வெளிச்சத்திற்கு வாங்க (14) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-14-visu-iyer

ரு தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு யாருக்கு இருக்கிறதென்று நினைகிறீர்கள்? நிச்சய மாக பெண்களிடம்தான். ஆனா லும் பாருங்கள். நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடும்போது, நாமும் மாறிடவேண்டுமென்று நம்மை மாற்றுபவர்களும் பெண்களாகத்தான் இருப்பார்கள்.

போன தலைமுறை செய்த தவறுகளுக்கு இந்த தலைமுறையினர் தான் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்னும் நிலையில் இருக்கும்போது, வசதியானதை செய்யவேண்டுமா- சரியானதைச் செய்யவேண்டுமா என்று உங்களுக்குள் கேள்வி எழுப்பிப் பாருங்கள். உங்கள் விடைக்கேற்ப அதனை முடிவுசெய்யுங்கள்.

நீங்கள் செய்யும் முடிவு உங்களையோ உங்களைச் சுற்றியுள்ள உறவுகளையோ மட்டும் பாதிக்காது. அது ஒரு சமூகத்தையே பாதிக்குமென்றால் யோசிக்கவேண்டிய விஷயமாக இருக்கிறதல்லவா?

"தலைவாரி பூச்சூட்டி உன்னை

பாடசாலைக்குப் போ என்று

சொன்னாள் உன் அன்னை'

என்னும் பாரதிதாசன் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. இன்றைய நாளில் பெண்கள் அவிழ்ந்த கூந்தலுடன் வீட்டில் மட்டுமல்ல; பலர் வெளியிலும் இருக்கின்றனர் என்பதைப் பலரும் அவரவர் அனுபவத்தில் பார்த்திருக்கலாம்.

lights

சபையில் அவமானப்பட்ட பெண் திரௌபதி, "விரித்த கூந்தலை முடியமாட்டேன்' என்று சபதமிட்டது உங்களுக்கும் தெரியும்தானே.

"விரித்த குஞ்சியர்' (கூந்தலை விரித்தபடி திரிபவர்கள் அரக்கர்கள்) என்று அருணகிரியார் தனது திருப்பரங்குன்றத் திருப்புகழில் சொல்லியிருப்பார். ஆக, பெண்க

ரு தலைமுறையை உருவாக்கும் பொறுப்பு யாருக்கு இருக்கிறதென்று நினைகிறீர்கள்? நிச்சய மாக பெண்களிடம்தான். ஆனா லும் பாருங்கள். நாளுக்கு நாள் நாகரீகம் மாறிடும்போது, நாமும் மாறிடவேண்டுமென்று நம்மை மாற்றுபவர்களும் பெண்களாகத்தான் இருப்பார்கள்.

போன தலைமுறை செய்த தவறுகளுக்கு இந்த தலைமுறையினர் தான் தண்டனை அனுபவிக்கவேண்டும் என்னும் நிலையில் இருக்கும்போது, வசதியானதை செய்யவேண்டுமா- சரியானதைச் செய்யவேண்டுமா என்று உங்களுக்குள் கேள்வி எழுப்பிப் பாருங்கள். உங்கள் விடைக்கேற்ப அதனை முடிவுசெய்யுங்கள்.

நீங்கள் செய்யும் முடிவு உங்களையோ உங்களைச் சுற்றியுள்ள உறவுகளையோ மட்டும் பாதிக்காது. அது ஒரு சமூகத்தையே பாதிக்குமென்றால் யோசிக்கவேண்டிய விஷயமாக இருக்கிறதல்லவா?

"தலைவாரி பூச்சூட்டி உன்னை

பாடசாலைக்குப் போ என்று

சொன்னாள் உன் அன்னை'

என்னும் பாரதிதாசன் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. இன்றைய நாளில் பெண்கள் அவிழ்ந்த கூந்தலுடன் வீட்டில் மட்டுமல்ல; பலர் வெளியிலும் இருக்கின்றனர் என்பதைப் பலரும் அவரவர் அனுபவத்தில் பார்த்திருக்கலாம்.

lights

சபையில் அவமானப்பட்ட பெண் திரௌபதி, "விரித்த கூந்தலை முடியமாட்டேன்' என்று சபதமிட்டது உங்களுக்கும் தெரியும்தானே.

"விரித்த குஞ்சியர்' (கூந்தலை விரித்தபடி திரிபவர்கள் அரக்கர்கள்) என்று அருணகிரியார் தனது திருப்பரங்குன்றத் திருப்புகழில் சொல்லியிருப்பார். ஆக, பெண்கள் விரித்த கூந்தலுடன் இருக்கக்கூடாது; திரியக்கூடாது என்று ஒவ்வொரு இடங்களிலும் சொல்லியிருப்பதை நாமும் அறிவோம்.

