வெளிச்சத்திற்கு வாங்க (19) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-19-vishu-iyer

சோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ... நமக்கு ஏதாவதொரு கஷ்டம் வந்துவிட்டால், "நல்லதா நாலு வார்த்தை யாராவது சொல்லமாட்டாங்களா.?' என்னும் ஏக்கம் நமக்கு இல்லாமல் இல்லை.

"நானும்தான் பாருங்க... படாத கஷ்டமில்லை. எனக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது' என்று ஏக்கத்தைக் கொட்டாதவர் களும் இல்லை.

சோதிடரைப் பார்த்தவுடன், "சார் எனக்கு இந்த ராசி. எனக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்?' என்று, சோதிடரின் அறிவுத்திறமை, அவருடைய நேரம் எதையும் சிந்திக்காமல், "எனக்கு பலன் சொல்லுங்க' என்று உரிமையுடன் கேட்பவர்களும் உண்டு. சிலர் நேரம் காலமில்லாமல், அவர்கள் ஃப்ரீயாக இருக்கும்போது, சோதிடரும் ஃப்ரீயாக இருப்பார் என நினைத்து போன்செய்து பலன்கேட்கிறார்கள். இதெல்லாம் நாகரிகமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டால்... அடுத்தவர் கஷ்டங்களை நினைத்து வருந்தத் தொடங்கிவிட்டால் வினைப்பயன் குறைந்துவிடாதா என்ன?

dd

இன்னும் சிலர் சோதிடப் பலன்களை இலவசமாகச் சொல்ல வேண்டுமென நினைப்பார்கள். இன்னும் சிலர் அள்ளிக் கொடுக்கு மளவுக்குப் பணமிருந்தாலும் கிள்ளிக் கொடுக்கக்கூட யோசிப்பார் கள். இன்னும் சிலர் சில ஆயிரங்களைக் கொடுத்துவிட்ட

சோதிடத்தில் நம்பிக்கை இருக்கிறதோ இல்லையோ... நமக்கு ஏதாவதொரு கஷ்டம் வந்துவிட்டால், "நல்லதா நாலு வார்த்தை யாராவது சொல்லமாட்டாங்களா.?' என்னும் ஏக்கம் நமக்கு இல்லாமல் இல்லை.

"நானும்தான் பாருங்க... படாத கஷ்டமில்லை. எனக்கு வந்த கஷ்டம் யாருக்கும் வரக்கூடாது' என்று ஏக்கத்தைக் கொட்டாதவர் களும் இல்லை.

சோதிடரைப் பார்த்தவுடன், "சார் எனக்கு இந்த ராசி. எனக்கு வாழ்க்கை எப்படியிருக்கும்?' என்று, சோதிடரின் அறிவுத்திறமை, அவருடைய நேரம் எதையும் சிந்திக்காமல், "எனக்கு பலன் சொல்லுங்க' என்று உரிமையுடன் கேட்பவர்களும் உண்டு. சிலர் நேரம் காலமில்லாமல், அவர்கள் ஃப்ரீயாக இருக்கும்போது, சோதிடரும் ஃப்ரீயாக இருப்பார் என நினைத்து போன்செய்து பலன்கேட்கிறார்கள். இதெல்லாம் நாகரிகமா என்று யோசிக்கத் தொடங்கிவிட்டால்... அடுத்தவர் கஷ்டங்களை நினைத்து வருந்தத் தொடங்கிவிட்டால் வினைப்பயன் குறைந்துவிடாதா என்ன?

