வாக்கியப்படி 20-7-2022 முதல் 16-11-2022 வரை
திருக்கணிதப்படி 29-7-2022 முதல் 24-11-2022 வரை
மேஷம்
ராசிக்கு 12-ஆமிடமான விரய ஸ்தானத் தில் சஞ்சரித்துவரும் குரு பகவான் உங்களுக்கு நிறையவே சங்கடங்களையும் நெருக்கடிகளையும் வழங்கிவருகிறார். இந்தநிலையில் ஜென்ம ராசியில் ராகுவும், ஏழாமிடத்தில் கேதுவும் சஞ்சரித்து சோதனைக்குமேல் சோதனை என்று வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்குமேலாக உங்கள் முயற்சிகள் அனைத்திலும் தோல்வி களையே சந்தித்து வந்திருப்பீர்கள். பணி புரியும் இடத்திலும் சங்கடங்கள் உண்டாகி யிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருப்பீர்கள். தொழிலும் கடுமை யான நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கும். எதிர்பாராத செலவுகள், கடன் கொடுத்தவர் களின் நெருக்கடி, வருமானத்திற்காக பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டும் நிறைவேறாமல் அவதிக்கு ஆளாகியிருப்பீர்கள். வாழ்க்கையே சோதனையாகி வேதனையில் வாழ்ந்திருப்பீர்கள். இந்த நிலையில்தான் குரு பகவான் 20-7-2022 முதல் மீனத்தில் வக்ரமாகிறார். குருபகவான் 12-ஆமிடத்தில் வக்ரமாவதால் இனி உங்களுக்கு நன்மையான பலன்களே நடக்குமென்று நம்பிக்கையோடு சொல்லலாம். இந்த வக்ர காலத்தில் உங்கள் வாழ்க்கை யில் நன்மைகள் உண்டாகப் போகிறது. எதிர்பாராத வருமானங்கள் வந்து சேரப்போகிறது. உடல்நிலையில் முன்னேற்ற மும் மனநிலையில் மகிழ்ச்சியும் உண்டாகப் போகிறது. நீங்கள் நினைத்திருந்த ஒவ்வொன் றும் நினைத்தபடியே நடந்து அதனால் முன் னேற்றங்களையும் சந்திக்க இருக்கிறீர்கள்; மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறீர்கள். வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று நன்மைகளும் உண்டாகப்போகிறது. நிறை வேறாத முயற்சிகள் நிறைவேறப் போகிறது. பொருளாதாரநிலை உயர்வதுடன், புதிய வீடுவாங்கும் முயற்சியும், புதிய வீட்டிற்குக் குடிபோகும் எண்ணமும் நிறைவேறப் போகிறது. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கப் போவதுடன், நீங்கள் சொல்லும் வாக்கும் மதிப்படையும். சிலருக்கு புதிய வாகனங்கள், பொன், பொருள் வாங்கும் யோகமும் உண்டாகும். மண வாழ்கையில் பிரிவை சந்தித்திருப்பவர்களுக்கு புதிய துணை அமையும் என்பதுடன், நீண்டநாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். ஆலய தரிசனம் மேற்கொள்ளும் வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலிலும் வருமானத்திலும் ஏற்பட்ட தடைகள் விலகி நன்மைகளை அடைவீர்கள்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு 11-ஆமிடமான லாப ஸ்தானத் தில் சஞ்சரித்து வரும் குருபகவான் உங்களுக்கு நிறையவே நன்மைகளை யும் மகிழ்ச்சி களையும் வழங்கிவரு கிறார். உங்களு டைய எதிர் பார்ப்பு களை யெல்லாம் நிறைவேற்றி வருகிறார். இந்தநிலை யில் ஆறா மிடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவா னும் உங்க ளுக்கு நன்மைகளை வழங்கிவருகிறார். பகைவர் களால் உண்டான சங்கடங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துவருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்குமேலாக உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி களையே சந்தித்து வந்திருப்பீர்கள். பல்வேறு