லுங்கி கட்டிக்கொண்டு வரக்கூடாது என்று சொல்லும் திருக்கோவில்களில்கூட, பெண்கள் விரித்த கூந்தலுடன் வந்தால் அனுமதி இல்லை என்று சொல்வதில்லை என்பது வருத்தமான விஷயம்.

சரி; விரித்த கூந்தலை சோதிடப் பார்வையில் சிந்திப்போமா? ஏவல், செய்வினை போன்றவற்றில் தலைமுடி, நகம்போன்ற கேதுவின் காரகங்களே முதல் வரிசையில் இருக்கின்றன என்பது அந்த விஷயங்கள் தெரிந்தவர்களுக்குப் புரியும்.

தலைமுடிக்குக் காரகம் வகிக்கும் கிரகம் கேது. கேது என்றாலே நமக்குத் தெரியும்- நவகிரகங்களிலேயே மிகவும் பலம் பொருந்திய கிரகம்; பிரச்சினைக்கு கூடுதல் கரம் சேர்க்கும் கிரகம் என்று! குடும்ப ஸ்தானத்தில் (2-ஆமிடத்தில்) கேது இருந்தால், அவர்களுக்கு மன வாழ்க்கை அமையாது; சிறப்பாக இருக்காது என்று பொதுவாகச் சொல்லிவிடலாம்.

எப்போதுமே கேதுவைக் கட்டி வைக்கவேண்டும்; ராகுவை அவிழ்த்து வைக்கவேண்டும். அதுதான் ஆரோக்கிய மான வாழ்வியல் முறை.

இந்த கேது கிரக காரகத் தன்மை கொண்ட அனைத்தும் கட்டி வைத்த படியே இருக்கவேண்டும் என்பதுதான் குறிப்பு. அதனால் கேது கிரகம் காரகம் வகிக்கும் தலைமுடியை விரித்தபடி பெண்கள் திரியாமல், அதை கட்டி வைக்க வேண்டும் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

இதனால்தான் முன்நாட்களில், தலைமுடியை சீவிப் பின்னலிட்டு, ரிப்பன் வைத்துக் கட்டிவைப்பார்கள். பிறகு ரப்பர் பேண்டு, அப்புறம் ஹேர் பேண்டு என்ற நிலை மாறி, வெறும் கிளிப் என்னும் நிலையையும் கடந்து விரிந்த கூந்தலுடன் பெண்கள் செல்வது பிரச்சினையைத் தரும்.

பெண்கள் இப்படி விரித்த கூந்தலுடன் செல்வதால், அது அவர்களுக்கு மட்டுமல்ல; அடுத்த தலைமுறைக்கும் தவறான வழிகாட்டுதலைச் செய்துவிட்டுச் சென்றுவிடுவார்களோ என்னும் பயம் சமூக அக்கறை உள்ளவர்களிடம் இல்லாமல் இல்லை.

"சரி ஐயா, நீங்கள் சொன்னால் அவர்கள் கேட்கப் போகிறார்களா?' என்று கேட்கவருகிறீர்கள்; புரிகிறது. உண்மைதான்... யாருமே சொல்லவில்லை என்றால், அவர்களுக்குத் தவறு எது வென்றே தெரியாமல் அதை செய்து கொண்டுதான் இருப்பார்கள். யாருமே சொல்லாவிட்டால் எப்படி? நாமாவது சொல்லி வைப்போமே என்ற எண்ணம்தான். தவறுதான் என்று தெரிந்தால், இனி செய்யக்கூடாது என்னும் எண்ணம் தானே வரும். அதுவே திருத்தமாக அமையும். இதுதான் உண்மை. திருத்தம் அவர்களிடமிருந்து வந்தால்தான் அது மாற்றத்தை ஏற்படுத்தும். அதனால் தவறுகளை சுட்டிக்காட்டத் தயங்கக்கூடாது. சரியானதை எடுத்துச் சொல்ல மயங்கக் கூடாது.

உண்மையைச் சொல்வதானால், சொன் னால் கேட்கக்கூடியவர்கள் பெண்கள்.

அவர்கள் ஏற்றுக்கொள்ளும் மன நிலையில், அந்த பாணியில் சொல்லவேண்டும்;

அவ்வளவுதான்.

தலைமுடி மட்டுமல்ல; நீளமான உடைகளும் கேது காரகம் வகிப்பவைதான். உதாரணமாக, நீளமாக சேலை, சுடிதார், பேன்ட்... இதுபோல. அதனால்தான் சேலை கட்டும் பெண்கள் அன்றைய நாளில், முந்தானையை முடிந்து இடுப்பில் செருகிவைப்பார்கள்.

