"என்ன சார்... தீபாவளி ஆச்சா.?' என்றுதான் இன்றைய நாளில் கேட்கிறார் கள். இது சரியா தவறா என்று சொல்ல வரவில்லை. இதில் "இவர்கள் வாழ்த்து சொல்லவில்லை;
அவர்கள் வாழ்த்து சொல்லவில்லை'யென்று கூப்பாடு போடுகிறார்கள்.
தீபாவளி என்பது வாழ்த்து சொல்ல வேண்டிய பண்டிகையல்ல. அது வழிபாடு செய்யவேண்டிய பண்டிகை. வழிபாடு செய்யும் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வது முறையுமல்ல; அது சரியுமல்ல என்று எத்தனை சொன்னாலும், ஏதோவொரு சிந்தனையை மனதில் நுழைத்துக்கொண்டு, Closed Mind Set-ல் இதுதான் தீபாவளி; இப்படிதான் கொண்டாட வேண்டுமென்று இவர்களாகவே ஒரு கட்டத்தில் இருந்துகொண்டு, தனக் குள்ளேயே ஒரு சட்டத்தைப் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
யாரோ அனுப்பிய வாட்ஸ் அப் செய்தியை இன்னொருவருக்கு அனுப்பிவிட்டு "தீபாவளி வாழ்த்து சொல்லியாச்சு' என்று சந்தோஷப்பட்டுக் கொள்கிறார்கள்.
எப்படியோ அவர்களும் தீபாவளியைக் கொண்டாடினால் சரிதான். ஆனால் பண்டைய நாளில், "கங்கா ஸ்நானம் ஆச்சா..?' என்றுதான் கேட்பார்கள். "தீபாவளி ஆச்சா' என்று கேட்கும் பழக்கமில்லை. தீபாவளிக்கும் கங்கா நதிக்கும் என்ன தொடர்பென இன்னொரு சந்தர்ப்பத்தில் சிந்திக்க வைத்துக்கொள்வோம்.
"அது சரி; நரகாசுரன் இறந்த நாள்தானே தீபாவளி' என்று சொல்வது காதில் விழுகிறது. சில விஷயங்களை அப்படியே நம்புவதைவிட சிந்தித்து ஏற்றுக்கொள்வதுதானே சிறப் பென்று சொன்னால் நம்மை ஒருமாதிரி பார்க்கிறவர்களும் இருக்கதான் செய்கிறார் கள். அதற்காக சிந்தனைக்கு செய்திகள் தராமல் இருக்கலாமா?
ஒருவர் இறந்த நாளைக் கொண்டாடுவது சரியா அல்லது முறையா? இறந்தவர்கள் யாராக இருந்தாலும் அதுபோல கொண்டாடி மகிழ்ந்தால் பிரேத சாபம் வந்துவிடாதா என்று சிந்தித்துப் பாருங்கள். "நாங்களும்தான் பல வருஷம் தீபாவளி கொண்டாடுகிறோம். எங்கள் வாழ்வில் ஒளியே வரவில்லை' என்று சொல்லும் மக்களும் இருக்கதான் செய்கிறார்கள்.
"அசுரன் ஒழிந்து, தீமை மறைந்து, நன்மை மலர' என்று எதையாவது சொல்லி காதில் பூ சுற்றுகிறார்கள் என்று சொல்லப்போவதில்லை. அசுரர் என்று ஒருவர் இருந்தால்தான் தேவர் என்ற ஒருவரையே நாம் அடையாளம் காணமுடியும் என்னும் உளவியலைப் புரிந்துகொள்ளமுடியும் அல்லவா? இரட்டைத் தன்மை கொண்டதுதான் வாழ்க்கை என்பதை இந்த தொடரின் தொடக்கத்திலேயே நாம் பார்த்திருக்கிறோம். இலவசமாக "துரோகி' பட்டம் கிடைக்கும் இன்றையநாளில், தீபாவளியைக் கொண்டாடுபவர்கள் தேவர்கள், கொண்டாடாதவர்கள் அசுரர்கள் என்று சொல்லிடப் போறாங்க...' என்று சொல்லி நீங்கள் சிரிப்பதைப் புரிந்துகொள்ளமுடிகிறது.
ஆக, தீபாவளி நரகாசுரன் இறந்த நாளில்லை என்பதைப் புரிந்துகொண்டு, அது போன்ற புராணக் கதைகளை அந்தப் பக்கம் ஓரமாக வைத்துவிட்டு சிந்திக்க வாருங்கள்.
நரகாசுரன் இருந்த காலத்தில் பட்டாசு இருந்ததா அல்லது இதுபோல வேறு எதாவது இருந்ததா என்று கேட்டால், இன்றைய பெரிசுகள் விழிக்கதான் செய்வார்கள். ஒருவர் இறந்த நாளை ஒவ்வொரு வருடமும் கொண்டாடும் மடைமையை இத்துடன் விட்டு ஒழிக்கவேண்டாமா?
