இப்போது பாருங்கள். பெண்கள், ஆண்களைப்போல உடை போடுகிறார்கள். ஜீன்ஸ், டீ- ஷர்ட், லெக்கின்ஸ்- இப்படி பெயர் தெரியாத எத்தனையோ உடைகள். அதுசரி என இருந்தால் பெண்களைப்போல ஆண்கள் காதில், மூக்கில் என நகை போடுகிறார்கள். ஆக, ஆணாகவுமில்லை; பெண்ணாகவுமில்லை.
இந்தப் பக்கம் பார்த்தால் இறந்த வீட்டிற்கு ஒப்பாரிக்கு செல்வதுபோல தலையை விரித்துக்கொண்டு எங்கும் திரிகிறார்கள். இதுபோல தலையை விரித்துக்கொண்டு இருப்பவர்களை, திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரியார், "விரித்த குஞ்சியர்'- அரக்கியர்கள் என்று சொல்வார்.
முன்பெல்லாம் வெளிநாட்டிலிருந்து வரும் ஏர் இந்தியா போன்ற விமானங்களில், பணிப்பெண்கள், சேலை கட்டிதான் சேவை செய்வார்கள். இந்தியர்களின் கலாச்சாரம் என்று காட்டுவதற்கு.
இப்போதும்கூட பாருங்கள்- சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பெண்கள் தங்கள் அணிந்திருக்கும் உடைக்குமேல் சேலை கட்டிக்கொண்டு வருவதை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
எது வாழ்க்கை என தெரியாமலே எதையோ நினைத்து, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியாக வாழ்கிறோமென போலியாகக் காட்டிக்கொண்டு கைநிறைய மாத்திரை, பைநிறைய கடன் அட்டைகள், உடம்பெ
இப்போது பாருங்கள். பெண்கள், ஆண்களைப்போல உடை போடுகிறார்கள். ஜீன்ஸ், டீ- ஷர்ட், லெக்கின்ஸ்- இப்படி பெயர் தெரியாத எத்தனையோ உடைகள். அதுசரி என இருந்தால் பெண்களைப்போல ஆண்கள் காதில், மூக்கில் என நகை போடுகிறார்கள். ஆக, ஆணாகவுமில்லை; பெண்ணாகவுமில்லை.
இந்தப் பக்கம் பார்த்தால் இறந்த வீட்டிற்கு ஒப்பாரிக்கு செல்வதுபோல தலையை விரித்துக்கொண்டு எங்கும் திரிகிறார்கள். இதுபோல தலையை விரித்துக்கொண்டு இருப்பவர்களை, திருச்செந்தூர் திருப்புகழில் அருணகிரியார், "விரித்த குஞ்சியர்'- அரக்கியர்கள் என்று சொல்வார்.
முன்பெல்லாம் வெளிநாட்டிலிருந்து வரும் ஏர் இந்தியா போன்ற விமானங்களில், பணிப்பெண்கள், சேலை கட்டிதான் சேவை செய்வார்கள். இந்தியர்களின் கலாச்சாரம் என்று காட்டுவதற்கு.
இப்போதும்கூட பாருங்கள்- சுற்றுலா வரும் வெளிநாட்டுப் பெண்கள் தங்கள் அணிந்திருக்கும் உடைக்குமேல் சேலை கட்டிக்கொண்டு வருவதை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் நான் பலமுறை பார்த்திருக்கிறேன்.
எது வாழ்க்கை என தெரியாமலே எதையோ நினைத்து, மற்றவர்களுக்கு மகிழ்ச்சியாக வாழ்கிறோமென போலியாகக் காட்டிக்கொண்டு கைநிறைய மாத்திரை, பைநிறைய கடன் அட்டைகள், உடம்பெல்லாம் டாட்டூஸ், ஆணுக்கு பெண்கள் சமம் என்பது போல போலி கௌரவத்தில், என்னமோபோல் வாழ்ந்துகொண்டு மடிந்துபோகிறார்கள்.
