ஜாதகம் என்பது ஒருவர் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த இடத்தின் அன்றைய கிரக நிலைகளையும் கணித்து எழுதப்படும் ஒரு பிறந்தகால குறிப்பாகும். அதில் ராசி, நவாம்சம், பாதசாரம், தசாபுக்தி போன்ற பல குறிப்புகள் அடங்கி இருக்கும்.

இது என்றைக்கும் மாறாது. அதில் அமைந்திருக் கும் கிரக நிலையே மனிதர்களின் வாழ்வியலை தீர்மானிக் கின்றன. ஜோதிடக் கணக்கீடுகள், ஷட்பலம், பாவபலம் மற்றும் பல்வேறு வகையான பலாபலன் களை உள்ளடக்கியதாகும். இவைகள் எல்லாம் இருந் தால்தான், ஒரு ஜோதிடரால் ஜாதகத்தை முழுமையாக கணித்து, அந்த ஜாதகருக்கு உரிய ஜாதகப் பலன்களைத் தெளிவாக கூறமுடியும்.

ஒரு ஜோதிடர் ஒரு ஜாதகதிற்கு எந்த முறையில் பலாபலன்கள் கூறினாலும் ஜாதகர் விரும்புவது துல்லியமான பலாபலன் களை மட்டுமே. சில ஜோதிடரின் கணிப்பு மிகச் சரியாக தெளிவான விளக்கமாக இருக்கும். எவ்வளவு திறம்பெற்ற ஜோதிட ராக இருந்தாலும் ராசிக்கட்டம், நவாம்ச கட்டம் மட்டும் வைத்து முழுமையாக ஜோதிடம் சொல்ல இயலாது. முழுமையான பாவகச்சக்கரமே ஒரு ஜாதகத்திலுள்ள கிரகங்களின் வலிமையை தெளிவாக உணர்த்தும். 360 டிகிரிகொண்ட ஒரு ராசி சக்கரத்தில் ஒவ்வொருவருக்கும், அவரவர் கர்மவினைக்கு ஏற்ப, ஒரு லக்னம் அமையும். ஒரு ராசிச் சக்கரத்தில் உள்ள 12 கட்டத்தில், ஒரு குறிப்பிட்ட டிகிரியில் நவகிரகங்களும் இருக்கும். ஒரு ராசியின் அளவு 30 டிகிரி. 30 டிகிரிகொண்ட ராசியில், ஒரு கிரகம் 1 டிகிரியிலிருந்து, 30 டிகிரிக்குள் எந்த டிகிரிக்குள் ளும் இருக்கலாம். லக்னப் புள்ளி விழுந்த இடத்திலிருந்து 30 டிகிரிவரை முதல் பாவகம். லக்னம் முடிந்த டிகிரியிலிருந்து அடுத்த 30 டிகிரிவரை இரண்டாம் பாவகம் என்று இது போல் 12 பாவகங்களும் கணக்கிடவேண்டும். ஒரே வரியில் சொல்வதென்றால் ஒரு பாவகம் எந்த ராசிப் புள்ளியில் உள்ளதோ, அங்கிருந்து 30 டிகிரி வரை கணக்கெடுக்கவேண்டும்.

ராசி சக்கரத்திலுள்ள லக்னத்தை முதன்மையாககொண்டு, பாகையை அளவீடாக கொண்டு பிரித்து கணிக்கப் படுவது பாவ சக்கரமாகும். ஒரு ஜோதிடர், இதையெல்லாம் கணித்தபின்தான் பலன் சொல்லவேண்டும்.

Advertisment

cc

ஜோதிட பலன் சொல்வதில் இது மிக முக்கியமான விதிமுறை என்பதை பலரும் உணர்வது இல்லை. இது வருந்தத்தக்க விஷயம்தான். பலருக்கு ஜோதிடர், ஜோதிடத்தின்மேல் தவறான அபிப்ராயம் ஏற்படுவதற்கு இதுவும் ஒரு காரணமாகும். பலன் தவறுவதற்கு இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்று என்பதை பாவகச் சக்கரத்தின் நுணுக்கம் அறிந்தவர்களுக்கு மட்டுமே புரியும். இதை ஒரு உதாராண ஜாதகத்துடன் விளக்கமாக பார்க்கலாம்.