சங்கடங்களிலிருந்து விடுபட்டிருப்பீர் கள். பணிபுரியும் இடத்திலும் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறியிருக் கும். உத்தியோகத்தில் பிரச்சினைகளை சந்தித்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு நிம்மதியான நிலையை அடைந்திருப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் நடந்திருக்கும். புதிய முயற்சிகள் நிறைவேறி யிருக்கும். லாபங்கள் அதிகரித்திருக்கும். குடும்பத்தில் நன்மைகள் நடந்திருக்கும். திருமணம், புதிய வீட்டிற்குக் குடிபோதல், புதிய இடம் வாங்குதல், சொத்து வாங்குதல் என்று உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறியிருக்கும். ஒருசிலர் புதிய கட்டுமானங்களை உங்
வாக்கியப்படி 20-7-2022 முதல் 16-11-2022 வரை
திருக்கணிதப்படி 29-7-2022 முதல் 24-11-2022 வரை
மேஷம்
ராசிக்கு 12-ஆமிடமான விரய ஸ்தானத் தில் சஞ்சரித்துவரும் குரு பகவான் உங்களுக்கு நிறையவே சங்கடங்களையும் நெருக்கடிகளையும் வழங்கிவருகிறார். இந்தநிலையில் ஜென்ம ராசியில் ராகுவும், ஏழாமிடத்தில் கேதுவும் சஞ்சரித்து சோதனைக்குமேல் சோதனை என்று வழங்கிக்கொண்டிருக்கிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்குமேலாக உங்கள் முயற்சிகள் அனைத்திலும் தோல்வி களையே சந்தித்து வந்திருப்பீர்கள். பணி புரியும் இடத்திலும் சங்கடங்கள் உண்டாகி யிருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருப்பீர்கள். தொழிலும் கடுமை யான நெருக்கடிகளுக்கு ஆளாகியிருக்கும். எதிர்பாராத செலவுகள், கடன் கொடுத்தவர் களின் நெருக்கடி, வருமானத்திற்காக பல் வேறு முயற்சிகளை மேற்கொண்டும் நிறைவேறாமல் அவதிக்கு ஆளாகியிருப்பீர்கள். வாழ்க்கையே சோதனையாகி வேதனையில் வாழ்ந்திருப்பீர்கள். இந்த நிலையில்தான் குரு பகவான் 20-7-2022 முதல் மீனத்தில் வக்ரமாகிறார். குருபகவான் 12-ஆமிடத்தில் வக்ரமாவதால் இனி உங்களுக்கு நன்மையான பலன்களே நடக்குமென்று நம்பிக்கையோடு சொல்லலாம். இந்த வக்ர காலத்தில் உங்கள் வாழ்க்கை யில் நன்மைகள் உண்டாகப் போகிறது. எதிர்பாராத வருமானங்கள் வந்து சேரப்போகிறது. உடல்நிலையில் முன்னேற்ற மும் மனநிலையில் மகிழ்ச்சியும் உண்டாகப் போகிறது. நீங்கள் நினைத்திருந்த ஒவ்வொன் றும் நினைத்தபடியே நடந்து அதனால் முன் னேற்றங்களையும் சந்திக்க இருக்கிறீர்கள்; மகிழ்ச்சியில் திளைக்கப் போகிறீர்கள். வேலை வாய்ப்பிற்காக எதிர்பார்த்திருந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பும், உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு என்று நன்மைகளும் உண்டாகப்போகிறது. நிறை வேறாத முயற்சிகள் நிறைவேறப் போகிறது. பொருளாதாரநிலை உயர்வதுடன், புதிய வீடுவாங்கும் முயற்சியும், புதிய வீட்டிற்குக் குடிபோகும் எண்ணமும் நிறைவேறப் போகிறது. நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கப் போவதுடன், நீங்கள் சொல்லும் வாக்கும் மதிப்படையும். சிலருக்கு புதிய வாகனங்கள், பொன், பொருள் வாங்கும் யோகமும் உண்டாகும். மண வாழ்கையில் பிரிவை சந்தித்திருப்பவர்களுக்கு புதிய துணை அமையும் என்பதுடன், நீண்டநாள் எண்ணங்கள் பூர்த்தியாகும். ஆலய தரிசனம் மேற்கொள்ளும் வாய்ப்புகளும் உண்டாகும். தொழிலிலும் வருமானத்திலும் ஏற்பட்ட தடைகள் விலகி நன்மைகளை அடைவீர்கள்.
