சாப்பிட வாங்க...
"வெளிச்சத்திற்கு வாங்க' என்று சொல்லிவிட்டு "சாப்பிட வாங்க' என்று சொல்கிறீர்களே என்று யோசிக்காதீர்கள். இந்த வாரம் சொல்லவரும் விஷயம் அதுபற்றிதான்.
எல்லாரது வீட்டிலும்தான் சமையல் செய்கிறார்கள். இன்றைய நாளில், இரண்டுபேரும் வேலைக்குப் போகும் குடும்பத்தில், முதல்நாளே காய்கறிகளை நறுக்கி பிரிட்ஜில் வைத்துவிட்டு, மறுநாள் பக்கத்து பிளாட்டில் உள்ளவர்கள் வீடுவரை சத்தம்போடும் (குக்கர்) பாத்திரத்தில் வைத்து, சமையாவிட்டாலும் பரவாயில்லை; "சாஃப்ட்' ஆனால் போதுமென சூட்டோடுசூடாக அவசர அவசரமாக பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்துக்கொண்டு போய் சாப்பிடுவதைப் பார்த்தால் ஒரு பக்கம் சிரிப்பு வரும். ஒரு பக்கம் இன்றைய பெண்களின் நிலையை நினைத்து பாவமாக இருக்கும்.
சமையல் செய்வதற்கு, முன்பெல்லாம் மண் பாத்திரம் வைத்திருந்தார்கள். அது காலப்போக்கில் பித்தளை, வெண்கலம், இரும்பு என தொடர்ந்து எவர்சில்வர், அலுமினியம் மட்டுமல்ல; பிளாஸ்டிக்வரை வந்துவிட்டது.
பாத்திரம் கழுவுவது சுலபமென பிளாஸ்டிக், எவர்சில்வர், அலுமினியம் என பயன்பாட்டிற்கு வந்தால் ஆரோக்கியத்தை விலைகொடுத்தாலும் வாங்கமுடியுமா? வியாதிகள் வரிசைகட்டி வ
சாப்பிட வாங்க...
"வெளிச்சத்திற்கு வாங்க' என்று சொல்லிவிட்டு "சாப்பிட வாங்க' என்று சொல்கிறீர்களே என்று யோசிக்காதீர்கள். இந்த வாரம் சொல்லவரும் விஷயம் அதுபற்றிதான்.
எல்லாரது வீட்டிலும்தான் சமையல் செய்கிறார்கள். இன்றைய நாளில், இரண்டுபேரும் வேலைக்குப் போகும் குடும்பத்தில், முதல்நாளே காய்கறிகளை நறுக்கி பிரிட்ஜில் வைத்துவிட்டு, மறுநாள் பக்கத்து பிளாட்டில் உள்ளவர்கள் வீடுவரை சத்தம்போடும் (குக்கர்) பாத்திரத்தில் வைத்து, சமையாவிட்டாலும் பரவாயில்லை; "சாஃப்ட்' ஆனால் போதுமென சூட்டோடுசூடாக அவசர அவசரமாக பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்துக்கொண்டு போய் சாப்பிடுவதைப் பார்த்தால் ஒரு பக்கம் சிரிப்பு வரும். ஒரு பக்கம் இன்றைய பெண்களின் நிலையை நினைத்து பாவமாக இருக்கும்.
சமையல் செய்வதற்கு, முன்பெல்லாம் மண் பாத்திரம் வைத்திருந்தார்கள். அது காலப்போக்கில் பித்தளை, வெண்கலம், இரும்பு என தொடர்ந்து எவர்சில்வர், அலுமினியம் மட்டுமல்ல; பிளாஸ்டிக்வரை வந்துவிட்டது.
பாத்திரம் கழுவுவது சுலபமென பிளாஸ்டிக், எவர்சில்வர், அலுமினியம் என பயன்பாட்டிற்கு வந்தால் ஆரோக்கியத்தை விலைகொடுத்தாலும் வாங்கமுடியுமா? வியாதிகள் வரிசைகட்டி வீட்டுவாசலில் வந்துநிற்கும்.