இந்தப் பெண்களை நினைத்தால் "அந்தோ பரிதாபமாக இருக்கிறது; இவர்களுக்கு என்னசெய்வது' என்று தெரியாமல் எதையோ செய்துகொண்டு இருக்கிறார்கள். அதற்குக் காரணம் இவர்களுக்கு ஒரு நல்வழிகாட்டி இல்லையென்பது புரிகிறது. சென்ற தலைமுறை செய்த தவறு இந்தத் தலைமுறை அதை அனுபவித்துக்கொண்டிருக்கிறது.
பதினாறு வயதினிலே அன்றையநாளில் பருவமடைந்த பெண்கள், இன்றையநாளில் பத்து வயதில் பருவமடைந்து விடுகிறார்கள். உளவியல் அடிப்டையில் பருவமடைந்த மூன்று முதல் ஐந்து வருடத்திற்குமேல் சும்மா இருக்கமுடியாது என்பதால், இன்றையநாளில், இளவயதில் காதல் என தடம்மாறி சிலசமயம் தடுமாறியும் போகிறார்கள்.
கல்லூரிப் படிப்பு இவர்களுக்குப் பட்டம் தருகிறதோ இல்லையோ- இவர்கள் விரும்பியோ விரும்பாமலோ ஒரு வாழ்க்கைத் துணையைத் தந்துவிடுகிறது. சிலருக்கு குழந்தையையும் தந்துவிடுகிறது. "இது என் ஆளு' என கல்லூரி நாட்களில், பாய் ஃபிரண்ட் இல்லையென்றால் அவர்கள் சமூக அந்தஸ்து குறைந்தவர்களாக மதிக்கும்படி ஒரு சூழலுக்குத் தள்ளப்படுகிறார்கள்.
பத்து வயதில் பருவமெய்தியவர்கள், பதினெட்டு வயதில் திருமணம், இருபத்தோரு வயதில் குழந்தை, இருபத்தைந்து வயதில் விவாகரத்து, இருபத்தெட்டு வயதில் மறுமணம் என மனம்மாறி, தடம்மாறி, மனம் போன போக்கில் ஓடுகின்ற தண்ணீரில் உதிர்ந்து விழுந்த சருகுபோல ஓட்டத்திற்கேற்ப ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.
இதை ஏற்றுக்கொள்ளும் பக்குவத்தில் அநேகமாக பெற்றோர்களும் வந்துவிட்டார்கள் என்பது இன்னொரு வருத்தமான செய்திதான்.
இதற்கெல்லாம் ஒவ்வொன்றாக சோதிடக் காரணம் சொல்லலாம் என்றாலும், இவர்களுக்கு தாம்பத்தியத்தைப் புரியவைக்க ஒரு குட்டிப் பயிற்சி சொல்லப்போகிறேன். இதை எல்லோரும் செய்துபார்க்கலாம்.
ஒருநாற்காலியில், சோபாவில் அமர்ந்தி ருந்தால் அப்படியே நகராமல் இருங்கள்.
கைகள் இரண்டையும் ஒன்றோடு ஒன்றாகக் கோர்த்துக்கொள்ளுங்கள். (வணக்கம் சொல்வதுபோல.) இடது கையிலுள்ள ஒவ்வொரு விரல்களும், வலது கையிலுள்ள ஒவ்வொரு விரலைத் தொடட்டும். ஆனால், சனி விரலென்று சொல்லும் நடுவிரலை உட்புறமாக மடக்கிக்கொள்ளுங்கள். சனிவிரல் எனும் நடுவிரல் உள்ளங்கையைத் தொட்டுக்கொள்ளட்டடும். அது மடக்கியே இருக்கட்டும்.
