12 ராசியினருக்கும் வக்ர குருவின் பலன்கள்! -திருக்கோவிலூர் பரணிதரன் சென்ற இதழ் தொடர்ச்சி...

/idhalgal/balajothidam/benefits-vakra-guru-12-zodiac-signs-thirukovilur-paranidharan-continued-last

துலாம்

உங்கள் ராசிக்கு ஆறாமிட மான ருண, ரோக, சத்ரு ஸ்தானத் தில் சஞ்சரித்துவரும் குரு பகவான் தொடர்ந்து உங்களுக்கு சங்கடங்களையே ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஜென்ம ராசிக்குள் கேது, ஏழில் ராகு என்ற நிலை உங்கள் வாழ்க்கையில் சோதனைக்கு மேல் சோதனைகளை உண்டாக்கி கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறீர்கள். குருபகவானின் ஆறாமிட சஞ்சாரமும் தொடர்ந்து உங்களுக்கு பாதிப்புகளையே உண்டாக்கி வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆறாம் வீட்டிலிருந்து உங்கள் உடல்நலனில் பாதிப்பு, மனதில் சோர்வு, குழப்பம், நிம்மதியின்மை, குடும்பத்தில் ஒருவர்விட்டு ஒருவர் நோய்வாய்ப்படுதல், அதனால் மருத்துவச் செலவுகள், செய்துவரும் தொழிலில் முடக்கநிலை, வருமானத் தில் தடை, பகைவர்களின் தொல்லை, அத்தியாவசிய செலவுகளுக்காக வும் கடன் வாங்கவேண்டிய நிலை, வரவுக்குமீறிய செலவுகளால் மனநிலையில் சோர்வு, எதிலும் நாட்டமில்லாத நிலை, எங்கும் போட்டி- எதிலும் போட்டி என்று பகைவர்களின் தொல்லையுடன், உடனிருந்தவர்களும் துரோகிகளாகி தொல்லைகொடுத்து வந்திருப்பார் கள். கணவன்- மனைவிக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிம்மதியற்ற நிலையில் இருந் திருப்பீர்கள். உதவியென்று எங்கு போனாலும் எதையும் அடைந்திருக்க முடியாது. புதிய நண்பர்களும் உங்களை வைத்து பயன்பெறுவதற்காக வந்தவர்களாக இருப்பார்கள். இவற்றால், நீச்சல் தெரியாதவன் கடலில் விழுந்து தத்தளிப்பதுபோல் தத்தளித்து வந்த நீங்கள் கடைசியில் நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்திருப்பீர்கள். இறைவனை சரணடைந்திருப்பீர்கள். ஒருசிலர் குறுக்குவழியில் முயற்சிகள் மேற்கொண்டு அதிலும் தோல்வியையே சந்தித்திருப்பீர்கள். பொதுவாக ஆறாமிடத்து குரு பகவான் சங்கடங்களையே வழங்கி வந்தார். இந்த நிலையில்தான் குரு பகவான் 20-7-2022 முதல் உங்களின் சத்ரு ஸ்தானமான மீனத்தில் வக்ரமாகிறார். குரு வக்ரமாகும்போது இதுநாள்வரை உங்களுக்கு உண்டான கெடுபலன்களில் மாற்றங் கள் உண்டாகும். மனதில் தெளிவும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். தவறான நட்புகளின் சகவாசத்தால் சிறைப்பட்ட கைதிபோல் சிக்கியிருந்த நிலை மாறும். வாழ்க்கையை நோக்கி புதிய எண்ணம் உண்டாகும். நல்லது எது? கெட்டது எது? நல்லவர் யார்? கெட்டவர் யார் என்று தெரிந்துகொள்ளும் சக்தி உண்டாகும். தடைப்பட்டிருந்த செயல்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்கள் திறமையையும் பெருமையையும் உலகம் பேசக்கூடிய நிலை உருவாகும். தொழிலில், உத்தியோகத்தில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கி கௌரவமும் வருமானமும் உயரும். மேலதிகாரிகளின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியும் ஏற்படும். தொழிலில் ஈடுபட்டிருப்போர் லாபம் காண்பீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவிகள் கிடைத்து எல்லாவற்றிலும் வெற்றிக்கு வழியேற்படும். திருமண வயதினருக்குத் திருமணம் கூடிவரும். வசதியும் அந்தஸ்தும் உயரும். வசதியான இடத்தில் இருக்கும் நிலை ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்றுவரும் பாக்கியமும் ஏற்படும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு ஏற்படும்.

