"நாம் எத்தனை உண்மையாக இருந்தாலும் சரி; நேர்மையாக இருந்தாலும் சரி; நல்லதே சொன்னாலும் சரி- யாரும் நாம் சொல்வதைக் கேட்பதே இல்லை. ஒரு மரியாதைக்குக்கூட தலையாட்டமாட்டேன் என்கிறார்கள்' என்று அங்கலாய்த்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப்பற்றி இன்னொரு வாய்ப்பில் சிந்திக்கலாம்.
"அது என்னவென்றே தெரிய வில்லை. இவர் சொன்னால் எல்லா ரும் தலையாட்டுகிறார்கள். சொல்வ தெல்லாம் பொய்யென்று தெரிந்தா லும்கூட எந்த லாஜிக்கும் இல்லாமல் அவர் சொல்வதுபோலவே கேட்கிறார்கள்' என்று சிலரைப் பார்த்துச் சொல்லியிருப்போம்.
அவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரிகிறதா?
வாயால் வடை சுட்டு, அதிரசத்தை அட்டையில் வரைந்து "இனிப்பா இருக்கு' என்று சொல்லி, காலி டம்ளரில் காபி எடுத்துக் குடித்து கையையும் தட்டி விட்டு, நம்மையும் கைதட்டச் சொல்லும் அந்த சிலரை நீங்களும் அறிந்திருப் பீர்கள்.
ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தா லும், ஏற்றமிகு குடும்பத்தில் வளர்ந்தா லும், "இதுபோல அதிகாரப் பதவி யில் இருப்பதற்கும், சொன்னால் கேட்டுத் தலையாட்டும் மக்களைப் பெறுவதற்கும் நல்ல யோகம் வேண்டுமப்பா' என்று சொல்வதைக் கேட்டிருக்கலாம்.
"அட ஆமாங்க... அவரைதான் நினைச்சிட்டு இருந்தேன்' என்று நீங்கள் சொல்கிறீர்கள்; புரிகிறது.
யோகம் என்பது சோதிடத்தில் பலநூறு உள்ளன. அவற்றுள் சிலதான் பழக்கத்தில் பலரும் கையாள்வது. அதில் ராஜயோக அமைப்புகொண்ட யோகம் மிகச்சிலதான். அதில் ஒன்றுதான் "சிவராஜ யோகம்.' யோகம் என்பது சேர்க்கை என்னும் பொருள்கொண்டு வரும். ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் சேர்க்கை பெறும் போது, அல்லது பாவத்தன்மை இல்லாத தொடர்புகொள்ளும்போது, ஒளி கிரகங் களின் பார்வை படும்போது அந்த ஜாத கருக்கு இந்த யோகம் சிறப்பான பலனைக் கொண்டு தரும்.
இந்த சிவராஜ யோகம் ஒரு ஜாதகத்தில் அமைவது பொதுவாக சிறப்பானதென்று சொல்லப்படுகிறது. இந்த யோகம் அமைந்து லக்னாதிபதியும் பலமாக அமைந்துவிட்டால், அவரைத் தொட்டுப்பிடிக்க யாராலும் முடியாது.
"அத்தனை பலம்பொருந்தியதா இந்த சிவராஜ யோகம்?' என்று சிந்திக்கிறீர்கள். சரி; இந்த சிவராஜ யோக அமைப்புபெற்ற ஜாதகம் எப்படியிருக்கும்? எனக்கு இந்த யோகம் இருக்கிறதா என்று எப்படித் தெரிந்துகொள்வது என்னும் ஆவல் எல்லாருக்கும் இருக்கத்தானே செய்யும்.
சரிபார்த்துக் கொள்ளுங்கள். குருவும் சூரியனும்தான் இந்த அமைப்புக்கு ஒன்று சேர்வார்கள். கிரகங்களின் தலைமை கிரக மான சூரியனும் ஜீவகாரகனான குருவும் ஒருவரையொருவர் சமசப்தமமாகப் பார்த்துக் கொண்டால் இந்த யோகம் அமையும். இதில் குரு பாவத்தன்மை பெறாமலிருந்தால் பதவியும் அதிகாரமும் தானே வந்துவிடும்.
