நீங்கள் கவனித்ததுண்டா? தங்களுக்குள் Pre conceived-ஆக முன்கூட்டியே ஒருசில செய்திகளை வைத்துக்கொண்டு, அது சரியா தவறா என்று ஆராயாமல் நம்மிடம் அதைத் திணிப்பார்கள். இன்னும் சிலர் நாம் என்னதான் சொன்னா லும் அதை ஏற்றுக்கொள்ளாமல், தான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டுமென்று எரிச்சலூட்டும் விதமாகப் பேசுவார்கள். டிவியில் சிலரது பேட்டிகளை நீங்களும் பார்த்திருக்கலாம்.
சிலர் பேசும்போது, "கோபத்தைக் கிளப்பாதீங்க... வாயில கெட்ட வார்த்தை வரபோகுது' என்று வேறுவிதமாக நம்மை எச்சரிப்பர்.
ஒருசிலர் பேசும்போது பார்த்திருப் போம். தொண்டைவரை கெட்ட வார்த்தையைப் பேசிவிட்டு நாக்கில் நிறுத்தி விடுவார்கள்.. (தூல வைகரிக்கு வராது; சூக்கும வைகரிவரை வரும்.)
இன்னும் சிலர் பொறுமை யில்லாமல் கையிலிருப்பதைத் தூக்கியடிப் பார்கள். கொஞ்சம் முதிர்ச்சியில்லாத வராக இருந்தால் வீட்டிலுள்ள இல்லத்தரசி என்றுகூட பார்க்காமல் இரண்டு கொடுப்பார்கள். அலுவலகம் அல்லது பொது இடமாக இருந்தால் "ஏங்ற் ர்ன்ற்' என்று மற்றவர்களை சொல்லிவிட்டு, தான் வெளியே போய்விடுவதுபோலவும் வேடிக்கையாக தன்னையறியாமலே செய்வார்கள்.
"ஆனாலும் பாருங்க. நானும் கோபத்தை அடக்கணும்னுதான் பார்க்கறேன். அது முடியலை' என்று, கோபத்தைப் பலமுறை வெளிப்படுத்தியபிறகு ஒவ்வொரு முறையும் இதையே சொல்வார்கள்.
கோபம் அத்தனை கொடுமையானதா? கோபத்தில் யாரையாவது திட்டப் போகிறீர்களா... இவர்களால் கொஞ்சம்கூட பொறுமையாக இருக்கமுடியாதா?
அவர்கள் என்ன சொல்ல வருகிறார்கள் என்று கேட்டுக்கொள்ள மனமோ விருப் பமோ இல்லாமல் இருக்கலாமா? இப்படிக் கூடவா மனமுதிர்ச்சி இல்லாமல் இருப் பார்கள் என்று நீங்கள் வருத்தப்பட்டுகூட இருக்கலாம்.
"அதெல்லாம் சரிங்க.. இதுக்கு ஏதாவது வழி இருக்குதா?' என்று கேட்க வருகிறீர்கள்; புரிகிறது.
பொதுவாக எல்லாரும், "கோபத்தை அடக்கு; தண்ணீர் குடி; ஒன்றுமுதல் நூறுவரை எண்ணிக்கொண் டிரு; திருக்குறளில் வெகுளாமை அதிகாரத்தைப் படி' என்பதுபோல, நம்மால் முடியவேமுடியாத சிலவற்றை சொல்லித் தருவார்கள்.
இதையெல்லாம் ஒரு ஓரமாக வைத்துவிட்டு, இப்போது சொல்வதைச் செய்துபாருங்கள். உங்களுக்கு கோபம் வராது. அல்லது கோபப்படும்போது தடி மனான வார்த்தை வராது.
உங்கள் இடக்கை சுண்டுவிரலை (விரலின் நகத்தையொட்டி உள்ள முதல் பகுதியில்) கொஞ்சநேரம் வலக்கை விரலினால் பிடித்துக் கொள்ளுங்கள். அல்லது சுண்டு விரலைப் பிடித்துக்கொண்டபடி பேசிப் பாருங்கள். "காக்கா... உஷ்...' என்பதுபோல கோபம் போய்விடும்.
"சுண்டுவிரலில் அப்படி என்ன இருக்கு..?' என கேட்கத் தோன்றுகிறதா... இந்த சுண்டுவிரல் ரகசியம் பற்றி இன்னொரு சிந்தனையில் பகிர்ந்துகொள்ளலாம்.