dd

இன்னும் சிலர் சோதிடப் பலன்களை இலவசமாகச் சொல்ல வேண்டுமென நினைப்பார்கள். இன்னும் சிலர் அள்ளிக் கொடுக்கு மளவுக்குப் பணமிருந்தாலும் கிள்ளிக் கொடுக்கக்கூட யோசிப்பார் கள். இன்னும் சிலர் சில ஆயிரங்களைக் கொடுத்துவிட்டு குடும்பத் திலுள்ள அத்தனைப் பேருக்கும் ஆயுள் முழுவதும் பலன் சொல்ல வேண்டுமென எதிர்பார்ப்பார்கள். ஒருக்கால் ஆயுள் பலன் சொன்னா லும், அதை அவரே நினைவில் வைத்துக்கொள்ள மாட்டார் என்பது வேறு சங்கதி. "அப்படின்னா... நான் செய்தது சரியில்லைன்னு சொல்றீங்களா?' என்று உங்களுக்குள் சிலருக்கு எண்ணம் வருகிறதா? அவர்களுக் காகதான் இந்த செய்தி.

நீங்கள் கொடுக்கும் சில ஆயிரங் களால், அவர்கள் குடும்பச் செலவுக்கு உதவுகிறீர்கள் என்னும் எண்ணத்தை முதலில் கைவிடுங்கள்.

ஒரு மருத்துவர்போலதான் சோதிட ரும். மருத்துவர் சில ஆண்டுகள் படித்து விட்டு வந்து மருத்துவ ஆலோசனை தருவதுபோல, சோதிடரும் தன் அறிவு, நேரம், உழைப்பு, பணம் இத்துடன், ஆன்மிகப் பயிற்சி மற்றும் தூய ஒழுக்கம் என பல நிலையினைக் கடந்து வந்து சோதிடராக உங்களுக்கு ஆலோ சனை சொல்லவருகிறார் என்னும் அடிப்படையைப் புரிந்துகொள்ளுங் கள்.

ஒரு மருத்துவர், நோய் வந்தபின் மருந்து தந்து உங்கள் நோயைக் குறைப் பதுபோல, ஒரு சோதிடர் அடுத்து எதிர் நோக்கும் சவால்களை அடையாளம் காட்டி அதை எதிர்கொள்ளும் உத்தி யைத் தந்து ஊக்கப்படுத்தி ஆற்றுப் படுத்துகிறார்.

மருத்துவருக்கு பல ஆயிரங்களில் கட்டணம் செலுத்தத் தயங்காதவர்கள், சோதிடருக்கு சில ஆயிரம் தருவதற்கு யோசிக்கலாமா? என்று உங்களுக்குள் கேட்டுப்பாருங்கள்.

அந்த உணர்வு உங்களைத் தட்டியெழுப்பினால் நீங்கள் விழித்துக்கொள்வீர்கள்.

நகைச்சுவை கலந்து பலன்சொல்லும் சோதிடர், வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பதுபோல கச்சிதமாகச் சொல்பவர், உங்களுக்குப் புரியவேண்டுமென்று கதை போல சொல்லி தெளிவுபடுத்துபவர், கால தேச வர்த்தமானம் என்னும் சூழ்நிலையை அனுசரித் துச் சொல்வது- இப்படி அவரவருக்கு ஒரு பாணி இருந்தாலும், ஒரு சோதிடரை சந்தித்து ஜாதகப்பலன் கேட்க என்ன செய்யவேண்டும் என்பதைக் குறித்துக்கொள்ளுங்கள்.

ஒரு சோதிடரை சந்திக்கும்முன் அவரை முன்பே தொடர்புகொண்டு இந்த தேதியில் இந்த நேரத்தில் சந்திக்கவரலாமா என்று நேரம் குறித்துக்கொள்ளுங்கள். அந்த குறிப்பிட்ட நேரத்தில் காலம் தாழ்த்தாமல் உங்கள் முறைப் படி அவரை சந்தியுங்கள்.

ஒருவேளை, அந்த குறித்த நேரத்தில் உங்களால் சந்திக்க இயலவில்லையென்றால், அவரைத் தொடர்புகொண்டு உங்கள் இயலாமையைச் சொல்லுங்கள்.