லக்னம், கேந்திரம் மற்றும் கோணத்தில் இணையும்போது இந்த யோகம் அமைந்து விடுகிறது.
வக்ரம் பெற்ற குரு, ஏழாமிடத்திலிருந்து சூரியன் பார்வை பெற்றாலும் இந்த யோக அமைப்புண்டு. என்றாலும் அதற்குப் பதவியைத் தட்டிப்பறிக்கும் வாய்ப்பும் அமைந்துவிடும்.
"அமைதிப்படை' என்னும் திரைப்படத்தில் அமாவாசையாக இருந்த ஹீரோ, மணிவண்ணனின் கட்சித் தலைமைப் பதவியைத் தட்டிப்பறிப்பதுபோல என்று வைத்துக்கொள்ளுங்கள்.
பொன், பொருள் சேர்க்கையோடு, பதவி, அதிகாரம், மக்கள் செல்வாக்கு என அனைத்தையும் தரும் இந்த யோகம் பொதுவாக அரசு அதிகாரிகள், செல்வாக்கு பெற்ற அரசியல்வாதிகள் ஜாதகத்தில் இருப்பதைக் காணலாம்.
குருவுடன் சேர்ந்த சூரியன் அல்லது குருவுக்கு ஏழில் இருந்தால் மட்டும்தான் இந்த யோகம் கிடைக் குமா? மற்ற இடங்களில் இருந்தால் இந்த அமைப் பில் கொஞ்சமாவது கிடைக்குமா என்று சிலர் கேட்பார்கள்.
இந்த யோகம் செயல்பட வேண்டுமென்றால் இந்த அமைப்பு இருக்கவேண்டும். அத்துடன் லக்னாதிபதியும் பலமாக அமைந்துவிட்டால் இந்த யோகம் நிச்சயமாக பலன் தரும். மாறாக மற்ற இடங்களில் அமைந்தால் இந்த யோகம் இல்லையென்றுதான் பொருள்.
சரி; வேறு அமைப்புள்ளவர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்ய சிலவற்றைச் சொல்கிறோம்.
இதுபோன்ற பல யோகங்கள் இருக்கிறதே... அதையெல்லாம் எடுக்காமல் இந்த யோகத்தை மட்டும் சிறப்பாகச் சொல்ல காரணமென்னவென்று சிந்தித் துப் பாருங்கள்.
குருவுக்கு 2-ல் சூரியன் இருந்தால், கூடவே செவ்வாயும் சேர்ந்துவிட்டால், அரசுத் துறைமூலம் ஆதாயமுண்டு. ஆனால் அதிகாரமில்லை. குருவுக்கு 3-ல் சூரியன் இருந்தால், அதிகாரப் பதவி இருந்தாலும் அதிகாரம் செய்யமாட்டார்கள்; ஆளுமை இருக்காது. இதுபோல நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.
வெகு அரிதாகவே காணப் படும் இந்த சிறப்பான யோகம் பற்றிய சிந்தனை வந்தது; அதைப் உங்களுக்குப் பகிரத் தந்தோம். "இதுபோன்ற அமைப்பு நமது பிள்ளைகளுக்கு இருந்தால்...' என்று யோசிக்கிறீர்கள்; புரிகி றது. அப்படி அமைப்பில்லை என்றாலும் பரவாயில்லை. தொடர்ந்து இறைவழிபாடு செய்யுங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்.
சரி; உங்கள் ஜாதகத்தில் சூரியன் எங்கே இருக்கிறது பாருங்கள்... நல்லதே நினைப் போம்; நல்லதே நடக்கும்.
(தொடரும்)
செல்: 94443 27172