சென்ற இதழ் தொடர்ச்சி......

பதினொன்றில் சந்திரன்

இது உபஜெய ஸ்தானம். ஒன்பதாமிடத்தின் பாவாத் பாவம். பெரும்பாலும் பூர்வீக குலத் தொழிலை மட்டுமே செய்ய விரும்புவார்கள். தரம் நிரந்தரமாக இருக்கும். எதிலும் வேகம் கலந்த விவேகத்துடன் செயல்படுவார்கள்.

அதிர்ஷ்டமும் பேரதிர்ஷடமும் ஒருங்கே இணையப் பெற்றவர்கள். பதினோராம் பாவத்தில் சந்திரன் இருப்பவர்களுக்கெல்லாம் லாபம் சீராக இருக்கும். அதாவது எந்தவிதமான லாபம் வந்தாலும் அதனை சேமித்து வைத்துக்கொள்வார் கள். எதையும் அநாவசிய செலவு செய்யமாட்டார் கள். தொழிலில் இவர்களுக்கு வாராக் கடனே இருக்காது. சிறிய முதலீட்டில் பெரிய லாபம் கிடைக்கும் தொழிலே செய்வார்கள். பிறருக்கு தானம், தர்மம் செய்யும் மனப்பான்மை உடையவர்கள். புதையல், லாட்டரி, போட்டி, பந்தய லாபம் உண்டு. நண்பர்கள் மற்றும் வேலையாட்கள் ஆதரவுண்டு.

Advertisment

பரிகாரம்: வியாழக்கிழமை பகல் 11.00-12.00 மணிவரையிலுள்ள சந்திர ஓரையில் திருப்பதி வேங்கடாசலபதியை நேத்திர தரிசனத்தில் வழிபட ஏற்றம் மிகும்.

dd

பன்னிரண்டில் சந்திரன்

பத்தாம் பாவகத்தின் பாவாத் பாவம் பன்னிரன்டாம் பாவம் என்பதால், ஒன்றுக்கு மேற்பட்ட தொழில்செய்து வாழ்க்கையைத் தொலைத்தவர்களாக இருப்பார்கள். தொழில் ஞானம் நிறைந்தவர்களாக இருந்தாலும், பல தொழில் செய்து நட்டப் பட்டவர் என்பதால் பலரின் ஏளனத்தால் தனிமையை விரும்புவார்கள். அல்லது கடன், எதிரி தொல்லைக்கு பயந்து தலை மறைவு வாழ்க்கை வாழ்வார்கள்.

சந்திரனுக்கு ராகு- கேது சம்பந்தமிருப்ப வர்கள், "வாழ்வதற்காக உழைக்கலாம்.

ஆனால் உழைப்பே வாழ்க்கையாக இருக்கக் கூடாது' என்ற எண்ணம் உடையவர்கள். இரவில் வேலைசெய்து பகலில் உறங்கு வார்கள். கிடைத்த வேலையைச் செய்து, இருப்பதை உண்டு, படுத்த இடத்தில் நிம்மதியாகத் தூங்கவேண்டுமென்று நினைப்பார்கள். அதேநேரத்தில் நேர்மை, நியாயம் நிறைந்தவர்கள். தான் வாழ பிறரைக் கெடுக்க விரும்பாதவர்கள். அமானுஷ்ய சக்தி நிறைந்தவர்கள். உள்ளுணர்வால் அனைவரின் எதிர்காலப் பலனையும் கூறுவார்கள். முன்கோபம் மிகுதியானவர்கள். சொல்லாலும் செயலாலும் ஒன்றமுடியாதவர்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை காலை 9.00 முதல் 10.30 வரையிலான ராகு வேளையில், காலபைரவரை வழிபட இன்னல்கள் நீங்கும்.

