மகப்பேறு வரம் அருளும் மகத்தான பரிகாரங்கள்! -மேல்மருவத்தூர் எஸ். கலைவாணி

/idhalgal/balajothidam/blessings-motherhood-are-great-remedies-melmaruvathur-s-kalaivani

தாய்மை என்னும், இறைநிலையை அடையும் தருணம் என்பது, ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும், மிக முக்கியமான அம்சமாகும். ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒரு ஆணும் வேண்டும், என்பது நமது மூத்தோர் மொழி.

பதினாறு செல்வங்கள் என்று போற்றப்படும் செல்வங்களில், மக்கள் செல்வமே, மகத்தானதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையினை ஆதாரமாகக் கொண்டுதான் நம் வாழ்வின் அனைத்து சடங்குகளும், சம்பிரதாயங்களும், பெரியோர்களால் நிறுவப் பட்டுள்ளது.

வாழ்வின் ஆதாரமான திருமணமே, அடுத்த சந்ததி யினரை உருவாக்கும் ஒரு அம்சத்திற்காக உருவாக் கப்பட்டுள்ள சமுதாயக் கொண்டாட்டமாகும்.

அப்படிப்பட்ட குழந்தைப் பிறப்பை மக்கட் பேறு என்ற அதிகாரத்தின் வாயிலாக நம் வள்ளுவப் பெருந்தகை பத்து குறள்களின்மூலம் பாங்காக உரைத்துள்ளார். நாம் வழிபடும், நமது இன்னலை போக்கும் இறைவனைக் கூட நாம் குழந்தை வடிவிலான பால கணேசனாகவும், பால முருகனாகவும், ஆராதிப்பதில் ஆனந்தப்படுகிறோம்.

ஒரு வீட்டின் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்க முக்கிய மான காரணமாக அமைவது அந்த தம்பதியினருக்கு பிறக் கும் குழந்தைகள்தான். தம்பதியருக்கு இடையிலான பிரச்சினைகளின் தீவிரத் தையும், பிரிவினையும் குழந்தைகளின் ஸ்பரிசமும், பாவனைகளுமே சரி செய்துவிடுகின்றன. மேலும் இருவருக் கும் இடையிலான வாழ்க்கையில், பெரும் அன்புப் பாலமாக குழந்தை களின் வருகை அமைந்துவிடுகிறது.

இவ்வளவு முக்கி யத்துவம் வாய்ந்த குழந்தைப் பிறப்பில் இன்றைய சமூகம் சிக்கித் திணறிக்கொண்டுள்ளது இதற்கான வாழ்வியல் காரணங்கள் என்ன? மற்றும் ஜோதிட காரணங்கள் யாவை என்பதைப் பற்றி ஒன்றன்பின் ஒன்றாக ஆராயலாம்.

ff

வாழ்வியல் காரணங்கள்

நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சில உணவு வழக்கங்களையும் செயல்முறைகளையும் உதாசீனப்படுத்தியதோடு அவற்றை மறக்கவும் செய்ததனால் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

பெண் பிள்ளைகள் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் படுக்கக்கூடாது என்பதும், ஆண் பிள்ளைகள் கவிழ்

தாய்மை என்னும், இறைநிலையை அடையும் தருணம் என்பது, ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும், மிக முக்கியமான அம்சமாகும். ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒரு ஆணும் வேண்டும், என்பது நமது மூத்தோர் மொழி.

பதினாறு செல்வங்கள் என்று போற்றப்படும் செல்வங்களில், மக்கள் செல்வமே, மகத்தானதாகக் கருதப்படுகிறது. இந்த நிலையினை ஆதாரமாகக் கொண்டுதான் நம் வாழ்வின் அனைத்து சடங்குகளும், சம்பிரதாயங்களும், பெரியோர்களால் நிறுவப் பட்டுள்ளது.

வாழ்வின் ஆதாரமான திருமணமே, அடுத்த சந்ததி யினரை உருவாக்கும் ஒரு அம்சத்திற்காக உருவாக் கப்பட்டுள்ள சமுதாயக் கொண்டாட்டமாகும்.

அப்படிப்பட்ட குழந்தைப் பிறப்பை மக்கட் பேறு என்ற அதிகாரத்தின் வாயிலாக நம் வள்ளுவப் பெருந்தகை பத்து குறள்களின்மூலம் பாங்காக உரைத்துள்ளார். நாம் வழிபடும், நமது இன்னலை போக்கும் இறைவனைக் கூட நாம் குழந்தை வடிவிலான பால கணேசனாகவும், பால முருகனாகவும், ஆராதிப்பதில் ஆனந்தப்படுகிறோம்.

