அதுவொரு இரவு நேரம்.
அவசர அவசரமாக சாப்பிட்டுவிட்டு அவள் கிளம்பினாள். அவள் தங்கியிருந்த அறை இரண்டாவது மாடியில்.
யாரோ பின்னாலிருந்து Follow-up செய்வதுபோல உணர்ந்ததால், அவள் லிஃப்ட் பயன்படுத்தாமல் மாடிப்படி வழி யாக ஏறிச்செல்ல முடிவுசெய்து, படிக்கட் டில் கால்வைக்கத் தொடங்கினாள்.
அவள் நினைத்ததுபோலவே ஒரு உருவம். கறுப்பு நிறத்தில் ஜீன்ஸ் பேன்ட், வெள்ளை நிறத்தில் டி ஷர்ட்... அந்த டி ஷர்ட்டில் நீல நிறத்தில் ஆங்கிலத்தில் ஏதோ எழுதியிருக்கிறது. இருட்டில் என்ன எழுதியுள்ளது என சரியாகத் தெரியவில்லை.
அவள் உயரமான செருப்பு அணிந்திருந்ததால், அவள் ஒவ்வொரு படிக்கட்டிலும் கால் வைக்கும்போதும், "டொக்... டொக்' என்ற சப்தம். அது காலணி யின் சப்தம்தான். அதன் எதிரொலிபோல் இன்னொரு "டொக்... டொக்...'
நிச்சயம் அது அந்த ஜீன்ஸ் போட்ட உருவத்தின் ஷூ சப்தம்தான். அவள் பயந்துபோய் அவசரமாக அறைக்குப் போய் கதவைத் தாழிட்டுக்கொண்டாள். சிறிது நேரத்தில் மறுபடியும் "டொக்... டொக்...' இது கதவைத் தட்டும் சப்தம்.
பயந்தபடியே கதவைத் திறக்கலாமா வேண்டாமா என்று யோசித்து, சிறிது நேரத்திற்குப்பிறகு மெதுவாகக் கதவைத் திறந்தவளுக்குக் காத்திருந்தது ஒரு பெரிய அதிர்ச்சி! அவ்வளவுதான்...
மறுநாள் காலையில் தலைப்புச் செய்தி. "பிரபலமான இன்னார் மரணம். அது கொலையா- தற்கொலையா என விசாரணை நடந்துகொண்டிருக்கிறது. பிரேதப் பரிசோதனைக்குப்பிறகுதான் முழு விவரம் தெரியும்' என்று சஸ்பென்ஸ் தருவதுபோல செய்தி.
உங்களைக் கொஞ்சம் தட்டி எழுப்பிக் கொள்ளுங்கள். இது க்ரைம் கதையல்ல. இதுபோல செய்திகள் பல இடங்களிலிருந்து நாம் விரும்பாவிட்டாலும் நம்வீட்டுத் தொலைக்காட்சிப் பெட்டியிலும் செய்தித் தாள்களிலும் வந்துகொண்டுதான் இருக்கின் றன.
அது சரியா தவறா என்று சொல்வது நம்ம வேலையல்ல. எந்த மரணத்தைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்வதும் நமது நோக்கமல்ல.
ஒரு ஜாதகத்தைப் பார்த்து, எதிர்கால சம்பவங்களைச் சொல்கிறோம். திருமணம், தொழில் மற்றும் மருத்துவ சோதிடம் என பல நிலைகளில் சோதிடம் சொல்லப்படுகிறது.
ஆனால், தொடர்ந்து இதுபோல பல செய்தி கள் வந்துகொண்டிருப்பதால், துப்பறியும் துறையில் இந்த சோதிடக் குறிப்புகள் உதவியாக இருக்குமா? அது எப்படியென்று சொல்லமுடியுமா என்று சிலருக்கு சிந்தனை வரலாம். அவர்கள் சிந்தனைக்கு பதில் தருவதற்குதான் இந்த வார செய்தி.
ஆண்டாண்டு தோறும் அழுதுபுரண்டா லும் இறந்தவர் மீண்டுவரப் போவதில்லை. பிறப்பென்று ஒன்று இருக்கும்போது நிச்சயம் இறப்பும் வந்தேதீரும். அது எப்போது- எப்படி என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கும்.