122

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் கடந்த சித்திரை மாதம் முதல் நன்மையான பலன்களையே வழங்கி வருகிறார். இந்த நிலையில், ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானும் செவ்வாயும் உங்கள் செயல்களுக்குத் துணையாகவும், பகைவர்களின் தொல்லைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்தும் வருகின்றனர். குரு பகவான் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஐந்தாம் வீட்டிலிருந்து உங்கள் மனநிலையில் தெளிவையும், தேகத்தில் சுறுசுறுப்பையும், தடைப்பட்டிருந்த முயற்சி கள் ஒவ்வொன்றிலும் சாதகமான நிலையையும், முயற்சிகளில் வெற்றியடையக் கூடிய வழிகளையும் வழங்கிவந்தார். உத்தியோகத்தில் இருந்துவந்த சிரமங்கள் விலகி அதில் முன்னேற்றம் உண்டாகியிருக்கும். உங்கள் கௌரவம் உயர்ந்திருக்கும். வருமா னம் அதிகரித்திருக்கும். மேலதிகாரிகளின் உதவி இக்காலத்தில் பரிபூரணமாகக் கிடைத்திருக்கும். சுயமாக தொழில் செய்து வரு

துலாம்

உங்கள் ராசிக்கு ஆறாமிட மான ருண, ரோக, சத்ரு ஸ்தானத் தில் சஞ்சரித்துவரும் குரு பகவான் தொடர்ந்து உங்களுக்கு சங்கடங்களையே ஏற்படுத்தி வருகிறார்.

இந்த நிலையில் ஜென்ம ராசிக்குள் கேது, ஏழில் ராகு என்ற நிலை உங்கள் வாழ்க்கையில் சோதனைக்கு மேல் சோதனைகளை உண்டாக்கி கடுமையான நெருக்கடிகளை சந்தித்து வருகிறீர்கள். குருபகவானின் ஆறாமிட சஞ்சாரமும் தொடர்ந்து உங்களுக்கு பாதிப்புகளையே உண்டாக்கி வருகிறது. கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஆறாம் வீட்டிலிருந்து உங்கள் உடல்நலனில் பாதிப்பு, மனதில் சோர்வு, குழப்பம், நிம்மதியின்மை, குடும்பத்தில் ஒருவர்விட்டு ஒருவர் நோய்வாய்ப்படுதல், அதனால் மருத்துவச் செலவுகள், செய்துவரும் தொழிலில் முடக்கநிலை, வருமானத் தில் தடை, பகைவர்களின் தொல்லை, அத்தியாவசிய செலவுகளுக்காக வும் கடன் வாங்கவேண்டிய நிலை, வரவுக்குமீறிய செலவுகளால் மனநிலையில் சோர்வு, எதிலும் நாட்டமில்லாத நிலை, எங்கும் போட்டி- எதிலும் போட்டி என்று பகைவர்களின் தொல்லையுடன், உடனிருந்தவர்களும் துரோகிகளாகி தொல்லைகொடுத்து