ஒரு வீட்டின் மகிழ்ச்சியும் ஒற்றுமையும் அதிகரிக்க முக்கிய மான காரணமாக அமைவது அந்த தம்பதியினருக்கு பிறக் கும் குழந்தைகள்தான். தம்பதியருக்கு இடையிலான பிரச்சினைகளின் தீவிரத் தையும், பிரிவினையும் குழந்தைகளின் ஸ்பரிசமும், பாவனைகளுமே சரி செய்துவிடுகின்றன. மேலும் இருவருக் கும் இடையிலான வாழ்க்கையில், பெரும் அன்புப் பாலமாக குழந்தை களின் வருகை அமைந்துவிடுகிறது.

இவ்வளவு முக்கி யத்துவம் வாய்ந்த குழந்தைப் பிறப்பில் இன்றைய சமூகம் சிக்கித் திணறிக்கொண்டுள்ளது இதற்கான வாழ்வியல் காரணங்கள் என்ன? மற்றும் ஜோதிட காரணங்கள் யாவை என்பதைப் பற்றி ஒன்றன்பின் ஒன்றாக ஆராயலாம்.

ff

வாழ்வியல் காரணங்கள்

நம் முன்னோர்கள் கடைப்பிடித்து வந்த சில உணவு வழக்கங்களையும் செயல்முறைகளையும் உதாசீனப்படுத்தியதோடு அவற்றை மறக்கவும் செய்ததனால் இந்த சூழ்நிலை உருவாகியுள்ளது.

பெண் பிள்ளைகள் நிமிர்ந்தும் கவிழ்ந்தும் படுக்கக்கூடாது என்பதும், ஆண் பிள்ளைகள் கவிழ்ந்து படுக்கக்கூடாது என்றும் கூறுவார்கள். இதற்கான காரணம், எந்த சூழ்நிலையிலும், அடுத்த சந்ததியரின் உற்பத்திக்கு ஆதாரமான கருப்பையின் பாதுகாப்பை முன்னிறுத்தி சில கட்டுப் பாடுகளை விதித்தனர். மேலும் பெண் பிள்ளைகள் ஒரு பக்கமாகப் படுக்கும் பொழுது அவர்களின் இடுப்பு எலும்பானது பலப்பட்டு கரு வினைத் தாங்கும் உறுதியி னைப் பெறும் என்பதற்காக வும், இந்த வழக்கத்தினை கடைப்பிடித்தார்கள்.

நம் உடைகளிலும் அதற்குண்டான வரம் பினை வகுத்தளித்தார் கள். அன்றைய பெண் பிள்ளைகளின் உடையில் பாவாடை என்ற உடை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது அதில் இணைக்கப்பட்ட நாடாவினை, இடுப்பில் சுவாதிஷ்டான சக்கரம் அமையப்பெற்ற இடமும் கருப்பை அமையப்பெற்ற தொப்புள் பகுதியிலும் இறுக்கம் கொடுத்து கட்டும்பொழுது, சுவாதிஷ்டானம் பொறுப்பேற்றுள்ள கருப்பை, சினைப்பை போன்றவற்றின் தூண்டுதலினால் மாதவிடாய் சம்பந்தமான பிரச்சினைகளும், குழந்தையின்மை, சம்பந்தமான பிரச்சினைகளும், தவிர்க்கப் பட்டது.

மேலும் புடவை அணியும் முறை யினிலும் ஒரு வழக்கத்தை நம் முன்னோர்கள் கொண்டுவந்தார்கள். இதில் பின் கொசுவம் வைத்தும் முன்கோசுவும் வைத்தும் புடவை அணியும் வழக்கம் தமிழகத்தில் உண்டு. பின் கொசுவத்தினால் சுவாதிஷ்டான சக்கரத்தின் பாதுகாப்பும், முன் கொசுவத்தினால் கருப்பை யின் பாதுகாப்பையும், முன்னிறுத்தியே இந்த வழக்கம் கொண்டுவரப்பட்டது.

மேலும் ஆண் பிள்ளைகளுக்கு வெள்ளி யினாலான அரைஞாண் கயிறு அணிவித்து சில பிரச்சினைகள் உருவாகாமல், சடங்குகள் மற்றும் சம்பிரதாயங்கள் என்ற பெயரில் வழங்கப்பட்டுவந்தது.

அது மட்டுமல்லாமல் பூப்பெய்திய பெண்பிள்ளைகளின் உணவு முறையானது மிகவும் சிறப்புவாய்ந்ததாக இருந்தது. அதில் நல்லெண்ணெய், நாட்டுக் கோழிமுட்டை, மிளகு, கருப்பு உளுந்தங்களி, வெந்தயக்களி போன்ற உணவுகளை இடம்பெறச் செய்தார் கள். இதன்மூலம் வளர் இனம் பெண்களின் கருப்பை மிக அற்புதமாக பாதுகாக்கப் பட்டுவந்தது.