ஆரோக்கியமான வாழ்வுக்கு சாப்பாடு மட்டுமல்ல; அது சமைக்கும் பாத்திரம் மிகவும் முக்கியம். சமையல் செய்பவரின் மனநிலை, சாப்பாடு பரிமாறுதல், சாப்பிடும் முறை, சாப்பிட்டபிறகு எப்படி எழுந்திருப்பதென ஒரு பெரிய பட்டியலே நமது கலாச்சார மரபில் இருக்கிறது.
அதனால்தான் முன்பெல்லாம் ஒழுக்கமான குடும்பத்தில் உள்ளவர்கள் "பர அன்னம்' சாப்பிடமாட்டார்கள். அதாவது பிறர்வீட்டில் சமைத்ததை சாப்பிடமாட்டார்கள். "அதெல்லாம் இப்போ எங்கே சார் இருக்கு' என்று கேட்கிறீர்கள்; புரிகிறது. நமது பரிகார முறைகள்கூட இந்த உணவுப் பழக்கத்தையொட்டியேதான் இருக்கும். அதனால்தான் பரிகாரங்கள் பலிதமாகின்றன என்பதை கூடுதல் செய்தியாகக் குறித்துக்கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் சத்தம்போடும் பாத்திரம் இருக்கிறதா?
அதாங்க குக்கர். அதுவும் அலுமினியத்தில் இருக்கிறதா?
ஆமாம் என்று சொல்லிவிடாதீர்கள். காரணம், அதுதான் ஆரோக்கியத்திற்கு ஆபத்து. தைராய்டு, கொழுப்புக் கட்டி என கேன்சர்வரை சொல்ல ஒரு பெரிய பட்டியலே இருக்கிறது. அது எந்த தசாபுக்தியில் வந்துள்ளது என்பதை வைத்துப் பண இருப்பு குறைவதைச் சொல்லமுடியும்..
குக்கரில் சமைப்பதால் அது மிருதுவாக்கப்படுகிறது. அது சமைக்கப்படுகிறதா என கேட்டுப்பாருங்கள். "இப்படியே நாங்கள் பழகிவிட்டோம்' என்றுதான் பலரும் சொல்வார்கள். இன்னும் வெளிப்படையாகச் சொல்லவேண்டுமென்றால், மூடிய பாத்திரத்தில் சமைக்கக்கூடாது.
"அலுமினிய குக்கர் மட்டும் இல்லீங்க. எங்க வீட்டில் நான்ஸ்டிக்கூட இருக்குது' என்று சொல்கிறீர்களா? அவ்வளவுதான் போங்க... சிக்கலே இங்கேதான் ஆரம்பிக்கிறது.
அதுமட்டுமா? சுடச்சுட சாப்பாட்டை அந்த பிளாஸ்டிக் டப்பாவில் (க்ஷல்ர் ச்ழ்ங்ங் என்றாலும்) போட்டுக்கிட்டுதான் ஆபீசுக்கு அரக்கப் பறக்கப் போவோம் என்று சொல்பவர்களா நீங்கள்? உங்கள் வீட்டில் நோய் என்ற அரக்கன் அழைக்காமலே வந்து உட்கார்ந்துவிடுவார்.
"இதெல்லாம் தப்புன்னு புரிந்துகொள்ளமுடிகிறது. இதை எப்படி சரிசெய்வது?' என உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். மாற்றம் உங்களிடமிருந்து வரவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
ஆரோக்கியமான வாழ்க்கை வேண்டுமா? சம்பாதிப்பதில் பாதிக்குமேல் மருத்துவத்திற்கு செலவு செய்யவேண்டுமா என்பதை நீங்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.
