, 10), காத்தல் (2, 5, 8, 11), அழித்தல் (3, 6, 9, 12) என்பதைக் கருத்தில்கொண்டு சிந்திக்க வேண்டும்.
கேந்திரத்தில் ஆக்கல் என்பது மேஷம் (1), கடகம் (4), துலாம் (7), மகரம் (10) ஆகிய ராசிகளையும்; காத்தல் என்பது, ரிஷபம் (2), சிம்மம் (5), விருச்சிகம் (8), கும்பம் (11) ஆகிய ராசிகளையும்; அழித்தல் என்பது மிதுனம் (3), கன்னி (6), தனுசு (9), மீனம் (12) ஆகிய ராசிகளையும் குறிக்குமென்று எடுத்துக் கொள்வோம்.
இதில் அழித்தல் என்ற வரிசையில் வரும் ராசிகளில் சூரியன் பிரவேசிக்கும் காலம், மிதுனம்- ஆனி, கன்னி- புரட்டாசி, தனுசு- மார்கழி, மீனம்- பங்குனி என்பதை சொல்லா மலே புரிந்துகொள்ள முடியுமல்லவா?
ஆக, அழித்தல் தொழிலைக் குறிக்கும் ஆனி, புரட்டாசி, மார்கழி, பங்குனி மாதங்களில் புதியதாக ஒன்றைத் தொடங்காமலிருப்பது நல்லது என்பதைதான் நமக்கு சொல்லித் தந்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்டால் நன்மையே விளையும்.
ஒரு அழித்தல் நடக்கக்கூடிய இடங்களில், ஒன்றை ஆக்க நினைப்பது அறிவுள்ள செயலல்ல. எனவே ஆனி மற்றும் பங்குனி மாதங்களில் வீடுகட்ட கடைக்கால் போடுவதோ, கிரகப்பிரவேசம் செய்வதோ கூடாது என்பதைப் புரிந்துகொள்வது நல்லது. "மீறிச்செய்தால், அது விருத்தியடைவதற்கு பதிலாக அழிவுக்கு இட்டுச்செல்லும்' என்பது எதிர்மறையாக உள்ளதால், மறைமுகக் குறிப்பால் இப்படிச் சொல்லியிருக்கிறார் கள்.
சோதிடத்தில் நான்காம் பாவகம் வீடு, மனை பற்றிக் குறிக்கும். இதில் காலபுருஷ ராசியான மேஷத்திற்கு நான்காம் பாவகம் கடகம். இந்த கடகத்திற்கு 12-ஆம் வீடு மிதுனமல்லவா?
இதில் கடகம் ஆக்கல் தொழிலைக் குறிக்கும் ராசி. மிதுனம் அழித்தல் தொழிலைக் குறிக்கும் ராசி.
எந்தவொரு பாவகத்திற்கும் அதன் 12-ஆம் பாவகம் விரய பாவகம் என்ற அடிப்படையில், ஆக்கல் ராசியான கடகத்திற்கு விரய பாவகமாக மிதுனம் என்ற அழித்தல் ராசி அமைவதால், சூரியன் மிதுன ராசிக்கு வரும் ஆனி மாதத்தில் வீடுகட்ட கடைக்கால் போடக்கூடாது. இதைத் தான் "ஆனி அடியிடேல்' என்று பழமொழி யாகச் சொல்லி வைத்திருக்கிறார்கள்.
இதேபோலதான் பங்குனி மாதத்திற்கும் என்பதை உங்கள் சிந்தனைக்கே விட்டு விடுகிறேன்.
ஒரு ஜாதகத்தில் கும்பத்தில் கேது இருந்தால் அவர்கள் வீடு சந்துக்குள் இருக்கும் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம். என்றா லும், வீடு என்பது வாழுமிடம். அது சிறப்பாக இருந்தால் மட்டுமே நிம்மதியுடன் மகிழ்ச்சிபொங்க வாழமுடியும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
கல்லும் மண்ணும் கலந்த கட்டடத்தில் வாழ்வது இருப்பிடமாக இருக்கலாம். ஆனால் அன்பும் பாசமும் கலந்த இடம்தான் வாழ்விடம். அங்கேதான் மகிழ்ச்சியும் வளமும் பொங்கிப் பெருகும்.
உங்கள் நம்பிக்கைக்குரிய சோதிடர் உங்களுக்கான காலத்தையும், சுப காரியங்கள் செய்யும் நாளையும் குறித்துத் தருவார்.
உங்களை வெளிச்சத்திற்கு அழைத்துச் செல்வார்.
நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும்.
தொடரும்..
செல்: 99443 27172