கேதுவைக் கட்டி வைக்கவேண்டும் என்பதுதான் குறிப்பு. இன்றைய நாளில் சேலை கட்டும் பெண்கள் குறைந்துவிட்டனர்.

கல்யாணத்தின்போது மட்டும்தான் சேலை கட்டவேண்டும் என்பது எழுதாத சட்டமாகிவிட்டது. அதுவும் காதல் கல்யாணம், பதிவுத் திருமணமென்றால், அதற்கும் வேலை இல்லாமல் போய்விட்டது.

சுடிதாரில் பாருங்கள்- ஒன்றையொன்று சார்ந்திருக்காது. சுடிதார்- பேன்ட், டாப்ஸுடன் சேராமல் தனியாக இருக்கும். துப்பட்டா டாப்ஸுடன் சேராமல் தனியாக இருக்கும்.

இப்படி ஒன்றையொன்று சேராமல் இருந்தால், மனம் ஒன்றாத வாழ்க்கைக்கு அல்லவா வழிகாட்டும். இந்த சுடிதார் கலாச்சாரம், சின்னக் குழந்தைகளிடம்கூட- அதுவும் கிராமத்துக் குழந்தைகளிடம்கூட பரவலாக வளர்ந்துவிட்டது. பள்ளிகளில்கூட சீருடையாகவும் வைத்துவிட்டார்கள் என்றால் வருந்தாமல் இருக்கத்தான் முடியுமா என்ன!

மெல்லிய துணிகளைக்கொண்டு கேதுவின் காரகமாக உடைகளை வடிவமைத்து, "இதுதான் பேஷன்; இதுதான் பாதுகாப்பு' என்றால், சோதிடப் பார்வையில் இது நிம்மதியற்ற- குழப்பமான- வாழ்க்கைக்குத் தடையைதான் கொடுக்கும் என்பதை மதி நிறைந்தவர்கள் மறுக்கமாட்டார்கள்.

வீட்டில் வழிபாடு செய்யும்போதுகூட ஒற்றை ஆடைகளை அணியக்கூடாது என்பதுதான் ஆச்சாரம் என்பதை நாம் அறிவோமல்லவா.

நீளமான துணிகள் எல்லாம் கேதுவின் காரகம்தான். பேன்ட், நைட்டி, துப்பட்டா என ஒரு குட்டி பட்டியலே தரலாம். உணர்வுகளின் வெளிப்பாடுதான் உடைகள். அதை சொல்வதுதான் தமிழ்க் கலாச்சாரம். அதன்படி வாழ்க்கை அமைந்தால் வாழ்வில் மகிழ்ச்சி மட்டுமல்ல; ஆனந் தம் கொண்டாடும் இடமாகவும் வீடு இருக்கும்.

வளமான- நிம்மதியான வாழ்வுக்குத் தடைசெய்யும் கேதுவை, அதன் காரகமாக உள்ள சுடிதார், நைட்டி, விரித்த கூந்தல் என வீட்டுக்குள் விருந்தாளிபோல வரவழைத்தால், விளையக்கூடிய கெடுபலன்களை எழுதிதான் சொல்லவேண்டுமா என்ன!

"சரி; பெண்கள் உடைகளைப் பற்றி மட்டும் சொல்கிறீர்களே. ஆண்கள் உடைகளைப் பற்றி சிந்திக்க வேண்டாமா?' என்று கேட்பது காதில் விழுகிறது. அதை இன்னொரு சந்தர்ப்பத்தில் பகிர்ந்து கொள்வோம்.

இதுவரை எப்படி இருந்தாலும் சரி; உடனே மாற முடியாவிட்டாலும் சரி- அடுத்த தலைமுறையினரை உருவாக்கும் மிகப்பெரிய பொறுப்பிலுள்ள பெண்கள் தங்களை மாற்றிக்கொண்டு, நல்வழி காட்டுவார்கள் என்று நம்புவோம். ஒரே நாளில் மாறமுடியாதுதான்.

முதலில் விரித்த கூந்தலுடன் செல்வதைத் தவிர்ப்போம்; அதைத் தொடர்ந்து ஒவ்வொன்றாக செயல்படுத்துவோம் என்று, ஆரோக்கியமான அடுத்த தலைமுறை உருவாக வேண்டுமென்ற பொறுப்பிலுள்ள ஒவ்வொரு பெண்ணினமும் நினைத்தால் இது சாத்தியப்படும். புரிந்தவர்கள் புத்திசாலிகள்.

நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும்!

(தொடரும்)

செல்: 94443 27172

bala170622
இதையும் படியுங்கள்
Subscribe