"என்ன ஐயா, நாத்திகம் பேசுகிறீர்களா?' என்று யாராவது கேட்கப் போகிறீர்கள். ஏற்புடைய மாற்று சிந்தனையை சொல்வதற் குதான் இத்தனையும் சொல்கிறோம்.
புரட்டாசி மாதத்தில் வரும் அமாவாசை, மஹாளய அமாவாசை. அதுதான் தெரியுமே என்று சொல்லாதீர்கள். இப்படி கோர்வையாகச் சொன்னால்தான் சொல்லவரும் விஷயம் புரிந்துகொள்ளமுடியும்.
மஹாளய அமாவாசையைத் தொடர்ந்து ஐப்பசி அமாவாசைதான் தீபாவளி. அதை யொட்டி வரும் ஐப்பசி பௌர்ணமிதான் அன்னாபிஷேகம். எல்லா சிவன் கோவில்களிலும் சிவபெருமானுக்கு அன்னத் தினால் அபிஷேகம் செய்வார்கள். இது ஒரு உலகளாவிய பண்டிகை. "கார்த்திக் பௌர்ணமி' என்றும் "தேவ் தீபாவளி' என்றும் வடநாட்டில் விமர்சையாகக் கொண்டாடுவார்கள். லட்சக்கணக்கில் மக்கள்கூடி கங்கைக் கரையில் ஸ்நானம் செய்வார்கள்.
இந்த புரட்டாசி அமாவாசை- ஐப்பசி பௌர்ணமிவரையில் உள்ள 45 நாட்களைதான் ஒரு மண்டலமென்று சொல்லி பூஜைக்கு அல்லது மருந்துக்கு அல்லது சிகிச்சைக்கு என்று சோதிடத்தில்கூட பரிகாரமாகச் சொல்வார்கள். சிலர் 48 நாட்கள் என்றும், 41 நாட்கள் என்றும் ஒரு மண்டலத்தைச் சொல்வார்கள். தமிழில் சில மாதங்களுக்குக் கூடுதலாக அல்லது குறைவாக நாட்கள் வருமென்பதை சொல்லாமலே நீங்கள் தெரிந்திருப்பீர்கள் என்பதால் அது பற்றிய சிந்தனையை உங்களிடமே விட்டுவிடுகிறோம்.
அதனால்தான் தீபாவளியன்று "பரணி தீபம்' ஏற்றி வழிபடும் வழக்கம் நம்மிடம் உண்டு. இந்த தீபாவளிக்கு எத்தனைப் பேர் இந்த பரணி தீப வழிபாடு செய்தார்கள் என்பதைவிட, எத்தனைப் பேர் பட்டாசு வெடித்து புதுப் படத்திற்குப் போனார்கள் என்று சுலபமாகச் சொல்லிவிடலாம்.
அடுத்தவர்களுக்கு இருப்பதைத் தரவேண்டுமென்ற அடிப்படையில்தான் அலுவலகத்தில்கூட எல்லாருக்கும் தீபாவளி போனஸ் (டஹஹ்ம்ங்ய்ற் ர்ச் இர்ய்ன்ள் ஆஸ்ரீற் பற்றி சொல்லப் போவதில்லை) தரப்படுகிறதென்றால் ஆச்சரியமாகதானே இருக்கும்.
ஈர்ய்ய்ங்ஸ்ரீற்ண்ய்ஞ் ற்ட்ங் உர்ற்ள் என்பதுபோல, புரட்டாசி அமாவாசையில் தொடங்கி ஐப்பசி பௌர்ணமி வரையில் என்று ஒரு இணைப்பு செய்துபாருங்கள். தீபாவளியென்பது என்னவென்று உங்களுக்கே புரியும்.
அதைத் தொடர்ந்து, "விளக்கீடு காணாதே போதியோ பூம்பாவாய்' என்று திருஞான சம்பந்தர் பதிகத்தில் வரும் கார்த்திகைப் பௌர்ணமிதான் தீபத் திருநாள் என்று வரிசையாக சொல்லிக்கொண்டே போகலாம்.
நரகாசுரன் பாவம் சார்; அவனை விட்டு விடுங்கள். இன்னும் எத்தனை நாள்தான், செத்த பாம்பையே அடித்துக்கொண்டிருப்பீர்கள். நரகாசுரன் இறந்த நாளல்ல தீபாவளி என்று இப்போதாவது புரிந்துகொள்ளுங்கள். நரகாசுரன் இறந்த நாள்தான் தீபவாளி என்று உங்கள் பிள்ளைகளுக்கு மாற்றி சொல்லிக் கொடுத்து வளரும் சமூதாயத்தை சிந்திக்க விடாமல் செய்துவிடாதீர்கள்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172