ரிஷபம்
உங்கள் ராசிக்கு 11-ஆமிடமான லாப ஸ்தானத் தில் சஞ்சரித்து வரும் குருபகவான் உங்களுக்கு நிறையவே நன்மைகளை யும் மகிழ்ச்சி களையும் வழங்கிவரு கிறார். உங்களு டைய எதிர் பார்ப்பு களை யெல்லாம் நிறைவேற்றி வருகிறார். இந்தநிலை யில் ஆறா மிடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவா னும் உங்க ளுக்கு நன்மைகளை வழங்கிவருகிறார். பகைவர் களால் உண்டான சங்கடங்களிலிருந்து உங்களைப் பாதுகாத்துவருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்குமேலாக உங்கள் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி களையே சந்தித்து வந்திருப்பீர்கள். பல்வேறு சங்கடங்களிலிருந்து விடுபட்டிருப்பீர் கள். பணிபுரியும் இடத்திலும் உங்களுடைய எதிர்பார்ப்புகள் நிறைவேறியிருக் கும். உத்தியோகத்தில் பிரச்சினைகளை சந்தித்தவர்கள் அதிலிருந்து விடுபட்டு நிம்மதியான நிலையை அடைந்திருப்பீர்கள். தொழிலில் எதிர்பார்த்த நன்மைகள் நடந்திருக்கும். புதிய முயற்சிகள் நிறைவேறி யிருக்கும். லாபங்கள் அதிகரித்திருக்கும். குடும்பத்தில் நன்மைகள் நடந்திருக்கும். திருமணம், புதிய வீட்டிற்குக் குடிபோதல், புதிய இடம் வாங்குதல், சொத்து வாங்குதல் என்று உங்களுடைய எண்ணங்கள் நிறைவேறியிருக்கும். ஒருசிலர் புதிய கட்டுமானங்களை உங்கள் பூர்வபுண்ணிய பலன்களுக்கேற்ப தொடங்கியிருப்பீர்கள். எல்லாவகையிலும் பதினொன்றாம் இடத்தில் சஞ்சரித்துவரும் குருபகவான் நன்மைகளையே வழங்கிவருகிறார். கடந்தகாலத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளிலிருந்தும் விடுதலை அடைந்திருப்பீர்கள். இந்த நிலையில்தான் குரு பகவான் 20-7-2022 முதல் மீனத்தில் வக்ரமாகிறார். குருபகவான் லாப ஸ்தானமான பதினொன் றாமிடத்தில் வக்ரமாவதால் இனி உங்களுக்கு இதுவரையில் நடந்த பலன்களில் மாறுதல் ஏற்படும். சில சங்கடங்களை புதிதாக சந்திக்கவேண்டியிருக்கும். இந்த வக்ர காலத்தில் நீங்கள் செய்யும் தொழிலில் தேக்கநிலை உண்டாகலாம். வருமானத்தில் தடையும் தாமதமும் ஏற்படலாம். உத்தியோகத்தில் இருப்பவர் களுக்கு வேலையில் பிரச்சினைகள் ஏற்படு வதற்கு வாய்ப்புகள் உண்டு. ஒருசிலருக்கு விருப்பமில்லாத இடமாற்றமும், அதனால் பாதிப்புகளும் ஏற்படலாம். முதலாளியோ மேலதிகாரியோ- இக்காலத்தில் அவர் களால் நெருக்கடிகள் அதிகரிக்கும். பார்த்து வரும் பணியில் சங்கடத்தை அனுபவிக்க வேண்டியதாக இருக்கும். அதனால் இந்த வேலையே வேண்டாமென்று வேலையை விட்டு விலகும் எண்ணமும் சிலருக்கு உண்டாகும். ஒருசிலர் புதிய வேலைக்கு முயற்சி மேற்கொள்வீர்கள். என்றாலும், அதில் வெற்றியடைய முடியாமல் போகும். தேவையற்ற முயற்சிகளால் அலைச்சல் அதிகரிக்கும். வருமானம் குறைவதால் டென்ஷன் கூடும். இக்காலத்தில் வீட்டிலிருக் கும் பொன், பொருட்களை விற்கவேண்டி வரும். கணவன்- மனைவிக்குள் மன சங்கடங் கள் உண்டாகும். கருத்து வேறுபாடும் அதிகரிக்கும். பெற்றோருடனும் சகோதர- சகோதரிகளுடனும் மனவருத்தம் உண்டாகும். சொந்த ஊரைவிட்டு வெளியூர் சென்று வசிக்கவேண்டிய சூழலும் ஒருசிலருக்கு உண்டாகலாம். பொதுவில் இக்காலத்தில் எல்லா வகையிலும் நெருக்கடிகளே இருக்கு மென்பதால் எச்சரிக்கையுடன் இருந்து நிதானித்து செயல்பட்டால் மட்டுமே இழப்புகளைத் தவிர்க்கமுடியும்.
