"மருவு மெய்க் குற்ற நாடி மதித்திடில் வலக்கை மாந்தர்
அரிவையாக் கிடக்கை நாடி யமுக்கியே கட்டாய் மூட்டி
விரைவினில் வெய்யவாத மிக நடு விரலிற் பித்தர்
தருமணி விரலிலய்யந் தானென வறிந்து சொலிலே.'
-அகத்தியர் 2000
பொருள்: ஆணுக்கு வலக்கை நாடி யையும், பெண்ணுக்கு இடக்கை நாடி யையும் பரிசீலிக்கவேண்டும். அவ்வாறு பார்க்கும்போது, மோதிர விரலில் கபமும், நடுவிரலில் பித்தமும், ஆட் காட்டி விரலில் வாதமும் பேசும்.
மனித உயிரில் மாறுபாடுகள் இல்லை யென்றாலும், தமிழ், மெய், எழுத்துக் களில், வல்லினம் (ஆண்), மெல்லினம் (பெண்), இடையினம் (திருநங்கை) என்ற வேறுபாடு உள்ளதுபோல், மனித உடற்கூறிலும், பாகுபாடு உள்ளது. அங்க சாத்திரத் தில், உடலுறுப்புகளின் அமைப்பையும், அதில் நவகிரகங் களின் ஆளுமையையும்கொண்டு பலனறியும் முறை உண்டு.
சாமுத்திரிகா லட்சணங்கள் (அங்க சாத்திரம்)
நாசி, கண்கள், நெற்றியின் அமைப்பு போன்றவை சாமுத்திரிகா லட்சணத்திற்கு மிகவும் முக்கியம்.
பொதுவான லட்சணங்கள் (ஆண்- பெண்)
* ஒருவரது தலைவட்ட வடிவமாக இருந்தால் அவருக்கு சகல செல்வங்களும் கிடைக்கும்.
* தலையில் நரம்புகள் புடைத்துக்கொண்டு தென் பட்டால் அவர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகள் ஏற்படும்.
* உடம்புக்கேற்ற விதத்தில் அளவான தலை இருந்தால் ராஜயோகம் பெற்றவர்களாக விளங்குவர்.
* கன்னத்தில் பள்ளம் இருந்தால் பொருள் வளம்பெற்றவராக இருப்பார்கள்.
* ஒருவருடைய முகம் அழகாகவும், பிரகாசமாக வும் இருந்தால் அவருக்கு அரசருக்கு இணையான வாழ்க்கை அமையும்.
* பரந்தமுகமாக இருந்தால் சன்னியாச யோகம் வாய்க்கும்.
* நீண்டமுகத்தைப் பெற்றவர்கள் பொருளாதாரப் பற்றாக்குறையில் சிக்கித் தவிப்பார்கள்.
* சதைப்பிடிப்பான முகத்தைப் பெற்றவர்கள் சுகங் களையும், சந்தோஷங்களையும் அதிகமாக அனுபவிப் பார்கள்.
* ஏறு நெற்றியாக இருந்தால் ஆயுள் தீர்க்கமாக இருக்கும்.
* இரண்டு புருவங்களுக்கும் மத்தியில் பள்ளம் இருக்கக்கூடாது. அப்படி இருந்தால் வறுமை தாண்டவ மாடும்.
* இரண்டு புருவங்களும் ஒன்றாக இணைந் திருந்தால் ஆரோக்கியத் தொல்லை அதிகரிக்கும்.
* புருவங்கள் ஒன்றையொன்று தொடாமல் வில்லைப்போல் வளைந்திருந்தால் பெரிய செல்வந்தர் களாக விளங்குவர்.
* நீண்டு அகண்ட பெரிய கண்களை உடைய வர்கள் செயல்வீரர்களாகவும், நினைத்தக் காரியத்தை நினைத்த நேரத்தில் செய்துமுடிக்கும் சூரர்களாகவும் இருப்பார்.
* மூக்கு நீண்டிருந்தால் புத்திக்கூர்மை உடையவர் களாகவும், அறிவாளியாகவும் பிறருக்கு யோசனை சொல்பவர்களாகவும், தந்திரசாலியாகவும் விளங்குவர்.
* வலதுபக்கம் மூக்கு வளைந்திருந்தால், பிறர் நம்பிக்கைக்குப் பாத்திரமாக நடந்து கொள்ளமாட்டார்கள்.
* சிறிய காதுடையவர்கள் மிகுந்த சிக்கனமானவர்கள்.
* அகண்ட பெரிய காதுகளை கொண்ட வர்கள், கேள்வி ஞானம் பெற்றவர்களாக இருப் பார்கள். நியாயத்திற்கு குரல் கொடுப்பார்கள்.
* தாடையில் பள்ளம் இருந்தால், பொது நல ஈடுபாடு இருக்கும். பதவிகள் தேடிவரும். கலைத் துறையில் சாதனைபுரிவார். வாழ்வின் மையப் பகுதியிலிருந்து வருமானம் குவியத் தொடங்கும்.
சாமுத்திரிகா லட்சணங்கள் (ஆண்)
* ஆள்காட்டி விரல் நீளமாக இருந் தால் எதிலும் தலைமை ஸ்தானம் வகிப்பவர் களாகவும், மிகுந்த அதிகாரங்களை உடைய வராகவும் இருப்பார்கள்.
* மலர்ந்த கண்களைப் பெற்றவர்கள், இரக்க சிந்தையுடையவர்களாக இருப்பார்கள்.
* தலையானது உயர்ந்தோ, பருத்தோ இருந்தால் செல்வம் உண்டு.
* அகலமான, எடுப்பான, உயர்ந்த நெற்றி அமைந்திருப்பின் அதிக ஞானமும், செல்வமும் உண்டு.
* மூக்கு உயரமாய், நீண்டு, கூரியமுனை உடையவர்கள். பணம், பதவி, புகழ் உடைய வர்களாக இருப்பர்.
* தோள்கள் இரண்டும் உயர்ந்திருப்பின் செல்வம் உண்டு. தாழ்ந்திருந்தால் நீண்ட ஆயுள் உண்டு. சமமாக இருப்பின் அறிவு உண்டு.
* ஆண்கள் கால்விரல்கள் ஒன்றோடொன்று நெருங்கி இருப்பின் புகழ் பெறுவார்.
* பாதங்களில் மேடுபள்ளம் இருந்தாலும், நகங்கள் கோணலாக இருந்தாலும், விரல்கள் தனித்தனியே விலகியிருந்தாலும் வறுமை வாட்டும்.
* நிற்கும்போது, கைவிரல்கள், கால் முட்டியை தொடுமளவுக்கு நீண்டிருந்தால், ஏழைக் குடும்பத்தில் பிறந்தாலும் இராஜ பதவி கிடைக்கும்.
(தொடரும்)