ஒரு நிகழ்ச்சிக்குப் போயிருந்தேன். "வெளிச்சத்திற்கு வாங்க- விசு அய்யர்' என மேடையில் அறிமுகப்படுத்தினார்கள்.
அய்யர் வெளிச்சத்தில்தானே இருக்கிறார்.
அவரை வெளிச்சத்திற்கு வாங்க என எங்கே அழைக்கிறீர்கள் என்று நகைச்சுவையாக சொல்லிவந்தேன்.
அடுத்த வாரம் அய்யர் என்ன சொல்லப் போகிறார் என்ற ஆர்வத்தை ஏற்படுத்தித் தரும், "பாலஜோதிட'த்தின் இந்த சேவை பலருக்கும் சென்று சேர்ந்திருக்கிறது என்ற மகிழ்ச்சியான செய்தியைச் சொல்ல இது ஒரு உதாரணம்;
அவ்வளவுதான்.
"பெயருக்குப் பின்னால் எதற்கு அய்யா ஜாதி'
என கூட்டத்தில் வந்த அன்பர் ஒருவர் கேட்டார். "ஜாதி முக்கியமில்லை என்பதால்தான் அதை பெயருக்குப் பின்னால் போட்டிருக்கிறோம். அதை நாங்கள் உயர்த்திப் பிடிப்பதாக இருந்தால் பெயருக்கு முன்னால் அல்லவா போட்டிருப்போம்' என்று சொல்லி அவரை சமாதானப்படுத்தினேன்.
ஜாதி ஒழியவேண்டுமென பேசுபவர்களும் சரி; மற்றவர் களும் சரி- "அய்யர்' என்பது ஜாதி யென பலரும் நினைத்துக்கொண்டிருக் கிறார்கள். வெளிப்படையாக சொல்ல வேண்டுமென்றால், ஒழுக்கத்தில் சிறந்தவர்களை "அய்யர்' என்று சொல்வார்கள். "உயர்ந்தோர்' அல்லது "பெருமையில் சிறந்தோர்' என்றுதான் உலகப் புகழ்பெற்ற வின்ஸ்லோ அகராதியும் சொல்கிறது.
முந்தையநாளில் பிராமண குலத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கத்தில் சிறந்திருந்ததால், பிராமண வர்க்கத் தில் வந்தவர்களை "அய்யர்' என சொல்லும் வழக்கம் வந்தது. அது இப்போதும் தொடர்கிறது. எனவே அய்யர் என்பது ஜாதி அல்ல. "பெருமை யில் சிறந்தோர்' என புரிந்து கொள்ளுங்கள்.
இப்படி அந்த நிகழ்ச்சியில் பேசியதும், "இதற்கு ஆதாரம் என்ன? நீங்கள் எதையாவது சொல்லிவைத்து விட்டுப் போகிறீர்கள் என்ற சந்தேகம் எங்களுக்கு வராதா?' என கூட்டத் தில் இருந்தவர்கள் கேட்க, ஆதார மில்லாமல் அய்யர் பேசுவாரா என சில எடுத்துக்காட்டுக்களை வைத்தேன்.
திருத்தொண்டர் தொகை என்னும் பெரியபுராணம் என்ற நூல், சைவத் திருமுறைகள் பன்னிரண்டில், பன்னிரண்டாம் திரு முறையாக வைத்துப் போற்றப்படுகிறது. இதன் ஆசிரியர் சேக்கிழார்.
இந்த நூல் சைவ அடியார்கள் அறுபத்து மூவரைப் பற்றியது என தமிழறிந்த நல்லுலகம் அறியும். இதில் ஆசிரியர், பிராமண வர்க்கத்தில் அல்லாத ஐந்து பேரை "அய்யர்' என்றே சொல்லி அழைத்திருப் பார்.
"என்ன சாரே.! சோதிடத்திலும் வருணா சிரமமா?' என்று சத்தியராஜ் பாணியில் சிலர் கேட்க வருகிறீர்கள்; புரிகிறது. அதுதான் இந்த வார சிந்தனையாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள வந்தது.
சோதிடத்தில் நவகிரகங்களில் வருணா சிரம பாகுபாடு உண்டு. வருணாசிரமம் என்பது ஜாதியைக் குறித்தோ ஒரு குலத் தைக் குறித்தோ வந்ததல்ல. பிற்காலத்தில் வந்தவர்கள் அதை அப்படி மாற்றிவிட்டார் கள் என்பது வேறு சிந்தனை. அதை வேறொரு சமயத்தில் சிந்திக்க வைத்துக்கொள்வோம்.
ஒரு வேலையைப் பகுத்துச் செய்வ தென்பதை இன்றைய நடைமுறைக் கேற்ப புரிந்துகொள்ளுங்கள். இதை உண்ஸ்ண்ள்ண்ர்ய் ஞச் கஹக்ஷர்ன்ழ் என்று ஆடம் ஸ்மித் கோட்பாடுகளை, பொருளாதரத்தில் நமக்கு சொல்லித் தந்திருப்பார்கள். இந்த வேலைப் பகுப்பு முறையைதான் அன்றையநாளில் வர்ணங்களாகப் பிரித்துத் தந்திருக்கிறார்கள். வர்ணங்கள் என்பது பிரித்துக் காட்டும் நிறமென புரிந்துகொள்ளுங்கள்.