வந்திருப்பார் கள். கணவன்- மனைவிக்குள்ளும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு நிம்மதியற்ற நிலையில் இருந் திருப்பீர்கள். உதவியென்று எங்கு போனாலும் எதையும் அடைந்திருக்க முடியாது. புதிய நண்பர்களும் உங்களை வைத்து பயன்பெறுவதற்காக வந்தவர்களாக இருப்பார்கள். இவற்றால், நீச்சல் தெரியாதவன் கடலில் விழுந்து தத்தளிப்பதுபோல் தத்தளித்து வந்த நீங்கள் கடைசியில் நடப்பது நடக்கட்டும் என்ற மனநிலைக்கு வந்திருப்பீர்கள். இறைவனை சரணடைந்திருப்பீர்கள். ஒருசிலர் குறுக்குவழியில் முயற்சிகள் மேற்கொண்டு அதிலும் தோல்வியையே சந்தித்திருப்பீர்கள். பொதுவாக ஆறாமிடத்து குரு பகவான் சங்கடங்களையே வழங்கி வந்தார். இந்த நிலையில்தான் குரு பகவான் 20-7-2022 முதல் உங்களின் சத்ரு ஸ்தானமான மீனத்தில் வக்ரமாகிறார். குரு வக்ரமாகும்போது இதுநாள்வரை உங்களுக்கு உண்டான கெடுபலன்களில் மாற்றங் கள் உண்டாகும். மனதில் தெளிவும் மகிழ்ச்சியும் ஏற்படும். உடல்நலனில் முன்னேற்றம் உண்டாகும். சுறுசுறுப்பாக செயல்படத் தொடங்குவீர்கள். தவறான நட்புகளின் சகவாசத்தால் சிறைப்பட்ட கைதிபோல் சிக்கியிருந்த நிலை மாறும். வாழ்க்கையை நோக்கி புதிய எண்ணம் உண்டாகும். நல்லது எது? கெட்டது எது? நல்லவர் யார்? கெட்டவர் யார் என்று தெரிந்துகொள்ளும் சக்தி உண்டாகும். தடைப்பட்டிருந்த செயல்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும். உங்கள் திறமையையும் பெருமையையும் உலகம் பேசக்கூடிய நிலை உருவாகும். தொழிலில், உத்தியோகத்தில் இருந்து வந்த சிரமங்கள் நீங்கி கௌரவமும் வருமானமும் உயரும். மேலதிகாரிகளின் ஆதரவும் உதவியும் கிடைக்கும். முயற்சிகளில் வெற்றியும் ஏற்படும். தொழிலில் ஈடுபட்டிருப்போர் லாபம் காண்பீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள். கேட்ட இடத்தில் கேட்ட உதவிகள் கிடைத்து எல்லாவற்றிலும் வெற்றிக்கு வழியேற்படும். திருமண வயதினருக்குத் திருமணம் கூடிவரும். வசதியும் அந்தஸ்தும் உயரும். வசதியான இடத்தில் இருக்கும் நிலை ஏற்படும். புனிதத் தலங்களுக்குச் சென்றுவரும் பாக்கியமும் ஏற்படும். செல்லும் இடமெல்லாம் சிறப்பு ஏற்படும்.