புனர்பூ தோஷமும் தொழிலும்

ஒரு ஜாதகத்தில் சந்திரனால் உருவாகும் தோஷங்கள் பல இருந்தாலும், மனிதனின் வாழ்வாதாரமான தொழிலை அசைக்கும் தோஷம் புனர் பூ தோஷம். மாபெரும் ஒளி கிரகமான சந்திரன், ஒருவரின் ஜீவனத்தை நிர்ணயம் செய்யும் இருள்கிரகமான சனியுடன் சம்பந்தம்பெறும்போது தொழி லில் நிதானமற்ற நிலையை ஏற்படுத்தி விடுகிறது. ஒருவரின் ஜனனகால ஜாதகத்தில் சனி, சந்திரன் சம்பந்தத்தால் உருவாகும் கடுமையான- கருணையற்ற புனர் பூ தோஷத் திற்கான கிரக அமைப்புகளைக் காணலாம்.

1. சனியும் சந்திரனும் ஒரே ராசியில் இருப்பது.

2. சனி, சந்திரன் பரிவர்த்தனை. மகரம், கும்ப ராசிகளில் சந்திரன் இருப்பது, கடக ராசியில் சனி இருப்பது.

3. சனி, சந்திரன் ஒருவரையொருவர் சமசப்தமமாகப் பார்த்துக்கொள்வது.

4. சனி, சந்திரன் சாரப் பரிவர்த்தனை.

சனியின் நட்சத்திரமான பூசம், அனுஷம், உத்திரட்டாதி ஆகியவற்றில் சந்திரன் நிற்பது. சந்திரனின் நட்சத்திரமான ரோகிணி, ஹஸ்தம், திருவோணம் ஆகியவற்றில் சனி நிற்பது.

5. நவாம்சத்தில் சனி பகவானும், சந்திர பகவானும் ஒன்றாகச் சேர்ந்திருப்பது ஆகிய அமைப்புகள் எல்லாம் புனர் பூ தோஷமாகும்.

இதில் சனி, சந்திரன் சேர்க்கை, சமசப்தமப் பார்வை என்பது முதல்தர புனர் பூ தோஷ மாகும். அத்துடன் சனி அல்லது சந்திரன் நீசமாகி இருந்தால் அதிபயங்கர புனர் பூ அமைப்பாகும். நன்மையானாலும் தீமை யானாலும் இரட்டிப்பான பலன்களைத் தரும்.

புனர் பூ என்றால் அதீத தடை, தாமதம் என்று பொருள். ஜாதகரின் அனைத்து செயல் களிலும் தடை, தாமதம் ஏற்படும். சனி, சந்திரனுடன் சேரும், பார்க்கும் கிரகங்களின் ஆதிபத்தியம், காரகத்துவம், சாரம், பரிவர்த்தனைக்கேற்ப செயல்பாடுகளின் தன்மை இருக்கும். இது கர்மதோஷம் இருப்பதை சுட்டிக்காட்டும் கிரகச் சேர்க்கை. இதன்பலனாக எதைச் செய்தாலும் தவறா கவே முடியும்.

கடுமையான தொழில் தடையை ஏற்படுத்தும். வாழ்வில் எவ்வளவு உயரமாகச் சென்றாலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத் தும். ஆயுள் தோஷத்தைக்கூட ஏற்படுத்தும். பூர்வீகத்தைவிட்டு வெளியேற்றும். சொந்த ஊரில், பூர்வீக ஊரில், பூர்வீக சொத்தில் குடியிருக்கவிடாது. குலதெய்வ அனுக்கிரகம் இருக்காது.

சம்பளம் இல்லாமல் வேலைசெய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்யும் நிலை, குறைந்த ஊதியத்தைப் பெறுதல் என்ற நிலையை ஏற்படுத்தும். நன்கு படித்தி ருந்தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத, தகுதிக் குறைவான இடத்தில் குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும்.

சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத் திற்கு உட்படாத வேலை, தொழில் செய்பவர் களுக்கு மேற்கண்ட கிரகச் சேர்க்கை இருக்கும். இந்த கிரகச் சேர்க்கை உள்ளவர்கள் அதிக முதலீட்டில் தொழில் செய்யாமலிருப்பது நல்லது. அவ்வாறு செய்தால் தொழிலில் எட்ட முடியாத பிரம்மாண்ட வளர்ச்சியைக் கொடுத்து மீளமுடியாத திடீர் வீழ்ச்சி, இழப்பையும் தரும்.

ஒரு சிலருக்கு 40 வயதாகியும்கூட சொல்லிக் கொள்ளும்படியான வேலையில்லாமல், சூதாட்டம், திருட்டு என வாழ்ந்துகொண்டி ருக்கும் சூழ்நிலை ஏற்படும். நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிக்காமல், வருமானமில்லாமல் இருப்பார்கள்.

மந்த கிரகமான சனி ஒரு ராசியைக் கடக்க இரண்டரை ஆண்டுகளாகும். ராசி மண்டலத்தை முழுமையாகக் கடக்க 30 ஆண்டுகளாகும். சனி ராசியை ஒருமுறை கடந்து முடிக்கும்போது வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள், ஏற்ற- இறக்கங்களை நிகழ்த்தி, கடின உழைப்பு, கடமை, கண்ணியம், கட்டுப்பாடு, நீதி, நேர்மை, நியாயம், தர்மம் போன்றவற்றைக் கற்றுக்கொடுப்பவர். அவரவரின் 9-ஆம் பாவக வலிமைக்கேற்ப சனியின் செயல்பாடுகள் இருக்கும்.

சந்திரன் மனோகாரகன்; மனதை ஆள்பவர்.

ஒருவருக்கு எந்தவிதமான கஷ்ட- நஷ்டங்கள் வந்தாலும் முதலில் பாதிப்பது மனம்தான். அமைதியின்மை, கோபம், பிடிவாதம், சோகம், இயலாமை, உணர்ச்சி வசப்படுதல் போன்ற மனநிலை பாதிப்பு ஏற்படும். ஒரு தெளிவான சிந்தனை, முடிவெடுப்பதற்குக் காரண மாக விளங்குபவர் சந்திரன். சனிக்கும் சந்திரனுக்கும் பலவகையில் ஒத்துப்போகாத தன்மைகள் உண்டு. சந்திரன் தினக்கோள். 27 நட்சத்திரங்களை அதிவேகமாகப் பயணித்து, 30 நாட்களில் ராசி மண்டலத்தைக் கடக்கிறது. சனியுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது நேர் எதிராக சந்திரனின் தன்மை இருக்கும். சந்திரனுக்கு ராசிமண்டலத்தைச் சுற்றிவர 30 நாட்கள்; சனிக்கோ 30 வருடங்கள். சனி மந்தம்- சந்திரன் வேகம்; சனி இருள்- சந்திரன் ஒளி. இப்படி எல்லாமே எதிரும் புதிருமாக அமைந்துள்ளதால் சனியும் சந்திரனும் ஜாதகக் கட்டத்தில் எந்தவகையிலாவது சம்பந்தம் பெற்றால் புனர் பூ தோஷம் செயல்படும்.

இதுபோன்ற புனர் பூ அமைப்பிருப் பவர்களுக்கும் வியாபார, சுயதொழில் சிந்தனை அதிகமிருக்கும். பெரிய முதலீட்டில் தொழில்செய்து வாழ்வாதாரத்தை இழந்த பலரின் ஜாதகத்தில் இதுபோன்ற கிரக அமைப்பிருக்கும்.

எனவே புனர் பூ தோஷம் இருப்பவர்களும், சனியும் சந்திரனும் 6, 8, 12-ஆக இருப்பவர்களும் சுய ஜாதகத்தைப் பரிசீலித்து சுயதொழில் செய்யவேண்டும்.