ஆனால் இன்றைய சூழ்நிலையானது முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் பத்துக்கு மூன்று பெண்களுக்கு கருப்பை சம்பந்தப் பட்ட பிரச்சினைகள், மாதவிடாய் சம்பந் தப்பட்ட பிரச்சினைகள், நீர்க்கட்டி, சினைப் பைக் கட்டி என்று அடுக்கடுக்கான பல பாதிப்புகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கி றார்கள்.

குழந்தையின்மை பிரச்சினைக்கான தீர்வாக, பெண்கள் பூப்பெய்தும் காலத்தி லேயே சரிசெய்யக்கூடிய வழக்கத்தை கையாளுவது சிறப்பினைத் தரும்.

இன்றைய காலகட்டத்தில் தவிர்க்க முடியாத "நாப்கின்' உபயோகங்கள் பேராபத் தினை உருவாக்கிக் கொண்டிருப்பதையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

ஜோதிடரீதியான காரணங்கள்

நம் ஜோதிடவியலில் குழந்தைப் பிறப் பின்மைக்கு எட்டுவிதமான சாபங்கள் காரணமாக வரும் என்று கருத்துண்டு.

அவை:

1. பித்ரு சாபம்

2. சர்ப சாபம்

3. மாத்ரு சாபம்

4. சகோதர சாபம்

5. மாதுல சாபம்

6. பிராமண சாபம்

7. பத்தினி சாபம்

8. மந்திரம் மற்றும் பிரேத சாபம்.

மேலும் ஒரு ஜாதகத்தில் குழந்தைப் பேறு அமைவதை ஆராயும் பாவகமாக பெண்களுக்கு கருப்பையைக் கூறும் நான்காம் பாவகமும், பூர்வ புண்ணியத்தைக் கூறும் ஐந்தாம் பாவகமும், பாக்கியத்தைக் கூறும் ஒன்பதாம் பாவகமும், கர்மத்தை ஆராயும் பத்தாம் பாவகமும், ஆராயப்படவேண்டும்.

ஆண்களுக்கு வீரிய ஸ்தானமான மூன்றாம் பாவகமும், பூர்வபுண்ணிய ஸ்தானமான ஐந்தாம் பாவகமும், பாக்கிய ஸ்தானமான ஒன்பதாம் பாவகம் மற்றும் கர்ம ஸ்தானமான பத்தாம் பாவகத்தின் ஆராய்ச்சியும் மேற்கொள்ளவேண்டும்.

மேலும் சூரியன், சுக்கிரன், குரு போன்ற கிரகங்களையும், சந்திரனையும் கணக்கில் எடுக்கவேண்டும், என்றாலும் ஒன்பது கிரகங்களுமே ஒரு குழந்தையின் உருவாக்கத்திற்குக் காரணமாக அமையும், எவ்வாறென்றால் காதலையும் காமத்தையும் அளிக்கும் புதன், சுக்கிலம் மற்றும் சுரோணிதம் ஆகியவற்றிற்கு பொறுப்பேற்ற சுக்கிரன், கருப்பை மற்றும் மனதிற்குக் காரணமான சந்திரன், கருமுட்டை மற்றும் உயிரணுவின் உற்பத்தியினைத் தீர்மானிக்கும் செவ்வாய், அந்த கருமுட்டையை குழந்தையாக மாற்றும் உறுதியினை அளிக்கும் புத்திர காரகன் குரு, உடலியல் செயல்பாட்டில் உழைப்பினைச் சொல்லும் சனி, அந்த சுகத்தின் முடிவில் அமைதியினைத் தரும் கேது, உயிரணுவின் வடிவமான ராகு, ஆன்மாவினை உட்புகுத்தும் ஆன்ம காரகனா கிய சூரியன் என்று அனைவரின் பங்கும் இதில் அளப்பரியதாக உள்ளது.

ஒரு ஜாதகத்தில் குழந்தை பாக்கியம் உண்டா- இல்லையா என்பதனை எவ்வாறு அறியலாம்?

ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகாதிபதிகள் நீசம், அஸ்தங்கம், திதி சூனியம், பாதகமாக இல்லாமலும், 6, 8, 12 -ல் மறையாமலும் இருப்பது சிறப்பு. மேலும் 6, 8, 12-ஆம் அதிபதிகள் ஐந்தாம் பாவத்தோடு தொடர்புபெறாமல் இருப்பது கூடுதல் சிறப் பினைத் தரும்.

ஐந்தில் ராகு இருப்பது தோஷமாக எடுத்துக்கொண்டாலும், அது புத்திரத் தடையினைத் தராமல் ஒருசார் புத்திரமாக- அதாவது ஆண் பிள்ளைகள் மட்டும் அல்லது பெண் பிள்ளைகள் மட்டும் என்ற நிலையினை உருவாக்கும். மேலும் ஐந்தில் சனி- தாமதமான புத்திரப்பேறு. புத்திர காரகனாகிய குரு ஐந்தில் இருப்பது சிறப்பல்ல.