30-9-1996/ 12.56-க்கு சென்னையில் பிறந்த பெண் ஜாதகம். இந்த ஜாதகி தனுசு லக்னம். லக்னப் புள்ளி 260.15-ல் பூராடம் 3-ஆம் பாதத்தில் அமைந்துள்ளது. இதன்படி 1-ஆம் பாவக ஆரம்பம் முதல் 12-ஆம் பாவகம் முடிவுவரை அட்டவணை கொடுக்கப்பட்டுள்ளது. ராசியில் லக்னம், லக்னாதிபதியின் அமர்வுபடி லக்னாதி பதி குரு லக்னத்தில் நின்றாலும் அவர் நின்ற நட்சத்திரப் பாதம் 255.14-ல் பதிகிறது.

ஜாதகத்தை பார்த்தவுடன் லக்னாதி பதி குரு லக்னத்தில் நிற்கிறார் என்று பலன் உரைத்தாலும் 12-ஆம் பாவகத்திற்குரிய பலனையே பெரும்பான்மையாக லக்னாதிபதி வழங்குவார். ஜாதகி பூர்வீகத்தை விட்டு வெளியூரில் வாழ்வார், தன் தேவைக்காக அதிக பொருள் விரயம் செய்பவர், தனிமை விரும்பி என்று பலன் கூற வேண்டும்.

லக்னாதிபதி ஆட்சி தொட்டதெல்லாம் பொன்னாகும் என்று பலன் கூறினால் அதில் தவறு ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. லக்னத்தில் அமரும் கிரகம் ஜாதகரின் வாழ்க்கைப் பயணம் எனும் வாகனத்தின் அச்சாணி என்பதை மறந்துவிடக்கூடாது. அவர் விரய ஸ்தானத்திற்கு சம்பந்தம் பெறுவதால் ஜாதகர் வாழ்வில் கண்டிப்பாக ஏதாவது ஒன்றினை விரயமாக்க வேண்டும் என்பது விதி. அதேபோல் தனம், வாக்கு, குடும்ப ஸ்தான அதிபதி சனி ராசிக் கட்டத்தில் 4-ஆம் இடத்தில் நிற்கிறார்.

cc

Advertisment

பாவ சக்கரத்தில் 3-ஆம் இடத்தில் சஞ்சரிப்பதால் 3, 4-ஆம் பாவக பலன்களை சேர்த்தே வழங்குவார் என்பதால் பாவகம் பார்க்காமல் முரண்பாடான பலன்களைக் கூறக்கூடாது. இப்படி பலன்கள் முன்னுக்கு பின் மாறிவிடுவதால், பாவக சக்கரப்படி ஒரு ஜாதகர் பெறப்போகும் யோகங்கள் உண்மையா... இல்லை அவர் அனுபவிக்கபோகும் கஷ்டங்கள் உண்மையா என தெளிவாக அறிய இயலும்.

பல சூழ்நிலையில் பாவகச் சக்கரத்தை பயன்படுத்துவது ராசியும் நவாம்சமும் குறிப்பிடாத விஷயங்களைக் கண்டுபிடிக்க பெரிதும் உதவும். அத்துடன் கிரகத்தின் பார்வை பலனும் கிரகம் நின்ற நட்சத்திர சாரத்தின் பலனும் மாறாதவை என்பதை புரிந்துகொள்ளவேண்டும். இப்படி கிரக வலிமை அறியும், துல்லிய கணித விதி முறைகளும் உள்ளன. பாவச் சக்கரத்தை இப்படி அலசினால் அது ராசிச் சக்கரம் சொல்லாத பல கேள்விகளுக்கு விடை சொல்வதை உணரலாம். எனவே ராசிச்சக்கரம் நவாம்ச சக்கரங்களை ஆராய்வதோடு நின்றுவிடாமல் குறைந்தபட்சம் பாவச் சக்கரத்தையும் ஒரு ஒப்பீட்டுக்கு எடுத்துக்கொள்வது பலன்களை துல்லியமாக அளவிட உதவும்.

ராசிக் கட்டத்தின் ஒரு துணை சக்கரமே பாவகச் சக்கரம் என்பதால் ராசி, பாவகச் சக்கரத்தையும் ஒப்பிட்டுப் பார்த்து கிரகங்களின் வலிமையை ஆராய்ந்து பலன் நிர்ணயம் செய்வது சாலச் சிறந்தது.