புனர் பூ தோஷத்தால் தொழில் தொடர்பான இடர்ப்பாடுகளை சந்திப்பவர்கள் சனிக்கிழமை மாலை 4.30 முதல் 6.00 மணிக்குள் சிவபெருமானுக்கு ஒன்பது நல்லெண்ணெய் தீபமேற்றி வழிபட, படிப்படியாக மாற்றமும் ஏற்றமும் உண்டாகும்.

புனர் பூ யோகம்

சனி, சந்திரனுக்கு குரு சம்பந்தமிருந்தால் அது மிகப்பெரிய யோகம். இந்த யோகமுள்ளவர்கள் தனிப்பட்ட வாழ்க்கை அல்லது பொருளாதாரத்தில் தோற்றுப் போகிறார்கள். ஆனால் நிச்சயம் புகழை அடைவார்கள். இதில் எந்த மாற்றமும் இல்லை. குரு, சந்திரன் சேர்ந்து அதை சனி பார்த்தாலும் மேற்கண்ட யோகத்தை அடை வார்கள். ஆனால் அந்த குரு, சந்திரனுக்கு இடையில் கேது இல்லாமல் இருப்பது நல்லது. மேலும் சுபப் பலனை அதிகரிக்க வியாழக்கிழமை பகல் 12.00 முதல் 1.00 மணிக்குள் சித்தர்களை வழிபடவும்.

கோட்சாரமும் புனர் பூ தோஷமும்

கோட்சாரத்தில் புனர் பூ தோஷத்தால் தடை, தாமதங்களை சந்திக்கும் கடகம், துலாம், மகரம், மீன ராசியினர் பௌர்ணமிதோறும் சத்தியநாராயணர் பூஜையில் கலந்துகொண்டு பச்சரிசி உணவை தானம்செய்ய வேண்டும்.

அல்லது பிரதோஷநாளில் மாவிளக்கில் நெய் தீபமேற்றி நந்திகேஸ்வரரை வழிபட்டுவர தடைகள் தகரும்.

சந்திரன் உடல் மற்றும் மனதிற்குக் காரகன். சூரியன் நமது ஆத்மாவிற்குக் காரகன். உடல் மற்றும் ஆத்மா இரண்டும் இணையும் லக்னப் புள்ளியே உயிர்ப் புள்ளி. லக்னப் புள்ளி என்பது நமது கொடுப்பினை. உயிராக மற்றும் பொருளாக எதைப் பெறுகிறோம்- எதை இழக்கிறோம் என்பதை லக்னப் புள்ளியே தீர்மானிக்கிறது.

சூரியன்- ஆத்மகாரகன். ஒரு ஆன்மா விதிப்படி அனுபவிக்கவேண்டிய அனைத்தை யும், உடல் காரகனாகிய சந்திரன்மூலம் பெறுகிறது. சந்திரன்- நீர்; ஆத்மா- நெருப்பு. நீர் என்பது கீழே இறங்கிச் செல்லும் தன்மை யுடையது. ஆத்மா எனும் ஒளி மேலெழும்பிச் செல்வது. ஆத்மா எத்தனை முறை மேலே சென்றாலும், மீண்டும் மீண்டும் பிறவியெடுக்க இந்த பூமிக்கு வந்தே ஆகவேண்டும்.

சந்திரனின் கடக வீட்டிற்கு நேரெதிர் பாவமான மகரம் என்பது கர்ம ஸ்தானம்.

கர்ம ஸ்தானத்துக்கு நிவர்த்தி பாவம், நேரெதிர் பாவமான கடகம்.

சனி- கர்மா- மகரம். கர்மாவை அழிக்க உடலும் உயிரும் தேவை. அதன் நேரெதிர் பாவம் கடகம்- சந்திரன். அதனால் கர்ம விமோசனம் பெற உடல் மற்றும் மனோகாரகன் சந்திரனின் நிலைக்கேற்ப வழிபாடு செய்யும் போது ஆன்மாவின் கர்மா கரைந்து உன்னத நிலையை அடையமுடியும்.

செல்: 98652 20406