"சார்... நான் கணக்கில கொஞ்சம் வீக்...' என்று சொல்லும் நபரா நீங்கள்? 'பட்டனைத் தட்டினால் சோதிடக் கட்டம் வந்துவிடுகிறது. அப்புறம் எதுக்கு சார் கணக்கெல்லாம். கண்கட்டி வித்தை போல அஷ்ட வர்க்கம், தச வர்க்கம் என ஒன்று விடாமல் நொடியில் கிடைக்கிறதே...' என்று சொல்கிறீர் கள்; புரிகிறது.
முன்பே சொன்னதுபோல வாழ்க்கையோடு ஒன்றிப் பிணைந்ததுதான் சோதிடம். இது சோதிட மென்று தெரியாமல் நாம் அதைப் பயன்பாட்டில் வைத்திருக்கிறோம் என்பதுதான் உண்மை.
இன்றைய நாளில் நமக்கு அடிப்படை மின்சாரக் கணக்கு தெரிந்திருக்கவேண்டிய அவசியம் வந்து விட்டது. தமிழகத்தில் மின் கட்டணம் உயரப் போகிறதோ இல்லையோ... எப்படியாவது மின் கட்டணத் தைக் குறைக்க வேண்டும் என்ற முயற்சியில், சோலார் போடலாமா என்று அவரவர் யோசிக்கத் தொடங்கி விட்டார்கள்.
"பெட்ரோல் விலையைப் பார்த்து பயந்து பேட்டரி வண்டிக்கு மாறுவதுபோல' என்று நீங்கள் சொல்லவருவது காதில் விழுகிறது. நாம் அந்தப் பிரச்சினைக்குப் போகவேண்டாம்.
இந்த சோலார் கணக்கு என்று தொடங்கியதும், யர்ப்ற், ஆம்ல்ள், ரஹஹற் என கணக்கிட்டு, எத்தனை வாட் சோலார் பேனல் போடவேண்டும் என்று கணக்குப்போடத் தொடங்கினால், வோல்ட், ஆம்ப்ஸ், வாட் இதெல்லாம் என்ன என்று சொல்ல வேண்டும்.
அதை இன்னொரு சமயத்தில் சிந்திப்போம்.
தற்போது சுலபமாகப் புரிந்துகொள்ள சின்ன விஷயத்தை எடுத்துக்கொள்வோம். ஒரு பிளக் வயரைப் பாருங்கள். அதில் இரண்டு வயர் நிச்சயம் இருக்கும். ஒன்று கருப்பு; இன்னொன்று சிவப்பு. கருப்பு வயர் நெகடிவ் என்றும், சிவப்பு வயர் பாசிடிவ் என்றும் சொல்வார்கள். இந்த இரண்டும் இருந்தால்தான் பல்பு ஒளிரும் அல்லது மின்சாதனப் பொருள் வேலை செய்யும்.
சோதிடத்தைக்கூட எடுத்துக்கொள்ளுங்கள். கருப்புதான் சனி; சிவப்புதான் செவ்வாய் என்பதை அதன் நிறத்திலிருந்தே புரிந்துகொள்ள முடியுமல்லவா?
இப்போது கருப்பு, சிவப்பு (நீங்க வேற எதையாவது நினைக்கப் போறீங்க.) அதாவது நெகடிவ் மற்றும் பாசிடிவ் இரண்டையும் ஒரே இடத்தில் கொடுத்துப் பாருங்கள். உடனே ஃப்யூஸ் போய்விடும் அல்லது வெடித்துவிடும் அல்லவா?
ஒரு ஜாதகத்தில், சனியும் செவ்வாயும் சேர்ந்தால் விபத்து ஏற்படும் இல்லையா. (சனியின்மேல் கோட்சார செவ்வாய் என்று சொன்னால் தெளிவாகப் புரியும்.) இவ்வளவுதான் சோதிட சிந்தனை என்றால், இயல்பு நிலையில் ஒரு சோதிடக் குறிப்பை எத்தனை சுலபமாக வைத்திருக்கிறார்கள்! இதுபோன்ற சோதிடக் குறிப்புகளை மனதில் பதித்துவிட்டால் ஜாதகத்தைப் பார்த்தவுடன் அல்லது கோட்சாரத்திலுள்ள கிரக நிலைகளைப் பார்த்தவுடன் இதை சொல்லமுடியும் அல்லவா.
"நியூட்ரல் என்று ஒன்றிருக்குமே... அது என்ன?' என்று கேட்க வருகிறீர்கள். அது மஞ்சள் நிறத்தில் இருக்கும். அதுதான் புதன்.
புதனுக்குரிய நிறம் மஞ்சள், செவ்வாய்க்குரிய நிறம் சிவப்பு, சனிக்குரிய நிறம் கருப்பு மற்றும் அடர் கருநீலம் என்பதை சொல்லித்தானா உங்களுக்குத் தெரியவேண்டும்.