122

விருச்சிகம்

உங்கள் ராசிக்கு ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் குரு பகவான் கடந்த சித்திரை மாதம் முதல் நன்மையான பலன்களையே வழங்கி வருகிறார். இந்த நிலையில், ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானும் செவ்வாயும் உங்கள் செயல்களுக்குத் துணையாகவும், பகைவர்களின் தொல்லைகளிலிருந்து உங்களைப் பாதுகாத்தும் வருகின்றனர். குரு பகவான் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக ஐந்தாம் வீட்டிலிருந்து உங்கள் மனநிலையில் தெளிவையும், தேகத்தில் சுறுசுறுப்பையும், தடைப்பட்டிருந்த முயற்சி கள் ஒவ்வொன்றிலும் சாதகமான நிலையையும், முயற்சிகளில் வெற்றியடையக் கூடிய வழிகளையும் வழங்கிவந்தார். உத்தியோகத்தில் இருந்துவந்த சிரமங்கள் விலகி அதில் முன்னேற்றம் உண்டாகியிருக்கும். உங்கள் கௌரவம் உயர்ந்திருக்கும். வருமா னம் அதிகரித்திருக்கும். மேலதிகாரிகளின் உதவி இக்காலத்தில் பரிபூரணமாகக் கிடைத்திருக்கும். சுயமாக தொழில் செய்து வருபவர்களுக்கு மிகச் சிறப்பான நிலை உண்டாகியிருக்கும். லாபம் பல வழிகளிலும் வந்திருக்கும். தொழிலில் புதிய முதலீடு செய்திருப்பீர்கள். கேட்ட இடங்களில் கேட்ட உதவிகள் கிடைத்து அதனால் முன்னேற்றம் கண்டிருப்பீர்கள். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கூடிவந்திருக்கும். வசதியும் அந்தஸ்தும் அதிகரித்திருக்கும். இருப்பிடத்தை உங்கள் ரசனைக்கேற்ற விதத்தில் மாற்றியிருப்பீர்கள். நவீன கருவிகளின் சேர்க்கை உண்டாகி யிருக்கும். வாழ்க்கைத் துணையால் நன்மைகளை அடைந்திருப்பீர்கள். புனிதத் தலங்களுக்குச் சென்று வந்திருப்பீர்கள். சிலர் வீட்டுமனை வாங்கியிருப்பீர்கள். சிலர் புதிய வீடு வாங்கியிருப்பீர்கள். இவையெல்லாம் ஐந்தாமிடத்தில் சஞ்சரித்துவரும் குரு பகவானால் உங்களுக்கு உண்டான நன்மையான பலன்களாகும். இந்த நிலையில்தான் குரு பகவான் 20-7-2022 முதல் உங்களின் பூர்வ புண்ணிய புத்திர ஸ்தானமான மீனத்தில் வக்ரமாகி றார். குரு பகவான் வக்ரமாகும்போது இதுநாள்வரை உங்களுக்கு ஏற்பட்ட நற்பலன்களில் மாற்றங்கள் உண்டாகும். ஓரிடத்தில் நிலை யாக இருக்கமுடியா மல் அலைச்சல், இடம்பெயர்தல் என்ற நிலை உண்டாகும். வீண் மனக்குழப்பம், தேவையற்ற சிந்தனை, நடக்காத முயற்சிக்காக அலைச்சல், வெட்டியான பணச் செலவு, எல்லாம் செய்தும் எதுவும் நடக்கவில்லையே என்ற வெறுப்பு, மனதில் அமைதியற்ற நிலை, இல்லற வாழ்க்கையிலும் சுகமற்ற நிலை, உடல் நிலையிலும் பாதிப்பு, ஒரு நிமிடம் இருப்பதுபோல் அடுத்த நிமிடம் இல்லாத நிலை, செய்கின்ற தொழிலிலும் தேக்கம், லாபமற்ற நிலை, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிச்சுமை அதிகரிப்பு, மேலதிகாரிகளால் நெருக்கடி, உடல்நிலையாலும் குடும்பச் சூழலாலும் அடிக்கடி விடுப்பு எடுத்து அதன்மூலம் கேள்விகளுக்கு ஆளாகவேண்டிய நிலை, உறவினர்களுடன் கருத்து பேதம், உடன் பிறந்தவர்களால் அனுகூலமற்ற நிலை, நண்பர்களும் பகையாவதுடன் வலியசென்று உதவப்போன இடத்திலும் அவமானம், எல்லாமிருந்தும் எதையும் சரியாக அனுபவிக்க முடியாத நிலை, கல்வியில் தடை, பொன் பொருள்களில் குறைவு, ஈடுபடும் செய்களில் எல்லாம் சாதகமற்ற நிலை, கணவன்- மனைவி உறவிலும் பிரச்சினைகள் என்று எதிலும் நிம்மதியற்ற நிலை உண்டாகும் என்பதால், இக்காலத்தில் அவசரத்தனமான செயல்களில் ஈடுபடாமல், சிந்தித்து செயல்படுவதன் வழியாக சங்கடங்களி−ருந்து தப்பிக்க முடியும்.