மிதுனம்
உங்கள் ராசிக்கு பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் குருபகவான், "பத்தாமிட குரு பதவியைப் பறிப்பான்' என்னும் வார்த்தைக்கேற்ப உங்களுக்கு நிறையவே சங்கடங்களையும் பிரச்சினைகளையும் வழங்கிவருகிறார். வேலையில் நெருக்கடிகளையும் முயற்சிகளில் தடைகளையும் உண்டாக்கி வருகிறார். இந்தநிலையில் 11-ஆமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்களுக்கு நன்மைகளை வழங்கி, வாழ்க்கைக்குத் தேவையான வருமானத்தை ஏற்படுத்தி வருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்குமேலாக உங்கள் செயல்கள் அனைத்தும் நிறைவேறாத நிலையே இருந்திருக்கும். பொருளாதார நிலையில் சங்கடங்களை சந்தித்திருப்பீர்கள். வியாபாரத்தில் போட்டி, தடை, நஷ்டம் என்று சிரமங்களை அனுபவித்திருப்பீர்கள். பணிபுரியும் இடத்திலும் மேலதிகாரிகளால் சங்கடங்கள் உண்டாகியிருக்கும். தேவையற்ற நெருக்கடிகளை சந்தித்திருப்பீர்கள். பணமுடை ஏற்பட்டு குடும்பத்தில் நெருக்கடி கள் அதிகரித்திருக்கும். கொடுக்கல்- வாங்க -ல் பிரச்சினைகள் ஏற்பட்டிருக்கும். எதிர் பார்ப்புகள் நிறைவேறாமல் மன சங்கடத்திற்கு ஆளாகியிருப்பீர்கள். புதிய முயற்சிகளில் நன்மைகள் கிடைக்காமல் எதிர்மறையான பலன்களை சந்தித்திருப்பீர்கள். வேலை வாய்ப்பை எதிர்பார்த்தவர்களுக்கு சரியான தகவல் வந்திருக்காது. வேலை வாய்ப்பும் அமைந்திருக்காது. உத்தியோகத்தில் இருப் பவர்கள் நெருக்கடிகளுக்கு ஆளாகியிருப்பீர் கள். உடன்பணிபுரிபவர்களால் சங்கடங் களை சந்தித்திருப்பீர்கள். மறைமுக எதிர்ப்பு கள் அதிகரித்திருக்கும். பண வருவாயில் தடைகள் ஏற்பட்டிருக்கும். இவையெல்லாம் பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு பகவானால் நீங்கள் அடைந்துவரும் பலன்களாகும். இந்த நிலையில்தான் குரு பகவான் 20-7-2022 முதல் மீனத்தில் வக்ரமாகிறார். குரு தொழில் ஸ்தானமான பத்தாமிடத்தில் வக்ரமாவதால் இனி உங்கள் வாழ்க்கை நிலையில் எதிர்பாராத மாற்றங்கள் உண்டாகும். முதலில் உங்கள் உடல்நலனில் முன்னேற் றம் ஏற்படும். மருந்து, மாத்திரை, மருத்து வம் என்று அலைந்தும் உடல்நிலை சீராக வில்லையே என்று வருந்திக்கொண்டிருந்த வர்களின் நிலை சீராகும். மனதில் தைரியம் அதிகரிக்கும். தன்னம்பிக்கையும் கூடும். உங்கள் செயல்திறன் கண்டு பகைவர்களும் உங்களை சரணடைவார்கள். பிரச்சினை என்று நீங்கள் பயந்துகொண்டு, மனம் வருந்திக்கொண்டிருந்ததெல்லாம் சூரியனைக் கண்ட பனிபோல் அகன்றுவிடும். இதுவரை திருமணம் கூடிவரவில்லையே என்று வருந்திக் கொண்டிருந்தவர்களுக்கும், வீட்டில் வயதுவந்த பிள்ளைகள் இருந்தும் திருமணம் நடக்கவில்லையே என்று சோகத்தில் இருந்த