"சார், ஒரு சந்தேகம்' என்று ஒருவர் வந்தார். ஒரு நிமிடம் அவர் சிந்தனையைப் பார்த்து வியந்துநின்றாலும், இவர்களுக்கும் புரியும்படி சொல்லித்தானே ஆகவேண்டும் என சிந்திக்கத் தொடங்கியதுதான் இந்த வார சிந்தனை.
சோதிடம் ஒரு கடல்; சாஸ்திர ஞானம் ஒரு கடல். இந்தக் கடலில் நீந்திக்கொண்டி ருப்பவர்கள் சந்தேகத்தை எதிர்கொள்ளாமல் இருக்கமுடியுமா? கற்பதும், பின் தெளிவு பெறுவதும், சந்தேகம் எழுவதும், மீண்டும் கற்பதும் என இது ஒரு தொடர் பயிற்சிப் பயணம்.
"இன்று புதிதாய்ப் பிறந்தோம்' என பாரதி சொல்வதுபோல, இன்று புதிதாய்க் கற்றுக்கொண்டோம் என ஒவ்வொரு நாளும் ஒரு சிந்தனை, ஒரு அனுபவம் என அமைந்து விடுகிறது.
"சரிங்க ஐயா, அந்த நபர் கேட்ட சந்தேகம்தான் என்ன? சொன்னால் நாங்களும் தெரிந்துகொள்வோமே' என்று காத்திருக்கும் உங்கள் ஆர்வம் புரிகிறது.
"இறந்தவர்களுக்கு மறுபிறப் பில்லை என்று நம்பும் சில சமயத்தைச் சேர்ந்தவர்களுக்கு மஹாளய பக்ஷ தர்ப்பணம் போன்றவை எப்படி பொருந்துவனவாக இருக்கும்? அறம் சொல்ல வேண்டுமென்றால் அது அனைவருக்கும் பொதுவாகத்தானே இருக்கவேண்டும்' என தொடங்கினார்.
"அன்பு இல்லை' என்று சொல்லக்கூடிய சமயம் ஏதாவதொன்றைக் காட்டுங்கள் பார்க்கலாம் என கேட்ட அடுத்த வினாடி வாயடைத்துப்போனார். எந்த சமயத் தவராக இருந்தாலும் மூன்று விஷயங்கள் உண்டு. அவை, அன்பு செலுத்துதல், நன்றி யறிதல், இறையுணர்தல்.
இதில் நன்றியுணர்தலே பித்ருக் கடன். வழிபாட்டுச் சடங்கு முறைகள்தானே தவிர வேறில்லை. எல்லா மதத்தினருக்கும் இதுவுண்டு. மஹாளய பக்ஷத்தில் வரும் ஒவ்வொரு திதிகளுக்குமே ஒரு சிறப்புண்டு. அதற்கான பலனுமுண்டு. அதிலும் முக்கியமாக, மஹா பரணி, மத்யாஷ்டமி, அவிதவா நவமி, மஹா வியாதீபாதம், மஹா திரயோதசி என நிறைய இருக்கின்றன.
அதனால்தான், பித்ரு தோஷம், பித்ரு சாபம், பிரேத தோஷம், சாபம் என சோதிடர்கள் ஜாதகத்தைப் பார்த்து சொன்னபிறகு, குறிப்பிட்ட திதியைக் குறித்துத் தந்து, மஹாளய பக்ஷத்தில் இந்த திதியில் முன்னோர் வழிபாடு செய்ய பரிகாரமாகச் சொல்வார்கள்.
"மறந்ததை மஹாளயத்தில் விடு' என்று ஒரு சொல்லடை உண்டு. இது சொல்லவரும் பொருள் என்னவென்றால், பெற்றோர்களுக்கு அந்த ஆண்டில் திதி தர்ப்பணம் தர மறந்துவிட்டால் மகாளயத்தில் (எள்ளும் தண்ணீரும் வைத்து) தர்ப்பணம் விடு என்பதுதான். இதை இன்றைய நாளில் வேறுவிதமாக மாற்றிச் சொல்கிறார்கள்.
ஆக, இதுவரை மறைந்த பெற்றோர்களுக்குத் தர்ப்பணம் செய்யாமல் இருந்தாலும் இந்த மஹாளய பக்ஷத்தில் செய்தே ஆக வேண்டும். நமது கலாச்சாரத்தில் முக்கியமாக மூன்று அமாவாசைகளைக் குறித்துச் சொல்வார்கள், அது ஆடி அமாவாசை, தை அமாவாசை, புரட்டாசி மாதம் வரும் மஹாளய அமாவாசை என்பதேயாகும். இது குறித்து விரிவான விளக்கங்களை இன்னொரு வாய்ப்பில் சிந்திப்போம்.
"சரி; இதுநாள் வரையில் இதைப் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. நீங்கள் சொல்வது மனதைத் தைப்பதுபோல இருக்கிறது. இப்போது இந்த ஆண்டில் மகாளய பக்ஷத்திலும் மஹாளய அமாவாசை யின்போதும் திதிகொடுக்கப் போகிறேன்' என்று சந்தேகம் கேட்க வந்தவர் வேகமாக ஆர்வமாக எழுந்தார்.
"கொஞ்சம் பொறுங்கள்' என்று அவருக்கு மேலும் சில செய்திகளைச் சொன்னேன்.
