"அஞ்சு முகமுள ஐம்மூன்று கண்ணுள
அஞ்சினொடு அஞ்சு கரதலம் தானுள
அஞ்சுடன் அஞ்சா யுதமுள நம்பியென்
நெஞ்சு புகுந்து நிறைந்துநின் றானே.''
-திருமந்திரம்
நம் மூச்சுக்காற்றே சிவபெருமானாக பூஜிக்கப்படுகிறது. மூச்சுக்காற்றே, மனதின்மூலம், ஐம்புலன்களையும் இயக்குகிறது. இதுவே, சிவனின் ஐந்து முகங்கள் (ஈசான முகம், தத்புருஷம், அகோரம், வாமதேவம், சத்யோஜாதம்). இடகலையும் (இடது மூச்சு- சந்திர கலை), பிங்கலையும் (வலது- சூரிய கலை) சேர்ந்ததே அர்த்தநாரீஸ்வரர். நாம் உள்ளிழுக்கும் காற்றும், வெளிவிடும் மூச்சுக்காற்றும், எங்கிருந்து வருகிறது, எங்கே போகிறது என்று தெரியாததால், அடி, முடி அறிய முடியாத, -ங்கோத்பவரின் தத்துவமும், இதில் அடங்கும். நடராஜர், (சிதம்பரம், மதுரை) இடது, வலது, கால் மாற்றி ஆடுவதும், மூச்சுப் பயிற்சியையே குறிக்கும். சித்தர்கள் மொழியில், கால் என்றால், மூச்சு. ஒழுங்கு படுத்தப்பட்ட மூச்சுப் பயிற்சியே, "வாசி'. "சிவா', "சிவா' என்று தொடர்ந்து சொல்லும்போது, "வாசி' என்ற சொல், சூட்சமமாய் உச்சரிக்கப்படுவதை நாம் அறியலாம். "ஹம்ச மந்திரம்', "அஜபா நடனம்', "மூவுலகம்' என்று சாத்திரங்களில் சொல்லப்படுவது, நம் மூச்சுக் காற்றையே குறிக்கும். ஆக, மூச்சுக் காற்றே, வாழ்க்கையாக, விதியாக உருவெடுக்கிறது.
சரமும், வெற்றி பெறும் திசையும்
சந்திர கலை (இடது)- தெற்கு மற்றும் மேற்கு திசையில் வெற்றி.
சூரிய கலை (வலது)- கிழக்கு மற்றும் வடக்கு திசையில் வெற்றி.
சுழு முனை- எட்டு திக்கிலும் காரிய தடையுண்டாகும்.
சரமும், பட்சமும்
கிருஷ்ண பட்சம் (தேய் பிறை)- பிரதமைமுதல் திருதியை திதிவரை- சூரிய உதயத்திற்குமுன்பு ஐந்து நாழிகைமுதல் பின் ஐந்து நாழிகை வரை சூரிய கலை ஓடினால் அனுகூலம்.
கிருஷ்ண பட்சம் (தேய் பிறை)- சதுர்த்திமுதல் சஷ்டி திதிவரை- சூரிய உதயத்திற்குமுன்பு ஐந்து நாழிகைமுதல் பின் ஐந்து நாழிகைவரை சந்திர கலை ஓடினால் அனுகூலம்.
இதேகதியில் மூன்று நாட்களுக்கு ஒருமுறை சரம் மாறி ஓடினால், நன்மையுன்டாகும். சுக்லபட்சத்தில் (வளர்பிறை) இந்த கணக்கீடு, தலை கீழாக மாறும். அமாவாசையில் உதயத்தில் சூரிய கலையும் பௌர்ணமியில் உதயத்தில் சந்திர கலையும் சிறப்பாகும்.
சரமும், வாரமும்
ஞாயிறு, செவ்வாய், வியாழன், சனி ஆகிய நான்கு தினங்கள்- சூரிய உதயத்திற்குமுன்பு ஐந்து நாழிகைமுதல் பின் ஐந்து நாழிகைவரை சூரிய கலை ஓடினால் வெற்றி கிடைக்கும்.
திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்கள்- சூரிய உதயத்திற்குமுன்பு ஐந்து நாழிகைமுதல் பின் ஐந்து நாழிகைவரை சந்திர கலை ஓடினால் வெற்றி கிடைக்கும்.
சரமும், நட்சத்திரமும்
* பூரம், உத்திரம், அஸ்தம், ரோகினி, சித்திரை, ஸ்வாதி, விசாகம், அனுஷம், கேட்டை, சதயம், உத்திரட்டாதி ஆகிய நட்சத்திரங்கள் ஆளும் நாட்களில் சூரிய உதயத்திற்குமுன்பு ஐந்து நாழிகைமுதல் பின் ஐந்து நாழிகைவரை சூரிய கலை ஓடினால் எண்ணம் நிறைவேறும்.
* அஸ்வினி, பரணி, கார்த்திகை, மிருகசிரீடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், பூரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் ஆளும் நாட்களில் சூரிய உதயத்திற்குமுன்பு ஐந்து நாழிகைமுதல் பின் ஐந்து நாழிகைவரை சந்திர கலை ஓடினால் எண்ணம் நிறைவேறும்.
சரம் மாறி ஓடினால் நிகழும் தீமைகள்- மேற்கூறியகதியில் சரம் ஓடாமல், வார சரம் (கிழமை) மாறி ஓடினால், பலவித தீமைகள் உண்டாகும்.
ஞாயிறு- நோய் உண்டாகும்.
திங்கள்- மன அமைதி கெடும்
செவ்வாய்- சண்டை, சச்சரவு, மரண சேதி கேட்க நேரும்.
புதன்- முக்கியமான பொருட்கள் தொலைந்துபோகும்.
வியாழன்- அதிகாரிகளால் தொல்லை உண்டாகும்.
வெள்ளி- குடும்ப ஒற்றுமை குறையும்.
சனி- பண தட்டுப்பாடு, கடன் தொல்லை உண்டாகும்.
மூச்சுப் பயிற்சியால் சரத்தை மாற்றினால் தோஷப் பரிகாரமாக அமையும்.
மூச்சுக் காற்றின் நீளத்தைக்கொண்டு ஆயுள் நிர்ணயம்- (திருமூலர்)
* சுவாசம் ஆறு விரற்கடையானால்-80 ஆண்டுகள் ஆயுள்.
* சுவாசம் ஏழு விரற் கடையானால்- 60 ஆண்டு கள் ஆயுள்.
* சுவாசம் எட்டு விரற்கடையானால்- 50 ஆண்டுகள் ஆயுள்.
* சுவாசம் ஒன்பது விரற்கடையானால்- 33 ஆண்டுகள் ஆயுள்.
* சுவாசம் பத்து விரற்கடையானால்- 28 ஆண்டுகள் ஆயுள்.
* சுவாசம் பதினைந்து விரற்கடை ஆனால்- 22 ஆண்டுகள் ஆயுள்.
செல்: 63819 58636