கண்கள் திறந்தே இருக்கட்டும். இப்போதுதான் பயிற்சி தொடங்குகிறது. சில வினாடி அமைதியாக இருந்துவிட்டு இரு கைகளிலும் சுக்கிரவிரல் என்று சொல்லும் பெருவிரலை மெதுவாக சிறிது விலக்கிப் பாருங்கள். எளிதாக விலகிவிடும். (மற்ற விரல்கள் ஒன்றையொன்று தொட்டுக் கொண்டே இருக்கட்டும்.)
பெருவிரல்தான் பெற்றோர்கள், பெரியோர்கள், ஆலோசனை சொல்லும் நல்ல சான்றோர்கள். சில காலத்திற்குப்பிறகு நம்மை விட்டுப்பிரிந்து விடுவார்கள். சில குழந்தைகள் பெருவிரலினைதான் சூப்புவார்கள். இதற்குக் காரணம் இன்னொரு வாய்ப்பில் சிந்திப்போம்.
அடுத்து, குருவிரல் என்று சொல்லும் சுட்டு விரல்களை விலக்கிப் பாருங்கள். அதுவும் எளிதாக விலகிவிடும். அதுதான் உடன்பிறந்த வர்கள். குருமார்கள், நல்லாசிரியர்கள். அவர்களும் நம்மைவிட்டு ஒருகாலத்தில் விலகிடுவார்கள்.
சனிவிரல் என சொல்லும் நடுவிரல் மடக்கியே இருக்கட்டும். நடுவில் அதைக் கொண்டுவரவேண்டாம்.
அடுத்து, புதன்விரல் என்று சொல்லும் சுண்டுவிரலை விலக்கிக் பாருங்கள். சுலபமாக விலகிவிடும். நம் பிள்ளைகள் மற்றும் நண்பர்கள்தான் அவை. நம்மை விலக்கிவிடும் சுண்டுவிரல்கள்.
இப்போது ஆத்ம காரகன் என சொல்லும் சூரியவிரல், மோதிர விரலை (பவித்ரவிரல்) விலக்கிப் பாருங்கள். ம்... ஹூம்.... விலக்குவது சிரமமாக இருக்கும்.
அதுதான் வாழ்க்கைத் துணை... அது கணவனுக்கும் மனைவிக்குமுள்ள உறவு. யார் பிரிந்தாலும் நம்மைவிட்டுப் பிரியாத- யாரோ ஒருவர் வீட்டிலிருந்த வந்தவள்- வந்தவர். இதை கௌரவிக்கத்தான் இந்த விரலில் மோதிரம் போடுகிறோம். அது மோதிர விரலாக கௌரவம் பெறுகிறது. Wedding ring என்று ஆங்கிலத்திலும் பிற மதத்திலும் சொன்னாலும், Well beingக்கு போடும் மோதிரம் என்றால்கூட நோக்கம் இதுதான்.
இதைப் புரிந்துகொள்ளாமல், அவசர முடிவெடுத்து யாருக்காகவோ எதற்காகவோ, விவாகரத்து வேண்டி, நீதிமன்றத்தில் குடித்த னம் செய்வது நியாயமாகவா இருக்கிறது என கேட்டுப்பாருங்கள். சொல்லவரும் விஷயம் உங்களுக்கே புரியும்.
நடுவிரலைப் பற்றி எதுவும் சொல்லவில்லை யென நினைப்பது புரிகிறது. அதுதான் தன் முனைப்பு எனும் ஊஏஞ. அது தன்னடக்கத் துடன் பணிந்திருந்தால்தான், கணவன்- மனைவி உறவு வலுப்படும். கண்ணியமான குடும்பம் கட்டுக்கோப்புடன் இருக்கும்.
இந்தப் பயிற்சியில் பங்குபெற்றவர்கள் பயன்பெற்றதை மற்றவருக்கு சொல்லுங்கள். சொல்லவந்த விஷயம் புரிந்தால் "பால ஜோதிட'த்திற்கு நன்றி சொல்லுங்கள்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172