பொதுவான நிலையில் ஒரு மரணம் ஏழு வகையில் வரலாம். அவை, 1. இயற்கையாக சம்பவிக்கும் மரணம். 2. கொலையால் வரும் மரணம். 3. தற்கொலையால் வரும் மரணம். 4. விபத்தில் சம்பவிக்கும் மரணம். 5. கூட்டு மரணம் (ஙஹஹள் உங்ஹற்ட்). 6. அரசு தண்டனையால் மரணம். 7. மருத்துவ சிகிச்சையில் மரணம்.
இதைப் பொதுவாக மரணம்- துர்மரணம் என்ற இரண்டில் அடக்கிவிடலாம். என்றா லும் தனித்தனியாக சொல்வதுதான் சோதிடக் குறிப்பின் அடுத்த நிலை.
ஒரு மரணம் சந்தேகத்தின் பார்வையில் நடந்துவிட்டால், இறந்த அந்த உடலை மருத்துவரீதியில், துப்பறியும் பார்வையில் உடற்கூறு ஆய்வு (போஸ்ட் மார்டம்) செய்வார்கள். அவர்கள் தரும் ரிப்போர்ட், மேல்விசாரணை செய்ய உதவியாக இருக்கும். நீதிமன்றத்தில் இது சாட்சியாகவும் பல சமயங்களில் செயல்படும்.
சோதிடப் பார்வையில் இதைச் சொல்லவேண்டும் என்றால், குறிப்பாக சில சிந்தனைகளை மட்டும் தருகிறேன்; சரியாக உள்ளதா சொல்லுங்கள்.
பொதுவாக சோதிடத்தில் பிரேத தோஷம், பிரேத சாபம், பித்ரு சாபம், பித்ரு தோஷம், தனிஷ்டை என பல நிலையில் சொல்வார்கள். ஆனால், ஒரு மரணம் கொலையா? தற்கொலையா என்று சொல் வதற்கு நமக்கு கைகொடுக்கும் கிரகங்கள் சனி, ராகு, செவ்வாய் மற்றும் புதன்.
புதன் வந்தால் அது தற்கொலையாக இருக்கும். சனி, ராகு, செவ்வாய் வந்தால் அது கொலையாக இருக்கும். ராகுவுக்கு பதில் கேது வந்தால், கொலையைத் தற்கொலையாக திரித்துச் சொல்வார்கள். மற்றவர்களையும் அப்படியே நம்பவைத்து விடுவார்கள்.
சரி; இதை எப்படி ஜாதகத்தில் பொருத்திப் பார்ப்பதென்று கேட்கவருகிறீர்கள்; புரிகிறது. இறந்தவரின் ஜாதகத்தை வைத்து அவர் எப்படி இறந்திருப்பார் என்று சொல்வதுபோல, "புண்ணிய சக்கரம்' போட்டு, அடுத்து இந்த ஆவி என்னவாக இருக்குமென்று சொல்லும் முறையும் நமது வழக்கத்தில் உண்டு.
சம்பவம் நடந்த அன்றைய கோட் சாரத்தையும் துணையாகக்கொண்டு, ஒரு மரணம் கொலையா? தற்கொலையா என்று சொல்லிவிடலாம். சட்டரீதியாக நிரூபணம் செய்ய வேறுபல முறைகள் இருந்தாலும், சோதிடப் பார்வையில் இதை இப்படி சிந்திக்கலாம்.
செவ்வாய், ராகு, சனி தொடர்பிருந்தால், அது கொலை மரணமாக இருக்கும். இதுபோன்ற துப்பறியும் சோதிட முறையை அனுபவம்பெற்ற சோதிடரால் மட்டுமே சொல்லமுடியும். எனக்கு அப்படி இருக்கிறதே என்று யாரும் பயப்படவோ, சந்தேகமாகக் கேட்கவோ தேவையில்லை.
இது ஒரு குறிப்பு; அவ்வளவுதான். இது போன்ற நிகழ்வுகளுக்கு அஷ்டமாதிபதி நிலை, 2 மற்றும் 7-ஆமிடத்தின் நிலை, கோட் சாரத்தில் அஷ்டமாதிபதியுடன் இணைவு பெற்ற கிரகங்கள், அவை அமர்ந்த இடம் என பல நிலையில் வைத்து சிந்திக்கவேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.
இவையெல்லாம் சோதிடப் பார்வையில் சொல்லவரும் செய்திகள்தான். சோதிட ஆர்வலர்களின் ஆய்வுக்கும் அறிவுக்கும் தரப்பட்ட சிந்தனை என்பதை கருத்தில் கொண்டு சிந்தியுங்கள்.
நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172