சரி; இப்போது சமையல் பாத்திரங்களையும் கிரக காரகங்களையும் புரிந்துகொள்வோம். மண் பாத்திரம் செவ்வாய்; சமையல் உணவுகளை அரைத்து சாப்பிடும் பல் செவ்வாய். இதில் உணவு சமைத்தால் ரத்த விருத்தி, ரத்தம் சுத்தமாதல், மாரடைப்பு வராமலிருத்தல் என பல நன்மைகள் உண்டு.
வெள்ளி- சுக்கிரன். சமைத்த பண்டங்களை வெள்ளித் தட்டில் வைத்து சாப்பிடுவார்கள். இது குடும்ப விருத்திக்கு நல்லதென்பதால்தான் மாப்பிள்ளைக்கு வெள்ளித் தட்டில் சாப்பாடு, வெள்ளி டம்பளிரில் பால், வெள்ளி சொம்பில் குடிக்க நீர் எனத் தருவார்கள்.
இரும்புப் பாத்திர சமையலென்பது சனி காரகம் கொண்டது. இதுவும் சமையலுக்கு ஏற்றதே. இதில் செய்த சமையலை உடனே வேறொரு பாத்திரத்திற்கு மாற்றிவிடவேண்டும் என்பதில் கவனமாக இருக்கவேண்டும். இரும்புப் பாத்திரத்தில் சமைக்கலாமே தவிர, அதிலேயே உணவுப் பொருட்களை வைத்திருக்கக் கூடாது.
வெண்கலப் பாத்திரம் புதன் காரகத்துவம் கொண்டது. இதில் சமைத்து சாப்பிட்டால் சோர்வின்றி புத்துணர்ச்சியாக இருப்பதை உணரமுடியும். இந்த வெண்கலப் பாத்திரத்தில் சமைத்த உணவுப் பொருட்கள் சீக்கிரம் கெட்டுப் போகாது. வெண்கலப் பானையில் பொங்கல், தொட்டுக்கொள்ள கத்திரிக்காய் கொஸ்து செய்து சாப்பிட்டுப் பாருங்கள்; அப்புறம் தெரியும் அதன் சுவை.
செப்புப் பாத்திரம் குரு காரகத்துவம் கொண்டது. அதனால்தான் நித்திய கர்மானுஷ்டானம் செய்யும் பஞ்ச பாத்திரம். வெள்ளி வாங்க வசதியில்லாதவர்கள் வீட்டில் செப்புப் பாத்திரத்தில் இருக்கும். இப்போதும் ஐ.டி.யில் வேலைசெய்யும் சிலர் செப்புப் பானையில் தண்ணீர் என படித்துவிட்டு, வாட்டர்கேன் செப்புப் பாத்திரத்தில் உள்ளதாக வாங்கிவைத்துக் கொள்வதைப் பார்க்கலாம்.
எப்போதாவது பயன்படுத்தும் பாத்திரம் ஈயம்தான். ஈய சொம்பில் ரசமென்றால் ஒருபிடி பிடிக்காமல் இருப்பார்களா? இது சுக்கிரன், சனி காரகத்துவம் கொண்டது. வெள்ளீயம்தான் நல்லது. இன்னும் சிலர் வெண்கலப் பாத்திரத்தில் உள்பூச்சாக வெள்ளீயத்தைப் பூசி வைத்துக்கொள்வார்கள்.
பீங்கான், கண்ணாடி மற்றும் ராகு காரகம் பெற்ற பிளாஸ்டிக் (safe) என வகைபடுத்திச் சொல்ல நிறைய இருந்தாலும், ஆரோக்கியம் வேண்டுபவர் கள் அலுமினியம் கூடாது. நான்ஸ்டிக் கூடவே கூடாது என்பதில் உறுதியாக இருக்கவேண்டும்.
குக்கர்போல மூடிவைத்து சமைப்பதைத் தவிர்த்தல் நோய்க்கு இடம்கொடுக்காமல் இருக்கலாம். எவர்சிலவர் பாத்திரங்கள் பரிமாற மட்டுமே (Serving என புரிந்துகொள்ளுங்கள்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172