இன்றையநாளில் அரசு அலுவலகங்கள் உட்பட கிளாஸ் 1- ஆபிசர் என தொடங்கி கிளாஸ் 4 வரை பிரித்து வைத்திருப்பார்கள். ஒரு வேலையை இப்படி பகுக்காமல் செய்யமுடியுமா சொல்லுங்கள்.
"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து
அதனை அவன் கண் விடல்'
என வருணாசிரமத்தைதான் வள்ளு வரும் சொல்கிறார் என்றால் நமக்கு வியப் பாகத்தானே இருக்கிறது.
இந்த வகையில் பிரித்துச் சொல்லப் பட்டதே வருணாசிரமம் என்பது என்ற அடிப்படையைத் தெரிந்துகொண்டு அடுத்த கட்டத்திற்குப் போகலாம்.
சோதிடத்தில், பிராமணர் என்ற பிரிவில் வரும் கிரகங்கள் தேவ குருவான வியாழனும், அசுர குருவான சுக்கிரனும். க்ஷத்திரியர் என்ற பிரிவில் சூரியனும், செவ்வாயும். வைசியர் என்ற பிரிவில் சந்திரனும், புதனும். நான்காம் வருணத்தவர் என்ற பிரிவில் சனியும், பிற மதத்தவர் என்ற பிரிவில் ராகுவும் கேதுவும் அமைத்துக் கொடுத்துள்ளார்கள்.
ஒரு ஜாதகத்தை அலசும்போது, இந்த குறிப்புகளை வைத்துப் பலன்சொல்ல எடுத்துக்கொள்வதும், அவரவரின் இயல்பு நிலையை எடுத்துச்சொல்வதும் சோதிடர் களுக்கும், சோதிட ஆர்வலர்களுக்கும் தனியாக எடுத்துச்சொல்ல வேண்டிய அவசியமில்லை.
ஒழுக்கத்தில் சிறந்தவர்கள் பிராமண குலத்தைச் சேர்ந்தவர் என்பதால், குரு பார்க்க பாவம் போகும் என்பார்கள்.
அரசுத் துறைக்கென சோதிடம் அடையாளம் காட்டும் கிரகம் சூரியனும் செவ்வாயும் க்ஷத்திரிய பிரிவில் வருவார்கள்.
"அதெல்லாம் சரிங்க; நாட்டை-
அரசை ஆட்சிசெய்வது யார்?' என்ற
அடுத்த கேள்வி உங்கள் மனதில் வந்திருக்கும். அதற்குத் தமிழே பதிலும் சொல்லும். ஔவையாரின் இந்தப் பாடலைப் பாருங்கள். இதன் பொருளை விக்கிபீடியாவில் தேடி சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
"நூல் எனிலோ கோல் சாயும்
நுந்தமரேல் வெஞ்சமராம்
கோல் எனிலோ அங்கே குடிசாயும்-
நாலாவான் மந்திரியும் ஆவான்
வழிக்குத் துணையாவான்
அந்த அரசே அரசு!'
ஒரு அமைச்சரவையில், முப்புரிநூல் அணிந்தவர் (அந்தணர்) என்றால் நீதி தவறும்.
உன் உறவினர் (க்ஷத்திரியர்) என்றால் கொடிய போரினை மூட்டிவிடுவார்கள். சண்டை வரும்.
வைசியன் என்றால் மக்களுக்குத் துன்பம் வரும்.
எனவே நான்காம் வர்ணத்திலே வருபவனே நல்ல மந்திரி என்றும், அரசநெறிக்கு உற்ற துணையாக விளங்கு வான்; அவனைத் துணையாகக் கொண்டதே நல்ல அரசாகவும் இருக்கும் என்று ஔவை யார் பாடி வைத்திருக்கிறார்.
இது சோதிட சிந்தனைக்கு எப்படி ஏற்புடையதாக உள்ளது என பாருங்கள். கர்மகாரகன் என்று சொல்லும் சனிதான் நம்மை நேர்ப்படுத்தி நமது வாழ்க்கையை ஆட்சிசெய்யும் கிரகம் என்பதை சோதிட அன்பர்கள் புரிந்துகொள்வார்கள்.
இதே சிந்தனையில் பத்ரகிரியாரும்,
"சாத்திரத்தைச் சுட்டு சதுர் மறையைப் பொய்யாக்கிச்
சூத்திரத்தைக் கண்டு துயரழிப்பது எக்காலம்?'
என பாடுகின்றார்.
பிற சமயத்தைக் குறித்துக் காட்டும் சர்ப்ப கிரகங்களுக்கு பார்வையில்லை என்றும், மற்ற கிரகங்களுக்குக் பார்வையை அமைத்து வைத்திருப்பதும் சோதிட சிந்தனையை நமக்கு விளக்கிக் காட்டுகிறதல்லவா..?
அதனால் எந்த வருணத்தவரையும் வெறுக்காமல், அவரவர்களுக்குள்ள நல்ல உயர்வான குணங்களை எடுத்துப் பாராட்டி அன்பு காட்டிப் பழகுங்கள். நவகிரகங்கள் நல்லனவே செய்யும். இறையன்பர்களுக்கு அவை நல்லனவே செய்யும்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172