"பல்லை உடைப்பேன்' என்று யாராவது பேசிவிட்டால், கோபத்தில் திட்டுவோம். பேசுவது நாக்கு; உதை வாங்குவது பல்லா என்று மெதுவாக யோசித்துப் பார்த்தால், நமக்கு என்னவோ மாதிரிதான் இருக்கும்.
"சும்மா பல்லைக் காட்டாதே' என்று, எதற்கெடுத்தாலும் சிரிப்பவர்களைச் சொல்வார்கள். பல் தேய்க்கும் பழக்கம் இந்தியர்களிடம்- குறிப்பாக தமிழர்களிடம் அதிகமுண்டு. தமிழல்லாத வேறுசில மாநிலங்களில், வாய்நிறைய பீடாவைப் போட்டுக் குதப்பிக்கொண்டு, வெள்ளைநிறம் ஒருபோதும் தெரியாதபடி, சிவப்பு நிறமாகவே வைத்திருப்பார்கள்.
அதெல்லாம் சரி; இந்த பல் எலும்பா சதையா என்று கேட்டால், யோசிக்கவேண்டிய விஷயம்தான் என சொல்லத் தோன்றும். சின்ன வயதில் பால்பல் விழுவதும் மீண்டும் முளைப்பதும் குழந்தை வளர்ப்பில் ஒரு அம்சம்தான். வயதானபிறகு விழும் பற்கள்தான் மீண்டும் இயற்கையாக முளைப்பதில்லை. செயற்கையாக (முளைத்து) வாங்கிவிடுகிறோம்.
இந்தப் பல்லைவைத்து இந்த வாரம் ஒரு சோதிடக் குறிப்பு சொல்லப் போகிறேன். இது எதிர்காலப் பலன்சொல்ல அல்ல.
அந்தப் பல்லுக்குரியவர்களின் இயல்பான குணத்தைத் தெரிந்துகொள்வதற்காக.
"அட, பல்-ல்கூடவா' என யோசிக்காதீ
"பல்லை உடைப்பேன்' என்று யாராவது பேசிவிட்டால், கோபத்தில் திட்டுவோம். பேசுவது நாக்கு; உதை வாங்குவது பல்லா என்று மெதுவாக யோசித்துப் பார்த்தால், நமக்கு என்னவோ மாதிரிதான் இருக்கும்.
"சும்மா பல்லைக் காட்டாதே' என்று, எதற்கெடுத்தாலும் சிரிப்பவர்களைச் சொல்வார்கள். பல் தேய்க்கும் பழக்கம் இந்தியர்களிடம்- குறிப்பாக தமிழர்களிடம் அதிகமுண்டு. தமிழல்லாத வேறுசில மாநிலங்களில், வாய்நிறைய பீடாவைப் போட்டுக் குதப்பிக்கொண்டு, வெள்ளைநிறம் ஒருபோதும் தெரியாதபடி, சிவப்பு நிறமாகவே வைத்திருப்பார்கள்.
அதெல்லாம் சரி; இந்த பல் எலும்பா சதையா என்று கேட்டால், யோசிக்கவேண்டிய விஷயம்தான் என சொல்லத் தோன்றும். சின்ன வயதில் பால்பல் விழுவதும் மீண்டும் முளைப்பதும் குழந்தை வளர்ப்பில் ஒரு அம்சம்தான். வயதானபிறகு விழும் பற்கள்தான் மீண்டும் இயற்கையாக முளைப்பதில்லை. செயற்கையாக (முளைத்து) வாங்கிவிடுகிறோம்.
இந்தப் பல்லைவைத்து இந்த வாரம் ஒரு சோதிடக் குறிப்பு சொல்லப் போகிறேன். இது எதிர்காலப் பலன்சொல்ல அல்ல.
அந்தப் பல்லுக்குரியவர்களின் இயல்பான குணத்தைத் தெரிந்துகொள்வதற்காக.
