உடலே உன் வீடு... புதிய வாஸ்து சாஸ்திரம்! (13)

/idhalgal/balajothidam/body-your-house-new-vastu-shastra-13

"கூறுவேன் தேகமது என்னவென்றால்

குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி

மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு

வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி

தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி

ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி

அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே'

பொருள்: எலும்புகளைத் தூண்போல, நட்டுவைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக்கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச்சேர்த்து, இரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறது.

vv

தொண்ணூற்றாறு தத்துவங்களையும் அறிந்து, அவற்றின், நவகிரக தொடர்பு களையும் புரிந்து செயலாற்றினால், வாழ்வில், வெற்றிபெறுவது, உறுதி. உ

"கூறுவேன் தேகமது என்னவென்றால்

குருபரனே எலும்புதனைக் காலாய் நாட்டி

மாறுபடா எலும்புக்குத் துவாரமிட்டு

வன்மையுடன் நரம்பினால் வலித்துக் கட்டி

தேறுதலாய் இரத்தமதை உள்ளே ஊற்றி

தேற்றமுடன் அதன் மேலே தோலை மூடி

ஆறுதலாய் வாய்வுதனை உள்ளடக்கி

அப்பனே தேகமென்ற கூறுண்டாச்சே'

பொருள்: எலும்புகளைத் தூண்போல, நட்டுவைத்து, அவற்றின் இருப்பிடம் மாறி விடாமல் இருக்க நுண்ணிய துவாரங்களால் இணைத்து, நரம்புகளால் இழுத்துக்கட்டி, அவற்றுக்கு இடையில் தசைகளைச்சேர்த்து, இரத்தத்தை ஊற்றி, தோலால் மூடி உள்ளே வாயு எனப்படும் பிராணனை அடக்கி உடல் என்ற உருவம் உண்டாக்கப்பட்டிருக்கிறது.

vv

தொண்ணூற்றாறு தத்துவங்களையும் அறிந்து, அவற்றின், நவகிரக தொடர்பு களையும் புரிந்து செயலாற்றினால், வாழ்வில், வெற்றிபெறுவது, உறுதி. உடலை இயக்கும், மனதின் சிறப்பினை அறியாதவன், பொன்னா லான ஓட்டினை ஏந்தி பிச்சை பெறுபவனைப் போலாகிறான். உடல் உறங்கும்போது ஆழ்மனம் விழித்திருக்கும், உடலின் விழிப் பில் ஆழ்மனம் உறங்கிப்போகும் என்பதை யறிந்து, எப்போதும் ஆழ்மனதை "விழித்திரு' என்று கட்டளையிடுபவனே வெற்றிப்படி களில் நிற்கிறான்.

96 தத்துவங்கள் பொதுவானவையென்றா லும், உடலமைப்பிலும், மனதின் இயக்கத் திலும், ஆண்- பெண் வேறுபாடு காணப் படுகிறது. உடலமைப்பைக் கொண்டு, ஒருவரின் குணநலன்களையும், வாழ்க்கை அமைப்பையும் ஆராய்வதே, அங்க லட்சணம். சாமுத்ரிகா லட்சணம் ஜோதிடத்தின் ஒரு பகுதிதான்.

ஆண் வகைகள் உத்தம சாதி (முயல்):

(கடகம், விருச்சிகம், மீனம்) அழகான உருண்டை முகமும், சிவந்த கண்களும், நடுத் தர உயரமும், மென்மையான உடல்வாகும் உள்ளவனாக இருப்பவன். தெய்வ பக்தியும், மிகுந்த அன்பும், பெரியோரிடம் மரியாதை யும், நல்லொழுக்கமும் கொண்டவன். சூடான உணவை குறைவாக உண்பவர்.

மத்திம சாதி (மான்): (மிதுனம், துலாம், கும்பம்) அழகிய முகமும், புன்னகை தவழும் உதடுகளும், பரந்த மார்பும், கடின உடல் வாகும் கொண்டவன். தெய்வ நம்பிக்கையுள்ள வன். பெரியோரை பெரிதும் மதிப்பவன், உண்மைக்குக் குரல் கொடுப்பவன், கண்டிப் பும் உறுதியும் உள்ளவன்.

அதம சாதி (காளை): (ரிஷபம், கன்னி, மகரம்) மலர்ந்த முகம், அகன்ற நெற்றி, நீண்ட நாக்கு, சிவந்த பருத்த மேனி, சிறிய கால்கள் கொண்டவன். அதிக பசியால் நிறைய உண்பவன். மனோதிடமும் தியாக உள்ளமும் உள்ளவன். பாவபுண்ணியங் களுக்கு அஞ்சாதவன். பெண்களிடம் மிகுந்த விருப்பமுள்ளவன்.

அதாகம சாதி (குதிரை): (மேஷம், சிம்மம், தனுசு) பருத்த உடல்வாகும், நீண்ட உதடுகளும், காதுகளும், நெடிய உருவமும் கொண்ட வன். உஷ்ணமான தேகமும், தீராத காம வேட்கையும் உள்ளவன். தன்னிச்சையாக முடிவெடுப்பவர். தெய்வ பக்தி குறைவு. மிகுந்த கோபக்காரர். எல்லாரிடமும் அதிகாரம் செலுத்துவான்.

எட்டு வகைப்பெண்கள்

1. தெய்வ தத்துவம்: (உத்திரம்- திரு வோணம், அனுஷம், உத்திரட்டாதி) கூர்மை யான பார்வை, வளைந்த புருவம், திருமகளின் அருளைப் பெற்றவள்.

2. முனி தத்துவம்: (ஹஸ்தம், திருவாதிரை, ரோகினி- மிருகசிரீடம்) விரைவாக நடக்கக் கூடியவர், ஆண்களை வசியம் செய்பவர், அழகான விரல்களைப் பெற்றவர்.

3. நாக தத்துவம்: (பூராடம், ஸ்வாதி, விசாகம், ஆயில்யம்) எல்லா பக்கமும், சுழலும் கண்களை உடையவர். உறக்கம் அதிகம். கணவருக்கு அதிக சுகம் தருபவர். இசையில் அதிக ஆர்வமுண்டு.

4. காந்தர்வ தத்துவம்: (அஸ்வினி, அவிட்டம், சதயம்) அச்சமில்லாதவர். அழகான தலைமுடி உடையவர்.

5. பூத தத்துவம்: (மூலம், பூரம், ரேவதி)- அச்சம் தரும் கண்களை உடையவர். உணவில் அதிக ஆர்வமுடையவர், பொறுமை குறைவு.

6. அரக்கி தத்துவம்: (பரணி, சித்திரை, மகம்) நெருங்கிய புருவமும், உயர்ந்த முன்னெற்றியும் உடையவர். பழிக்குபழி வாங்கும் எண்ணம் உடையவர்.

7. இசக்கி தத்துவம்: (கேட்டை, கார்த்திகை, பூரட்டாதி) தர்ம சிந்தனை உடையவர். இனிமையாக பேசுபவர். செல்வத்தில் அதிக ஆசையுடையவர்.

8. பேய் தத்துவம்: (பூசம், புனர் பூசம், உத்திராடம்) இனிமையாக பேசாத வர். பெண்களிடமே சண்டைபோட்டு உறவை முறித்துக்கொள்பவர். இவை பொதுவான குணங்கள்.

இதுதவிர, நட்சத்திர அடிப்படையிலும், ஆண்- பெண், குணாதிசயங்கள் குறிப்பிடப் பட்டுள்ளன.

bala100524
இதையும் படியுங்கள்
Subscribe