வர்களுக்கும் 20-7-2022 முதல் நன்மைகள் நடக்கும். வீட்டில் மங்கள வாத்தியம் கேட்கும். குழந்தை பாக்கியத்திற்காக ஏங்கிக்கொண்டி ருந்தவர்களின் ஏக்கம் தீரும். வாழ்க்கைத் துணையால் அந்தஸ்து உயரும். பொன், பொருள் சேர்க்கை உண்டாகும். இருப் பிடத்தை ஒருசிலர் மாற்றம் செய்வீர்கள். வேறிடம், வேற்றூர், மாவட்டம்விட்டு மாவட்டம் என்று ஒருசிலருக்கு வெளியூர் வாசம் அமையும். அதனால் நன்மைகளே உண்டாகும். சொந்தமாக வீடு, நிலம், வாகனம் வாங்கும் யோகமும் இக்காலத்தில் உண்டாகும். கல்வியாளர்கள் சிறப்படை வீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். ஆசிரியர்களின் நிலை உயரும். புதிய பொறுப்புகள் தேடிவரும். கடல்கடந்து செல்ல நினைத்தவர்களுக்கு அதற்குரிய வாய்ப்புகள் வரும். அரசுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வும் இட மாற்றமும் உண்டாகும். பொதுவில் இக்காலம் தொட்டதெல்லாம் துலங்கும்- நினைத்ததெல்லாம் நடக்கும் காலமாகும்.
கடகம்
உங்கள் ராசிக்கு ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் குருபகவான், தொடர்ந்து நன்மைகளையே வழங்கிவருகிறார். வாழ்க்கையில் நீங்கள் எதிர்பார்த்தவற்றை நிறைவேற்றிவருகிறார். குடும்பத்தில் மங்கள நிகழ்ச்சிகளுக்கு வழி வகுத்து வருகிறார். பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானும் நான்காமிடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானும் உங்களுக்கு சங்கடங்களை வழங்கிவந்தாலும், அவற்றை சமாளிக்கும் நிலையினை குருபகவான் வழங்கிவருகிறார். கடந்த மூன்று மாதங்களுக்குமேலாக பாக்கிய ஸ்தான குருவினால் உங்கள் செயல் களில் வெற்றி கண்டிருப்பீர்கள். முயற்சிகள் யாவும் எளிதாக நிறைவேறியிருக்கும். குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த மகிழ்ச்சி ஏற்பட்டிருக்கும். புதிய முயற்சிகள் வெற்றி பெற்றிருக்கும். ஒருசிலர் வெளியூர் சென்று புதிய இடம்வாங்கி வசிக்க ஆரம்பித்திருப் பீர்கள். விவசாயத்தில் வருமானம் அதிகரித் திருக்கும். வெளிவட்டாரத்தில் உங்கள் செல்வாக்கும் சொல்வாக்கும் அதிகரித்தி ருக்கும். ஒருசிலர் இடத்தை மாற்றம் செய்திருப் பீர்கள். புதிய வீட்டைக் கட்டியிருப்பீர்கள். வசிக்கும் வீட்டைப் புதுப்பித்திருப்பீர்கள். செய்துவரும் தொழிலை விரிவு செய்திருப் பீர்கள். வேலைதேடி வந்தவர்களுக்கு எதிர் பார்த்த- உங்கள் திறமைக்கேற்ற வேலை கிடைத்திருக்கும். அலுவலகப் பணியாளர் களுக்கு நன்மைகள் நடந்திருக்கும். மேலதிகாரிகளின் ஆதரவு கிடைத்திருக்கும். வருமானம் பலவகையிலும் வந்துசேர்ந்தி ருக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் என்று