ம் ஜாதகத்தில் பத்தாம் பாவம் என்பது பல கோணங்களில் நம்மைத் தலை நிமிர்ந்திருக்கச் செய்யும் இடமாகும். அதில் அமர்ந்துள்ள கிரக நாதர்களை ஆதாரமாக வைத்து நன்மை- தீமைகளை அறிதல் வேண்டும். இதனை ராஜ்ய பாவம், பித்ரு பாவம், கர்மஸ்தானம், வியாபார ஸ்தானம், ஜீவனஸ்தானம் என பல பெயர்களில் கூறுவதுண்டு. பத்தாமிடம் சீராக அமைவதோடு 3, 5-ஆவது பாவம் வலுப்பெற்றால் நிச்சயமாக மத்திய அரசு, மாநில அரசுப் பதவியில் அமரலாம் என்கிறது ஜோதிடம்.

பத்துக்குடையவர் உச்சம் பெற்றால் நல்ல கர்மாக்களையே செய்வார். நீசம் பெற்றிருந்தால் பிரச்சினைக்குரிய தொழிலும், பின்னாளில் நல்ல தொழிலும் அமையும். பத்தாம் பாவாதிபதி லக்னகேந்திரத்தில் இருந்தால் நல்ல கல்வியும் செல்வமும் அதிகாரமும் உண்டாகும். தானதர்மங்களில் மனம் ஈடுபாட்டையும். நற்பெயரையும் நல்ல நண்பர்களையும் அடையலாம். பெரிய பிரமுகளின் தொடர்பு சுலபமாகும். பத்துக்குடையவர் லக்னத்திற்கு இரண்டில் இருந்தால் பேச்சாற்றலால் யாவரையும் வசப் படுத்தலாம். வசீகரம், கவர்ச்சி அமையப் பெறும். எடுத்த காரியங்களைத் திறம்பட முடிக்கலாம். இவர்களின் கண்களில் ஒளிநிறைந்த பார்வை தெரியவரும். தைரியமாக எதையும் சாதிக்கும் சாதனையாளராகலாம்.

பத்துக்குடையவர் மூன்றில் இருந்தால் சகோதரர்களால் தொல்லையும் பொருள் இழப்பும் ஏற்படலாம். 10-க்குடையவர் 4-ஆமிடத்தில் இருந்தால் மிகப்பெரிய வீடு, பங்களா அமையும். தம்முடைய சொந்த சம்பாத்தியத்தின்மூலம் வாகனங்கள் மற்றும் புகழைத் தேடிக்கொள்வார்கள். தாய்வழி உறவால் மேன்மை பெறலாம். இவருடன் 9-க்குடையவர் சேர்ந்து காணப்பட்டால் திடீர் அதிர்ஷ்டத்தை எதிர்பார்க்கலாம். 10-க்குடையவர் 5-ஆமிடத்தில் இருந்தால் புத்திரர்களால் பெரும் மதிப்பை எதிர்பார்க்கலாம்.

அரசாங்கத்தால் பட்டம், பதவி பெறலாம். தெய்வீக வழிபாடு, சாஸ்திர ஞானம் மிகையாகும்.

