வெற்றிகளை தன் பக்கம் குவித்து, வாழ்க்கையில் வெற்றி காண வேண்டுமென்றால், ஒரு மனிதன் செய்ய வேண்டிய முக்கியமான வழிபாடு பிரம்ம முகூர்த்த வழிபாடு.

சில பேருக்கு ஒரு சில விஷயங்கள் நல்லபடியாக கிடைத்திருக்கும். ஒரு சில விஷயங் கள் என்னதான் செய்தாலும் கிடைக் கவே கிடைக்காது. அப்படி உங்களுடைய வாழ்க்கையில், உங்களுக்கு எது கிடைக்க வில்லையோ, அது கிடைக்க வேண்டும் என்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த விளக்கை ஏற்றி வேண்டுதல் வைத்துப் பாருங்கள்.

27 நாட்களில் நீங்கள் வைத்த வேண்டுதல் நிறைவேற 99 சதவிகிதம் வாய்ப்பு இருக்கிறது. நம்பிக்கையை நம் மனதில் வைத்து நேர்மறை ஆற்றலோடு இந்தப் பரிகாரத்தை செய்து பார்ப்போம். நிச்சயம் நல்லது நடக்கும்.

ss

பிரம்ம முகூர்த்த நேரம் என்றால், காலை 5:30 மணிக்கு முன்பாக ஒவ்வொருவர் ஒவ்வொரு நேரத்தை சொல்வார்கள். ஆனால் இந்த விளக்கை நீங்கள் அதிகாலை 3:33 மணியிலிருந்து 4:33 மணிக்குள் ஏற்ற வேண்டும். இந்த ஒரு மணி நேரமும் உங்களு டைய வீட்டில் விளக்கு எரிய வேண்டும். சரியாக அதிகாலை 3:33 மணி அடிக்கும்போது உங்கள் பிரார்த்தனையை சொல்லி பூஜை அறையில் விளக்கு ஏற்றி விடுங்கள். 4:33 வரை அந்த விளக்கு எரிய வேண்டும்.

அந்த விளக் கின், தீபச்சுடருக்கு முன்பாக நீங்கள் அமர்ந்து உங்களு டைய பிரார்த்தனையை இந்த பிரபஞ்சத் தில் வைக்க வேண் டும். இவ்வளவு தான் பரிகாரம். குலதெய்வத்தை நினைத்து இந்த பரிகாரத்தை செய்தால் மட்டுமே போதும்.

Advertisment

இந்த பூமி அமைதியாக இருக்கும் அந்த சமயத்தில் நாம் வேண்டுதல் வைத்தால் அந்த வேண்டுதல் இறைவன் காதில் விழும்.

ஏதாவது ஒரு கோரிக்கையை எடுத்துக் கொள்ளுங்கள். 27 நாட்களில் ஒரு நாள் கூட தவறவிடக்கூடாது. இடையில் ஒரு நாளை தவிற விட்டால், மீண்டும் 27 நாள் கணக்கு வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கும்.

பெண்கள் 27 நாட்கள் இந்த பரிகாரத்தை செய்ய முடியும். நிச்சயம் நீங்கள் நினைத்தது நடக்கும். எவ்வளவு பெரிய விஷயமாக இருந்தா லும் சரி, சுலபமாக சாதித்துக் கொள்ள முடியும்.

Advertisment

இந்த வழிபாட்டை செய்துவிட்டு உங்கள் அன்றாட வேலைகளை துவங்குங்கள். அது போதும் மற்றதை இறைவன் பார்த்துக் கொள்வார். நல்லதை நினைப்பவர்களுக்கு நல்லது மட்டுமே நடக்கும்.

செல்: 9842550844