வெளிச்சத்திற்கு வாங்க (12) - விசு அய்யர்

/idhalgal/balajothidam/buy-light-12-visu-iyer

பொதுவாக சிலர் வீட்டில் அல்லது கடையில் திருஷ்டி பொம்மை மாட்டி வைத்திருப்பார்கள். "உன் கடைக்கண் பார்வையொன்று போதுமே' என்று காதலர்களும் காதலியின் பார்வைக்கு ஏங்கிக் கொண்டிருப்பார்கள். பண்டைய நாட்களில் தென் மாவட்டங்களில், ஞாயிற்றுக்கிழமையானால் போதும்; திருஷ்டி சுற்றிப் போடுவார்கள். உப்பு, மிளகாய் சுற்றிப் போடுவார்கள். இதன் கிரக காரகத்துவத்தை வைத்து இன்னொரு நாள் சிந்திப் போம். இப்போது இந்தப் பார்வைகளை வைத்து சில சிந்தனைகளை எடுத்துக்கொள்வோம்.

சிலர் பொறாமை எண்ணம்கொண்டு பார்ப்பார் கள். அதை அக்னிப் பார்வையென்று சொல்வார் கள். அவர்கள் பார்வையே நம்மை சுட்டெரித்து விடும். அன்புப் பார்வையால் அகிலமே வசப்படும். வாழ்க்கையெனும் பாதையில் பொறாமையென்பது நெருப்பு! அது ஒரு துளி நம் மனதில் பட்டாலும், பட்ட மரம் சுட்டெரிவதுபோல, வாழ்வின் நல்ல பலன்கள் யாவும் எரிந்து அழிந்துவிடும். அதனால் நமது வாழ்க்கையில், நாம் பொறாமையில்லாமல் இருக்கப் பழகவேண்டும் என்னும் குறிப்பை அடிக்கோடிட்டு மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொள்ளவேண்டும்.

ff

பொறாமையென்பது அடுத்தவர் களின் ஆக்கத்தைக் கண்டு பொறுக்க முடியாத தன்மைதான். அவருக்குக் கிடைத்தது நமக்குக் கிடைக்கவில் லையே என்ற ஏக்கம்தான் பொறா மைப் பாதைக

பொதுவாக சிலர் வீட்டில் அல்லது கடையில் திருஷ்டி பொம்மை மாட்டி வைத்திருப்பார்கள். "உன் கடைக்கண் பார்வையொன்று போதுமே' என்று காதலர்களும் காதலியின் பார்வைக்கு ஏங்கிக் கொண்டிருப்பார்கள். பண்டைய நாட்களில் தென் மாவட்டங்களில், ஞாயிற்றுக்கிழமையானால் போதும்; திருஷ்டி சுற்றிப் போடுவார்கள். உப்பு, மிளகாய் சுற்றிப் போடுவார்கள். இதன் கிரக காரகத்துவத்தை வைத்து இன்னொரு நாள் சிந்திப் போம். இப்போது இந்தப் பார்வைகளை வைத்து சில சிந்தனைகளை எடுத்துக்கொள்வோம்.

சிலர் பொறாமை எண்ணம்கொண்டு பார்ப்பார் கள். அதை அக்னிப் பார்வையென்று சொல்வார் கள். அவர்கள் பார்வையே நம்மை சுட்டெரித்து விடும். அன்புப் பார்வையால் அகிலமே வசப்படும். வாழ்க்கையெனும் பாதையில் பொறாமையென்பது நெருப்பு! அது ஒரு துளி நம் மனதில் பட்டாலும், பட்ட மரம் சுட்டெரிவதுபோல, வாழ்வின் நல்ல பலன்கள் யாவும் எரிந்து அழிந்துவிடும். அதனால் நமது வாழ்க்கையில், நாம் பொறாமையில்லாமல் இருக்கப் பழகவேண்டும் என்னும் குறிப்பை அடிக்கோடிட்டு மனதில் ஆழமாகப் பதியவைத்துக்கொள்ளவேண்டும்.

ff

பொறாமையென்பது அடுத்தவர் களின் ஆக்கத்தைக் கண்டு பொறுக்க முடியாத தன்மைதான். அவருக்குக் கிடைத்தது நமக்குக் கிடைக்கவில் லையே என்ற ஏக்கம்தான் பொறா மைப் பாதைக்கு வழிகாட்டும்.