தனுசு

உங்கள் ராசிக்கு சுகஸ்தானம், மாத்ரு ஸ்தானம், வாகன ஸ்தானம், வித்யா ஸ்தானம் என்கின்ற நான்காமிடத்தில் அமர்ந்துள்ள குரு பகவான் எதிர்மறையான பலன்களையே வழங்கி வருகிறார். நிறையவே சங்கடங்களையும் அனுபவித்து வருகிறீர்கள். இந்த நிலையில் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவானும் உங்களுக்கு பாதகமான பலன்களையே வழங்கிவருகிறார். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் மட்டும் உங்கள் வாழ்க்கைக்குத் தேவையான வளங்களை வழங்கிவருகிறார். குரு பகவான் 4-ஆமிடத்தில் சஞ்சரித்து வரும் இக்காலத்தில் உங்கள் முயற்சிகள் அனைத்தும் இழுபறியாகவே இருந்திருக்கும். எதிர்பாராத சங்கடங்கள், நெருக்கடிகளை சந்தித்திருப்பீர்கள். தேவையில்லாத எண்ணங்கள் மனதில் உருவாகியிருக்கும். நிறைவேறாத செயலில் முயற்சியை செலுத்தி மனதில் சஞ்சலமும் அமைதியற்ற நிலையும் ஏற்பட்டிருக்கும். அலைச்சல்கள் அதிகரித்திருக்கும். உடல்நலன் பாதிப்படைந்திருக்கும். அதனால் இல்லற வாழ்க்கையின்மீதான நாட்டமும் குறைந்திருக்கும். நெருங்கிய உறவினர்களும் நண்பர்களும்கூட பகைவர்களாகியிருப்பார்கள். இல்லை யெனில் அவர்களுடைய கட்டுப்பாட்டிற் குள் நீங்கள் இருக்கவேண்டிய நிலை உருவாகியிருக்கும். அதனால் சில அவமானங் களையும் சந்தித்திருப்பீர்கள். காரணம் குரு பகவான் எந்த இடத்தில் இருக்கிறாரோ அந்த இடத்திற்குப் பாதகமான பலனையும், அவர் பார்க்கும் இடங்களுக்கு நற்பலன்களையும் வழங்கிடக் கூடியவர் என்பதுதான். நான்காமிடத்தில் குரு பகவான் சஞ்சரித்த காலத்தில்தான் தன் நாட்டைவிட்டு வனவாசம் போனார்களாம் தரும புத்திரர்கள். அதனால், 4-ஆமிட குரு சஞ்சார காலத்தில் ஓரிடத்தில் நிலையாக இருக்கமுடியாத நிலையும், வீண் மனக்குழப்பமும் உண்டாகியிருக்கும். சமாளிக்கமுடியாத அளவுக்கு சோதனைகளை சந்தித்திருப்பீர்கள். இந்த நிலையில்தான் குரு பகவான் 20-7-2022 முதல் நான்காமிடமான மீனத்தில் வக்ரமாகிறார். சுக ஸ்தானத்தில் குரு பகவான் வக்ரமாவதால் இனி உங்கள் வாழ்க்கை நிலையில், இதுவரையில் நீங்கள் அடைந்துவந்த பலன்களில் மாற்றங்கள் இருக்கும். குரு பகவான் வக்ரமடைவதால் முன்பிருந்த சங்கடமான நிலைகளிலிருந்து விடுபடுவீர்கள். இனி, நீங்கள் செய்த தவறுகளை உணர்ந்து சிந்தித்து செயல்படுவீர்கள். தொழிலின்மீது அக்கறை அதிகரிக்கும். லாபத்தை அடைவதற்குரிய வழிகளைக் கண்டறி வீர்கள். தடைகளைத் தாண்டி செயல்படத் தொடங்குவீர்கள். புதிய தைரியமும் தன்னம் பிக்கையும் உண்டாகும். நேற்றுவரை சங்கடத்தை வழங்கிவந்த உறவினர்கள் இனி சாதகமாவார்கள். அவர்களால் சில நன்மைகளை அடைவீர்கள். உங்கள் செயல்களில் முன்னேற்றம் உண்டாகும். அலுவலகத்திலிருந்த நெருக்கடிகள் விலகும். தற்போதுள்ள நிலையை மாற்றியமைக்க முயற்சி செய்வீர்கள். உங்களுடைய முயற்சிக்குப் பலன்கள் உண்டாகும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகி தெளிவாக செயல்படத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றி நன்றாகத் தெரிந்துகொண்டு, தவறானவர்களிடமிருந்து விலகுவீர்கள். அல்லது யாரை எதற்குப் பயன்படுத்தவேண்டும் என்பதைத் தெரிந்து அதற்கேற்ப பயன்படுத்தி உங்களுடைய வேலைகளை முடித்துக் கொள்வீர்கள். பண வருவாயிலிருந்த தடைகள் விலகும். எதிரிகள் உங்களிடம் பணிந்துசெல்ல ஆரம்பிப்பார்கள். குடும்பத்தினர்மீதான அக்கறை அதிகரிக்கும். பிள்ளைகளின் நலனில் கவனம் செலுத்துவீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடும்போது யோசித்து செயல்படுவதன் வழியாக நன்மைகளைக் காணமுடியும். உங்கள்மீது பழி சுமத்துவதற்காக ஒருசிலர் காத்திருப்பார்கள். எனவே எந்த இடமாக இருந்தாலும் அந்த இடத்தில் கவனமாக செயல்பட வேண்டும். தவறான செயல்களைத் தவிர்த்து நேர்மையாக செயல்படுகின்றபோது இந்த வக்ரகாலம் உங்களுக்கு சாதகமான காலமாகும். நீங்கள் நினைத்ததை நடத்தி முடித்துக்கொள்கின்ற நிலையை குரு பகவானின் இந்த வக்ரகாலம் உங்களுக்கு ஏற்படுத்தும்.