Advertisment

10-க்குடையவர் 6-ஆமிடத்தில் இருந்தால் கவனமுடன் இருத்தல் வேண்டும். பிறர் பொருள் தேடிவரும். பத்துக்குடையவர் 7-ஆமிடத்தில் இருந்தால் திருமண வாழ்க்கையில் சில பின்னடைவுகளையும் சங்கடங்களையும் எதிர்கொள்ள நேரிடும். பத்துக்குடையவர் 8-ஆமிடத்தில் இருந்தால் ஆயுள் பாவம் தீர்க்கமாகும். சிலருக்கு புத்திரதோஷம் உண்டாகலாம். மனைவியுடன் கருத்து வேறுபாடு ஏற்படும். சொந்தத் தொழிலில் ஈடுபடுவோர் கவனமுடன் செயல்படவேண்டும். பத்துக்குடையவர் 9-ஆமிடத்தில் இருந்தால் எதிர்பாரா பதவிகள் தேடிவரும். தெய்வீக வழிபாடுகளில் நாட்டம் இருக்கும். தானதர்மங்களில் பெருமை சேர்க்கலாம். ஆன்மிக சுற்றலா, தீர்த்த யாத்திரைகள் மன மகிழ்வைப் பெற்றுத்தரும். பத்துக்குடையவர் 11-ஆமிடத்தில் இருந்தால் வியாபாரத்தில் அபரிமிதமான லாபத்தையும், உதவிகளையும் அதிகம் எதிர்பார்க்கலாம். நஷ்டங்கள் ஏற்பட்டாலும் தப்பித்துக்கொள்ளலாம். 10-க்குடையவர் 12-ஆமிடத்தில் இருந்தால் தேவையற்ற செலவினங்களை எதிர்கொள்ள நேரிடும். ஆடம்பர செலவினம் அதிகமாகும். சிலர் முன்னோர்கள் சேர்த்துவைத்த சொத்துகளை விற்றுவிடுவார்கள்.

இனி பத்தாமிடத்தில் நிற்கும் கிரகப் பலன்களாக் காணலாம்.

Advertisment

guru

சூரியன்

10-ஆமிடத்தில் சூரியன் இருந்தால் எடுத்த காரியங்களைத் திறம்பட முடிக்கும் ஆற்றல் ஏற்படும். தந்தை சொத்து சேர்த்துவைத்திருந் தால் வந்தடையும். அரசாங் கத்தில் அதிகாரமுள்ள பதவிகள் கிடைக்கப் பெறும். மந்திர சாஸ்திரம் அறிவார்கள். மந்திரசித்தி ஏற்படும் சூரியனுடன் 5-க்குடையவர் இணைந் தால் மிகப்பெரிய மந்திரவாதியாகலாம்.

பரிகாரம்: ஞாயிற்றுக்கிழமை புலால் தவிர்க்கவும். சிவ வழிபாடு நன்று.

சந்திரன்

10-ஆமிடத்தில் சந்திரன் இருந்தால் தாய்வழியில் தனலாபம் அடையலாம். வெளிநாட்டில் வேலைவாய்ப்புகள் சுலபமாகலாம். குளிர்ப் பிரதேசங்களில் பணி செய்யும் வாய்ப்புகள் கிட்டும். சுபகிரகம் சேர்ந்தால் வெற்றியே! சுலபமாக புகழ் தானே வந்தடையும். வேலைவாய்ப்பில் போராடித்தான் வெற்றிபெறமுடியும். கிராமத்தில் பிறந்தோர் நகரத்தில் வாழ வழிகிடைக்கும். நகரத்தில் பிறந்தோர், அந்நிய நாட்டில் இடம் பிடிக்கலாம். சந்திரனுடன் சனி, ராகு காணப்பட்டால் போராடி வெற்றிபெற நேரிடும். பெரிய மனிதர்களின் நட்பு சுலபமாகும். இசை, நடனத் தில் புகழ்பெறலாம். ஒன்றுக்கு மேற்பட்ட கலையார்வம் இருக்கும். சிலருக்கு கல்லூரி மற்றும் பள்ளி வாழ்க்கையைத் தொடர முடியாத சூழ்நிலை வரும். இருப்பினும் சாதனை படைக்கலாம். 10-ல் சந்திரன் இருந்து இரண்டாமிடம் சுத்தமாகவும், நான்கில் ஒரு ஆண் கிரகமும் இருந்தால் 24 வயதிற்கு மருத்துவர் ஆகிவிடுவார்களாம். சுக்கிரன் லக்னத் திலும், பத்தில் சந்திரனும், சனி நான்கிலும் காணப்பட்டால் உயர்வான வாழ்வு சுலபமாகுமாம். மேலும் சனி 3-லும், சந்திரன் 10-லும் காணப்படும் ஜாதகர் திருடர்களால் பாதிப்புள்ளவர்களாம். எனவே இப்படிப் பட்டோர் எச்சரிக்கையாக செயல்படுதல் மிகநன்று.