அது பாவக காரக நாஸ்தியாக எடுத்துக் கொள்ளப்படும். ஐந்தில் மாந்தி மற்றும் பாதகாதிபதியின் தொடர்பு கருச்சிதைவு மற்றும் இறந்தே குழந்தை பிறப்பது போன்ற சூழ்நிலையை உருவாக்கும்.

மேற்கூறிய ஐந்தாமிடம் (ஆண்களுக்கும், பெண்களுக்கும்) இதே அமைப்பு ஒன்பதில் இருக்க மேற்கூறிய பலன்கள் நடைபெறும்.

குழந்தைப் பிறப்பை எதிர்பார்க்கும் தம்பதியினர் ஒன்பது, ஐந்து பாவங்களோடு புதன் தொடர்பிருந்தால் சித்த மருத்துவமும், செவ்வாய், கேது அல்லது சூரியன் இருந்தால் அலோபதி முறையிலும், சனி, ராகு அமைந்திருந்தால் வீட்டு வைத்தியமான மலைவேம்பு போன்ற மருந்துகளையும் எடுப்பது சிறப்பு.

மேலும் நாட்கள் கடந்த தம்பதியினர் செயற்கை முறை கருத்தரிப்பினை நாடும்பொழுது பலவிதமான இன்னல்களை சகித்து சிகிச்சை மேற்கொள்ள நேரும். அதில் பொருளாதார இழப்பையும், மன உளைச்சலையும், உடல்ரீதியான பலப்பல இன்னல்களையும், வலியையும், அனுபவிக்கும் சூழ்நிலை உருவாகிவிடுகிறது.

அத்தனையும் கடந்து சிகிச்சைக்குச் சென்றாலும், தோல்வி வரும் சூழ்நிலையைத் தம்பதியினறால் ஏற்றுக்கொள்ள முடியாது. ஆனாலும் ஏற்கவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இந்த இடர்ப்பாடான சூழ்நிலையைத் தவிர்க்க, நமக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை யின் பலன் முழுவதுமாகக் கிடைக்க ஜோதிட ரீதியான சில வழிமுறைகளைப் பின்பற்று வது சிறப்பினைத் தரும்.

நம் ஜாதகத்தில் ஐந்து மற்றும் ஒன்பதாம் பாவகம் உயிர்ப்புடன் இருக்கும் தசா, புக்தி, அந்தர காலங்களிலும், குருவின் பார்வை ஐந்து, ஒன்பதில் பதியும் காலங்களையும், சனியின் தொடர்பு மற்றும் பார்வை ஐந்து, ஒன்பதாம் பாவகங்களில் பதியாத நேரத்தையும், கணக்கில் எடுப்பது நன்மை தரும். மகர லக்ன நேரங்களிலும், துலா லக்ன காலங்களிலும், ண்ஸ்ச், ண்ன்ண், ண்ஸ்ரீள் போன்ற செயல்பாடுகள் மேற்கொள்ளாமல் தவிர்ப்பதும், சிகிச்சையின் முழுப் பலனும் நமக்கு சாதகமாக அமையும் காலங்களாக இருக்கும்.

மேலும் புத்திரவரம் வேண்டி காத்திருக் கும் தம்பதிகள் அருகிலுள்ள கிருஷ்ணன் ஆலயத்தில் அஷ்டமி திதியன்று ஒரு குறிப்பிட்ட அளவிலான வெண்ணெயை வாங்கிக் கொடுத்து இறைவனின் பாதத்தில் வைத்து வாங்கிக்கொள்ளவும். இதனை 48 நாட்கள் காலையில் சந்தான கோபால மந்திரத்தினை உச்சரித்தபின்பு வெறும் வயிற்றில் சிறிதளவு உண்டுவரவும். இதனுடன் சேர்ந்து சிகிச்சையும் மேற் கொள்ளும்பொழுது 100 சதவிகிதம் பலன் உறுதியாகும்.

குழந்தைக் காரகனான குரு பகவான் ஜாதகத்தில் சரியான பாவகத் தொடர்பில்லாதபொழுது, வியாழன் தோறும் ஒரு மஞ்சள் கிழங்கினை குரு பகவான் பாதத்தில் வைத்து எடுத்துவந்து, வீட்டில் ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்துவிடவேண்டும். இதேபோன்று 16 வாரங்கள் 16 மஞ்சள் கிழங்குகளை சேகரித்து, அதனை ஊறவைத்து அரைத்து குருவின் பாதத்தில் பூசி குங்குமம் வைத்து வழிபட குழந்தை வரம் கிடைக்கும்.

செல்: 80563 79988

bala070723
இதையும் படியுங்கள்
Subscribe