ஆயிரம் சுகங்களை இறை என்னும் பிரபஞ்சம் அள்ளி வழங்கினாலும், அதில் தனக்கென ஒரு வீடு என்பது பெருமூச்சும், பேரின்பத்தையும் அளிக்கும்.
ஆன்மிகத்தில் வீடுபேறு என்பது எவ்வளவு உயர்ந்த நிலையோ, அதற்கு சமமான நிலையினை அளிக்கும் இந்த இல்லம் என்கின்ற வீடும்.
நாகரிக சாரலில் நனையும் முன்பு மனிதன் குகைகளையும், மரக்கிளைகளையும் தங்கும் இடமாக அமைத்திருந்தான்.
வளர் நாகரிகத்தின் படியில் பயணித்து தனக்கென ஒரு இருப்பிடத்தை உருவாக்கிக் கொண்டான், மானிடன் முதலான அனைத்து ஜீவன்களும் தனக்கான இருப்பிடத்தின் மூலமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்றது.
மனிதனின் அடிப்படைத் தேவை களில் மூன்றில் ஒன்றாக இந்த இருப்பிடம் என்னும் வீடு முக்கியத்துவம் பெறுகின்றது. மனிதன் தொடங்கி எல்லா ஜீவராசிகளும் இந்த இருப்பிடத்தின்மூலம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதோடு தனக் கான உயர்வினை உருவாக்கும் இடமாக அமைத்துக் கொள்கின்றது.
இதனை எறும்புப் புற்றிலிருந்து பறவைக் கூடுவரை- மனிதனின் குகையிலிருந்து அடுக்குமாடி கட்டடம் வரை நம்மால் காண முடிகின்றது.
இந்த இருப்பிடம் எனப்படும் இல்ல மானது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நமது மூத்தோர் மொழியிலிருந்து உணரலாம். எலி வளையானாலும் தனி வளை வேண்டும்; காடு திரிந்தாலும் அடங்க ஒரு கூடு வேண்டும் என்றெல்லாம் நம் முன்னோர்கள் இந்த இருப்பிடத்தின் மகத
ஆயிரம் சுகங்களை இறை என்னும் பிரபஞ்சம் அள்ளி வழங்கினாலும், அதில் தனக்கென ஒரு வீடு என்பது பெருமூச்சும், பேரின்பத்தையும் அளிக்கும்.
ஆன்மிகத்தில் வீடுபேறு என்பது எவ்வளவு உயர்ந்த நிலையோ, அதற்கு சமமான நிலையினை அளிக்கும் இந்த இல்லம் என்கின்ற வீடும்.
நாகரிக சாரலில் நனையும் முன்பு மனிதன் குகைகளையும், மரக்கிளைகளையும் தங்கும் இடமாக அமைத்திருந்தான்.
வளர் நாகரிகத்தின் படியில் பயணித்து தனக்கென ஒரு இருப்பிடத்தை உருவாக்கிக் கொண்டான், மானிடன் முதலான அனைத்து ஜீவன்களும் தனக்கான இருப்பிடத்தின் மூலமாகவே தன்னை நிலை நிறுத்திக் கொள்கின்றது.
மனிதனின் அடிப்படைத் தேவை களில் மூன்றில் ஒன்றாக இந்த இருப்பிடம் என்னும் வீடு முக்கியத்துவம் பெறுகின்றது. மனிதன் தொடங்கி எல்லா ஜீவராசிகளும் இந்த இருப்பிடத்தின்மூலம் தன்னை ஆசுவாசப்படுத்திக் கொள்வதோடு தனக் கான உயர்வினை உருவாக்கும் இடமாக அமைத்துக் கொள்கின்றது.
இதனை எறும்புப் புற்றிலிருந்து பறவைக் கூடுவரை- மனிதனின் குகையிலிருந்து அடுக்குமாடி கட்டடம் வரை நம்மால் காண முடிகின்றது.
இந்த இருப்பிடம் எனப்படும் இல்ல மானது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை நமது மூத்தோர் மொழியிலிருந்து உணரலாம். எலி வளையானாலும் தனி வளை வேண்டும்; காடு திரிந்தாலும் அடங்க ஒரு கூடு வேண்டும் என்றெல்லாம் நம் முன்னோர்கள் இந்த இருப்பிடத்தின் மகத்துவத்தை பழமொழிகளின்மூலம் உணர்த்தியுள்ளனர்.