பரிகாரம்: கிணற்றுநீர் அல்லது ஆற்றுநீரை புட்டியில் அடைத்து பூஜையறையில் வைத்துக்கொள்ளல் நன்று.

செவ்வாய்

10-ஆமிடத்தில் செவ்வாய் இருந்தால் உயர்பதவியில் இருக்கும் யோகம் சுலபமாகும். இராணுவம் மற்றும் காவல்துறையில் பெரிய பதவியைப் பெற்றுத் தரும். நான்காமிடம் பலம்பெற்றால் புகழ்பெற்ற சமையல் வித்தகராகலாம். 4-ஆமிடம் பலமிழந்து 5-க்குடையவர் பலம்பெற்றால், பிரபல ஹோட்டல்களில் சமையல் நிபுணராகலாம். குரு சேர்க்கையோ பார்வையோ பெற்றால், ஆன்மிக குரு, மிகச் சிறந்த புரோகிதர்கள் ஆகலாம். சாதாரண குடும்பத்தில் பிறந் தாலும், இவருடைய ஜாதக மேன்மை குடும்பத்தை வலுப்பெற செய்யும். 10-ல் செவ்வாய், 3-ல் சனி இருந்தால், அசையா சொத்துகள் இருந்தாலும் கடன் பிரச்சினை தொடரத்தான் செய்யும். பத்தாம் வீடு சனியின் வீடாகி அதில் செவ்வாய் இருந்து, இரண்டாம் வீட்டில் சுக்கிரன், சந்திரன் போன்ற கிரகங்கள் இருந்தால் சந்தான பாக்கியம் தாமதமாகும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் செவ்வாய் ஹோரையில் நீர் அருந்து வதைத் தவிர்த்தல் நன்று. சிவப்புநிறப் பொருட்களை தானமாகத் தருவது போதுமானது.

புதன்

10-ஆமிடத்தில் புதன் இருந்தால் எண்ணிலடங்கா திறமை இவர்களை சுலபமாகத் தொற்றிக்கொள்ளும். அமைதியை விரும்புவார்கள். அனுபவம், கற்பனை வளம், ஆராயும் திறன், நல்ல மொழியாற்றல், எழுத்து, என பலகலை கற்றவர்களாக இருப்பர். புதனுடன் சனி பகவான் இணைந்து காணப்பட்டால், தந்தைக்கும் மகன்களுக்குமிடையே அசையா சொத்துவகையில் வீண் மனப்போராட் டங்கள் பாக பிரிவினையில் உருவாகும். இவர்கள் சட்ட நிபுணராகலாம். கல்வித் துறையில் உயர்பதவிகள் சுலபமாகும். அரசியல் ஆலோசகர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள் என சாதனை புரியலாம். பத்திரிகைத் துறையில் தனித்தன்மை வாய்ந்தவர்களாகத் திகழ்வார்கள். கடக லக்னத்தாரின் ஜாதகத்தில் 10-ல் புதன் இருந்தால் அண்ணன்- தம்பி, பெற்ற தாயுடன் வெளிநாடு செல்வதில் வீண் விவாதம் ஏற்படும்.

பரிகாரம்: புதன்கிழமை புலால் மறுப்பது நன்று. சிங்கமுக மனைகள் உள்ள வீட்டில் இருப்பது கூடாது. (அதாவது வீட்டின் முன்பாகம் பெரிதாகவும் பின்பாகம் மிகக் குறுகியதாகவும் இருப்பது). பழுப்பு நிறப் பசுவுக்கு புல் தானம் சிறப்பானது.

