வெளிச்சத்திற்கு வாங்க (17) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-17-vishu-iyer

"காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும்வரை..!' என்று ஒரு பழைய சினிமா பாடல் வரும். இன்றையநாளில் காதல் என்பது இதுவரை என்றுதான் ஆகிவிட்டது. காதல் தமிழர் கலாச்சாரத் தில் உள்ளதுதான் என்பதை சங்க இலக்கியங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

முன்பெல்லாம்கூட காதலர்கள் இருந்தார்கள். காதல் தோல்வி என்றால் தற்கொலை என முடிவு செய்து விடுவார்கள். அடுத்த காலகட்டத்தில், காதல் சோகம் என தாடிவைத்தபடி வாழ்க்கையைக் கழித்தார்கள்.

அதற்கு அடுத்த காலகட்டத்தில், எங்கிருந்தாலும் வாழ்க என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இன்றைய நாளில் விவாகரத்து செய்துவிட்டு வரும்வரை காத்திருக்கிறேன் என்ற நிலையில் இருக்கிறார்கள்.

இதெல்லாம் சரியா... என்ற லாஜிக் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப் பழகிவிட்டோம். என்றாலும், சில அடிப்படைகளைத் தெரிந்துகொள் ளாமல் இருக்கலாமா?

light

திருமண வயதைக் தொட்டவர்கள், ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்னும் முக்கியமான கட்டத்தைக் கடந்துதான் ஆகவேண்டும். திருமணப் பொருத்தம் என்றதும், தசவிதப் பொருத்தம் என்று சொல்

"காதல் என்பது எதுவரை? கல்யாண காலம் வரும்வரை..!' என்று ஒரு பழைய சினிமா பாடல் வரும். இன்றையநாளில் காதல் என்பது இதுவரை என்றுதான் ஆகிவிட்டது. காதல் தமிழர் கலாச்சாரத் தில் உள்ளதுதான் என்பதை சங்க இலக்கியங்களிலிருந்து தெரிந்துகொள்ளலாம்.

முன்பெல்லாம்கூட காதலர்கள் இருந்தார்கள். காதல் தோல்வி என்றால் தற்கொலை என முடிவு செய்து விடுவார்கள். அடுத்த காலகட்டத்தில், காதல் சோகம் என தாடிவைத்தபடி வாழ்க்கையைக் கழித்தார்கள்.

அதற்கு அடுத்த காலகட்டத்தில், எங்கிருந்தாலும் வாழ்க என்ற மனநிலைக்கு வந்துவிட்டார்கள். இன்றைய நாளில் விவாகரத்து செய்துவிட்டு வரும்வரை காத்திருக்கிறேன் என்ற நிலையில் இருக்கிறார்கள்.

இதெல்லாம் சரியா... என்ற லாஜிக் இல்லாமல் அப்படியே ஏற்றுக்கொண்டு வாழப் பழகிவிட்டோம். என்றாலும், சில அடிப்படைகளைத் தெரிந்துகொள் ளாமல் இருக்கலாமா?

light

திருமண வயதைக் தொட்டவர்கள், ஜாதகப் பொருத்தம் பார்ப்பது என்னும் முக்கியமான கட்டத்தைக் கடந்துதான் ஆகவேண்டும். திருமணப் பொருத்தம் என்றதும், தசவிதப் பொருத்தம் என்று சொல்லும் பத்துவிதப் பொருத்தங்களை வைத்து காலம்காலமாக சோதிட வல்லுனர்கள் பார்த்துவருகிறார்கள்.

காதல் நிலை மாறுகிறது. வாழ்க்கைமுறை என எல்லாம் மாறும்போது, திருமணப் பொருத்தம் பார்க்கும் சோதிட முறையில் மட்டும் மாற்றம் இல்லாமலா இருக்கும்?

ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர் இல்லை யென்றால் அது கௌரவக் குறைச்சல்; அதேபோல ஆணுக்கும் என்னும் கலாச்சார நிலையை இவர்களாகவே ஏற்படுத்திக் கொண்டபிறகு, இவையெல்லாம் பெரிய விஷயமாகப் படுவதில்லை. அதனால்தான் காதல் திருமணங்கள் முன்பைவிட அதிகமாகிவிட்டன.

காதல் திருமணங்களைப் பெற்றோர்களே அனுமதிக்கிறார்கள். இன்னும் சிலர் அவர்களே முடிவெடுத்து திருமணம் செய்துகொண்டபிறகு, குடும்ப கௌரவத்திற்காக, வீட்டைவிட்டு வெளியே போனவர்களை அழைத்துவந்து மறுபடியும் திருமணம் செய்துவைக்கிறார்கள்.

இதுபோன்ற நிலையில் தசவிதப் பொருத் தம் பொருந்துமா என்னும் சிந்தனை நமக்கு எட்டாமல் இல்லை. அதனால்தான் தசவிதப் பொருத்தங்களுடன், வேதைப் பொருத்தம், தோஷ சாம்யம், பாவ சாம்யம், யாம சுக்கிரன் என்பனவற்றை சேர்த்து முஹுர்த்தமும் குறிக்கப்படவேண்டும்.