நன்மைகள் நடந்திருக்கும். வீடு, மனை வாங்கும் எண்ணம் நிறைவேறியிருக்கும். சிலர் புதிய வாகனம் வாங்கியிருப்பீர்கள். இவையெல்லாம் ஒன்பதாமிடமான பாக்கிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குருபகவானால் நீங்கள் அடைந்துவரும் நற்பலன்களாகும். இந்த நிலையில்தான் குருபகவான் 20-7-2022 முதல் உங்களின் பாக்கிய ஸ்தானமான மீனத்தில் வக்ரமாகிறார். குருபகவான் வக்ரமாகும்போது, அவ ருடைய ஸ்தான, பார்வைகளின் பலன் களால் இதுவரையில் நீங்கள் அடைந்துவந்த நன்மைகள் எதிர்மறையாகும். நன்றாக சென்றுகொண்டிருக்கும் வாகனம் திடீரென ரிப்பேர் ஆனாதுபோல் உங்கள் நிலை மாறும். செய்துவரும் தொழிலில் இனி முழு கவனத்தையும் ஈடுபடுத்தவேண்டியதாக இருக்கும். இல்லையெனில் தொழிலில் பாதிப்பும் நஷ்டமும் ஏற்பட வாய்ப்புண்டு. எந்தவொரு காரியமாக இருந்தாலும் அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ள வேண்டியதாக இருக்கும். முயற்சிகளில் கவனம் அதிகமாக இருந்திடவேண்டும். அலைச்சல் அதிகரிக்கலாம். பண விரயம் உண்டாகலாம். உடல்நிலையில்கூட ஏதாவது பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. குடும்பத்திலும் யாராகிலும் ஒருவருக்கு உடல்நிலை பாதிக்கப்பட வாய்ப் புண்டு. இதன்காரணமாக செய்துவரும் தொழிலை சரியாக கவனிக்கமுடியாத நிலையும், வேலையில் அடிக்கடி விடுமுறை எடுக்கவேண்டிய சூழலும் உருவாகும். பொருளாதார நெருக்கடிக்கு ஆளாவீர்கள். அதனால் கையிலிருக்கும் பொன், பொருட் களில் குறைவுண்டாகும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பிள்ளைகளால் தொல்லை என்று சங்கடங்களை சந்திக்கவேண்டிய காலமாக குருபகவானின் வக்ரகாலம் இருக்குமென்பதால், சிந்திக்காமல் எந்தவொரு செயலிலும் ஈடுபடவேண்டாம். எந்தவொன்றிலும் அவசரம் வேண்டாம்.
சிம்மம்
உங்கள் ராசிக்கு எட்டாமிடமான அஷ்டம ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் குருபகவான் தொடர்ந்து உங்களுக்கு சங்கடங்களையே வழங்கிவருகிறார். எதிர்பார்த்த எந்த ஒன்றிலும் நிம்மதியான நிலையில்லை. போராட்டங்களுக்கிடையே வாழும் நிலை, உடல் ஆரோக்கியத்தில் சங்கடம், செயல்களில் தோல்வியென்று எதிர் மறையான பலன்களையே வழங்கி வருகிறார். இந்தநிலையில் தைரிய, வீரிய ஸ்தானமான மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவானும், சத்ரு ஸ்தானமான ஆறா மிடத்தில் சஞ்சரிக்கும் சனி பகவானும் உங்களுடைய முயற்சிகளில் நன்மைகளை உண்டாக்கி வருகிறார்கள். மனதில் துணிவை வழங்கிவருகிறார்கள். எதிரிகளின் தொல்லைகளிலிருந்து பாதுகாத்து வருகிறார்கள். கடந்த மூன்று மாதங்களுக்குமேலாக அஷ்டம ஸ்தான குருவினால் உங்கள் தொழிலில் பாதிப்பும் நஷ்டமும் உண்டாகி