"அட, பல்-ல்கூடவா' என யோசிக்காதீர்கள். அதனால்தான் பண்டைய நாளில் பெண் பார்க்கப் போகும்போது, பெண்ணைப் பாடச் சொல்வார்கள். வாயசைவில் தெரியும் பற்களைக்கொண்டு அந்தப் பெண்ணின் குணநலனைக் கண்டுபிடித்துவிடுவார்கள்.
இன்றையநாளில் அது இல்லைதான் என்றாலும், காதல் செய்யும்போதாவது இதைத் தெரிந்துகொள்ள வேண்டாமா? காதல் கைகூடி கல்யாணம் நடந்தால் அறுபது கிலோ தாஜ்மகாலுடன் எப்படி குடித்தனம் செய்யவேண்டுமென தெரிந்துகொள்ள வேண்டாமா?
அதற்குதான் இந்த பல் சோதிடம்.
இதற்கு நீங்கள் செய்யவேண்டியது, பல்லை அளந்து குறித்துக்கொள்ளவேண்டும். "இது எப்படிங்க ஐயா?' என கேட்காதீர்கள். கண்களில் பார்த்துதான். அதற்காக ஸ்கேல், பேப்பர் என வைத்தா அளவெடுக்க முடியும்? (சிரிக்காதீர்கள்; பல் தெரிகிறது.)
சதுரம், நீள்வட்டம், செவ்வகம், முக்கோணம் என அவற்றை வகைப்படுத்திக் கொள்ளுங்கள். இந்தப் பற்கள், வாயைத் திறந்ததும் தெரியும் முதல் வரிசைப் பற்கள்தான் என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள். காரணம், எல்லா பற்களும் ஒரே அளவினதாக இருக்காது என்பதுதான் மனிதனுக்கு இயற்கை தந்த பரிசு.
அந்த முதல் வரிசைப் பற்களிலும் மேல்வரிசைப் பற்களை மட்டும் வைத்துக்கொண்டு சொல்லவரும் குறிப்புகளை சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
பல் செவ்வாய் என்பதால், மேல் செவ்வாய், கீழ் செவ்வாய் என்பதுபோல புரிந்து கொள்ளுங்கள். கைரேகை சோதிடத்திலும் செவ்வாய் ரேகை (Marsline) மேல் செவ்வாய், கீழ் செவ்வாய் என சொல்வார்கள்.
இந்த சிந்தனையில், முத-ல் நீள்வட்ட (ஓவல்) வடிவிலான பற்களைப் பார்க்கலாம். முத்துப்பல் என சொல்லும் இவர்கள் படைப்பாற்றல் நிறைந்தவர்கள். அன்றையநாட்களில் இருந்த சினிமா நடிகைமுதல் இன்றைய நாட்களில் உள்ளவர்கள்வரை என ஒரு குட்டிப் பட்டியல் போட்டுப்பார்த்தால் உங்களுக்கே புரியும். சீக்கிரம் சோர்வடையும் இவர்கள் அன்புக்குரியவர்களாக இருப்பார்கள். வசதிகள் இருந்தாலும் கனவுகளும் வேதனைகளும் கூடவே இருக்கும்.
செவ்வக வடிவப் பற்களை உடையவராக இருந்தால், "பலகை மாதிரி இருக்கு' என்பார்கள். இவர்கள், "வாழ்க்கையில் இது சரியா? தவறா? அவர் ஏன் அப்படி சொன்னார்? இப்படி சொல்-யிருக்கலாமே?' என்று ஆய்வுசெய்து முடிவெடுக்கும் குணமுடையவர்களாக இருப்பார்கள். அதனால் கற்பனை நிறைந்த வர்களென்று "சட்'டென சொல்-விடலாம். இவர்கள் விரும்பியதைக் கேட்டுப் பெறுவார்கள். தட்டிக்கூட பறித்துவிடுவார்கள். காதலும் அன்பும் இருந்தாலும், உணர்ச்சிகள் இல்லாதவர்கள்போலதான் உறவுகளில் இருப்பார்கள்.