இயல்பாகவே பாருங்கள். ஒருவருக்கொருவர் நேருக்கு நேராக சந்திக்கும்போதுதான் நாம் இன் னொருவரை அல்லது இன்னொரு வர் நம்மைப் பார்ப்பார்கள் அல் லவா? தவறு செய்தவர்களை விசாரிக்கும்போது, "என் கண்ணைப் பார்த்துச் சொல்லு' என்று விசாரணையைத் தொடங்குவார்கள்.

இப்படிதான் நேருக்கு நேராக- அதாவது ஜாதகக் கட்டத்தில் ஒரு கிரகம் எந்த இடத்தில் இருக்கிறதோ அதற்கு நேரெதிரான ஏழாம் பார்வை எல்லா கிரகத்திற்கும் உண்டு. நிழல் கிரகமான ராகு- கேதுவுக்குப் பார்வை யில்லை. நிழலுக்கு ஏதுங்க பார்வை (வெளிச்சம்) என்பது சொல்லாமலே புரியும்.

எல்லா கிரகங்களுக்கும் ஏழாம் பார்வையென்றால் சிறப்புப் பார்வையென்று சொல்லித் தானே ஆகவேண்டும். ஆம்; குரு, சனி, செவ்வாய் இந்த மூன்று கிரகங்களுக்கும் சிறப்புப் பார்வை உண்டு. அது ஒரு பார்வையல்ல; இரண்டு பார்வை.

சனி, செவ்வாய் ஆகிய இரண்டு பாவ கிரகங்களுக்குத் தரப்பட்டுள்ள சிறப்புப் பார்வை, குரு என்ற ஒரே ஒரு சுப கிரகத் திற்குத் தரப்பட்டுள்ளது என்பதை சிந்தித்துப் பார்த்தால், ஒரு குரு பார்வை போதும் என்று மேலோங்கி சொல்ல வந்ததாகவே புரியும்.

இதில், சனி கிரகம் 3-ஆமிடத் தையும், 10-ஆமிடத்தையும் பார்க்கக்கூடிய சிறப்பம்சம் உண்டு. இதேபோல குருவுக்கு 5-ஆமிடமும், 9-ஆமிடமும்; செவ்வாய்க்கு 4 மற்றும் 8-ஆமிடம் என்றும் சோதிட சாத்திரத்தில் உள்ளது.

"ஏனுங்க இந்த இடத்தைச் சொல்லியிருக்காங்க? இதை எப்படி நினைவில் வைத்துக் கொள்வது' என்று உங்களுக்குத் தோன்றலாம். உங்களுக்காக சில சிந்தனைகளைச் சொல்றேன்.

திரிகோணம் என்று சொல்லக்கூடிய 5 மற்றும் 9-ஆமிடங்களை குரு பார்ப்பார். அதனால்தான் திரிகோணம் சிறப்பு பெற்றதா என்று நீங்களே யூகித்துக்கொள்ளுங்கள்.

இதில் சனியுடைய பார்வை பொல்லாதது. அது எந்த நிலையிலும் கெடுக்குமென்று சொல்வார்கள். அதேபோல செவ்வாயும். இதில் பாருங் கள்... நண்பர்கள் பார்த்துக் கொண்டால் அங்கே அன்பு மலரும்; ஆனந்தம் பெருகும். அதுவே பகைவர்கள் பார்த் துக்கொண்டால் என்ன நடக்கு மென்று உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

இங்கேயும் அப்படிதான். நட்பு கிரகங்கள் பார்த்துக்கொண்டால் நன்மையையும், பகை கிரகங்கள் பார்த்துக்கொண்டால் அதற்கு மாறாகவும் பலன்கள் கிடைக்கும்.

'ஏர்ர்க் ம்ண்ய்க் ஏர்ர்க் ச்ண்ய்க்' என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல ஒரு கிரகத்தின் இயல்புத் தன்மை என்னவாக இருக்கிறதோ அதையொட்டிதானே அதன் பார்வை அமையும். அப்போது இந்த பார்வையை எப்படிப் பார்க்கிறது என்னும் எண்ணமும் சந்தேகமும் வருவது இயல்புதானே.