சிரார்த்தம் தரும்போது, உங்களுக்கு வசதியான நேரத்தில் தருவது (ஆபீஸ் போவது, வீட்டி லுள்ள அரசிகளின் சவுகரியம் என இப்படி) சரிதான் என்றாலும், அது சரியல்ல.
அபாரன்ன காலத்தில்தான் சிரார்த்தம் தர வேண்டும். இதையொட்டிதான் மகாபரணி, மகா திரயோதசி போன்ற திதிகள் வரும்.
அபாரன்ன காலம் என்பது பஞ்ச காலங்களில் ஒன்று. ராகுகாலம், குளிகன், நல்லநேரம், முகூர்த்த நேரம்போல சிரார்த்தம் செய்வதற்கு தரப்பட்ட நேரம்தான் இது. பொதுவாக இது தினமும் தோராயமாக இரண்டு மணி நேரம்- தோராயமாக மதியம் 1.30 மணிமுதல் இருக்கும். இந்த அபாரன்ன காலத்தில் பரணி நட்சத்திரம் வந்தால் அது மகாபரணி. இது பொதுவாக சதுர்த்தி அல்லது பஞ்சமி திதியில் வரும். ஆனால் மகாபரணி சிரார்த்தம் செய்பவர்கள் திதியைப் பார்க்காமல் அபாரன்ன காலத்தில் வரும் பரணி நட்சத்திரத்தைப் பார்த்தாலே போதும்.
"சிரார்த்தம் செய்வதற்குக்கூட நேரம் இருக்குதா?' என்று சந்தேகம் கேட்கவந்தவர் ஆச்சரியமாகப் பார்த்தார்.
இதேபோலதான் எந்த தினத்தில் திரயோதசியும் மக நட்சத்திரமும் வருகிறதோ, அதுவே மகா திரயோதசி என்று சொல்லி முடிப்பதற்குள், ஒரு வழியாக ஒரு பெரு மூச்சு விடும்படி இருந்தது. அவ்வளவு விஷயம் இருப்பதால் இத்தனையும் சொல்லவேண்டியது இருக்கிறது.
இதிலும் தனிஷ்டையில் இறந்தவர் களுக்கென்று சிறப்பாக இந்த பக்ஷத்தில் செய்யவேண்டும். அதாவது ஒருவர் எந்த நட்சத்திரத்தில் இறந்துபோகிறார் என்பதிலிருந்து இந்த கணக்கு வரும். இதுபோன்ற விரிவான விளக்கங்கள் மற்ற சமயங்களில் இல்லை என்பதால்தான், அவர்கள் சொல்லும் அந்த தீர்ப்பு நாள் வேறுமாதிரி சொல்லப்படும்.
"நமது சமய சிந்தனைகளே நிறைய உள்ளன. அவற்றை முதலில் தெரிந்துகொள்ளுங்கள். அப்புறம் அடுத்தவர்களைப் பற்றி யோசிக்க லாம்' என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தேன்.
இவ்வளவு தூரம் மஹாளய பக்ஷம் பற்றி சொன்னீங்க ஐயா. எல்லாருக்கும் பயன் தரும்படி இதை வைத்து ஒரு சோதிடக் குறிப்பு சொல்லி நல்லதா நாலு வார்த்தை சொல்லுங் களேன்' என்று, கிளம்பும் முன் அவர் கேட்டதால், "பாலஜோதிட' வாசகர்களுக்கும் அது பயன்படுமே என அதையும் பகிர்ந்து கொள்கிறேன்.
கஜச்சாய யோகம்தான் அது. என்ன அது கஜச்சாய யோகமென்று தலையை சொரியவேண்டாம். இந்த யோகம் எல்லா வருடமும் வருவதில்லை. இந்த யோகத்தில் வரும் நாளில் செய்யும் தர்ம காரியங்கள் அபரிமிதமான நற்பலன்களை செய்யவல்லது. இதுபோன்ற யோக நாள் என தெரியாமல் அன்று செய்த பித்ரு காரியங்களினால், மிகப்பெரிய பலன்களைப் பெற்றவர்களையும் நாம் பார்த்திருக்கலாம்.
சரி; அது என்ன கஜச்சாய யோகம் என்று பார்ப்போம். சூரியன் ஹஸ்த நட்சத்திரத்திலும், சந்திரன் மக நட்சத்திரத்திலும் இருக்க, அன்று திரயோதசி திதியும் சேரும்போது இந்த யோகம் ஏற்படுகிறது. ஒளி கிரகமான சூரியனும் சந்திரனும் சேர்ந்து ஹஸ்த நட்சத்திரத்தில் தோன்றினாலும் இந்த யோக அமைப்புண்டு. இந்த யோகம் இந்த ஆண்டு செப்டம்பர் 23-ஆம் தேதி வருகிறது. இதை வாசக அன்பர்கள் பஹந்ங் ஐர்ம்ங் ஆக வைத்துக்கொண்டு நற்பலனைப் பெற்று வளமாக வாழ பிரார்த்தனை செய்கிறோம்.
இந்த யோகம் பகலில் அமைந்தால் மட்டுமே வலிமையுடையது என்பதை நீங்கள் சொல்லாமலே தெரிந்துகொள்வீர்கள் என நம்புகிறோம்.
உங்களுக்காக முக்கியமான நாட்களைப் பட்டியலிட்டுத் தந்திருகிறோம். நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172