யிருக்கும். போட்டிகள் அதிகரித்திருக்கும். சுழலில் சிக்கிய படகுபோல் தத்தளித்திருப்பீர் கள். எந்தவொரு காரியத்திற்கும் அதிக பட்சமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய நிலை உருவாகியிருக்கும். ஒருபக்கம் அலைச்சல்- மறுபக்கம் பண விரயம் என்னும் நிலை உண்டாகியிருக்கும். உடல்நிலையில் தொடர்ந்து பாதிப்பும், குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் நோய்வாய்ப்படுவதும், அதனால் அலைச்சல், பண விரயம் என்ற நிலையையும் சந்தித்துவந்திருப்பீர்கள். தொழிலை சரிவர கவனிக்கமுடியாத நிலையையும், வேலையில் அடிக்கடி விடுமுறை எடுக்கவேண்டிய சூழலையும் ஏற்படுத்தியிருப்பார். வீண் பிரச்சினைகளும் தொல்லைகளும் வீடுதேடி வந்திருக்கும். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை, பிள்ளைகளால் தொல்லையென்று உங்கள் வாழ்க்கை சமீபகாலத்தில் சங்கடங் களுக்குமேல் சங்கடங்களை அனுபவிக்க வேண்டியதாக இருந்திருக்கும். இந்த நிலையில்தான் குருபகவான் 20-7-2022 முதல் உங்களின் அஷ்டம ஸ்தானமான மீனத்தில் வக்ரமாகிறார். குருபகவான் எட்டாமிடத்தில் வக்ரமாகும் போது இதுநாள் வரையில் அவரால் உங்களுக்கு ஏற்பட்ட அத்தனை சங்கடங்களும் விலக ஆரம்பிக்கும். புதிய தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் செயல் படத் தொடங்குவீர்கள். உடல்நிலையில் இருந்த சங்கடங்கள் விலகி சுறுசுறுப்பாக முயற்சிகளை மேற்கொள்வீர்கள். உடலில் ஆரோக்கியமும், மனதில் உற்சாகமும், புதிய திட்டங்கள்தீட்டி அதில் வெற்றியும் அடைவீர்கள். நண்பர்கள்- உறவினர் என்று எல்லாரின் ஒத்துழைப்பும் உங்களை இனி வெற்றிப் பாதையில் நடைபோட வைக்கும். வேலையில்லாமல் இருந்தவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உண்டாகும். தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அதற்கான உதவியும் ஆதரவும் கிடைக்கும். உங்கள் சிறிய முயற்சியும் இனி பெரிய அளவில் வெற்றியை உண்டாக்கும். அரசு அலுவலர்கள் மகிழ்ச்சியான நிலைக்கு ஆளாவீர்கள். பழைய பிரச்சினைகள் முடிவுக்கு வரும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, கூட்டு முயற்சிகளில் வெற்றி, எதிர்பாலினரால் நன்மை, நட்பால் மகிழ்ச்சியென்ற நிலை இனி உண்டாகும். வெளிவட்டார பழக்கங்களில் ஆதாயமும் நன்மையும் காண்பீர்கள். புதிய வாகனம் வாங்குதல், ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல், உல்லாசப் பயணம் செல்லுதல் உறவினர்களின் வருகை, அவர்களால் ஆதரவு என்ற நிலை உண்டாகும். வருமானம் பல வழியிலும் வரத்தொடங்கும். உங்கள் முயற்சிகள் யாவும் இந்த வக்ர காலத்தில் வெற்றியாகும். அதிர்ஷ்டமான நிலை உண்டாகும்.