இந்த இல்லமானது ஒரு தனிப்பட்ட மனிதனின் வாழ்நாள் கனவாக அமைந்து விடுகின்றது. இந்த சூழ்நிலை யில் எப்பாடு பட்டேனும் இல்லம் வேண்டு மென்ற ஏக்கத்தின் வாசலில் சில ஜீவன்கள் தவமிருந்து கொண்டேயும் இருக்கின்றன.
இந்த வீடு, மனை என்ற அதியற்புத நிலை யினை நமக்கு அருள்வது மங்களகாரகன் என்னும் செவ்வாய் பகவானும், ஜாதகத்தில் நான்காம் அதிபதியும்தான். இவர்களின் பலம், பலவீனம் பொருத்தே ஒருவருக்கு வீடு அமைகின்றது அதோடு செவ்வாய் நிலம், காலி மனை, தோப்பு போன்றவற்றையும் குறிக்கும். இந்த நான்காம் அதிபதி கெட்டுவிட்டாலும், செவ்வாய் கெட்டாலும், அவர்களுக்கு சொந்த வீடு என்பது கானல் நீராகதான் இருக்கும்.
நவகிரகங்களில் சுக்கிரனை வீடு யோக காரகன் என்றும், செவ்வாயினை பூமிகாரர்கள் என்றும், குறிப்பிடுகின்றோம் இந்த பூமிகாரகன் ஆட்சி, உச்சம் ,அல்லது நான்காம் அதிபதி சேர்க்கை பெற்றிருந்தால், ஒருவருக்கு பூமியோகம் உண்டாவதோடு, பூமியுடன் கூடிய வீடு வாங்கும் யோகமும் அமையும்.
லக்னத்திற்கு நான்காம் அதிபதி ஆட்சி, உச்சம் பெற்றிருந்தாலும் அதிகப்படியான சொத்துகள் அமையும். நான்காம் அதிபதி யையும், நான்காம் வீட்டையும் குரு போன்ற சுப கிரகங்கள் பார்வை செய்யும்பொழுது மேலும் சிறப்பினை அளிக்கும்.
சுக்கிரனின் பலத்தையும் இதில் கைகொள்வது சிறப்பினைத் தரும்.
ஒரு ஜாதகத்தில் நான்காம் அதிபதி அல்லது செவ்வாய் நீசமாகியோ அல்லது ஆறு, எட்டு, பன்னிரண்டாம், அதிபதி களோடு இணைந்து பயணிக்கும்பொழுது அவர்களுக்கு சொந்த வீடு என்பது ஒரு சிறிய நெருடலுக்கு உட்பட்டதாக அமைந்து விடுகின்றது.
அப்படி நான்காம் அதிபதி கெட்டு பூர்வீகத்தின் மூலமாகவோ ,அல்லது களத்திரத்தின் மூலமாகவோ, ஒரு வீடு அமையும் சூழ்நிலை வந்தால், அதை அவர்கள் பெயரில் இல்லாமல் மனைவி அல்லது பிள்ளைகளின் பெயரில் வைப்பது சிறப்பானது.
அதேபோல் கார்த்திகை, மூலம், பூரம் ஆகிய மூன்று நட்சத்திரங்கள் செவ்வாயின் கர்மப்பதிவினைக்கொண்ட நட்சத்திரங்களாகும்.
இவர்களுக்கும் வீடு, மனை சம்பந்தமான சஞ்சலங்கள் வாழ்க்கையில் தொடர்ந்து இருக்கும். ஆகையினால் இவர்களும் வீடு விஷயத்திலும் சொத்து விஷயத்திலும் கவனமாக இருப்பது சிறப்பு.
ஒருவருக்கு சொந்த வீடு அமையும் அமைப்பு அமையப்பெற்றிருந்தாலும் அந்த வீட்டின் அமைப்பினை அங்கு அமர்ந்த மற்றும் நான்காம் அதிபதியின் மூலம் அறியலாம். சிலருக்கு மாளிகையும், சிலருக்கு ஓடு அல்லது குடிசை வீடும் என்று அவரவரின் சூழ்நிலைக்கு ஏற்றவாறும் கிரகங்களின் ஆளுமைக் கேற்றவாறு அமைகின்றது.
ஒரு ஜாதகத்தில் நான்காம் பாவகத்தில் சூரியன் மற்றும் கேது அமர்ந்திருந்தால் அழகான- ஆனால் உறுதியற்ற வீடு அமையும். நான்கில் சந்திரன் அமைந்திருந்தால் அழகான வீடு, புதிய வீடு அமையப்பெறும்.