பொதுவாக மக்கள் பேசும்போது சிந்தித்துப் பேசுவதில்லை. கேள்வித் தாளில்கூட பாருங்கள். "கூறுக...' என்றுதான் இருக்கும். அதன் பொருள்- "என்ன புரிந்துகொண்டீர்களோ அதை சிந்தித்து எழுதுக' என்பதுதான்.
ஆனால் நம் பிள்ளைகள், எதாவதொரு தமிழுரையில் உள்ளதைப் படித்து, அப்படியே அவர்கள் சொல்வதை பேப்பரில் "சொல்லி'விட்டு வருவார்கள்.
ஆக, சிந்தித்துப் பேசுவதற்குதான் "கூறல்' என்னும் சொல். இப்படி இருந்துவிட்டால் பேச்சு குறைந்துவிடும். பேச்சு குறைந்து விட்டால் ஆன்மபலம் பெருகும். அதைவிட பேசும் பேச்சுகள் சத்தாக இருக்கும்.
"இதெல்லாம் நடக்கிற காரியமா' என்று கேட்பது புரிகிறது. சரி; சோதிடக் குறிப்புகளை வைத்து இதை அறிவதெப்படி என தெரிந்துகொள்ள வேண்டாமா?
குருவுக்கு இரண்டாமிடத்தில் செவ்வாய் இருக்கப்பெற்றவர்கள், பேசத் தொடங்கும்போதே நூறு டிகிரியில்தான் தொடங்குவார்கள். அடுத்தவர்கள் சொல்வதைக் கேட்காமல் தான் சொல்லவரும் கருத்தைத் திணிப்பார்கள். இவர்களைத் தொந்தரவு செய்யாமல் ஓரமாக வைத்துவிடுங்கள்.
செவ்வாய்- ராகு இனைந்து ஜாதகத்தில் இரண்டாம் பாவகத்தில் இருந்தால் (லக்னத்திற்கு இரண்டில்) அவர்கள் வாயில் நல்லசொல் வருமா என்றால் அது பில்லியன் டாலர் கேள்வியாகதான் இருக்கும். பேசும் ஒவ்வொரு வார்த்தைக்கும் "அந்த' ஆக்த்ங்ஸ்ரீற்ண்ஸ்ங் போட்டுதான் பேசுவார்கள்.
வாக்கின் வெளிப்பாடுதானே சொற்கள்... பயனில்லாத சொற்கள் பக்குவப்படாத காய்போல; பயனுள்ள சொற்கள் பக்குவப் பட்ட கனிபோல என்றுதான்-
"இனிய உளவாக இன்னாத கூறல்
கனியிருப்ப காய் கவர்ந்தற்று'
என்று வள்ளுவம் சொல்கிறது.
ஒழுக்கமான அறநெறியில் நிற்பவருக்கு அப்படியொரு பக்குவப்படாத சொற்களே வராது என்பது சொல்லாமலே விளங்கும்.
வாக்கு ஸ்தானத்தில் பாவிகள் இருந்தாலோ, லக்னத்திற்கு அசுபர்கள் இருந்தாலோ அவர்கள் வாக்கு சுத்தமாக இருக்காது. உயர்ந்த ஒழுக்கமான குலத்தில் பிறந்தவர்கள் அல்லது "சத்' குடும்பத்தில் பிறந்தவர் என்றால்கூட இப்படிதான் இருக்கும்.
இவர்களுக்கு ஒரு சிறிய ஆலோசனை உண்டு. (கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் என்றால்கூட இதைச் செய்யலாம்.) நாக்கில் "பிள்ளை வளர்ப்பான்' பட்டையை தினமும் (சிறு வயதுமுதல்) கீறல் வேண்டும். சிறு வயதில் செய்யத் தவறினால் இப்போதுகூட செய்துகொள்ளலாம். அல்லது ஒரு பிள்ளை வளர்ப்பான் பட்டைத் துண்டை பையில் வைத்துக்கொள்ளலாம்.
இவர்களை ஒதுக்கித் தள்ளவேண்டிய அவசியமில்லை. இவர்களைவிட்டு நாம் விலகியிருப்பது நமக்கு மட்டுமல்ல;
அவர்களுக்கும் நல்லதே.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172