தொடக்க நாளில் திருமணமென்பது அறம்- தர்ம காரியங்கள் செய்வதற்குதான் இருந்தது. அறம் வளரவேண்டும்; வம்ச வாரிசுகளும் தர்ம காரியங்கள் செய்து நாடு செழித்து வளரவேண்டுமென்று இத்தனையும் பார்த்தார்கள். ஆனால் இன்றையநாளில் திருமணமென்பது, பையனுக்கு இவ்வளவு சம்பளம், பெண்ணுக்கு இவ்வளவு சம்பளம், ஒரு குடும்பம் நடத்த இது போதுமா? என்று வியாபாரமாகி விட்டது.

எது எப்படியிருந்தாலும், அடிப்படையில் சில மாறாது. அதை இன்றைய நடைமுறைச் சூழலுக்கேற்ப கையாண்டால் சிக்கல் இல்லை என்பதை மறுப்பவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள்.

அடிப்படையில், குடும்ப வாழ்க்கைக்கு பத்து முக்கிய அம்சங்கள் தேவை. அவை புரிந்துணர்தல், நம்பிக்கை கொள்ளுதல், மகிழ்ச்சியாக வாழ்தல், ஆரோக்கியமான வாழ்வு, வம்ச விருத்தி, ஏற்றமிகு வாழ்வு, உறவு களைப் பேணுதல், சவால்களை சந்தித்தல், நீண்ட ஆயுள், நிறைவான அறப்பணி என்பன. வேறு எதைப் பட்டியல் படுத்தினாலும் அதை இந்த பத்திற்குள் கொண்டுவந்து விடலாம்.

இந்த ஒவ்வொரு அம்சங்களையும், சோதிட ரீதியாக உள்ள குறிப்புகளை உளவியல் ரீதியாகவும் அணுகி ஜாதகப் பொருத்தம் பார்த் தால், திருமணப் பொருத்தம் என்பது ஏற்புடைய தாக இருக்கும். ஒரு சில குறிப்புகளை சொல்கி றேன். சரியாக உள்ளதா சொல்லுங்கள்.

ஒரு பெண்ணின் மனநிலையை சந்திரன், சுக்கிரன், கேது என்னும் மூன்று கிரகங்களின் தன்மையில் சொல்லிவிடமுடியும். ஒரு ஆணின் மனநிலையை குரு, சந்திரன், ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்களின் தன்மையில் சொல்லிவிட முடியும். இந்த இரண்டில் மன ஒற்றுமை வந்தாலே அடுத்தகட்ட பொருத்தம் பார்க்கச் சென்றுவிடலாம். அதை விடுத்து பத்துக்கு ஆறு என்று மதிப்பெண் போட்டு மணப் பொருத் தம் பார்ப்பது ஒரு சடங்காக இருக்குமே தவிர சுபமான தீர்வைக் கொண்டு தராது.

இந்த மன ஒற்றுமையென்பது காதல் சொல்லவரும் நிலையிலிருந்தே தொடரும். அதனால்தான் பல பெண்கள் இருக்கும் கூட்டத்தில் ஒரு பெண்ணை மட்டுமே தேர்வு செய்யும் இளைஞர்கள் இதை மறுப்பதில்லை. இதேபோல பெண்களும் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

இவரைத் திருமணம் செய்துகொள்ளலாமா என்று கேட்கவரும் ஆணும் பெண்ணும், இவரைக் காதலிக்கலாமா என்று கேட்க வருவதில்லை. காரணம் இந்த கிரக குண இயல்பு அடிப்படைத் தன்மைதான்.

சந்திரன், கேது செல்ஃபி பிரியர். செவ்வாய், சுக்கிரன் காம சிந்தனை. சந்திரன் தொடர்பும் வந்துவிட்டால் கனவில்கூட இப்படிதான் என்று சொல்லிவிடலாம். மேஷத்தில் ராகு- குறுக்கு புத்தி. இப்படி ஜாதகரின் மனநிலை, உணர்வு நிலைகளைப் பட்டியல்படுத்தி, உளவியல் ரீதியாகப் பொருந்தி, வரும் ஜாதகத்தைப் பொருத்திப் பார்த்தால் முறிவில்லாத வாழ்க்கை, சிக்கலில்லாமல் இருக்கும்.

இன்றையநாளில் திருமண பந்தமென்பது ஒரு ஒப்பந்தம்போல ஆகிவிட்டது. இதில் இத்தனை வருடம் என்பதை சிலரும், மறுமணம் செய்துகொள்ளும் பலரும், இருப்பதை விடக் கூடாது என்று சிலரும், பாதுகாப்பான வாழ்க்கை என்று கூட்டுக்குள் சிலரும் என, இந்தக்கால நிலை விரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொள்ள பழகிக்கொள்ளவேண்டும்.

இது சரியா, இது முறையா, இதை மாற்றவேண்டாமா போன்ற வீண் முயற்சிகள் செய்யாமல், முடிந்தால் அப்படியே ரசித்து, கழித்துவிட்டுப் போகவேண்டியதுதான் புத்திசாலித்தனம்.

நல்லதே நினைப்போம்; நல்லதே நடக்கும்.

bala080722
இதையும் படியுங்கள்
Subscribe