குரு

குரு பத்தில் இருப்பது சனியோடு இணைந்த தாக்கத்தையே தரும். தெய்வ சிந்தனையுடைய ஞானிகளாகத் திகழலாம். தங்க வியாபாரம், கவரிங் நகை போன்ற வியாபாரம் செய்யலாம். கல்வி கற்றவர்களின் நட்பு நல்வாழ்வைத் தரும். ஜீவனத் திற்கான நல்வழி கிடைக்கப்பெறும். சிலர் ஆன்மிக குருவாகத் திகழலாம். இருப்பினும் அவர்கள் குடும்பம் பல பின்னடைவுக்கு உட்படுமாம். இத்துடன் ராகு 4-ல் இருக்கப் பெற்றால் 13, 15 வயதுகளில் உடன்பிறந்தோரின் நட்பை இழக்க நேரிடுமாம். 10-ல் குரு, புதன் இணைந்திருந்தால் வருமானத்தை சனி பகவான் தடைபோடுவார். சிம்ம லக்னத் தில் பிறந்தவர்கள் ஜாதகத்தில் குரு 10-ல் இருந்தால் தந்தை செல்வம் நிறைந்தவராக இருப்பார். கீழ்நிலை ஊழியர் என்றாலும் அரும்பாடுபட்டு உயர்நிலை அடையலாம்.

பரிகாரம்: குருவின் அருளைப் பெற "எல்லோ சபையர்' மோதிரம் அணிய லாம்.

சுக்கிரன்

பல கலைகள் சார்ந்த துறையில் புகழை நிலைநாட்டலாம். புகைப்படத்துறை, தற்கால சின்னத்திரை, சினிமா போன்ற துறைகளிலும் முன்னேற்றம் தெரிய வரும். ஆடம்பரப் பொருட்கள் தயாரிக்கலாம். விற்பனை செய்யலாம். 10-ல் சுக்கிரன், 5 அல்லது 7-ல் புதன் இருந்தால் கலைத்துறையில் பட்டம், பதவி பெறலாம். 10-ல் சுக்கிரன் இருந்து 4-ஆமிடம் சுத்தமாகக் காணப்பட்டால், மனைவியின் கட்டுப்பாட்டில் கணவன் வாழநேரிடும். 10-ல் சுக்கிரன், 9 அல்லது 11-ல் சனி இருந்தால் சினிமா ஸ்டண்ட் மாஸ்டர், வீர விளையாட்டு நபர்களுக்கு விபத்து என்பது நிகழ வாய்ப்பில்லை. பரிகாரம்: திங்கட்கிழமைகளில் மர்ம உறுப்புகளைப் பால்கொண்டு தூய்மை செய்யவேண்டும். உடல்நலம் பாதித்தால் வெள்ளைநிறப் பசுவை ஆலயத்திற்கு தானம் செய்தல் நன்று. சனி 5-ல் இருந்தால், மனைவி யின் கண் பார்வை இன்னலைத் தரும்.

பரிகாரம்: ஒரு ஆடு தானமாகத் தருதல் மிக நன்று.

சனி

சனி பகவான் 10-ல் தனியாக இருக்கப் பெற்றால் தந்தையின் பேராதரவு 48 வயதுவரை கச்சிதமாகும். மேலும் 3, 9, 15, 21, 33, 39, 45, 51, 57 வயதுகளில் நல்ல மாற்றங்கள் தெரியவரும். ஆனால் அவர்கள் நெறிதவறினால், சனியின் பாதிப்பு மிகையாகும். சனி 10-ல், 1 அல்லது 4-ல் சந்திரன் இருந்தால் மிகப்பெரிய நிலச் சுவான்தார் ஆகலாம். வாகன வசதிகள் அதிகமாகும். 10-ல் சனியும் 7-ல் புதனும் இருக்கப் பெற்றால், இவரால் இவருடைய மாமன் மிக செல்வந்தராகலாம். இரண்டாமிடம் சுத்தமாக எந்த கிரகமும் இல்லாதிருந்தால் நல்வாழ்வு. 10-ல் சனியும். 4-ல் சூரியன், சந்திரன், செவ்வாயும் இருக்கப் பெற்றால் விலங்கு களால் இன்னல்கள் வரும். இவர்கள், பூஜை யறையில் சிறு கலசத்தில் கங்கை நீர் வைத்துக் கொள்வது நன்று. கிராமங்களில் பணி செய்வதால் நற்பெயர் கிடைக்கும். அரசியல், விவசாயம், ரியல் எஸ்டேட், கிரிமினல் வழக்கறிஞர் போன்றவை நல்ல பணவரவைப் பெற்றுத் தரும்.