கன்னி
உங்கள் ராசிக்கு ஏழாமிடமான களத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குருபகவான் தொடர்ந்து உங்களுக்கு நன்மைகளை வழங்கிவருகிறார். இந்தநிலையில் குடும்பம், வாக்கு, தன ஸ்தானமான இரண்டாமிடத்தில் கேதுபகவானும், ஆயுள், ஆரோக்கிய ஸ்தானமான எட்டாமிடத்தில் ராகு பகவானும் சஞ்சரித்துவந்தாலும், குரு பகவானின் ஏழாமிட சஞ்சாரமும், பார்வை பலமும் உங்களைப் பாதுகாத்துவருகிறது. கடந்து மூன்று மாதங்களுக்குமேலாக ஏழாமிடத்து குருவினால் உங்கள் வாழ்க்கை நீங்கள் எதிர்பார்த்தபடி சென்றிருக்கும். மனதில் உற்சாகம் அதிகரித்திருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகியிருக்கும். புதிய திட்டங்கள் தீட்டி அதைச் செயல்படுத்தியிருப்பீர்கள். அதில் வெற்றிகளையும் கண்டிருப்பீர்கள். நண்பர்கள், உறவினர்கள் என்று எல்லாரின் ஒத்துழைப்பும் ஏற்பட்டிருக்கும். அதனால் நினைத்ததை சாதித்திருப்பீர்கள். வேலை யில்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உண்டாகியிருக்கும். தொழில் தொடங்க நினைத்தவர்களுக்கு அதற்கான உதவியும் ஆதரவும் கிடைத்து செயலில் இறங்கியிருப்பீர்கள். ஒருசிலர் தொழிலை விரிவு செய்திருப்பீர்கள். உங்களுடைய சிறிய முயற்சியும் பெரிய அளவில் வெற்றியடைந்திருக்கும். ஆடை, ஆபரணச் சேர்க்கை, கூட்டு முயற்சிகளில் வெற்றி, எதிர்பாலினரால் நன்மை, நட்பால் மகிழ்ச்சி என்று உங்களுக்கு மகிழ்ச்சியான நிலையே ஏற்பட்டிருக்கும். வெளிவட்டார பழக்கங்களில் ஆதாயமும் நன்மையும் கண்டிருப்பீர்கள். குடும்பநலனில் அக்கறை அதிகரித்திருக்கும். புதிய இடம் வாங்குதல், வீடு கட்டுதல் என்ற நிலை ஒருசிலருக்கு உண்டாகியிருக்கும். திருமணத்திற்காகக் காத்திருந்தவர்களுக்கு அதற்குரிய வரன் வந்திருக்கும். குழந்தை பாக்கியத்திற் காக ஏங்கியவர்களின் ஏக்கம் நிறைவேறி யிருக்கும். இந்த நிலையில்தான் குருபகவான் 20-7-2022 முதல் உங்களின் சப்தம ஸ்தானமான மீனத்தில் வக்ரமாகிறார். குரு வக்ரமாகும்போது, இதுநாள்வரை உங்களுக்கு உண்டான நற்பலன்களில் மாற்றங்கள் உண்டாகும். உடல்நலனில் பாதிப்பு, மனதில் சோர்வு, குழப்பம், நிம்மதியில்லாத நிலை, குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவர் நோய்வாய்ப்படுதல், அதனால் மருத்துவச் செலவுகள், தொழிலில் முடக்கம், வருமானத்தடை, பகைவர்களின் தொல்லை, அத்தியாவசிய செலவுகளுக்காக கடன் வாங்கவேண்டிய நிலை ஏற்படும். வரவுக்கு மீறிய செலவுகளால் மனநிலையில் சோர்வு, எதிலும் நாட்டமில்லாத நிலை, எங்கும் போட்டி எதிலும் போட்டி என்று பகைவர்களின் தொல்லை, உடன் இருந்தவர்களும் துரோகிகளாகி உங்களுக்கு எதிராக தொல்லை கொடுக்கும் நிலை, கணவன்- மனைவிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிம்மதியற்ற நிலை, உதவி என்று எங்கு போனாலும் எதையும் அடையமுடியாத சங்கடம் ஏற்படும். குறுக்குவழியில் செல்லும் மனநிலையும் ஒருசிலருக்கு உண்டாகும். ஆனால், அதில் தோல்வியும், சங்கடங்களும், அவமானமுமே உண்டாகும் என்பதால் கவனமாக இருக்கவேண்டும். எந்தவொரு செயலிலும் குருபகவான் வக்ரமாக உள்ள இக்காலத்தில் நீங்கள் நிதானமாக செயல்படவேண்டும். யோசித்து செயல்படவேண்டும். வார்த்தைகளில் கவனம் வேண்டும்.
தொடர்ச்சி அடுத்த இதழில்...
செல்: 94443 93717