மகரம்

உங்கள் ராசிக்கு மூன்றாமிடமான சகோதர, தைரிய, வீரிய ஸ்தானத்தில் சஞ்சரித்துவரும் குரு பகவான் தொடர்ந்து உங்களுக்குப் பல்வேறு சங்கடங்களை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் சுக ஸ்தானத்தில் சஞ்சரித்து வரும் ராகு பகவானும், தொழில் ஸ்தானத் தில் சஞ்சரித்துவரும் கேது பகவானும் உங்களுக்கு பல்வேறு நெருக்கடிகளை வழங்கிவருகின்றனர். குருபகவான் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக மூன்றாம் வீட்டிலிருந்து உங்களுடைய முன்னேற்றத்திற்கும், முயற்சிகளுக்கும் தடைபோட்டு வருகிறார். மூன்றாமிடத்து குரு பகவானைப் பற்றி சொல்லவேண்டுமென்றால் "தீதிலாதொரு மூன்றிலே துரியோதனன் படை மாண்டதும்' என்று பழம் பாடல் கூறுகிறது. ஜென்ம ராசிக்கு மூன்றாம் வீட்டில் குரு சஞ்சரித்தபோதுதான் துரியோதனன் படை அழிந்ததாம். அதுவரை சர்வ வல்லமையுடனும், சூழ்ச்சியாலும், சாதுரியத்தாலும் கோலோச்சி வந்த துரியோதனன் தனது பலத்தையிழந்து, படையையிழந்து அனைத்தையும் இழந்தது மூன்றாமிடத்தில் குரு பகவான் சஞ்சரித்த காலத்தில்தான். இந்த நிலைப்பாட்டின்படி கோட்சாரத்திற்கு மூன்றாம் வீட்டில் குரு பகவான் சஞ்சரித்த நாளிலிருந்து உங்கள் நிலையில் சரிவை சந்தித்திருப்பீர்கள். அதற்குமுன் ஏற்பட்ட நன்மைகள் எல்லாம் மாற்றம் கண்டிருக்கும். வேலையிலும் சங்கடங்களை சந்தித்திருப்பீர்கள். ஒருசிலருக்கு வேலையும் பிரச்சினைக் குரியதாக மாறியிருக்கும். வருமானத்தில் தடையேற்பட்டிருக்கும். மனதில் குழப்பம் அதிகரித்திருக்கும். சுற்றியிருந்தவர்கள் ஒவ்வொருவராக உங்களைவிட்டு விலகியிருப்பார்கள். இல்லையென்றால் அவர்களைவிட்டு நீங்கள் விலகி செயல்படவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும். அதனால் தைரியத்தை இழக்கும் நிலை ஏற்பட்டிருக்கும். தேவையில்லாத பழிகளையும் சுமந்திருப்பீர்கள். உடல் நிலையிலும் பாதிப்புகளை சந்தித்திருப் பீர்கள். இந்த நிலையில்தான் குரு பகவான் 20-7-2022 முதல் உங்களின் சகோதர, தைரிய, வீரிய ஸ்தானமான மீனத்தில் வக்ரமாகிறார். குரு பகவான் வக்ரமாகும் நிலையில், இதுநாள்வரை உங்களுக்கு ஏற்பட்ட சங்கடமான நிலைகளிலிருந்து மாற்றங் கள் ஏற்படும். நெருக்கடிகள் கொஞ்சம் கொஞ்சமாக விலக ஆரம்பிக்கும். முயற்சிகள் பலன்தரத் தொடங்கும். செயல்களில் வேகமிருக்கும். உடல்நிலையில் தற்போதுள்ள நிலை மாறி முன்னேற்றம் ஏற்படும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகும். விலகிச் சென்ற உறவுகளும் நட்பும் மீண்டும் உங்களைநோக்கி வருவார்கள். அவர்களால் பலவழியிலும் நன்மையும் உதவியும் உண்டாகும். தொழிலில் ஏற்பட்ட தடைகள் விலகி முன்னேற்றம் உண்டாகும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலைவாய்ப்பு உண்டாகும். குடும்பத்தில் சுப நிகழ்வுகள் நடந்தேறும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கூடிவரும். மனதில் புத்துணர்ச்சியும், செயலில் வேகமும் இருக்கும். எதிலும் வெற்றியென்ற நிலையும், எதிர்பாராத பணவரவும் ஏற்படும். இப்போதுள்ள சங்கடங்கள் விலகி நற்பலன்கள் அதிகரிக்கும். குரு பகவான் சஞ்சரிக்கும் ஸ்தானத்திற்குரிய பலன்களை கெடுபலன்களாக வழங்குவார் என்பதால் இதுவரை உங்கள் முயற்சி, தைரியம், வீரியம், சுறுசுறுப்பெல்லாம் மறைந் திருக்கும். இப்போது அவர் வக்ரமடைவதால் அவற்றிலெல்லாம் இனி நன்மைகளை அடைவீர்கள்.