சதுரமான பற்களை உடையவர்களை அரிசிப் பல்காரர் என்று சொல்வார்கள். இவர்கள், கொஞ்சம் ஒழுங்குமுறையைக் கடைப்பிடிப்பவர்களாக இருப்பார்கள். காதல் செய்பவராக இருந்தால்கூட, "வீட்டில்வந்து முறையாகப் பெண் கேளுங்கள். நான் வீட்டைவிட்டு, அப்பா- அம்மாவுக்குத் தெரியாமல் வரமாட்டேன்' என்று சொல்வதுபோல தனுக்குள் ஒரு சுயக் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள்.
இவர்கள் அமைதியாக இருந்தாலும் ஆற்றல்மிக்கவராக இருப்பார்கள். சரியான முடிவுகளை சரியான நேரத்தில் எடுத்து மற்றவர்களின் பாராட்டைப் பெறுமளவுக்கு திறமையுள்ளவர்களாக இருப்பார்கள். அதனால்தான் இவர்கள் பெரும்பாலும் அலுவலகத்தில் நிர்வாகப் பொறுப்பில் இருப்பார்கள். இருந்தாலும் அன்பானவர்கள், கண்டிப்பானவர்களாக இருப்பார்கள்.
கவலையில்லாமல் வாழ நினைப் பவர்கள். அதாவது ஒரு மாதிரி ஜா- டைப் ஆசாமிகள்தான் முக்கோண வடிவ பற்கள் உள்ளவர்கள். இன்றைய நாளை அனுபவிப்போம்; வாழ்வோம். நாளை பற்றிய கவலை நமக்கெதற்கு என்பது போன்ற எண்ணமுள்ளவர்கள்.
சுதந்திரமாக இருக்கவேண்டுமென நினைக் கும் இவர்கள் அடித்தளம் இல்லாமல் கட்டடம் கட்டுவதுபோல, பொறுப்பின்றி இருப்பார்கள். சிக்னல் கிடைத்தாலும் சிக்கலும் வரும் என்பதைப் புரிந்துகொள்ள இவர்களுக்குத் தாமதமாகும்.
செவ்வாய் காரகம்கொண்ட பற்களைக்கொண்டு இதுபோல நிறைய சொல்லமுடியும். இது உணர்வுகளை வெளிப்படுத்தும் ஆளுமைக்குரிய கிரகம் என்பதால்தான் பல்லுக்குக் காரகம் வகிக்கும் செவ்வாயை வைத்து, பற்களின் அமைப்பைக்கொண்டு அவர்தம் இயல்பான ஆளுமை உணர்வுகளைச் சொல்-விடலாம்.
மனித இனத்திற்கு மறைந்து வளர்ந்து மாறுபடுவது, செவ்வாய் காரகம் வகிக்கும் பற்களும், கேது காரகம் வகிக்கும் முடியும்தான்.
இந்த இரண்டில்தான் பெண்கள் மட்டுமல்ல; ஆண்களும் கவனமாக இருப்பார்கள். கொஞ்சம் வெள்ளையானால்கூட "டை' அடித்துக்கொள்வது, பற்களை ப்ளீச்சிங் செய்வது என இன்றைய சூழலுக்கேற்ப சொல்லலாம்.
"அங்க வித்யா' என்னும் சாஸ்திர முறைப் படி சோதிட சிந்தனைகளைச் சேர்த்துச் சொன்னால் ஜாதகத்தைப் பார்த்து அவரது குண அமைப்புகளைச் சொல்-விடலாம் என்றால் ஆச்சரியமாகதானே இருக்கும்.
சரி; உங்கள் பல்லைக் காட்டுங்க.. (ஹி... ஹி...)
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172