நீங்கள் கேட்கும் நேரத்தில் அவர் நேரம் தர வில்லையென்றால் அவரைக் கோபித்துக் கொள்ளாமல், அவர் நேரம் தரும்வரையில் பொறுமையாகக் காத்திருங்கள்.

"இதென்ன சார்? நான் காசு கொடுக்கிறேன். அவர் பலன் சொல்லவேண்டியதுதானே?' என்று எடுத்த எடுப்பில் பேசாமல், நீங்கள் கேட்டவுடனேயே அவர் நேரம் குறித்துத் தரவேண்டுமென்று எதிர்பார்க்காதீர்கள்.

உங்கள் நேரம், சரம், ஓரை இப்படி பல சந்தர்ப்பங்களை கருத்தில் வைத்துதான் பொதுவாக சோதிடர்கள் ஜாதகம் பார்க்க ஜாதகத்தைக் கையில் எடுப்பார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். சோதிடரை சந்திக்க நீங்கள் எதிர்ப்பார்த்த நேரம் உங்களுக்குக் கிடைத்துவிட்டால், அவரை சந்திக்கும்போது, பவ்யமாக, அன்புடன், உரிய மரியாதையுடன், குறைந்தபட்சமாக சகஸ்ர தனங்களுடன் தட்சணை கொடுத்துவிட்டு ஆலோசனை கேளுங்கள். இதே மரியாதையையும் அன்பையும் பலன்கேட்டு முடிந்தபின்பும் வெளிப்படுத்துங்கள். உங்களுக்குரிய பலன்கள் சாதகமாக வரவில்லை என்றா லும், இது வினைப்பயன் என்று அமைதி கொள்ளுங்கள்.

பலன்கேட்டு முடித்தபிறகு, அவருக்குரிய கட்டணம் அல்லது தட்சணையைக் கொடுக்காதீர்கள். ஜாதகப் பலன் பார்ப்பதற்குமுன்பே தட்சணையைத் தரவேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

சோதிடம் பார்க்கும் முறையைக் தனியாகவே சொல்லலாம். அதை முழுவதும் கடைப்பிடிக்க முடியாவிட்டாலும், அடிப்படையில், அவரும் நம்மைப்போலதான் என்ற உணர்வுடன் தட்சணை கொடுத்து ஆலோசனை கேட்கவேண்டும் என்பதை உறுதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

அதுசரி; ஒவ்வொரு சோதிடரும் ஒவ்வொருவிதமாகக் கட்டணம் வாங்குகிறார் கள். ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாகப் பலன்சொல்கிறார்கள். இதை எப்படி எடுத்துக்கொள்வது என யோசிக்கிறீர்கள். சரிதான். நான் சொல்வது சரியாக உள்ளதா பாருங்கள்.

உங்களுக்குப் பலன் சொல்லும் சோதிடரின் ஜாதகத்தில் இரண்டாமிடத்தில் கேது- அதுவும் குருவின் காலில் நின்றால், அவர் சொல்வது வேதவாக்கு. அது நிச்சயம் பலிக்கும்; நடக்கும்.

புதாதித்ய யோகம் இருக்கக்கூடிய எல்லா ஜாதகத்திலும் கேது பகவான் இணைவு பெற்றிருந்தால் அந்த சோதிடர் தரும் பலன் கள் சுருக்கமாக "நச்'சென்று இருக்கும்.

பொருள் கோணத்தில் சர்ப்ப கிரகம் இருந்தால் அவர் சொல்லும் பலன்களுக்கு மறுப்பு சொல்பவர்கள் இருக்கமாட்டார்கள். நல்வாக்கு பலிக்கக்கூடிய வாக்கு ஸ்தானமும், பலன் சொல்லும் ஒழுக்கமுறையும் அமைந்துவிட்டால் அந்த சோதிடரை விடாமல், அவருக்கு சேவகம் செய்துகொண்டிருக்க முயலுங்கள்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

(தொடரும்)

செல்: 94443 27172

bala220722
இதையும் படியுங்கள்
Subscribe