கும்பம்

உங்கள் ராசிக்கு குடும்ப, தன, வாக்கு ஸ்தானமான இரண்டாமிடத்தில் சஞ்சரித்துவரும் குரு பகவான் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகளைத் தொடர்ந்து வழங்கிவருகிறார். உங்களுடைய முயற்சிகள் ஒவ்வொன்றும் சமீபகாலமாக நிறைவேறியிருக்கும். கணவன்- மனைவி உறவு மகிழ்ச்சியை எட்டியிருக்கும். குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த நன்மைகள் ஏற்பட்டு உங்கள் செல்வாக்கு உயர்ந்திருக்கும். கடந்தகாலத்தில் ஏற்பட்ட சங்கடங்கள் எல்லாம் இப்போது விலகியிருக்கும். இந்த நிலையில் தைரிய, வீரிய ஸ்தானத் தில் ராகு பகவானும், அந்த ஸ்தானத்தின் அதிபதி செவ்வாயும் சஞ்சரிப்பதால் உங்கள் செயல்களில் வேகமிருக்கும். நினைத் ததை சாதித்திடக்கூடிய நிலையை அடைந்திருப்பீர்கள். உங்கள் விருப்பங்கள் ஒவ்வொன்றும் நிறைவேறியிருக்கும். கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக இரண்டாமிடத்து குருவினால் எண்ணியதை அடையக்கூடிய நிலை உருவாகியிருக்கும். எதிர்பார்த்த வரவுகள் வந்துசேர்ந்திருக்கும். உங்கள் எண்ணங்கள் ஒவ்வொன்றும் நிறைவேறியிருக்கும். மனதில் மகிழ்ச்சி அதிகரித்திருக்கும். காரணம், இரண்டாமிடம் என்பது தனஸ்தானம், குடும்பஸ்தானம், நேத்திர ஸ்தானமாகும். இந்த இடத்தில் குரு பகவான் சஞ்சரிக்கின்றபோது அதிர்ஷ்ட வாய்ப்புகள் அதிகரிக்கும்; நன்மைகள் உண்டாகுமென்பதால், நீங்கள் நினைத்ததெல்லாம் சமீபகாலத்தில் நிறைவேறியிருக்கும். உங்கள் உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகியிருக்கும். மனதில் ஏற்பட்ட குழப்பங்கள் விலகியிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு கண்டிருப்பீர்கள். தம்பதிகளுக்குள் இருந்த சங்கடங்கள் விலகி ஒருவரையொருவர் புரிந்து விட்டுக்கொடுத்து செயல்பட ஆரம்பித்திருப்பீர்கள். வாழ்க்கைத் துணை வழியே உங்கள் விருப்பங்கள் நிறைவேறியிருக்கும். பழைய கடன்களை அடைந்திருப்பீர்கள். எதிர்காலம் பற்றிய எண்ணம் மேலோங்கி இருக்கும். தொழிலில் முன்னேற்றம் உண்டாகியிருக்கும். வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பும், குடும்பத்தில் சுப நிகழ்வுகளும் ஏற்பட்டிருக்கும். திருமண வயதில் இருப்பவர்களுக்கு திருமணம் கூடிவந்திருக்கும். மனதில் புத்துணர்ச்சியும் செயலில் வேகமும் ஏற்பட்டிருக்கும். எதிலும் வெற்றி என்ற நிலையும், எதிர்பாராத பணவரவும் உண்டாகியிருக்கும். இப்படி இரண்டாமிட குரு உங்களுக்கு நிறையவே நன்மைகளை வழங்கியிருப்பார். இந்த நிலையில்தான் குரு பகவான் 20-7-2022 முதல் உங்களின் குடும்ப ஸ்தானமான மீனத்தில் வக்ரமாகிறார். குரு பகவான் குடும்ப ஸ்தானத்தில் வக்ரமாகும்போது இதுநாள்வரை நீங்கள் அடைந்துவந்த நற்பலன்களில் மாற்றங்கள் உண்டாகும். உங்கள் செயல்களில் குழப்பமும் தடுமாற்றமும் ஏற்படும். சிந்தனை மழுங்கும். தொழிலில் மந்தநிலை உண்டாகும். வருமானம் குறைய ஆரம்பிக்கும். பொன் பொருள்களை விற்று சில முயற்சிகளை மேற்கொள்வீர்கள். குடும்பத்தினர் உங்களுக்கு எதிராவார்கள். இதுவரை பாசம்காட்டி வந்தவர்கள் உங்களைவிட்டு விலகுவார்கள். உங்கள் வார்த்தைகளே உங்களுக்கு எதிரியாக மாறும். நிம்மதியான நிலை மாறும். ஒருசிலர் கண்ணுக்கு சிகிச்சை மேற்கொள்வீர்கள். விரோதிகளின் தொல்லை அதிகரிக்கும். இருக்கின்ற இடத்தைவிட்டு வேறிடத்திற்குச் செல்லும் நிலை சிலருக்கு உருவாகும். பணியின் காரணமாக ஒருசிலருக்கு மாறுதலும் ஏற்படும். பொருளாதார நிலையில் சங்கடங்கள் ஏற்படும். இரண்டாமிட குரு வக்ரமடைவதால் இத்தகைய நிலைக்கு ஆளாவீர்கள் என்பதால், உங்கள் செயல்கள் ஒவ்வொன்றிலும் கவனமும் நிதானமும் தேவை.

