ல சமயங்களில் பார்த்திருக்கலாம். சிலர் ஆஞ்சனேய சுவாமிக்கு வடைமாலை சாற்றுவார்கள். வட இந்தியாவில் அனு மனுக்கு ஜாங்கிரி மாலைபோட்டு வழிபாடு செய்வார்கள். "அனுமன் சாலிசா' ஒன்று போதுமென்று இன்றும் நம்பிக்கொண்டி ருப்பவர்கள் வட நாட்டில் அதிகம். வெற்றி யும் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள்.

தமிழகத்தில் அம்மன் கோவில் வாசலில் பொங்கல் வைப்பதை நாமும் பார்த்திருக்கலாம்.

அது சரி; இப்படி உணவுப் பண்டங்களைக் கொண்டு சுவாமிக்கு மாலைபோடுவது சரியான செயல்முறையா என்று சிலர் கேட்கிறார் கள். இன்னும் சிலருக்கு இதுபோல யோசனையாககூட இருக்கலாம். கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதை வேறுவிதமாகச் சொல் வார்கள். அவர்களுக்கும் சேர்த்து இந்தப் பதிவு இருக்கட்டுமே என்று தொடர்கிறேன்.

நேரம் கிடைக்கும்போது, யூடியூப் பார்க்கும் பழக்கம் உள்ளவர்களா நீங்கள்? ஆம் என்றால் துளசிதாசர் அருளிய அனுமன் சாலிசா வீடியோவைக் கேட்டுப் பாருங்கள். உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? 237 கோடி பேர் பார்வைபெற்ற ஒரு யூடியூப் வீடியோ அனுமன் சாலிசாவாகதான் இருக்கும் என்றால் வியப்பாக உள்ளதா?

Advertisment

சரி; "இப்போ எதுக்கு வடைமாலையும், ஜிலேபி மாலையும்?' என்று யோசிக்கிறீர்கள். புரிகிறது.

இப்போதுதான் சர்ப்ப கிரகங்களான ராகு- கேது பெயர்ச்சி நடந்தது. தொடர்ந்து குருப்பெயர்ச்சி. இப்படி கிரகங்கள் பெயர்ச்சி வரிசையில் சனிப் பெயர்ச்சியும்- அதாங்க அதிசாரப் பெயர்ச்சியாக சனி மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்குப் பெயர்ச்சியாகி இருக்கிறார்.

இந்த சனியின் அதிசாரப் பெயர்ச்சி ஜூலை மாதம் வரை என்னும் குறுகிற காலம் தான் இருக்கும். அதன்பிறகு சனி பகவான் மீண்டும் மகரத்திற்கு வந்துவிடுவார். என்றாலும், ஏற்கெனவே ஏழரைச்சனியை அனுபவித் துக் கொண்டிருக்கும் தனுசு, மகரம், கும்ப ராசி அன்பர்களுக்கு ஏதாவது சொல்லவேண்டாமா என்று தோன்றியது. அதற்கு தான் இந்தப் பதிவு.

Advertisment

கடந்த வாரங்களில் சொன்ன உணவுக்கும் சோதிடத்திற்கும் உள்ள தொடர்பைப்போலதான் இந்த வடைமாலையும், ஜிலேபியும், பொங்கலும் சொல்கிறது என்றால், புருவத்தை உயர்த்திப் பார்க்கும்படி தான் இருக்கும். அதனால்தான் இந்துக்கள் வழிபாட்டில், ஒருசில வழிபாட்டிற்கு ஒருசில நிவேதனங்கள் என்று வரைமுறை செய்து வைத்திருக்கிறார்கள். இதை உளவியல் ரீதியாக- அறிவியல்ரீதியாக என எப்படி வேண்டுமானாலும் சொல்லிக்கொள்ளலாம். அதுமட்டுமா- மூடநம்பிக்கை என்பது போலவும் சொல்லிக்கொள்ளலாம். ஆனால் பயன் கிடைக்குமென்றால் வேண்டா மென்றா சொல்வீர்கள்?

நாம் தயார் செய்யும் ஒவ்வொரு உணவுப் பதார்த்தங்களையும் ஒரு கிரகம் காரகம் கொண்டிருக்கும். இதில் சனிப் பிரீதியாக சொல்லும் ஜிலேபி, சர்க்கரைப் பொங்கல், மிளகுவடை எல்லாமே சனி தோஷநிவர்த்திக்கு, ஆஞ்சனேயருக்கு மாலை சாற்றி வழிபாடு செய்தால் தோஷநிவர்த்தி ஏற்படும்.

dd

இதில் குறிப்பாக உளுந்துக்கு காரகம் வகிக்கும் ராகு, பண்டங்களை பாம்பு போல் மாலையாக்கி அதை சேர்த்து செய்வதில்தான் குறிப்பே இருக்கிறது.

