"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.'
-திருமூலர்
பொருள்: சுவையுணவு வேண்டுமென விரும்பி, சமைத்து வைத்தனர். அவ்வுணவினை அமர்ந்து மனைவி ஊட்ட மகிழ்ந்து உண்டனர்.
அப்போது, உயிர் நிலைக் களமாகிய, இடப்பக்கம் சிறிது நொந்ததே என்றனர். ஓய்வெடுக்க, சற்றே கிடத்தப் படுத்தனர்.
அப்பொழுதே இறந்தொழிந்தனர். உடலின் அமைப்பையும், உயிரின் இருப்பையும், மனதின் இயக்கத்தையும் அறியாத வாழ்க்கை, பயனற்றது.
பூக்களின் மனம் வண்டுகளை ஈர்ப்பது போல், மனிதனின் மனமே, மற்றவர்களை கவர்ந்து இழுக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் ஆளுமை அதிகமுள்ள கிரகமே, அவருடை
"அடப்பண்ணி வைத்தார் அடிசிலை உண்டார்
மடக்கொடி யாரொடு மந்தணங் கொண்டார்
இடப்பக்கமே இறை நொந்தது என்றார்
கிடக்கப் படுத்தார் கிடந்தொழிந் தாரே.'
-திருமூலர்
பொருள்: சுவையுணவு வேண்டுமென விரும்பி, சமைத்து வைத்தனர். அவ்வுணவினை அமர்ந்து மனைவி ஊட்ட மகிழ்ந்து உண்டனர்.
அப்போது, உயிர் நிலைக் களமாகிய, இடப்பக்கம் சிறிது நொந்ததே என்றனர். ஓய்வெடுக்க, சற்றே கிடத்தப் படுத்தனர்.
அப்பொழுதே இறந்தொழிந்தனர். உடலின் அமைப்பையும், உயிரின் இருப்பையும், மனதின் இயக்கத்தையும் அறியாத வாழ்க்கை, பயனற்றது.
பூக்களின் மனம் வண்டுகளை ஈர்ப்பது போல், மனிதனின் மனமே, மற்றவர்களை கவர்ந்து இழுக்கிறது. ஒருவரின் ஜாதகத்தில் ஆளுமை அதிகமுள்ள கிரகமே, அவருடைய குணத்திற்கு காரணமாகிறது. குணமே, மனதில் தோன்றும் எண்ணங்களுக்கு அடிப்படையாகிறது. எண்ணம் போல் வாழ்க்கை அமைகிறது. இன்பத்திற்கும் துன்பத்திற்கும் மனமே காரணம். புறச்சூழ் நிலைகளால் உருவானவை அல்ல. அவை, உள் மனதின் பிரதி பலிப்பேயாகும்.ஒரு ஜாதகத்தில் மனோ காரகனாகிய சந்திரனுடன் தொடர்பிலுள்ள கிரகத்தின் குணாதிசயமே, அந்த ஜாதகரின் குணமாக அமைகிறது.
மனமும் நவகிரகங்களும்
சந்திரன்: சந்திரன் மனோகாரகன். இவர் மற்ற கிரகங்களை விட வேகமாக செல்லும் கிரகம். எந்த ஒரு முடிவிலும், செயலிலும் உறுதியாக செய்ய முடியாத, திருத்தமாகச் செய்து முடிக்க முடியாத மனதைக் கொடுப்பார். வளர் பிறை சந்திரன். உற்சாகத்தையும், தேய்பிறை சந்திரன், தாழ்வு மனப்பான்மையையும் தருவார். ரசனை, அறிவு, ஆனந்தம், புகழ், அழகு, சுக போகம் இவற்றிற்கு காரகன் சந்திரனே செவ்வாய்: போர்குணத்தைத் தருவார். தேவையில்லாமல், எல்லா விஷயங்களிலும் தலையீட வைத்து விடுவார். தைரியமும், தன்னம்பிக்கையும் தந்து, வெற்றிக்கு வழிகாட்டுவார்.
புதன்: ஜோதிடத்தில் வித்யாகாரகன் என்று அழைக்கப்படுபவர் புதன். கல்வி, பேச்சாற்றல், கணிதம், கலைகளில் ஆர்வத்தை உருவாக்குவார்.
குரு: அனுபவ அறிவை அதிகம் தரக்கூடியவர். மற்றவரின் கருத்துக்களில் நம் தலையீடும் குணத்தையும், எல்லாம் எனக்கு தெரியும் என்ற மனநிலையையும் உண்டாக்குவார்.சாத்திர ஞானத்தில் ஈடுபாட்டை ஏற்படுத்துவார்.
சுக்கிரன்: ஆய கலை அறுபத்தி நான்கிற்கும் அதிபதி சுக்கிரன். சுக போகத் திற்கு அதிபதி சுக்ரனே. அழகு, ஆடம்பரத்தில் அதிக ஈடுபாடுள்ள மனோ நிலையைத் தருவார்.
சனி: எந்த ஒரு செயலிலும் முழுமை யில்லாத தன்மை. மெத்தனப் போக்கு, சோம்பலைத் தரக் கூடியவர்., கஞ்சத்தனம், கள்ளத்தனம், பிறர் வெறுக்க கூடிய செய்கை, ஆகியவற்றிக்கு காரணமாகிறார்.
ராகு: ஆசைக்கு அதிபதியாக திகழ்கி றார். பேராசையை கொடுப்பவர். ஆனாலும், வாழ்க்கையில் சாதனை புரிய வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்துவார்.
கேது: எப்போதும் தான் செய்த தவறை எண்ணி வருந்தும் குணத்தைக் கொடுப்பார். நாம் செய்யும் தவறை உணர்ந்து திருந்தும் வாய்ப்பையும் தருவார்.
ஒவ்வொருவரும் ஒருவித திறமை யோடுதான் பிறக்கின்றோம். நம் பிறப்பின் ரகசியத்தையும், நம்மில் ஒளிந்திருக்கும் திறமை யையும் கண்டுபிடித்து ,அதற்கேற்ற சூழ்நிலையை உருவாக்கிக் கொண்டால், வாழ்க்கை வளமாகும்.
தாந்திரீக இரகசியம்
தோப்புக்கரணம்: பாதங்களை ஒருங்கே குவித்தபடி நிமிர்ந்து நின்றபடி இடது கையால் வலதுகாதையும் வலது கையால் இடது காதையும் பிடித்தபடி பாதங்களை முழுமையாக நிலத்தில் பதித்தபடி உட்காந்து எழுவது ஒரு தோப்புக்கரணம். மூச்சை நன்றாக வெளியே விட்டபடி அப்படியே உட்கார்ந்து மூச்சை உள்ளே நன்றாக இழுத்த படி எழுந்து நிற்க வேண்டும். முக்கிய அக்கு பஞ்சர் புள்ளிகள் தூண்டப்படுவதால், மூளை சக்தி பெறும். நவகிரங்களின் ஆளுமைக்கு உட்பட்ட உறுப்புகளும் செயலாற்றி, உடலை யும், மனதையும், அற்புத நிலையில் வைத்திருக்க உதவும்.