பரிகாரம்: கருப்புநிற தானியத்தை சனிக் கிழமை திருஷ்டி சுற்றி நீர்நிலையில் போடுதல் நன்று.

ராகு

10-ல் ராகு இருந்தால் அந்நிய தேசத்தில் செல்வாக்குடன் வாழலாம். குறிப்பாக வெப்பம் சார்ந்த பூமி நல்வழி காட்டும். இவர் கள் துர்க்கையை வழிபடுவது, நன்று. 10-ல் ராகு, 4-ல் சந்திரன் இருந்தால் கண் பார்வை யில் பின்னடைவு உண்டாகும். ராகுவின் பாதிப்பு அதிகம் இருக்கப்பெற்றால் ஒரு வெள்ளி உலோகக் கிண்ணத்தில் தேனை நிரப்பி பூஜையறையில் இருக்கச் செய்தல் நன்று. மிதுன லக்னத்தார் ஜாதகத்தில் 10-ல் ராகு காணப்பட்டால் அரசு உத்தியோகத்தில் கவனமுடன் செயல்படல் நன்று. கடக லக்னத்தார் ஜாதகத்தில் 10-ல் ராகு இருந்து, கலைஞர்கள் எனில் தொழிலில் கவனமுடன் செயல்படல் நன்று. வீண்விவாதம் கெட்ட பெயரை உருவாக்கும். மீன லக்னத் தார் ஜாதகத்தில் 10-ல் ராகு இருக்கப் பெற்றால் தந்தையின் சொத்துசுகத்தைப் பெற அரும்பாடு பட நேரிடும்.

பரிகாரம்: கைகளில் கோமேதக ராசிக்கல் அணிவது மிக நன்று. மாதத்தில் சில நாட்கள் சமையல் கூடத்திலிருந்து உணவுண்ண வேண்டும். வருமானத்தில் சிறுதொகையை கருமைநிற நான்குகால் பிராணிகளுக்கு உணவு கொடுக்கலாம்.

கேது

பத்தில் கேது இருந்தால் ஆண் சந்ததி களால் அதிக நன்மைகளை எதிர்பார்க்க லாம். சனி 6-ல் இருந்தால் புகழ்பெற்ற விளையாட்டு வீரராகலாம். ஒலிம்பிக்கில் கலந்து சாதனை படைக்கும் வல்லமை பெறுவார்கள். செவ்வாயும் கேதுவும் இணைந்து 10-ல் இருந்தால் தோல்விமேல் தோல்வி வரும். பவளம் மற்றும் வைடூரிய மோதிரம் அணியவேண்டும். சனி நான்கில் அமையப்பெற்றால் குழந்தைகளால் பொருளாதார நெருக்கடி வரும். பத்தில் கேது இருந்தால் 48 வயதுக்குள் சொந்த சம்பாத்தியத்தில் வீடு கட்டுவது கூடாது. அவ்வாறு கட்டியிருந்தால் மேல்தளத்தில் தெற்கும் மேற்கும் உயர்வாக இருக்கவேண்டும். இவர்கள் தந்திர, மந்திரக் கலைகளில் மேதைகளாகத் திகழலாம். இவர்களை எவரும் எளிதில் தோல்வியுறச் செய்ய இயலாது. 9-ல் நல்ல கிரகநாதர்கள் இருந்தால் ஆன்மிகத்தில் மற்றும் அரசியலில் சாதனை படைக்கலாம்.

பரிகாரம்: ஐந்து வெள்ளிக்கிழமை செந்தாமரை மலரால் விநாயகரைப் பூஜித் தால் நன்மைகள் பெறலாம்.

செல்: 93801 73464