அம்மன் கோவிலில் வாசலில் வைக்கும் பொங்கலில்கூட பானையின் கழுத்தில் மஞ்சள் கிழங்கு கொண்டு மாலை கட்டுவார்கள் என்பதை கவனித்திருந்தால் உங்களுக்கு சொல்லாமலே புரியும்.

இந்துக்கள் அல்லாதவர்கள் அல்லது கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் இதைச் செய்ய மாட்டார்களே- அவர்களுக்கு கழுவாயே கிடையாதா? என்று அவர்கள் மீது அன்புள்ளவர்கள் கேட்க நினைக்கலாம். அவர்களும் இந்த உணவுப் பண்டங்களை இப்படி தயார்செய்து சாப்பிடலாம். மற்றவர்களுக்கும் தரலாம். அந்தப் பலன்கள் அவர்களுக்கும் நிச்சயம் கிடைக்கும். உணவில் மத பேதம் இல்லைதானே. உணவில் மட்டுமல்ல; அன்புணர்விலும் மத வேறுபாடு கிடையாது. இப்படியெல்லாம் செய்தால் கெடுபலன்கள் குறையுமா? இது என்ன மூட நம்பிக்கைபோல உள்ளதே என்று யாரும் யோசிக்க வேண்டாம். உளவியல்ரீதியாக ஒரு உத்தியை சொல்கிறேன் பாருங்கள். ஒரு பிரச்சினை நம்மை எதிர்நோக்கி வருகிறதென்றால், அதை எதிர்கொள்ள என்ன செய்யவேண்டும்? கவனத்தை இன்னொரு பக்கம், திசைதிருப்பிவிட்டால், அந்த பிரச்சினையிலிருந்து நாம் தப்பித்துக் கொள்ள முடியும்தானே. அன்பர்கள் இதை சொல்லாமலே புரிந்துகொள்வார்கள்.

இந்த பிரச்சினைக்குத் தீர்வே கிடையாதென்றால் இறைவன் கருணை யில்லாதவன் என்பதுபோலாகிவிடும். அதனால் நம்பிக்கையோடு இருங்கள்.

அளவற்ற கருணையும் நிகரற்ற அன்பும் நிறைந்த ஆண்டவன், ஒவ்வொரு பூட்டிய பூட்டுக்கும் சாவியையும் சேர்த்தேதான் கொடுத்திருக்கிறான். சாவிக் கொத்திலிருந்து எந்த சாவியை எடுக்கிறோம்;

எப்போது எடுக்கிறோம் என்பதை வைத்து தான் பூட்டிய கதவுகள் திறக்கப்படுகின்றன.

"தேடுங்கள்- அப்போது கண்டடைவீர் கள்; தட்டுங்கள்- திறக்கப்படும்' என்று சொல்லும் வாசகமும் இந்த கருத்தின் அடிப்படையில்தான்.

"சரிங்க ஐயா. இதுபோல கடன் தொல்லை, பண வரவுக்கும் இதுபோல உணவுப் பண்டங்களை வைத்து ஏதாவது சொல்ல முடியுமா?' என்று கேட்கவரும் உங்கள் உணர்வுகள் புரிகிறது. அதைச் சொல்ல தனியாக ஒரு கட்டுரையே எழுதலாம் என்றாலும், ஒருசில குறிப்புகளைத் தருகிறேன்.

ஜாதகக் கட்டத்தில் சனி, வீட்டு வாயிலில் கடன் என்றிருப்பவர்கள், உலர்ந்த திராட்சைப் பழத்தை காகத்திற்கு வையுங்கள். காகம் விரும்பி சாப்பிடும்; உங்கள் கடன் குறையும். "அது விலை அதிகமாச்சே' என்றெல்லாம் யோசிக்கக்கூடாது. உடம்பு சரியில்லை என்றால் எவ்வளவு விலை அதிகமானாலும் மாத்திரைகளை வாங்கி விழுங்குவதில்லையா என்று, பாசிடிவ் சிந்தனைகளுடன் உங்கள் செயல்களை அமைத்துக்கொள்ளுங்கள்.

இதே ஏல மாலை, மணமூட்டிகள் என நம்முடைய எண்ணமும் செயல்களும் உணவில் மட்டுமல்ல; உறவிலும் இருந்தால் சிக்கலை எதிர்கொள்ளவும், இறைவழிபாட்டி னால் இன்னல்களைக் களையவும் முடியும் என நம்பிக்கை கொள்ளுங்கள். நம்பிக்கை உள்ளவர்கள் அனுமன் சாலிசா படியுங்கள். முடியாதவர்கள் கேளுங்கள். கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்தாலும், மற்ற மதத்தினராக இருந்தாலும், இதுவொரு இசைபோல என கேளுங்கள்.

அடுத்த வாரம் இன்னொரு சிந்தனையுடன் இணைகிறேன். நம்பிக்கையுடன் இருங்கள்.

நல்லதே நடக்கும்!

(தொடரும்)

செல்: 94443 27172