"குருதானே மஞ்சள்? நீங்கள் புதன் என்கிறீர்களே' என்னும் சந்தேகம் வந்திருக்குமல்லவா? நீங்கள் எண்ணுவது சரிதான். இதற்கு அறிவியல் சிந்தனையை சொன்னால்தான் புரியும்.
மஞ்சள் என்பது ஒரு இரண்டாம் தர நிறம். (Secondary Colour.)சிவப்பு நிறத்தின் தன்மையும் பச்சை நிறத்தின் தன்மையும் ஒரே இன்டென்சிட்டியில் (Intensity)வெளிப்படும்போது அது மஞ்சள் நிறமாக வெளிப்படும். இதுதான் ஆர்ஜிபி(RGB)விதி.
இங்கே மின்சக்தி உள்ள செவ்வாய் சிவப்பு நிறத் திற்குரியவர். பச்சை நிறத்துக்குடைய புதனுடன் சேரும் போது மஞ்சளாக வெளிப்படும். அதனால் மேற்படி விளக்கத்தில் புதனை மஞ்சளாக எடுத்துக் கொள்ளப் பட்டதே தவிர, புதன் பச்சை என்பதில் மாற்றுக் கருத்தில்லை.
அறிவியல் உண்மைகள் சிலவற்றை சொல்லும்போது அந்த கோணத்திலேயே நாம் அணுகவேண்டும்.
அப்போதுதான் அது விளங்குமல்லவா? அதனால்தான் அவ்வாறு சொல்லப்பட்டது. சரிதானே? இப்போது ஏற்புடையதாக உள்ளதுதானே? இதெல்லாம் சரி. ஆனால், நமக்கு Take Home என்பதுபோல இந்த கணக்கை வைத்து ஏதாவது சொல்லக் கூடாதா என்று யோசிக்கிறீர்கள். உங்களுக்காகதான் இந்த வார சிந்தனை.
ஒரு பேப்பரையும் பேனாவையும் எடுத்துக் கொள்ளுங்கள். "இப்போ எங்கே சார் அதெல்லாம்? எல்லாம் தடவிப் பார்க்கிற செல்போன்தான்' என்று சொல்பவராக நீங்கள் இருந்தால், அதில் கால்குலேட்டர் பக்கத்தைத் திறந்துகொள்ளுங்கள்.
உங்கள் பிறந்த ஆண்டை எழுதிக்கொள்ளுங்கள். உதாரணமாக 1990. அந்த தொகையைக் கூட்டிக்கொள்ளுங்கள். (1+9+9+0=19). அந்த தொகையை பிறந்த ஆண்டுடன் கூட்டிக்கொள்ளுங்கள். அதாவது 1990+19=2009. இப்போது ஃபிளாஷ் பேக் ஒட்டிப்பாருங்கள். அந்த ஆண்டு உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனையைத் தந்திருக்கும். "அட ஆமாங்க..!' என்று சொல்லவருகிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள்...
இந்த 2009-ஐக் கூட்டினால் 11 வரும். அதையும் 2009-ஐயும் கூட்டுங்கள். அதாவது 2009+11=2020. மறுபடியும் இந்த 2020-ஆம் ஆண்டில் உங்கள் வாழ்க்கையில் திருப்புமுனை ஏற்பட்டிருக்கும்.
இதேபோல கூட்டிக்கொண்டே போனால் அடுத்த திருப்புமுனை எப்போதென்று நீங்களே தெரிந்து கொள்ளலாம். இந்தக் கணக்கு எட்டு முறைவரை சரியாக வரும்.
இந்தக் கணக்கைத் தெரிந்துகொண்டால் முதலில் சொன்ன சோலார் கணக்கை சுலபாகப் புரிந்து கொள்ள முடியும். அதாவது ஒரு மின்சாதனத்தின் வாட் என்பது, வோல்ட் மற்றும் ஆம்ப்ஸ் ஆகியவற் றின் பெருக்குத்தொகையே ஆகும். ஆக, எத்தனை வாட் சோலார் பேனல் போடுவது என்ற கணக்கைத் தெரிந்துகொள்ள, எவ்வளவு லோடு நாம் பயன்படுத்தப் போகிறோம் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும்.. அதாவது 200 வாட் பயன்பாட்டின் அளவு என்றால் 300 வாட் சோலார் பேனல் தேவை.
இந்த சோலார் பேனல், நீல நிறத்தில் (Polycrystalline) அல்லது கருப்பு நிறத்தில் (Monocrystalline) வரும். இந்த இரண்டுமே கர்ம காரகனான சனியின் காரகத்துவ அமைப்பில் வரும். சூரியனும் சனியும் பகை என்பது நமக்குத் தெரிந்த விஷயம்தான். இதை வைத்து சோலார் பேனல் கொண்டு எப்படி மின்சாரம் கிடைக்கிறது- உபயோகிக்கும் பொருட்கள் எப்படி செயல்பாட்டில் வருகின்றன என்ற சோதிட சிந்தனையை இணைத்து சிந்தித்துதான் பாருங்களேன்... மற்றவை உங்களுக்கே புரியும்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172