மீனம்

உங்கள் ராசியான மீனத்தில் ஜென்ம குருவாக சஞ்சரித்து வரும் குரு பகவான் கடந்த சித்திரை மாதம்முதல் உங்களுக்கு பல்வேறு சங்கடங்களை வழங்கிவருகிறார். எதிர்பார்ப்புகளில் எதிர்மறையான பலன்களை ஏற்படுத்தி வருகிறார். இந்த நிலையில் உங்களுக்கு தன, குடும்ப, வாக்கு ஸ்தானமான மேஷத்தில் சஞ்சரிக்கும் ராகு பகவான் உங்கள் வார்த்தைகளின் வழியே நண்பர்களையும் எதிரிகளாக்கி வருகிறார். ஆயுள் ஸ்தானமான எட்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது பகவான் உங்கள் உடல்நிலையில் நீங்கள் எதிர்பார்க்காத, இனம் புரியாத சங்கடங்களை ஏற்படுத்தி, மனதில் நிம்மதியற்ற நிலையை உண்டாக்கி வருகிறார். குரு பகவான் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஜென்ம ராசியில் சஞ்சரித்து வருவதால் உங்கள் வாழ்க்கை நிலையில் தடுமாற்றம் ஏற்பட்டிருக்கும். எந்த ஒன்றையும் சிந்திக்கமுடியாத அளவுக்கு உங்கள் நிலை மாறியிருக்கும். ஏதாகிலும் ஒரு பிரச்சினையை தொடர்ந்து சந்தித்து வந்திருப்பீர்கள். நல்லவர் யார்? கெட்டவர் யார் என்பதைக்கூட புரிந்து கொள்ளமுடியாத அளவுக்கு உங்கள் நிலை மாறியிருக்கும். தொழிலில் சங்கடங்களை அனுபவித்திருப்பீர்கள். அலைச்சல் அதிகரித்திருக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறாமல் சங்கடத்தில் ஆழ்ந்திருப்பீர்கள். கையிருப்புகள் குறைந்திருக்கும். விரோதிகளின் தொல்லை அதிகரித்திருக்கும். எதிர்பார்த்தது ஒன்று- நடப்பது ஒன்றாக உங்கள் நிலை மாற்றம் கண்டிருக்கும். சொந்த ஊரில் வசிக்க முடியாத நிலையை ஜென்ம குரு வழங்கி யிருப்பார். சொந்த ஊரில் வசித்தாலும் வெளியூர் சென்றுவரவேண்டிய நிலையை உருவாக்கியிருப்பார். அதனால் சங்கடங்களை அடைந்திருப்பீர்கள். குடும்பத்தினருடன் சரியான அளவுக்கு உறவுமுறை இல்லா மல் போயிருக்கும். மனதில் இனம்புரியாத சங்கடங்களை அடைந்திருப்பீர்கள். இவை யெல்லாம் ஜென்ம ராசியில் சஞ்சரித்து வரும் குரு பகவானால் உண்டான பலன்களாகும். இந்த நிலையில்தான் குருபகவான் 20-7-2022 முதல் உங்களின் ஜென்ம ராசியான மீனத்தில் வக்ரமாகிறார். குரு பகவான் வக்ரமாகும்போது, இதுநாள்வரை உங்களுக்கேற்பட்ட பலன்களில் மாற்றங் கள் உண்டாகும். உங்கள் மனதில் புதிய சிந்தனை உருவாகும். அதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக செயல்களை மேற்கொள்வீர்கள். புதிய இடம் வாங்குதல், இருக்கும் இடத்தை விரிவுசெய்தல் அல்லது புதிய வீடு கட்டுதல் என்று ஆக்கப்பூர்வமாக செயல்படுவீர்கள். பிள்ளைகளின் கல்வி, வேலை, திருமணம் என்று செலவுகள் செய்வீர்கள். செய்துவரும் பணியில் சில சங்கடங்களை சந்திப்பீர்கள். இறைவழிபாட்டில் மனம் செல்லும். ஒருசிலர் தேவையற்ற சங்கடங்களை சந்திப்பீர்கள். முன்பிருந்த செல்வாக்கில் மாற்றம் ஏற்படும். குடும்பத்தில் நீங்கள் எதிர்பார்த்த அளவுக்கு நன்மைகளைக் காணமுடியாமல் போகும். உங்களுடைய உழைப்பு அதிகரிக்கும். ஆனாலும், குரு பகவானின் வக்ர காலம் கடந்தகாலத்தில் ஏற்பட்ட பாதிப்புகளிலிருந்து உங்களுக்கு ஓரளவுக்கு நன்மைகளை உண்டாக்கும். உங்கள் செயல்பாடுகள் ஒவ்வொன்றிலும் நீங்கள் யோசித்து செயல்படும்போது நன்மைகள் அதிகரிக்கும். மற்றவர்களிடம் பேசும்போது வார்த்தைகளில் எச்சரிக்கையும் கவனமும் தேவையாக இருக்கும். இல்லையெனில் அதுவே உங்களுக்குப் பகையாகிவிடும். அடுத்த சித்திரை மாதம்வரை உங்கள் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்திவர வேண்டியதாக இருக்கும். உங்களை இக்காலத்தில் முழுமையாக கண்காணித்துக் கொள்வதும், முடிந்தவரை ஓய்வு மேற்கொள்வதும் நன்மையாகும். இல்லை யெனில் எட்டாமிட கேது உங்கள் உடல் நிலையில் சங்கடங்களை உண்டாக்குவார். வைத்தியங்களுக்குக் கட்டுப்படாத வலிகள் உண்டாகும். இக்காலத்தில் உடல்நலனில் அக்கறையும், வார்த்தைகளில் கவனமும் மிகமிக அவசியமாகும்.

செல்: 94443 93717

bala290722
இதையும் படியுங்கள்
Subscribe