நாம் ஒருவரைப் பார்க்கும்போது, அவரும் நம்மைப் பார்த்தால்தான் அங்கே பரஸ்பரம் வரும். இதைதான் சமசப்தமம் என்று சொல்வார்கள். சப்தமம் என்பது ஏழாமிடம். ஒருவருக்கொருவர் ஏழாமிடத் தில் இருந்தால், அதை சமசப்தமம் என்று புரிந்துகொள்ளலாம்.

ஆக, பரஸ்பரப் பார்வை நன்மை செய்யுமா அல்லது தீமை செய்யுமா என்பது அந்த கிரகங்களின் வலிமையைப் பொருத்து என்று பொதுவாகச் சொல்லலாம்.

சுபகிரகமான குருவை, சனி சமசப்தம மாகப் பார்க்கும்போது குரு தன் இயற்கைத் தன்மையை இழக்கிறது என்பதைப் புரிந்துகொண்டால், இந்த சமசப்தமப் பார்வை புரியும்.

பிறப்பு ஜாதகத்திலுள்ள பார்வையைப் பார்ப்பதுபோல கோட்சாரத்திலுள்ள கிரகப் பார்வையையும் வைத்துப் பலன் சொல்லவேண்டும்.

சனியின் பார்வை மட்டுமல்ல; எல்லா கிரங்களின் பார்வையும் பார்க்கும் பாவகத் தையும், பாவகத்திலுள்ள கிரகங்களையும் பாதிக்கும். அந்தப் பார்வை நன்மை செய்யுமா?

இல்லையா என்பது அந்த கிரகத்தின் சுப மற்றும் அசுபத் தன்மையை ஒட்டி அமையும்.

சனி கிரகத்திற்கும் காம எண்ணங்களுக் கும் தொடர்பிருக்கிறதா என்றால், பொதுவாக இல்லையென்றுதான் சொல்வார்கள். ஆனால் பாருங்கள்... சனியின் பார்வை நான்காமிடத்தில் விழுந்துவிட்டால், அவர்களுக்கு காம எண்ணம் எப்போதும் சுற்றிக்கொண்டே வரும். கூடவே சந்திரனும் சாதகமாக அமைந்துவிட்டால் "அது' போன்ற கதை எழுதுவது, அதை கற்பனையாக வைத்து "அது' போன்ற திரைப்படம் எடுப்பதென்று போகும்.

கண்கள் பேசும், பார்வை சொல்லும் ஒவ்வொரு செயலையும் புரிந்துகொண்டால், கிரகப் பார்வையைப் புரிந்துகொள்ளலாம். கிரங்களுக்கு கண்கள் இருக்கிறதா- அவை எப்படிப் பார்க்கும் என்பதுபோல சிந்திக்கக்கூடாது. பார்வையின் இயல்புகளை, அதன் தன்மைகளை கிரகங்கள் வெளிப் படுத்தும் நிலையைதான் கிரகப் பார்வையென்று சொல்லப்படுகிறது என்பதாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

உதாரணமாக, சனி லக்கனத்தைப் பார்த்தால் ஜாதகரின் குணநலன்களில் அடாவடித்தம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். இரண்டாமிடத்தைப் பார்த்தால் அவரின் திருமணவாழ்வு காலதாமதப்படும். மூன்றாமிடத்தைப் பார்த்தால் நெஞ்சில் துணிச்சல் அதிகமாக இருக்கும்.

இது பாவக காரகத்தை வைத்துச் சொல்வதுபோல, கிரக காரகத்தை வைத்துச் சொல்லவேண்டும். பகை- நட்புறவை வைத்துச் சொல்லவேண்டும். பிறகு எந்த சிறப்புப் பார்வை என்பதை வைத்துச் சொல்லவேண்டும். இப்படி சொல்லப் பழகிவிட்டால், பலன்கள் சொல்வது கைவசமாகிவிடும்.

சரி; கோட்சாரப் பார்வையில் உங்கள் ராசியை எந்த கிரகம் பார்க்கிறதென்று பாருங்கள். நம்பிக்கையுடன் இருங்கள்; நல்லதே நடக்கும்

(தொடரும்)

செல்: 94443 27172

bala030622
இதையும் படியுங்கள்
Subscribe