சுகஸ்தானம் என்னும் நான்காம் பாவகத் தில் குரு அமையப்பெற்றவர்களுக்கு உறுதி யான தரம்மிக்க வீடு அமையும்.
நான்கில் செவ்வாய் அமையப் பெற்றவர்களுக்கு, அந்த வீடுகளில் விரிசல் மற்றும் தீயினால் பாதிப்பு ஏற்படக்கூடிய அமைப்பு உருவாகும்.
சனி மற்றும் ராகு நாளில் அமையும் பொழுது பழைய வீடுகள் வாங்கும் யோகம் அமையப்பெற்றிருக்கும். மேலும் சனி, ராகுவின் பார்வையும் பழைய வீட்டினை வாங்கும் யோகத்தினை அளிக்கும்.
பொதுவாக மேஷ ராசியினருக்கு லக்னாதி பதியான செவ்வாய் நான்கில் நீசம், இந்த சூழ்நிலையானது மண், நிலம் சார்ந்த, வீடு சார்ந்த நெருடல்களை உருவாக்கிக் கொடுக்கும் என்பதனால் இவர்கள் மண் சார்ந்த விஷயங்களில் சற்று கவனத்துடன் இருப்பது சிறப்பு.
அதேபோல் சிம்ம ராசியினருக்கு நான்காம் அதிபதி செவ்வாய் 12-ல் நீசமாகும் சூழ்நிலை உருவாகும். இந்த சூழ்நிலையானது மனை, வீடு ஆகியவற்றினால் விரயத்தை, எதிர்கொள்ளும் அமைப்பை உருவாக்கும். எனவே இவர்களும் சற்று கவனத்துடன் இருப்பது பெரும் விரயத்தினைத் தவிர்க்கும்.
ஒரு ஜாதகத்தில் செவ்வாய் மற்றும் ராகுவின் இணைவு வீடு, மனை சார்ந்த தடையினையும், செவ்வாய் மற்றும் கேதுவின் இணைவு வீடு, மனை சார்ந்த நெருக்கடியை யும், செவ்வாய் மற்றும் சந்திரனின் இணைவு முயற்சியின்- அதாவது பெரும் முயற்சியின் மூலமே அடைய முடியும் என்கின்ற சூழ்நிலை யையும் உருவாக்கும்.
நான்காம் அதிபதியின் தசை அல்லது செவ்வாய் பகவானின் தசா புக்தி அந்தர காலங்களில் ஒருவருக்கு மனையும் சொந்த வீடும் அவரவர் ஜாதகத்தில் நான்காம் அதிபதி அமையப்பெற்ற பலம் பலவீனம் பொருத்து வழங்கப்படும்.
வீடு அமையப் பெறாதவர்களுக்கு ஒருசில பொதுவான சக்தி வாய்ந்த பரிகாரங்களும் நம் முன்னோர்களால் அருளப்பட்டுள்ளது.
மனை இருந்தும் வீடுகட்ட முடியாதவர் களுக்கு இந்த பரிகாரம் சிறப்பினைத் தரும்.
செவ்வாய்க்கிழமைகளில் காலையில் வரும் செவ்வாய் ஓரையில், மனையின் ஈசானிய மூலையிலிருந்து ஒரு பிடி மண்ணை எடுத்து வந்துமுருகன் கோவிலில் மண்ணைப் பரப்பி அதன்மேல் இரண்டு நெய் தீபங்கள் ஒன்பது வாரங்களுக்கு ஏற்றிவர, வீடு கட்டும் யோகத்தினை செவ்வாய் பகவான் அருள்வார்.
புதிதாக மனை வாங்கித்தான் வீடு கட்டியாக வேண்டும் என்கின்ற சூழ்நிலையில் இருப்பவர்களுக்கு. இந்த பரிகாரம் பெரும் சிறப்பினைத் தரும். தை மாதத்தில் வரும் பௌர்ணமியன்று ஒரு படி நெல், வெற்றிலை, பாக்கு, வாழைப்பழம், காதோலை, கருகமணி, 101 ரூபாய் தட்சணை ஆகியவற்றினை வைத்து, பூஜையறையில் சிறியதாக ஒரு வழிபாட்டினை மேற்கொண்டு செவ்வாயின் ஆதிக்கம் சுகமாக நிறைந்த பழனி கோவிலிலுள்ள உண்டியலில் இந்த நெல் மற்றும் அதைச் சார்ந்த பொருட்களை செலுத்திவிட வேண்டும். இந்த பரிகாரத்தினை தை மாத பௌர்ணமியில் மட்டுமே செய்ய வேண்டும்.